| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 956 | பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் ” என்று பலகால் அருளிச் செய்கின்ற ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘நீர் ஆதரித்துப் போருகிற இத்திருநாமம் என்ன பலனைத் தரக்கூடியது?’ என்று கேட்க, இது தரமாட்டாத பலனே உலகில் இல்லை யென்கிறார்.) 9 | குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம் நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும் வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9 | நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு) குலம் தரும், Kulam tharum - உயர்ந்த குலத்தைக் கொடுக்கும் செல்வம் தந்திடும், Selvam thandhidum - ஐச்வரியத்தை அளிக்கும் அடியார் படு துயர் ஆயின எல்லாம், Adiyaar padu thuyar aayina ellaam - அடியவர்கள் அனுபவிக்கிற துக்கம் என்று பேர்பெற்றவை எல்லாவற்றையும் நிலம் தரம் செய்யும், Nilam tharam seiyum - தரை மட்டமாக்கிவிடும் நீள் விசும்பு அருளும், Neel visumbu arulum - பரமபதத்தைக் கொடுக்கும் அருளொடு, Arulodu - எம்பெருமானுடைய கிருபையையும் பெரு நிலம், Peru nilam - கைங்கரியமாகிற மஹா பதவியையும் அளிக்கும், Alikkum - உண்டாக்கும் வலம் தரும், Valam tharum - (பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும் மற்றும், Matrum - இன்னமும் வேண்டிய நன்மைகளை எல்லாம் தந்திடும், Thandhidum - செய்து கொடுக்கும் பெற்ற தாயினும், Petra thaayinum - பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும் ஆயின செய்யும், Aayina seiyum - ஹிதங்களைச் செய்து கொடுக்கும் (ஆக இப்படி) நலம் தரும் சொல்லை நான், Nalam tharum sollai naan - வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை கண்டு கொண்டேன், Kandu konden - அடியேன் லபிக்கப் பெற்றேன் |