| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 962 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.) 5 | கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5 | நெஞ்சே, Nenje - மனமே! கனை கழல் தொழுது ஏத்த, Kanai kazhal thozhuthu etha - (ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை அமரர்கள், Amarargal - தேவர்கள் தொழுது ஏத்த, Thozhuthu etha - ஸேவித்துத் துதிக்கும்படியாக கரை செய் மா கடல் கிடந்தவன், Karai sei maa kadal kidanthavan - தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான் அரை செய் மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த, Arai sei megalai alar magalavalodum amarndha - திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற நல் இமயத்து, Nal imayathu - நல்ல இமயமலையின் கண் வரைசெய் மா களிறு, Varaisei maa kaliru - மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை இள வெதிர், Ila vethir - இளமூங்கிலைகளுடைய வளர் மூளை, Valar moolai - ஓங்கி வளர்ந்த முளைகளை(பிடுங்கி) அளை மிகு தேன் தோய்த்து, Alai migu then thoiththu - முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து பிரசம் வாரி, Pirasam vaari - (அந்த) தேன்வெள்ளத்தை தன் இள பிடிக்கு, Than ila pidikku - தனது இளையபேடைக்கு அருள் செயும், Arul seiyum - கொடுக்குமிடமான பிரிதி, Pridhi - திருப்பரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |