திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 4-1 போதலர்ந்த (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1248பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே) 1
போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள் தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல் மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே –4-1-1
பதவுரை Show / Hide
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும், Pothu Alarntha Pozhil Solai Puram Engum - புஷ்பங்கள் மலரப்பெற்ற பெரிய சோலைகளுள்ளவிடங்கள் முழுதும்.
தாது உதிர, Thadu Uthira - பூக்களின் தாதுகள் உதிரும்படியாக
பொரு திரைகள் வந்து அலைக்கும், Poru Thiraigal Vandu Alaikkum - செறிந்த அலைகள் வந்து வீசப்பெற்ற
தடம் மண்ணி, Thadam Manni - பெரியமண்ணியாற்றினுடைய
தென் கரைமேல், Then Karaimel - தெற்குக் கரையின் மேலே,
மாதவன் தான் உறையும் இடம், Madhavan Thaan Uraiyum Idam - மாதவப்பெருமாள் நித்ய வாஸம் செய்தருளுமிடம் (எதுவென்றால்,)
வயல் நாங்கை, Vayal Naangkai - கழனிகள் சூழ்ந்த திருநாங்கூரில்
வரி வண்டு தேதென என்று இசைபாடும், Vari Vandu Thethen Endru Isai Paadum - ரேகைகளையுடைய வண்டுகள் தென்ன தென்னவென்று இசைபாடப்பெற்ற.
திருத்தேவனார் தொகை, Thiruththevanar Thogai - திருத்தேவனார் தொகையென்னுந் திருப்பதியாம்.
1249பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் – அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 2
யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம் மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத் தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே –4-1-2
பதவுரை Show / Hide
யாவரும் ஆய், Yaavarum Aay - சேதனப் பொருள்கள் எல்லவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய் (- (அமர்ந்து உறையும் இடம்-;) (திருத்தேவனார் தொகையே -.))
யாவையும் ஆய், Yaavaiym Aay - அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்
எழில் வேதம் பொருள்களும் ஆய், Ezhil Vedham Porulgalum Aay - அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய்
மூவரும் ஆய், Moovaarum Aay - (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்
முதல் ஆய, Muthal Aay - முழுமுதற் கடவுளான
மூர்த்தி, Moorthy - எம்பெருமான்
மா வரும், Maa Varum - குதிரை மேல் ஏறிவருகிற
திண் படை, Thin Padai - திடமான ஆயுதங்களையுடைய
மன்னை, Mannai - ராஜலோகத்தை
வென்றி கொள்வார், Vendri Kolvaar - தோற்கடித்து வெற்றிபெறும் மந்தணர்கள்
மன்னு, Mannu - நித்யவாஸம் பண்ணுகிற
நாங்கை, Naangkai - திருநாங்கூரில் உள்ளதாய்,
தேவரும் சென்று இறைஞ்சு, Thevarum Sendru Irainju - நித்யஸூரிகளும் வந்து வணங்கப் பெற்றதாய்
பொழில், Pozhil - சோலைகளை யுடைத்தான
1250பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள் தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-3
பதவுரை Show / Hide
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும், Vaan Naadum Mann Naadum Matru Ulla Pal Uyirum - நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் (- (எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் -;) (நாங்கை தன்னுள் – ;) (திருத்தேவனார் தொகையே.))
தான் ஆய, Thaan Aaya - ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற
ஆனத, Aanadha - அழிவில்லாத
பெரு செல்வத்து, Peru Selvaththu - மிக்க ஐச்வரியத்தையுடையராய்
அருமறையோர், Arumaraivor - அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற
தேன் ஆரும் மலர் பொழில் சூழ், Then Aarum Malar Pozhil Soozh - தேன் நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த
1251பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள் எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம் இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து) 4
இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-4
பதவுரை Show / Hide
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் (- (திருத்தேவனார் தொகையே–.))
இமையவரும், Imaiyavarum - மற்றுமுள்ள தேவர்களும்
முனிவர்களும், Munivargalum - (ஸநகர் முதலிய) மஹர்ஷிகளும்
எழில் அமைந்த, Ezhil Amaindha - ப்ராஹ்மண லக்ஷ்மி பொருந்தியவனாய்
சந்தம், Sandham - வேதங்களை நிரூபகமாகவுடையனாய்
மலர், Malar - தாமரைப்பூவினின்று தோன்றினவனாய்
சதுமுகனும், Sathumuganum - பிரமனும்
கதிரவனும், Kathiravanum - ஸூரியனும்
சந்திரனும், Chandiranum - சந்திரனும்
எந்தை, Endhai - ‘எமக்குஸ்வாமியானவனே!
எமக்கு, Emakku - எங்கள் விஷயத்திலே
அருள், Arul - கிருபைபண்ணவேணும்’
என, En - என்று பிரார்த்திக்க
நின்று, Ninru - அதற்கு இசைந்து நின்று
அருளும் இடம், Arulum Idam - (அப்படியே) கிருபை பண்ணுமிடம் (எதுவென்றால்)
எழில் நாங்கை, Ezhil Nangkai - திருநாங்கூரில்
சுந்தரம் நல்பொழில், Sundaram Nalpozhil - மிகவுமழகிய சோலைகளாலே
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட
1252பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம் சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்) 5
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும் உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம் தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல் திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே — –4-1-5
பதவுரை Show / Hide
அண்டமும், Andamum - ஆகாசமும் (- (திகழ்மண்ணி தென் கரைமேல் –;) (திருத்தேவனார் தொகை-.))
அலை இக்கடலும், Alai Ikkadalum - அலையெறிகின்ற இக்கடல்களும்
அவனிகளும், Avanigalum - (நாவலந்தீவு முதலிய) தீவுகளும்
குலம் வரையும், Kulam Varaiyum - (ஹிமவான் முதலிய) குலபர்வதங்களும் ஆகிய இவற்றையெல்லாம்
உண்ட, Unda - (பிரளயகாலத்தில்) திரு வயிற்றில்கொண்ட
பிரான், Piran - உபகாரகனான எம்பெருமான்
உறையும் இடம், Uraiyum Idam - வாழுமிடம் (எதுவென்றால்)
ஒளி, Oli - ஒளிபொருந்திய
மணி, Mani - ரத்நங்களையும்
சந்து, Sandhu - சந்தன மரங்களையும்
அகில், Akil - அகில் கட்டைகளையும்
கனகம், Kanagam - பொன்களையும்
தெண் திரைகள் வர, Then Thiraigal Vara - தெளிந்த அலைகளின் வழியே வரும்படியாக
திரட்டும், Thirattum - ராசி ராசியாகக் குவிக்கின்ற
திண் திறாலர், Thin Thiralaar - மிக்க பலசாலிகள்
பயில், Payil - நித்யவாஸம் பண்ணுகிற
நாங்கை, Naangkai - திருநாங்கூரிலுள்ளதான
1253பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும் எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்) 6
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல் சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே— –4-1-6
பதவுரை Show / Hide
நால் மறையும் தொடராத, Naal Maraiyum Thodaraadha - (பெருமைபொருந்திய) நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (- (தடமண்ணித் தென்கரை மேல்;) (திருத்தேவனார் தொகையே))
பாலகன் ஆய, Paalagan Aaya - இளங்குழந்தையாய்க்கொண்டு
ஞாலம் எல்லாம், Njaalam Ellam - பூமிமுழுவதையும்
அமுது செய்து, Amuthu Seidhu - விழுங்கி
ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரில்
பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக்கண்வளர்ந்தருளுகிற
பரமன், Paraman - எம்பெருமானுடைய
இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்),
சாலி, Saali - செந்நெற் பயிர்களினுடைய
வளம், Valam - செழிப்பானது
பெருகிவரும், Perugivaram - அதிகப்பட்டு வராநிற்பதாய்
சேல் உகளும், Seyl Ugalum - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றதான
வயல், Vayal - கழனிகளையுடைய
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
சாலி, Saali - தற்சமவடசொல்
1254பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை அளைந்து இருந்த வ்யாமோஹம்) 7
ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம் ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள் சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே –4-1-7
பதவுரை Show / Hide
ஓடாத ஆள் அரியின் உரு ஆகி, Oadaadha Aal Ariyin Uru Aagi - நாட்டில் நடமாடாமல் அபூர்வமான நரஸிம்ஹ மூர்த்தியாகி (- (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே))
வாடாத வள் உகிரால், Vaadaadha Val Ughiraal - வளையாத கூர்மைமிக்க நகங்களினால்
இரணியனை பிளந்து அளைந்த மாலது, Iraaniyanai Pilandhu Alaintha Maalathu - ஹிரண்யாஸுரனைக் கிழித்து (ரத்தப்பெருக்கிலே) அளைந்து கொண்டிருந்த எம்பெருமானுடைய
இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்)
ஏடு ஏறு பெரு செல்வத்து, Aedu Aeru Peru Selvaththu - புத்தகங்களிலே எழுதி வைக்கத்தக்க மிகுந்த ஐச்வரியத்தை யுடையராய்
எழில் மறையோர், Ezhil Maraiyor - அழகிய வைதிகர்களான அந்தணர் வாழ்கிற
சேடு ஏறு பொழில் தழுவு, Sedu Eru Pozhil Thazhuvu - இளமை பொருந்தி சோலைகளோடு கூடிய
1255பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம் ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள் சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-8
பதவுரை Show / Hide
வார் ஆரும் இளகொங்கை மைதிலியை, Vaar Aarum Ilakongai Maithiliy - கச்சையிட்டுத் தாங்க வேண்டும்படியான இளமுலைகளையுடைய ஸீதாபிராட்டியை (- (நாங்கை தன்னுள்–;) (திருத்தேவனார் தொகையே–.))
மணம் புணர்வான், Manam Punarvan - விவாஹம் செய்து கொள்வதற்காக
கார் ஆர் தின் சிலை இறுத்த, Kaar Aar Thin Silai Irutha - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை முறித்த
தனி காளை, Thani Kaalai - விலக்ஷண யௌவநபுருஷன்
கருதும் இடம், Karudum Idam - திருவள்ளம்பற்றின திவ்யதேசம் (எதுவென்றால்)
ஏர் ஆரும் பெரு செல்வத்து எழில் மறையோர், Aer Aarum Peru Selvaththu Ezhil Maraiyor - அழகு பொருந்திய மிக்க ஐச்வரியத்தை யுடையராய் விலக்ஷண வைதிகர்களான அந்தணர் வாழ்கிற
சீர் ஆரும் மலர் பொழில் சூழ், Seer Aarum Malar Pozhil Soozh - அழகு விஞ்சிய பூக்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட
1256பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 9
கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக் கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம் வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள் செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-9
பதவுரை Show / Hide
மிக கும்பம் மதம் யானை, Miga Kumbam Matham Yaanai - பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது (- (அமர்ந்து உறையும் இடம்;) (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே.))
பாகனொடும் குலைந்து வீழ, Bhaganodum Kulainthu Veela - தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக
அதன் கொம்பை, Adhan Kombai - அவ்யானையின் தந்தத்தை
பறித்து எறிந்த, Parithu Erindha - பிடுங்கிப் பொகட்ட
கூத்தன், Kooththan - திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான்
வம்பு அவிழும் செண்பகத்தின் மணம் கமழும், Vambu Avizhum Senbagaththin Manam Kamazhum - அப்போதலர்ந்த செண்பகப் பூவிமுடைய வாஸனை வீசப்பெற்ற
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ், Sembon Mathil Pozhil Pudai Soozh - செவ்விய பொன்னால் செய்யப்பட்ட திருமதில்களும் சோலைகளும் சுற்றிலும் சூழ்ந்திருக்கப் பெற்ற
1257பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர்) 10
காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம் சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –4-1-10
பதவுரை Show / Hide
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன், Kaar Aarntha Thirumeeni Kannaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடைய கண்ணபிரான் (- (கூர் ஆர்ந்த வேல் கலியன்;))
அமர்ந்து உறையும்; இடம், Amarnthu Uraiyum Idam - பொருந்தி வாழும் திருப்பதியாய்,
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை, Seer Aarntha Pozhil Naangkai - அழகு பொருந்திய சோலைகளை யுடைய திருநாங்கூரிலுள்ளதான
திருத்தேவனார் தொகைமேல், Thiruththevanar Thogaimel - திருத்தேவனார் தொகை யென்னும் திவ்யதேசம் விஷயமாக
கூறு, Kooru - அருளிச்செய்த
தமிழ் பத்தும், Tamil Padhum - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து, Aer Aarntha Vaikundhathu - நன்மை மிக்க ஸ்ரீவைகுண்டத்தில்
இமையவரோடு இருப்பார், Imaiyavarodu Iruppaar - நித்யஸூரிகளோடு கூடி யிருக்கப் பெறுவார்கள்