திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 977 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
977பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரம் இது.) 10
வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில் அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10
பதவுரை Show / Hide
வண்டு, Vandu - வண்டுகளானவை
தண்  தேன் உண்டு வாழும் வதரி, Than Then Undu Vazhume Vadhari - குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியில் எழுந்தருளியிருக்கிற
நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்ரன் விஷயமாக,
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன், Kandal Veli Mangai Vendan Kalyan - தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை கொண்டு, Malai Kondo - இந்தச் சொல் மாலையைக் கொண்டு
தொண்டர், Thondar - பக்திமான்கள்
பாடி ஆட கூடிடில், Paadi Aada Koodidil - பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால்
அவர்க்கு, Avarkku - அப்படிப்பட்ட மஹான்களுக்கு
நீள் விசும்பில் அண்டம் அல்லால், Neel Visumbil Andam Allal - பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர
மற்று ஓர் ஆட்சி அறியோம், Mattru Oru Aatchi Ariyom - வேறொரு லோகமாளப் பெறுதல் இல்லை.