திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-8 காதில் கடிப்பு (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1922பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே – இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி – இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ – கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே கிட்டி வர மாட்டுகிறிலன்- ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ – காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது) 1
காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத் தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ –10-8-1
பதவுரை Show / Hide
காதில், Kaadhil - காதிலே (- (பெரியவரே) (இது ஏன்? இது ஏன்? இது ஏன்?))
கடிப்பு, Kadippu - குண்டலத்தை
இட்டு, Ittu - அணிந்துகொண்டும்
கலிங்கம் உடுத்து, Kalingam Uduthu - திருப்பரியட்டத்தைச் சாத்திக் கொண்டும்
தாது நல்ல த ண் அம் துழாய், Thaadu Nalla Tha N Am Thuzhai - தாதுகளையுடைத்தாய நல்ல குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை
அணிந்து கொடு, Aninthu Kodu - அணிந்து கொண்டும்
போது மறித்து வந்து, Podhu Marithu Vandu - காலதாமதமாக வந்து
புறமே, Purame - கதவின் புறமாக
எதுக்கு நின்றீர், Ethukku Nindreer - ஏன் நிற்கின்றீர்
1923பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ – கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ) 2
துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ –10-8-2
பதவுரை Show / Hide
துவர் ஆடை, Thuvar Aadai - சிவப்பு நிறமான திருப்பரியட்டத்தை (- (இது என் இது என் இது என்?))
உடுத்து, Uduthu - சாத்திக்கொண்டு
ஒரு செண்டு சிலுப்பி, Oru Sendu Siluppi - ஒருசெண்டையும் கையால்) சிலுப்பிக்கொண்டு
கவர் ஆக முடித்து, Kavar Aaga Mudithu - (கிருக்குழலை) வாரிமுடித்து,
கலி கச்சு கட்டி, Kali Katchu Katti - வலியகச்சுப்பட்டையை (இடுப்பில்) கட்டிக்கொண்டு
சுவர் ஆர் கதவின் புறமே, Suvar Aar Kathavin Purame - சுவரோடு சார்ந்த கதவின் புறமாக
வந்து நின்றீர், Vandu Nindreer - வந்து நிற்கின்றீர்,
இவர் ஆர், Ivar Aar - இப்படி நிற்கிற இவர் ஆர் கொல்?
1924பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார் அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ) 3
கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இது என் இது என் இது வென்னோ –10-8-3
பதவுரை Show / Hide
கருளன், Karulan - கருடனாகிற (- (இது என் இது என் இது என்?))
கொடி ஒன்று உடையீர், Kodi Ondru Udaireer - ஒரு த்வஜத்தையுடையவரே!
தனி பாகீர், Thani Baageer - அக்கருடனை நடத்துவதில் ஒப்பற்றவரே!
உறக்கில், Urakkil - தூங்கும்போது
சகடம் அது, Sakadam Adhu - அஸுரனாவாவேசிக்கப் பட்ட) வண்டியானது
உருள, Urula - உருமாய்ந்துபோம்படி
நிமிர்த்தீர், Nimirtheer - திருவடியைத்தூக்கினவரே!
இருளத்து, Irulathu - இவ்விராப்போதிலே
மருள, Marula - (பெண்கள்) மோஹிக்கும்படியாக
பாடிக்கொடு வந்து, Paadikkodu Vandu - இசைபாடிக் கொண்டு வந்து
இல்லம் புகுந்தீர், Illam Pugundheer - வீட்டினுள் வந்து சேர்ந்தீர்,
1925பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ – பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ – கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ) 4
நாமம் பலவுமுடை நாரண நம்பீ தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர் காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4
பதவுரை Show / Hide
நாமம் பலவும் உடை, Naamam Palavum Udai - பல பல திருநாமங்களையுடைய (- (இது என் இது என் இது என்?))
நாரண நம்பி, Naarana Nambi - ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே!
மிக நாறு, Miga Naaru - மிகவுமு பரிமளித்துக்கொண்டிருக்கிற
துளபம் தாமம், Thulabam Thaamam - திருத்துழாய்மாலையை
இடுகின்றீர், Idhuginreer - அணிந்துகொண்டிருப்பவரே!
காமன் என, Kaaman Ena - மன்மதன்போல
பாடி வந்து, Paadi Vandu - பாடிக்கொண்டுவந்து
ஏமத்து, Emathu - இராப்பொழுதில்
இல்லம்புகுந்தீர், Illampugundheer - வீட்டினுள் புகுந்தீர்,
1926பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ – பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ) 5
சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் எற்றுக்கு இது என் இது என் இது என்னோ –10-8-5
பதவுரை Show / Hide
குழல், Kuzhal - திருக்குழல்களானவை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?))
சுற்றும், Sutrum - பிடரியைச்சுற்றிலும்
தாழ, Thaa - தாழ்ந்தலையப்பெற்றும்
சுரிகை, Surigai - உடைவாளை
அணைத்து, Anaiththu - தரித்துக்கொண்டும்
மற்றும் பல, Mattrum Pala - மற்றும் பலவகைப்பட்ட
மா மணி, Maa Mani - சிறந்த ரத்னாபரணங்களையும்
பொன், Pon - பொன்னுபரணங்களையும்
அணிந்துகொடு, Anindhukodu - சாத்திக்கொண்டும்
முற்றம் புகுந்து, Muttram Pugundhu - (எங்கள்வீட்டு) முற்றத்திலே வந்து சேர்ந்து
முறுவல் செய்து, Muruvai Seidhu - புன்சிரிப்புச் சிரித்து
ஏற்றுக்கு நின்றீர், Aetrukku Nindheer - எதுக்காக நிற்கிறீர்?
1927பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது –பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ – இடம் அறிந்து அன்றோ வருவது) 6
ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக் கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப் போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர் ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6
பதவுரை Show / Hide
ஆன் ஆயரும், Aan Aayarum - கோபாலர்களையுமு (- (இதுஎன் இதுஎன்?))
ஆ நிரையும், Aa Niraiyum - பசுக்கூட்டங்களையும்
அங்கு ஒழிய, Angu Ozhiy - அங்கேவிட்டுவிட்டு,
கூன் ஆயது, Koon Aayadhu - வளைந்திருப்பதாய்
கொற்றம், Kotrham - ஐச்வாயஸூசகமான
வில் ஒன்று, Vil Ondru - ஒருவில்லை
கை ஏந்தி, Kai Aendhi - கையில் பிடித்துக்கொண்டு
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர், Ponar Irundharaiyum Paarthu Pugudheer - போனவர்கள் யார், இருப்பவர்கள் யார் என்று பார்த்துக் கொண்டு வருகின்றீர்,
ஏனோர்கள் முன் என், Aenorkal Mun En - பிரதிகூலர்களின் எதிரே ஏனிப்படி?
1928பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் – உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ) 7
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச் சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர் எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-7
பதவுரை Show / Hide
மல், Mal - மல்லர்களை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?))
பொருத, Porutha - போர்செய்தழித்த
திரள் தோள், Thiral Thol - திரண்ட புஜங்களையுடைய
மணவாளீர், Manavaaleer - மணவாளரே!
நும் மனத்தின் கருத்தை, Num Manaththin Karuththai - உம்முடைய திருவுள்ளத்தை
அல்லே, Alle - (நேற்று) இரவே
அறிந்தோம், Arindhom - தெரிந்துகொண்டோம்
சொல்லாது ஒழியீர், Sollaadhu Ozhiyheer - (இன்னபோது வகுவேனென்லாமற் போகிறீரில்லை,
சொன்ன போதினால் வாரீர், Sonna Podhinal Vareer - குறிப்பிட்டகாலத்தின்படி வருகிறீல்லை,
எல்லை, Ellai - அந்தோ!,
1929பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் – இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் – மேன்மை உடையார் வரக் கடவதோ) 8
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8
பதவுரை Show / Hide
புக்கு, Pukku - (பொய்கையிலே) குதித்து (- (இதுஎன் இதுஎன் இதுஎன்))
ஆடு அரவம் பிடித்து, Aadu Aravam Pidiththu - படமெடுத்தாடுகின்ற காளிய நாகத்தைப் பிடித்து
ஆட்டும், Aattum - ஆட்டிவாட்டின
புனிதீர், Punitheer - பரிசுத்தரே!
இக்காலங்கள், Ikkaalangal - இப்போது
யாம், Yaam - நாங்கள்
உமக்கு, Umakku - உமக்கு
ஏது ஒன்றும் அல்லோம், Aethu Ondrum Allom - ஒருசரக்காகவும் எண்ணப்படுவோமல்லோம்,
தக்கார், Thakkar - உமக்குத் தகுத்திருப்பவர்களாய்
பலர், Palar - அளவற்றவர்களான
தேவிமார், Devimar - மஹிஷீவர்க்கங்களை
சால, Sala - மிகவும்
உடையீர், Udaiyeer - உடையராயிருக்கின்றீர்
எக்நே, Eknai - இது என்ன கஷ்டகாலம்!
1930பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்- இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து அதுக்கு முன்பே காலைப் பிடித்தான் காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என்) 9
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப ஏடி இது என் இது என் இது என்னோ –10-8-9
பதவுரை Show / Hide
திரு மா மகள், Thiru Ma Magal - பெரிய பிராட்டியாம் (- (இதுஎன் இதுஎன்?))
மண் மகள், Man Magal - பூமிப்பிராட்டியாரும்
தேடி நிற்ப, Thedi Nirpa - தேடிக்கொண்டிருக்க
நீ போய், Nee Poi - அவர்களை உபேக்ஷித்துப்போய்
ஆய் மடவாரொடு, Aai Madavarodu - இடைப்பெண்களோடே
கூடி, Koodi - கலந்து
குரவை பிணை, Kuravai Pinai - ராஸக்ரீடை நடத்தின
கோமளம் பிள்ளயா, Komalam Pillaiya - அழகிய பிள்ளாய்!
இது என், Idhu En - இது என்ன காரியம்!
ஏடீ, Eadi - வாராய் தோழீ!
1931பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும் ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை) 10
அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே –10-8-10
பதவுரை Show / Hide
அல்லி கமலம் கண்ணனை, Alli Kamalam Kannanai - தாதுகளையுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடைய கண்ணபிரானைக்குறித்து
அங்கு, Angu - திருவாய்ப்பாடியில்
ஓர் ஆய்ச்சி, Or Aaychi - ஓரிடைச்சி
எல்லி பொழுது, Elli Pozhudhu - இராப்பொழுதிலே
ஊடிய, Oodiya - ப்ரணயரோஷந் தோற்றப்பேசின
ஊடல் திறத்தை, Oodal Thirathai - வெறுப்புவார்த்தை விஷயமாக
கல்லில் மலி, Kallil Mali - மலையைக்காட்டிலும் அதிசயத்த (வலிமைகொண்ட)
தோள், Thol - திருத்தோள்களையுடையரான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maalaik - இச்சொல்மாலையை
துதிப்பார் அவர், Thudhippar Avar - எம்பெருமானை ஏத்துமவர்கள்
துக்கம் இலர், Thukkam Ilir - துன்பமற்று வாழப்பெற்றுவர்கள்.