திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 961 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
961பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நரஸிம்ஹ மூர்த்தியாகத் திருவவதரித்து இரணியன் மார்வைப்பிளந்த பெருமிடுக்குத்தோற்ற எழுந்தருளியிருக்குமிட மென்கிறது இதில்.) 4
மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள் இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும் பிறங்கு மா மணி யருவி யொ இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4
பதவுரை Show / Hide
நெஞ்சே!, Nenje! - மனமே!
மறம் கொள் வெருவர, Maram kol veruvara - சீற்றங்கொண்ட
ஆள் அரி உரு என, Aal ari uru ena - நரசிங்க மூர்த்தி என்று பிரஸதாவமெடுத்த மாத்திரத்திலே
வெருவர, Veruvara - உலகம் அஞ்சி நடுங்கும்படியாக (நரஸிம்ஹாவதாரஞசெய்து)
ஒருவனது, Oruvanathu - வீரரில் ஒப்பற்றவனான இரணியனுடைய
அகல் மார்வம், Agal maarvam - விசாலமான மார்பைப்
திறந்து, Thirandhu - பிளந்து
வானவர் (அந்த விடாய்தீர), Vaanavar (antha vidaaytheera) - (இப்படி இரணியனைக் கொன்ற மஹோபகாரத்தில் ஈடுபட்ட)தேவர்கள்
மணி முடி பணிதர, Mani mudi panithara - மணிமயமான கிரிடங்களணிந்த தலையாலே வணங்கும்படியாக
இருந்த, Irundha - என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷணமான இமயமலையின் கண்,
ஏனங்கள், Yenangal - பன்றிகளானவை
இறங்கி, Irangi - தலை குனிந்து
வளை மருப்பு, Valai maruppu - வளைந்த கொம்புகளாலே
இடந்திட, Idanthida - (மணிப்பாறைகளைப்) பிளக்க (பிளந்ததனால் பெயர்ந்து)
அருகு கிடந்து எரி வீசும் பிறங்கு மா மணி, Arugu kidandhu eri veesum pirangu ma mani - ஸமீபத்திலிருந்து கொண்டு, தீ வீசுகின்ற ப்ரகாசம் மிக்க சிறந்த மணிகளானவை
அருவியொடு, Aruviyodu - மலையருவிகளோடுகூட
இழிதரு, Izhitharu - இழியுமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக