திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 977 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரம் இது.) 10 | வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10 | பதவுரை Show / Hideவண்டு, Vandu - வண்டுகளானவை தண் தேன் உண்டு வாழும் வதரி, Than Then Undu Vazhume Vadhari - குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியில் எழுந்தருளியிருக்கிற நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்ரன் விஷயமாக, கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன், Kandal Veli Mangai Vendan Kalyan - தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை கொண்டு, Malai Kondo - இந்தச் சொல் மாலையைக் கொண்டு தொண்டர், Thondar - பக்திமான்கள் பாடி ஆட கூடிடில், Paadi Aada Koodidil - பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால் அவர்க்கு, Avarkku - அப்படிப்பட்ட மஹான்களுக்கு நீள் விசும்பில் அண்டம் அல்லால், Neel Visumbil Andam Allal - பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர மற்று ஓர் ஆட்சி அறியோம், Mattru Oru Aatchi Ariyom - வேறொரு லோகமாளப் பெறுதல் இல்லை. |