| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 957 | பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (இது திருநாமப்பாட்டு எனப்படும். கலியன் சொன்ன இப்பாசுரங்கள் வழியாக நாராயணா வென்னும் நாமத்தை எப்போதும் அநுஸந்தியுங்கள்; பாவங்களெல்லாம் பறந்தோடிப்போம் - என்று தலைக்கட்டுகிறார்.) 10 | மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர் துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம் நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10 | மஞ்சு உலாம் சோலை வண்டு, Manju ulaam solai vandu - மேகங்கள் உலாவுகின்ற சோலைகளையுடையதும் வண்டுஅறை மா நீர், Vandu arai maa neer - வண்டுகள் படிந்து ஒலிசெய்கின்ற சிறந்த தீர்த்தத்தை உடையதுமான மங்கையார், Mangaiyaar - திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும் வாள், Vaal - வாளை உடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் செம் சொலால் எடுத்த, Sem solaal edutha - செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த தெய்வம், Dheivam - திவ்யமான நல்மாலை இவை, Nal malai ivai - இந்த நல்ல சொல் மாலையை சிக்கென கொண்டு, Sikkena kondu - நாவிலே த்ருடமாகக்கொண்டு தொண்டீர், Thondir - பாகவதர்காள்! துஞ்சும் போது அழைமின், Thunjum pothu azhaimin - சரீரம் முடியுங் காலத்தில் இத்திருநாமங்களைச் சொல்லுங்கோள் துயர்வரில் நினைமின், Thuyarvaril ninaimin - மற்றும் துக்கங்களுண்டான போதும் இவற்றையே நினையுங்கோள் துயர்இலீர் சொல்லிலும் நன்று ஆம், Thuyar ileer sollilum nanru aam - துக்கமொன்று இல்லாதவர்கள் இவற்றை அநுஸத்தித்தாலும் நன்மையாகும் நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது நம்முடை வினைக்கு, Nammudai vinaikku - நமது பாபங்களை முடிப்பதற்கு நஞ்சு தான் கண்டிர், Nanju thaan kandir - விஷமேயாமென்பது தின்ணம் |