| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 963 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்) 6 | பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6 | நெஞ்சே, Nenje - மனமே! வானவர், Vaanavar - தேவர்கள் இணங்கி, Inangi - திரளாகக் கூடி பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று, Panangal aayiram udaiya nal aravu anai palli kol parama endru - ‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி, மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து, Mani mudi pani thara irundha nal imayathu - மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண், மணம் கொள் நெடு மாதவி கொடி அவை, Manam kol nedu Madhavi kodi avai - பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை விசம்பு உற நிமிர்ந்து, visumbu ura nimirndhu - ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து முகில் பற்றி பிணங்கு, Mugil patri pinangu - மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே பூ, Poo - புஷ்பிக்கப்பெற்ற பொழில், Pozhil - (குருக்கத்திச்)சோலைகளிலே வண்டு நுழைந்து, Vandu nuzhaindhu - வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து இசை சொலும், Isai sollum - இசைபாடுமிடமான பிரிதி, Piridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |