| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 960 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் சொன்னார் கீழ்ப்பாட்டில். நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார் இதில்) 3 | துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர் இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நல்லிமயத்து கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3 | நெஞ்சே, Nenje - மனமே! துடி கொள் நுண் இடை, Thudi kol nun idai - உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும் சுரிகுழல், Surikuzhal - சுருண்ட கூந்தலையும் துளங்கு எயிறு, Thulangu eyiru - பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய் இள கொடி திறத்து, Ila kodi thirathu - இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக ஆயர், Aayar - இடையர்களுடையவையாய் இடி கொள் வெம் குரல் இனம் விடை, Idi kol vem kural inam vidai - இடிபோல் வெவ்விய குரலை யுடைவையாய் கூட்டமாக வந்தவையான ஏழு ரிஷபங்களை அடர்த்தவன், Adarthavan - வலியடக்கின பெருமான் இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப் பெற்ற நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையினுள் வண்டு இசை சொல, Vandu isai sola - வண்டுகள் இசைபாடா நிற்க மணி அறை மிசை, Mani arai misai - இந்திரநீல மணிமயமான பாறைகளின் மேலே கடிகொள் வேள்கையின் நறுமலர் அமளியில், Kadikol velkaiyin narumalar amaliyil - வேங்கைமரத்தினது மணம் மிக்க புஷ்பமயமான படுக்கையிலே வேழம், Vezham - யானையானது பிடியினோடு, Pidiyinodu - தன் பேடையோடுகூட துயில்கொளும், Thuyilkolum - உறங்குமிடமான பிரிதி, Piridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |