திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1-5 கலையும் கரியும் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
988பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு. 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் –1-5-1
பதவுரை Show / Hide
கலையும் கரியும் பரிமாவும், Kalaiyum Kariyum Parimavum - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
திரியும் கானம் கடந்துபோய், Thiriyum Kaanam Kadandupoy - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று
சிலையும் கணையும் துணை ஆக, Silaiyum Kanaiyum Thunai Aaga - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான், Vendri Serugalathu Senraan - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர், Alai Neer - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே
மலை கொண்டு, Malai Kondu - மலைகளாலே
அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி
மதிள் நீர் இலங்கை, Mathil Neer Ilangai - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள
வாள் அரக்கர் தலைவன், Vaal Arakkar Thalaivan - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய
பத்து தலை, Paththu Thalai - பத்துத்தலைகளையும்
அறுத்து உகந்தான், Aruththu Ugandhaan - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸ்ரீஸாளக்ராமத்தை
நெஞ்சே அடை, Nenjee Adai - மனமே!, சென்று சேர்.
989பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேர்; அத்திவ்யதேசம் யாருடையது? —) 2
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-2
பதவுரை Show / Hide
கடம் சூழ் கரியும், Kadham Soozh Kariyum - மதஜலத்தையுடைய யானைகளும்
பரிமாவும், Parimavum - குதிரைகளும்
ஒலி மா தேரும், Oli Maa Therum - ஒலியையுடைய மஹாரதங்களும்
காலாளும், Kaalalum - காலாட்களும்
உடன் சூழ்ந்து, Udan Soozhndhu - ஒன்றாகத் திரண்டு
எழுந்த, Ezhundha - கிளர்ந்து தோற்றின
கடி இலங்கை, Kadi Ilangai - அரணையுடைத்தான லங்கை
பொடி ஆ, Podi Aa - பொடிபடும்படியாக,
வடி வாய், Vadi Vaai - கூர்மையான வாயையுடைய
சரம், Charam - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனான இராமபிரான் (எழுந்தருளியிருக்குமிடமான)
இரு விசும்பில் இமையோர், Iru Visumbil Imaiyoor - விசாலமான ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்கள்
இடம் எங்கும் சூழ்ந்துவணங்க, Idam Engum Soozhnthuvanang - பூமியெங்கும் வந்துபரவி ஆச்ரயிக்கத்தக்கதாய்
மணம் கமழும் தடம் சூழ்ந்து, Manam Kamazhum Thadam Soozhndhu - புஷ்பவாஸனைகள் வீசுகின்ற தடாகங்களாலே சூழப்பட்டு
எங்கும் அழகுஆய, Engum Azhagu Aa - எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற
990பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் -(பெரிய திருமொழி 5-7-1) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால்.) 3
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே –1-5-3
பதவுரை Show / Hide
உலவு திரையும், Ulavuthiraiyum - உலாவுகின்ற அலைகளையுடைய கடலும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களும்
ஊழி முதலா எண்திக்கும், Oozhi Muthalaa Enthikkum - காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும்
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான், Nilavum Sudarum Irulum Aay Nindraan - சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும்
வென்றி விறல், Vendri Viral - வெற்றியையும் மிடுக்கையுமுடைய
ஆழி வலவன், Aazhi Valavan - திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும்
வானோர் தம் பெருமான், Vaanoor Tham Perumaan - தேவாதிதேவனும்
மருவா அரக்கர்க்கு, Maruvaa Arakkarkku - (தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில்
எஞ்ஞான்றும் சலவன், Enjnjaanrum Salavan - எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்)
சலம் சூழ்ந்து அழகு ஆய, Salam Soozhndhu Azhagu Aay - நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
991பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (‘ஊரகம்’ என்கிற சொல் ஊர் என்று விகாரப்பட்டதாகக்கொண்டு ஊரகமென்கிற திவ்ய தேசத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடையவன் என்று பொருளுரைப்பது ஒருவழி.) 4
ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-4
பதவுரை Show / Hide
ஊரான், Ooraan - திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும்
குடைந்தை உத்தமன், Kudaindhai Uththaman - திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும்,
ஒருகால், Orukaal - முன்னொரு காலத்தில்
சிலை இருகால் வளையதேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான், Silai Irukaal Valaiyathera Arakkar Ther Vellam Setraan - வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து அவிவேகிகளான ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்தவனும்
வற்றா வருபுனல் சூழ் பேரான், Vatraa Varupunal Soozh Peraan - ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண்வளர்ந்தருள்பவனும்
பேர்ஆயிரம் உடையான், Peraayiram Udaiyaan - ஸஹஸ்ரநாமங்களை யுடையவனும்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான், Pirangu Sirai Vandu Araikindra Thaaran - நெருங்கி யிருக்கிற சிறகுகளை யுடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற (திருத்துழாய்) மாலையையுடை யவனுமான எம்பெருமான்
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம், Tharaa Vayal Soozhntha Saalakkiraamam - தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தை
992பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அடுத்தார்த்தெழுந்தாளவள். பிலவாய் விட்டலற அவள் மூக்கை அயில் வாளால் விடுத்தான் என்று! சூர்ப்பணகையின் மூக்கறுத்தமை சொல்லுகிறது.) 5
அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத் தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-5
பதவுரை Show / Hide
அடுத்து ஆர்த்து எழுந்தாள், Aduthu Aarthu Ezhundhaal - மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை.
பிலம் வாய் விட்டு அலற, Pilaam Vaai Vittu Alara - பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக
அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான், Aval Mookku Ayil Vaalal Viduththaan - அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும்
விளங்கு சுடர் ஆழி, Vilangu Sudar Aazhi - பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும்
விண்னோர் பெருமான், Vinnor Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை நண்ணார்முன் இனம் நிரைக்காகல் ஒன்று ஏந்திதடுத்தான், Kaduthu Aarthu Ezhundha Peru Mazhaiyai Nannaarmun Inam Niraikkaakal Ondru Aendhidaththaan - வேகத்துடன் ஆரவாரஞ்செய்துகொண்டு கிளர்ந்து வந்த  கனத்த மழையை எதிரிகளான இந்திராதிகளின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை ரக்ஷிப்பதற்காக, (கோவர்த்தனமென்கிற) ஒரு மலையை ஏந்தித்தடுத்தவனுமான எம்பெருமான்(எழுந்தருளியிருக்கிற)
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம், Thadam Soozhndhu Azhagaaya Saalakkiraamam - தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை
993பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்ணபிரானுக்குத் தயிர் பால் வெண்ணெய் முதலியன எப்படி போக்யமாயிருந்தனவோ, அப்படியே, தன்னைக் கொல்ல வந்த பூதனையின் உயிரும் போக்யமாயிருந்ததென்பது தோன்ற அருளிச் செய்கிற அழகு காண்மின்.) 6
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும் தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-6
பதவுரை Show / Hide
தாய் ஆய் வந்த பேய் உயிரும், Thaai Aay Vandha Pei Uyirum - தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும்
தயிரும் விழுதும், Thayirum Vizhudhum - தயிரையும் வெண்ணெயையும்
உடன் உண்ட வாயான், Udan Unda Vaayaan - ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும்,
ஏயான், Eayaan - (யாசிப்பதற்குத்) தகாதவனானதான்
தூய வரி உருவின் குறள் ஆய்மாவலியை சென்று, Thuya Vari Uruvin Kural Aaymaavaliyai Sendru - பரிசுத்தமும் ஸுந்தரமுமான ரூபத்தையுடையவாமநனாகி மாவலியிடம் சென்று
இன்றே மூ அடி மண் தா என்று இரப்ப, Indrae Moo Adi Mann Thaa Endru Irappa - இப்போதே (எனக்கு) மூன்றடி நிலம் கொடுஎன்று யாசிக்க,
உலகு ஏழும் தாயான், Ulaku Ezhum Thaayaan - எல்லாவுலகங்களையும் தாவியளந்து கொண்டவனும்
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம், Kaaya Malar Vannan Chaalakkiraamam - காயாம்பூப்போன்ற நிறமுடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை
994பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில். 7
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய் வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-7
பதவுரை Show / Hide
ஏனோர் அஞ்ச, Eynoor Anja - சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக
அரி ஆய், Ari Aay - நரசிங்கமூர்த்தியாகி
பரிய இரணியனை, Pariya Iraniyanai - தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை
வெம் சமத்துள், Vem Samaththul - கடுமையான போர்க்களத்திலே
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன், Oon Aar Akalam Pilavu Eduththoruvan - மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும்,
தானே, Thaaney - இப்படி செய்தருளினவன் தானே
இரு சுடர்ஆய், Iru Sudar Aay - சந்த்ர ஸூர்யர்களாயும்
வான் ஆய், Vaan Aay - ஆகாசமாயும்
தீ ஆய், Thee Aay - அக்நியாயும்
மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாயும்
மலை ஆய், Malai Aay - மலைகளாயும்
அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய், Alai Neer Ulagu Anaiththum Thaan Aay - கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும்
தானும் ஆனான் தன் சாளக்கிராமம், Thaanum Aanaan Than Chaalakkiraamam - அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை
995பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெந்தாரென்பும்.) சிவபிரானுடைய ஆபரணங்களையும் அலங் காரங்களையும் பேசுகிறார். 8
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8
பதவுரை Show / Hide
வெந்தார் என்பும், Venthaar Enbum - செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும்
சுடு நீறும், Sudu Neerum - சுட்ட சாம்பலையும்
மெய்யில் பூசி, Meiyyil Poosi - சரீரத்தில் தரித்துக்கொண்டு
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு, Sandhu Aar Oor Thalaikayakththu Kondu - சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு
உலகு ஏழும் திரியும், Ulagu Ezhum Thiriyum - எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான
பெரியோன் தான், Periyoon Thaan - பரமசிவன்
சென்று, Senru - கிட்டவந்து
என் எந்தாய் சாபம் தீர் என்ன, En Endhai Saapam Theer Enna - ‘என் ஸ்வாமீ!, (எனக்கு நேர்ந்திருக்கிற) சாபத்தை நீக்கியருள வேணும்’  என்று பிரார்த்திக்க,
திருமார்பில் இலங்கு அமுதம் நீர் தந்தான், Thirumaarbil Ilangu Amudham Neer Thandhaan - தனது திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமான்
சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம், Sandhu Aar Pozhil Soozhntha Saalakkiraamam - சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை
996பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்று இடைவிடாது கைங்கரியம் பண்ணப்பாரித்திருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டி ஒரு பக்கத்திலும்,) 9
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும் அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம் வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9
பதவுரை Show / Hide
தொண்டு ஆம் இனமும், Thondu Aam Inamum - தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும்
இமையோரும், Imaiyorum - நித்யஸூரிகளும்
துணை நூல் மார்வில் அந்தணரும், Thunai Nool Maarvil Andhanarum - யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில், Andaa Emakke Arulaai Endru Anaiyumkoil - ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும்,
அருகு எல்லாம், Arugu Ellam - சுற்றுப்பிரதேசங்களெங்கும்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து, Vandu Aar Pozhilin Pazhanathu - வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில்
வயலின் அயலே கயல் பாய, Vayalin Aayale Kayal Paaya - கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள
தண்தாமரைகள் முகம்மலர்த்தும், Thanthaamaraigal Mukhammalarthum - குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸாளக்ராமத்தை
997பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். 10
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10
பதவுரை Show / Hide
உலகத்து, Ulagaththu - இவ்வுலகத்திலே
அறிவு உடையார் ஆரார், Arivu Udaiyaar Aaraar - விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்)
அமரர் நல் நாடு அரசு ஆள, Amarar Nal Naadu Arasu Aala - நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக
பேர்ஆயிரமும் ஓதுமின்கள், Peraayiramum Othuminngal - (ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்:
அன்றி, Andri - அல்லது,
கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன், Kaar Aar Puravil Mangai Vendan Kalyan - மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார்
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை, Tharaa Aarum Vayal Soozhntha Saalakkiraamathu Adigalai - ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாக
ஒலி செய், Oli Sei - அருளிச்செய்த
தமிழ்மாலை இவையே, Thamizhmaalai Ivaiye - தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே
பிதற்றுமின், Pithatrumin - வாய்வந்தபடி சொல்லுங்கள்.