| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 992 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (அடுத்தார்த்தெழுந்தாளவள். பிலவாய் விட்டலற அவள் மூக்கை அயில் வாளால் விடுத்தான் என்று! சூர்ப்பணகையின் மூக்கறுத்தமை சொல்லுகிறது.) 5 | அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத் தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-5 | அடுத்து ஆர்த்து எழுந்தாள், Aduthu Aarthu Ezhundhaal - மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை. பிலம் வாய் விட்டு அலற, Pilaam Vaai Vittu Alara - பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான், Aval Mookku Ayil Vaalal Viduththaan - அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும் விளங்கு சுடர் ஆழி, Vilangu Sudar Aazhi - பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும் விண்னோர் பெருமான், Vinnor Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும் கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை நண்ணார்முன் இனம் நிரைக்காகல் ஒன்று ஏந்திதடுத்தான், Kaduthu Aarthu Ezhundha Peru Mazhaiyai Nannaarmun Inam Niraikkaakal Ondru Aendhidaththaan - வேகத்துடன் ஆரவாரஞ்செய்துகொண்டு கிளர்ந்து வந்த கனத்த மழையை எதிரிகளான இந்திராதிகளின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை ரக்ஷிப்பதற்காக, (கோவர்த்தனமென்கிற) ஒரு மலையை ஏந்தித்தடுத்தவனுமான எம்பெருமான்(எழுந்தருளியிருக்கிற) தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம், Thadam Soozhndhu Azhagaaya Saalakkiraamam - தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை |