| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 958 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரம போக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.) 1 | வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள் ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி பீலி மா மயில் நடம் செய்யும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-1 | நெஞ்சே, Nenje - மனமே! அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில், சுக்ரீவன் சரணம் புகுந்தவன்று வாலி, Vaali - வாலி என்னும் பெயரையுடையவனாய் மா, Maa - மிக்க வலம், Valam - பலம் பொருந்திய ஒருவனது, Oruvanathu - ஒப்பற்றவனுடைய உடல், Udal - சரீரம் கெட, Keda - சிதறும்படி வரி, Vari - அழகிய சிலை, Silai - சார்ங்கம் (வில்) வளைவித்து, Valaivithu - சரங்கள் பாயும் படி வளைத்து, (இன்று) ஏலம், Elam - பரிமளம், வாசனை நாறு, Naaru - வீசுகின்ற தண், Than - குளிர்ந்து தடம், Thadam - பரந்த பொழில், Pozhil - தோட்டங்களிலே இடம்பெற இருந்த, Idampera irundha - விசாலமாக ஸர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிற நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷனமான இமாச்சலத்திலே ஆலி மா முகில், Aali maa mugil - சிறு துளிகள் தெரிக்கிற பெரிய மேகங்கள் அதிர்தர, Athirthara - அதிர முழங்கிக்கொண்டு பீலி மா மயில், Peeli maa mayil - கணமான தோகையுடைய பெரிய மயில்களானவை அருவரை, Aruvarai - தாவி ஏற வலிதான மலைகளிலே அகடு உற, Agadu ura - கீழ் வயிறு தழுவும்படியாக முகடு ஏறி, Mugadu eri - அவற்றின் சிகரங்களிலே ஏறி நடம் செய்யும், Nadam seiyum - ஆடா நிற்பதாய் தடம் சுனை, Thadam sunai - பரந்த சுனைகளுடைய பிருதி, Pirudhi - திருப்பிருதி என்கிற திவ்யதேசத்தை சென்று அடை , Sendru adai - சென்று சேர்ந்திடு |
| 959 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஸுக்ரீவ மஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத் துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக் கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 2 | கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2 | நெஞ்சே, Nenje - மனமே! மா கடல், Maa kadal - மஹா ஸமுத்தரமானது கலக்க, Kalakka - கலங்கும்படி அரி குலம் பணி செய்ய, Ari kulam pani seiya - வானர ஸமூஹம் கைங்கரியம் பண்ண அரு வரை, Aru varai - அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு அணை கட்டி, Anai katti - ஸேது கட்டி மா இலங்கை நகர், Maa Ilangai nagar - பெரிய லங்காபுரியை பொடி செய்த, Podi seitha - பொடிபடுத்திய அடிகள் தாம், Adigal thaam - ஸர்வஸ்வாமி இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப்பெற்ற நல் இமயத்து, Nal Imayathu - நல்ல ஹிமவானில் விலங்கல் போல்வன விறல், Vilangal polvana viral - மலை போன்றவையாய் மிருக்கையுடையவையாய் இரு சினத்தன, Iru sinathana - மிக்க கோபத்தை யுடையவையான வேழங்கள், Vezhangal - யானைகள் துயர்கூர, Thuyarkoora - துன்பப்படும்படியாக பிலம் கொள், Bilam kol - குகைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற வாள் எயிறு, Vaal eyiru - வாள் போன்ற பற்களையுடைய அரி அவை, Ari avai - சிங்கங்களானவை திரிதரு, Thiritharu - திரியுமிடமாகிய பிரிதி, Pirithi - திருப்பிரிதியை சென்றுஅடை, Sendru adai - சென்று சேர்ந்திடு |
| 960 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் சொன்னார் கீழ்ப்பாட்டில். நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார் இதில்) 3 | துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர் இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நல்லிமயத்து கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3 | நெஞ்சே, Nenje - மனமே! துடி கொள் நுண் இடை, Thudi kol nun idai - உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும் சுரிகுழல், Surikuzhal - சுருண்ட கூந்தலையும் துளங்கு எயிறு, Thulangu eyiru - பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய் இள கொடி திறத்து, Ila kodi thirathu - இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக ஆயர், Aayar - இடையர்களுடையவையாய் இடி கொள் வெம் குரல் இனம் விடை, Idi kol vem kural inam vidai - இடிபோல் வெவ்விய குரலை யுடைவையாய் கூட்டமாக வந்தவையான ஏழு ரிஷபங்களை அடர்த்தவன், Adarthavan - வலியடக்கின பெருமான் இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப் பெற்ற நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையினுள் வண்டு இசை சொல, Vandu isai sola - வண்டுகள் இசைபாடா நிற்க மணி அறை மிசை, Mani arai misai - இந்திரநீல மணிமயமான பாறைகளின் மேலே கடிகொள் வேள்கையின் நறுமலர் அமளியில், Kadikol velkaiyin narumalar amaliyil - வேங்கைமரத்தினது மணம் மிக்க புஷ்பமயமான படுக்கையிலே வேழம், Vezham - யானையானது பிடியினோடு, Pidiyinodu - தன் பேடையோடுகூட துயில்கொளும், Thuyilkolum - உறங்குமிடமான பிரிதி, Piridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |
| 961 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (நரஸிம்ஹ மூர்த்தியாகத் திருவவதரித்து இரணியன் மார்வைப்பிளந்த பெருமிடுக்குத்தோற்ற எழுந்தருளியிருக்குமிட மென்கிறது இதில்.) 4 | மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள் இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும் பிறங்கு மா மணி யருவி யொ இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4 | நெஞ்சே!, Nenje! - மனமே! மறம் கொள் வெருவர, Maram kol veruvara - சீற்றங்கொண்ட ஆள் அரி உரு என, Aal ari uru ena - நரசிங்க மூர்த்தி என்று பிரஸதாவமெடுத்த மாத்திரத்திலே வெருவர, Veruvara - உலகம் அஞ்சி நடுங்கும்படியாக (நரஸிம்ஹாவதாரஞசெய்து) ஒருவனது, Oruvanathu - வீரரில் ஒப்பற்றவனான இரணியனுடைய அகல் மார்வம், Agal maarvam - விசாலமான மார்பைப் திறந்து, Thirandhu - பிளந்து வானவர் (அந்த விடாய்தீர), Vaanavar (antha vidaaytheera) - (இப்படி இரணியனைக் கொன்ற மஹோபகாரத்தில் ஈடுபட்ட)தேவர்கள் மணி முடி பணிதர, Mani mudi panithara - மணிமயமான கிரிடங்களணிந்த தலையாலே வணங்கும்படியாக இருந்த, Irundha - என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷணமான இமயமலையின் கண், ஏனங்கள், Yenangal - பன்றிகளானவை இறங்கி, Irangi - தலை குனிந்து வளை மருப்பு, Valai maruppu - வளைந்த கொம்புகளாலே இடந்திட, Idanthida - (மணிப்பாறைகளைப்) பிளக்க (பிளந்ததனால் பெயர்ந்து) அருகு கிடந்து எரி வீசும் பிறங்கு மா மணி, Arugu kidandhu eri veesum pirangu ma mani - ஸமீபத்திலிருந்து கொண்டு, தீ வீசுகின்ற ப்ரகாசம் மிக்க சிறந்த மணிகளானவை அருவியொடு, Aruviyodu - மலையருவிகளோடுகூட இழிதரு, Izhitharu - இழியுமிடமான பிரிதி, Piridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |
| 962 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.) 5 | கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5 | நெஞ்சே, Nenje - மனமே! கனை கழல் தொழுது ஏத்த, Kanai kazhal thozhuthu etha - (ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை அமரர்கள், Amarargal - தேவர்கள் தொழுது ஏத்த, Thozhuthu etha - ஸேவித்துத் துதிக்கும்படியாக கரை செய் மா கடல் கிடந்தவன், Karai sei maa kadal kidanthavan - தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான் அரை செய் மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த, Arai sei megalai alar magalavalodum amarndha - திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற நல் இமயத்து, Nal imayathu - நல்ல இமயமலையின் கண் வரைசெய் மா களிறு, Varaisei maa kaliru - மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை இள வெதிர், Ila vethir - இளமூங்கிலைகளுடைய வளர் மூளை, Valar moolai - ஓங்கி வளர்ந்த முளைகளை(பிடுங்கி) அளை மிகு தேன் தோய்த்து, Alai migu then thoiththu - முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து பிரசம் வாரி, Pirasam vaari - (அந்த) தேன்வெள்ளத்தை தன் இள பிடிக்கு, Than ila pidikku - தனது இளையபேடைக்கு அருள் செயும், Arul seiyum - கொடுக்குமிடமான பிரிதி, Pridhi - திருப்பரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |
| 963 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்) 6 | பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6 | நெஞ்சே, Nenje - மனமே! வானவர், Vaanavar - தேவர்கள் இணங்கி, Inangi - திரளாகக் கூடி பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று, Panangal aayiram udaiya nal aravu anai palli kol parama endru - ‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி, மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து, Mani mudi pani thara irundha nal imayathu - மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண், மணம் கொள் நெடு மாதவி கொடி அவை, Manam kol nedu Madhavi kodi avai - பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை விசம்பு உற நிமிர்ந்து, visumbu ura nimirndhu - ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து முகில் பற்றி பிணங்கு, Mugil patri pinangu - மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே பூ, Poo - புஷ்பிக்கப்பெற்ற பொழில், Pozhil - (குருக்கத்திச்)சோலைகளிலே வண்டு நுழைந்து, Vandu nuzhaindhu - வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து இசை சொலும், Isai sollum - இசைபாடுமிடமான பிரிதி, Piridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |
| 964 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (இமயமலையின் தாழ்வரைகளிலே மேக மண்டலத்தளவும் ஓங்கி வளர்ந்த வேங்கைமரங்கள் மிளகு கொடிகளாலே தழுவப்பெற்றுநிற்கும்; வெளி நிலங்களிலுள்ள சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியாநிற்கும். இப்படி எங்கும் வேங்கை மயமாகவேயிராநின்ற இமய மலையின் கண் தேவர்கள் வந்து செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை என்னப்படுகிற எண்வகைப் புஷ்பங்களையும் தடாகங்களிலிருந்து கொணர்ந்து ஸமர்ப்பித்து ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லிக்கொண்டே நமஸ்கரிக்குமிடமாகிய திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே) 7 | கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7 | நெஞ்சே, Nenje - மனமே! கனம் வரை, Kanam varai - அழகிய தாழ்வரைகளில் கார்கொள் வேங்கைகள், Kaarkol vengaikal - மேக மண்டலத்தை ஆகரமித்து வளர்ந்த வேங்கை மரங்களை தழுவிய, Thazhuviya - தழுவிக்கொண்டிரா நின்ற கறிகொடி, Karikodi - மிளகுகளின் கொடிகளானவை துன்னி வளர், Thunni valar - நெருங்கிப் படரப்பெற்றதும் புனம் வரை, Punam varai - கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே போர்கொள் வேங்கைகள் தழுவிய, Porkol vengaikal thazhuviya - யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள் ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய் பூ பொழில், Poo pozhil - அழகிய சோலைகளை யுடையதான இமயத்துள், Imayathul - இமயமலையின் கண் இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள் ஏர் கொள் பூ சுனை தடம் படிந்து, Er kol poo sunai tadam padinthu - அழகிய புஷ்பங்களையுடைய தடாகங்களின் துறைகளிலே தீர்த்தமாடி இனம் மலர் எட்டும் இட்டு, Inam malar ettum ittu - சிறந்த எட்டுவகைப் பூக்களையும் கொண்டு ஸமர்ப்பித்து பேர்கள் ஆயிரம், Perkal aayiram - ஸஹஸ்ர நாமங்களையும் பரவி நின்று, Paravi ninru - வாய்வந்தபடி சொல்லி அடி தொழும், Adi thozhum - எம்பெருமான் திருவடிகளைப் பணியுமிடமான பிரிதி, Pridhi - திருப்பரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |
| 965 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (இமயமலையில் சோலைகள் செறிந்து கிடக்குமாதலால் ‘ இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா” என்னுமாபோலே பகற்போது காணமுடியாமல் இரவு காலமே விஞ்சி எங்கும் இருள் மூடிக்கிடக்கும். அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குஹைகளிலே பாம்புகளானவை ஆஹாரம் பெறாமல் பெரும்பசியோடே பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையின்கண். அமரர்கள் வந்து சேர்ந்து ‘பரமபுருஷா!, ஸகல ஜகத்காரண பூதா!!, காளமேகச்யாமளா!!!” என்றிப்படி அநுஸந்தித்துக்கொண்டு நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்குமிடமாகிய திருப்பிரிதி யைச் சென்று சேர் நெஞ்சே!) 8 | இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8 | நெஞ்சே, Nenje - மனமே! இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை, Iravu koornthu irul perugiya varai muzhai - இராப்பொழுதே விஞ்சி இருள் அதிகரிக்கப்பெற்ற மலை முழஞ்சுகளிலே இரு பசியது கூர, Iru pasiyathu koora - பெரும்பசி உண்டாக அரவம், Aravam - மலைப்பாம்புகளானவை ஆவிக்கும், Aavikum - பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற அகம் பொழில் தழுவிய, Agam pozhil thazhuviya - உட்சோலைகளோடு கூடிய அரு வரை இமயத்து, Aru varai Imayathu - ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண், இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள் பிரமனோடு சென்று, Brahmanodu sendru - நான்முகனோடு கூடச் சென்று பரமன் என்று எண்ணி நின்று, Paraman endru enni ninru - பரமபுருஷனே! என்றும் ஆதி என்று, Aadhi endru - ஆதி மூலமே ! என்றும் எம் பனிமுகில் வண்ணன் என்று, Em panimukil vannan endru - குளிர்ந்த மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானே! என்றும் எண்ணி நின்று, Enni ninru - அநுஸந்தித்துக் கொண்டு அடி தொழும், Adi thozhum - திருவடிகளை வணங்குதற்குரிய பெரு தகை, Peru thagai - பெருந்தன்மை பொருந்திய பிரிதி, Pridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |
| 966 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஆயிரந் திருநாமங்களையும் வாயாலே சொல்லி அவற்றி துடைய அர்த்தங்களையும் அநுஸந்திப்பவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராத படியாக நித்யாநந்தத்தைக் கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின்கண் தாதுகள் நிறைந் திருக்கிற அசோகமலர் விகத்தால் அப்போ துண்டாகு மழகு நெருப்பு ஜ்வலிக்கிறாப்போலிருக்கும். வண்டுகளானவை அப்புஷ்பவிகாஸ சோபையைப் பார்த்து ‘இவை அசோகமலர்’ என்பதை மறந்து ‘இது நெருப்பு’ என்று ப்ரமிக்கும். அவற்றுக்கு இந்த ப்ரமம் நித்தியப்படியாகச் செல்லும். முதல் நாள் ‘இது நெருப்பு’ என்று ப்ரமித்து, பிறகு ஆராய்ந்து ‘நெருப்பு அல்ல, அசோகமலராமிவை’ என்று நிச்சயித்து அதிலே போயி ருந்தும் மறுநாளும் பழையபடியே ப்ரமித்து அதனருகு செல்ல அஞ்சியிருக்கும். இப்படி அச்சமும் அச்சங்கழிதலும் மாறாமல் செல்லப்பெற்ற திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே!) 9 | ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9 | நெஞ்சே, Nenje - மனமே! ஆயிரம் நாமங்கள், Aayiram Naamangal - ஸஹஸ்ர நாமங்களை ஓதி, Odhi - எப்போதும் சொல்லிக் கொண்டு உணர்ந்தவர்க்கு, Unarnthavarkku - (அத்தாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று) விவேகம் பெற்றவர்களுக்கு உறுதுயர் அடையாமல், Uruthuyar Adaiyaamal - உண்டாகக்கூடிய துன்பமொன்றும் உண்டாகாதபடியாகவும் ஏதம் இன்றி, Aedham Inri - பாவமொன்றும் இல்லாதபடியாகவும் நின்று அருளும், Nindru Arulum - எப்போதும் க்ருபை செய்கின்ற நம் பெருந்தகை, Nam Perunthagai - நம் ஸ்வாமியானவன் இருந்த, Irundha - எழுந்தருளி யிருக்குமிடமான நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையின் கண் தாது மல்கிய, Thaathu Malkiya - தாதுகள் மிக்கிருக்கிற போதுண்டான பிண்டி, Pindi - அசோக மலர்கள் விண்டு அலர்கின்ற, Vindu Alargindra - விரிந்து அலருகிற தழல்புரை எழில், Thazhalpurai Ezhil - நெருப்புப் போன்ற அழகை பேதை வண்டுகள் நோக்கி, Pedhai Vandugal Nokki - அறிவில்லாத வண்டுகள் பார்த்து எரி என, Eri Ena - நெருப்பென்று நினைத்து வெருவரு, Veruvaru - பயப்படுமிடமான பிரிதி, Pridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |
| 967 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஆழ்வாருடைய சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அருமையான இனிய இசையைப் பாடவல்ல விலக்ஷண பாகவதர்களுக்கு மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா என்று தலைக் கட்டுகிறார்) 10 | கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10 | கரியமாமுகில் படலங்கள் அவை, Kariyamamukil Padalangal Avai - கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை கிடந்து, Kidandhu - (நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு முழங்கிட, Muzhangida - கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு) பெரிய மாசுணம், Periya Maasunam - பெரிய மலைப்பாம்புகளானவை களிறு என்று, Kaliru Endru - (நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து வரை என பெயர்தரு, Varai Ena Peyartharu - மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான பிரிதி, Pridhi - திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானை, Emperumaanai - எம்பெருமானைக் குறித்து வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர், Varikol Vandu Arai Pai Pozhil Mangaiyar - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான கலியனது, Kaliyanathu - ஆழ்வாருடைய ஒலிமாலை, Olimaalai - சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அரிய இன் இசை பாடும், Ariya In Isai Paadum - அருமையான இனிய இசையைப் பாடவல்ல நல் அடியவர்க்கு, Nal Adiyavarkku - விலக்ஷண பாகவதர்களுக்கு அரு வினை அடையா, Aru Vinai Adaiyaa - மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா |