திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2-10 ஆற்றிலிருந்து (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
213பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 1
ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை சேற்றா லெறிந்து வளை துகில் கைக் கொண்டு காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்–2-10-1
பதவுரை Show / Hide
ஆற்றில் இருந்து,Aatril Irundhu - யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு
விளையாடுவோங்களை,Vilaiyaaduvongalai - விளையாட நின்ற எங்கள் மேல்
சேற்றால் எறிந்து,Saetral Erindhu - சேற்றை விட்டெறிந்து
வளை,Valai - எங்களுடைய கை வளைகளையும்
துகில்,Thugil - புடவைகளையும்
கைக் கொண்டு,Kaik Kondu - (தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு
காற்றில்,Kaatril - காற்றிலுங் காட்டில்
கடியன் ஆய்,Kadian Aai - மிக்க வேகமுடையவனாய்
ஓடி,Odi - (அங்கு நின்றும்) ஓடி வந்து
அகம் புக்கு,Agam Pukku - (தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு
மாற்றமும்,Maatramum - (வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து) ஒரு வாய்ச் சொல்லும்
தாரானாய்,Tharaanaai - அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால்
இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
வளைத் திறம்,Valai Thiram - (தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக
பேசானால்,Paesaanal - (தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால்
இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
214பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 2
குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ எண் திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த வண்டமர் பூங்குழ லார் துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்–2-10-2
பதவுரை Show / Hide
குண்டலம்,Kundalam - கர்ண பூஷணங்களானவை
தாழ,Thaazha - (தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும்
குழல்,Kuzhal - திருக் குழல்களானவை
தாழ,Thaazha - (அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்
நாண்,Naan - திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது
தாழ,Thaazha - (திருவுந்தி யளவும்) தாழந்தசையவும்
எண் திசையோரும்,Enn Disaiyorum - எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்
இறைஞ்சி தொழுது,Erainji Thozhudhu - நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி
ஏத்த,Ethan - ஸ்தோத்ரம் பண்ணவும்
வண்டு அமர் பூ குழலார்,Vandu Amar Poo Kuzhalar - (இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்) வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய
துகில்,Thugil - (ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த) புடவைகளை
கைக் கொண்டு,Kaik Kondu - (தனது)கைகளால் வாரிக் கொண்டு
விண் தோய் மரத்தானால்,Vin Thoi Maraththaanal - ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்
இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
வேண்டவும்,Vendavum - (எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும்
தாரானால்,Tharanaal - (அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
215பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 3
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்–2-10-3
பதவுரை Show / Hide
தடம் படு,Thadam Padu - இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப் பொய்கை,Thamaraip Poigai - தாமரைப் பொய்கையை
கலக்கி,Kalakki - உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம் படு,Vidam Padu - விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை,Naagaththai - காளிய ஸர்ப்பத்தை
வால் பற்றி ஈர்த்து,Vaal Patri Eerththu - வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு,Padam Padu - படமெடுக்கப்பெற்று
பை,Pai - மெத்தென்றிருந்த
தலை மேல்,Thalai Mel - (அந் நாகத்தின்) தலை மேல்
எழப் பாய்ந்திட்டு,Ezha Paindhittu - கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று)
உடம்பை,Udambai - (தன்) திரு மேனியை
அசைத்ததனால்,Asaiththadhaal - அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்
இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
உச்சியில்,Uchiyil - (அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்) (அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்,Nindranal - நின்றருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
216பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 4
தேனுகனாவி செகுத்து பனங்கனி தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4
பதவுரை Show / Hide
தேனுகன்,Thenukan - தேநுகாஸுரனுடைய
ஆவி,Aavi - உயிரை
செகுத்து,Sekuththu - முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி,Panangani - (ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
எறிந்திட்ட,Erindhitta - (அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்,Thadam Perun Tholinal - மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து,Vaanavar Kon Vida Vandha Mazhai Thaduththu - தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆனிரை,AaNirai - பசுக்களின் திரளை
காத்தானால்,Kaaththaanal - ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
அவை,Avai - அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
217பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 5
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி யுண்டு வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடி யுண்டழுதானால் இன்று முற்றும்–2-10-5
பதவுரை Show / Hide
ஆய்ச்சியர் சேரி,Aaychiyar Seri - இடைச் சேரியிலே
அளை,Alai - (இடைச்சிகள் கடைவதாக) (மத்தை நாட்டி) உடைத்த
தயிர்,Thayir - தயிரையும்
பால்,Paal - (காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு,Undu - அமுது செய்து
பேர்ந்து,Perndhu - (அவ் வளவோடு திருப்தி யடையாமல்) பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்,Avar - அவ் லிடைச்சிகள்
கண்டு,Kandu - (ஒளிந்திருந்து) (இவன் திருடுகின்ற போதில்) கண்டு
பிடிக்க,Pidikka - (இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள
பிடி யுண்ட,Pidi Unda - (அவர்கள் கையில்) பிடிபட்டு
வெண்ணை,Vennai - (அதற்கு தப்ப மாட்டாமல்) வெண்ணெயை
கொள்ள மாட்டாது,Kolla Maattaadhu - (தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல்
அங்கு,Angu - அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்,Aappundu Irundhaanal - கட்டுண்டிருந்த கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
அடியுண்ட அமுதினால்,Adi Unda Amudhinal - (அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
218பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 6
தள்ளித் தளிர் நடை யிட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தினுள்ளே அவளை யுற நோக்கி கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்–2-10-6
பதவுரை Show / Hide
தள்ளி தளர்நடை இட்டு,Thalli Thalarnadai Ittu - (காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே) தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு
இளம் பிள்ளையாய்,Iam Pillaiyaai - (நடக்க வேண்டும்படியான) இளங்குழந்தையாய்
கள்ளத்தினால்,Kallaththinal - (இருக்கச் செய்தே) (தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த,Vandha - (தன்னைக் கொல்ல) வந்த
பேய்ச்சி அவளை,Peychi Avalai - பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி,Ullaththin Ullae Ura Nokki - (’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
முலை,Mulai - (பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே) அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்,Uyir Thulla Suvaiththadhaal - (அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
துவக்கு அற,Thuvakku Ara - (அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்,Undaanaal - (அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
219பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 7
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த இம் மண்ணினை ஓரடி யிட்டு இரண் டாமடி தன்னிலே தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7
பதவுரை Show / Hide
மாவலி,Maavali - மஹாபலியினுடைய
வேள்வியில்,Velviyil - யாக பூமியிலே
மாண் உரு ஆய் சென்று,Maan Uru Aai Sendru - பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று,Moo Adi Thaa Endru - (என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்து,Erandhu - யாசித்துப் பெற்ற
இம் மண்ணினை,Em Manninai - இந்தப்பூமியை
ஓர் அடி இட்டு,Or Adi Ittu - (அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே) (பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே,Erandam Adi Thannilae - இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே
தாலி அடி இட்டானால்,Thaali Adi Ittaanal - மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
தரணி அளந்தானால்,Dharani Alandhaanal - (தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி) லோகத்தை அளந்தவனாலே
இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
220பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 8
தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்–2-10-8
பதவுரை Show / Hide
தாழை,Thaazhai - (கரையிலே) தாழைகளையும்
தண் ஆம்பல்,Than Aambal - (உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய
தடம் பெரும்,Thadam Perum - மிகவும் பெரிய
பொய்கை வாய்,Poigai Vaai - தடாகத்தினுள்ளே
வாழும்,Vaazhum - வாழ்ந்து கொண்டிருந்த
முதலை,Mudhalai - முதலையின் வாயாகிய
வலைப்பட்டு,Valaipattu - வலையிலே அகப்பட்டுக் கொண்டு
வாதிப்பு உண்,Vaadippu Un - துன்பமடைந்த
வேழம்,Vezham - ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயர்,Thuyar - வருத்தம்
கெட,Keda - தீரும்படியாக
விண்ணோர் பெருமான் ஆய்,Vinnor Perumaan Aai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய்
ஆழி,Aazhi - (அப்பொய்கைக் கரையிலே சென்று) சக்ராயுதத்தாலே
பணி கொண்டானால்,Pani Kondaanal - (முதலையைத் துணிந்து , கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
அதற்கு,Adharku - அந்த யானையின் திறத்தில்
அருள் செய்தானால்,Arul Seidhaan - (இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
221பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 9
வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்–2-10-9
பதவுரை Show / Hide
வானத்து,Vaanaththu - (கடலில் நீரை முகந்து கொண்டு) ஆகாசத்திலே
எழுந்து,Ezhandhu - கிளம்பின
மழை முகில் போல்,Mazhai Mugil Pol - வர்ஷிக்கப் புக்க மேகம் போல
ஏனத்து உரு ஆய்,Eenaththu Uru Aai - (கறுத்த நிறத்தை யுடைய) ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து)
கானத்து,Kaanaththu - காடு நிலங்களில்
எங்கும்,Engum - எல்லாவிடத்திலும் (திரிந்து)
மேய்ந்து,Meindhu - (கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து
களித்து,Kaliththu - செருக்கடைந்து
விளையாடி,Vilaiyaadi - விளையாடி,
இடந்த,Edandha - (பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த
இம் மண்ணினை,Em Manninai - இந்தப் பூமியை
தானத்தே,Thaanaththae - யதாஸ்தாநத்தில்
வைத்தானால்,Vaiththaanal - (கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
தரணி,Dharani - (இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை
இடந்தானால்,Edandhaan - கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால்
இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
222பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 10
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல் இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10
பதவுரை Show / Hide
நல் மங்கைமார்கள் தாம்,Nal Mangaimargal Thaam - (பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள்
அம் கமலம்,Am Kamalam - அழகிய செந்தாமரைப் பூப்போன்ற
கண்ணன் தன்னை,Kannan Thannai - கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக
அங்கு வந்து,Angu Vandhu - அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து
அசோதைக்கு,Asothaiyukku - (அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே
முற்பட்ட,Murppatta - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன
அவர் சொல்லை,Avar Sollai - அவ் விடைச்சிகளின் சொல்லை,
புதுவை,Puthuavai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattam - பெரியாழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
இவை,Evai - இப் பாசுரங்களை
இங்கு,Engu - இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே)
வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
ஒன்று ஏதம்,Onru Aedham - ஒரு வகைக் குற்றமும்
இல்லை,ellai - இல்லையாம்.