Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: என் நாதன் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
307ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 1
என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என்னாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற–3-9-1
என் நாதன்,En Naathan - எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய
தேவிக்கு,Devikku - தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இன்பம் பூ,Enbam Poo - மனோ ஹரமான கற்பகப் பூவை
அன்று,Andru - (அவன் விரும்பின) அக் காலத்தில்
ஈயாதாள் தன்,Eeyaadhaal Than - கொடாத இந்திராணியினுடைய
நாதன்,Naathan - கணவனான தேவேந்திரன்
காணவே,Kaanave - கண்டு கொண்டு நிற்கும் போதே
தண் பூ மரத்தினை,Than Poo Maraththai - குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை
வல் நாதம் புள்ளால்,Val Naatham Pullaal - வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே
வலிய,Valiya - பலாத்காரமாக
பறித்து,Pariththu - பிடுங்கிக் கொண்டு வந்து
இட்ட,Etta - (அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின
என் நாதன்,En Naathan - என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய
வன்மையை,Vanmaiyai - வலிவை
பாடி,Paadi - பாடிக் கொண்டு
பற,Para - உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
308ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 2
என் வில் வலி கண்டு போவென்று எதிர் வந்தான்
தன் வில்லி னோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண்ணுயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற–3-9-2
எதிர் வந்தான் தன்,Ethir Vandhaan Than - எதிர்த்து வந்த பரசு ராமனுடைய
வில்லினோடு,Villinodu - வில்லையும்
தவத்தையும்,Thavaththaiyum - தபஸ்ஸையும்
எதிர்,Ethir - அவன் கண்ணெதிரில்
வாங்கி,Vaangi - அழித்தருளினவனும்
முன்,Mun - இதற்கு முன்னே
வில் வலித்து,Vil valiththu - வில்லை வளைத்து
முது பெண்,Muthu pen - (பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய
உயிர்,Uyir - உயிரை
உண்டான் ,Undaan - உண்டான்
வில்லின்,Villin - (தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய) வில்லினது
வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற
தாசரதி,Dasarathi - சக்ரவர்த்தித் திருமகனுடைய
தன்மையை,Thanmaiyai - ஸ்வபாவத்தை பாடிப் பற
309ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 3
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற் றங்கேக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற–3-9-3
உருப்பிணி நங்கையை,Uruppini nangaiyai - ருக்மிணிப் பிராட்டியை
தேரின்,Therin - (தனது) தேரின் மேல்
ஏற்றிக் கொண்டு,Eatrik kondu - ஏற்றிக் கொண்டு
விருப்புற்று,Virupputru - ஆசையுடனே
ஏக,Eka - (கண்ணன்) எழுந்தருளப்புக,
அங்கு,Angu - அவ்வளவில்
விரைந்து,Viraindhu - மிக்க வேகங் கொண்டு
எதிர் வந்து,Ethir vandu - (போர் செய்வதாக) எதிர்தது
செருக்கு உற்றான்,Serukku utraan - கர்வப்பட்ட ருக்மனுடைய
வீரம் சிதைய,Veeram sithaiya - வீரத் தனம் கெடும் படியாக
தலையை,Thalaiyai - (அவனது) தலையை
சிரைத்திட்டான்,Siraiththittaan - (அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய
வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற
தேவகி சிங்கத்தை,Devaki singaththai - தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை
பாடிப்பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
310ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 4
மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்ற மிலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற–3-9-4
மாற்று தாய்,Maatru thaai - தாயானவள்
சென்று,Sendru - சென்று.
வனமே போகு என்றிட,Vaname poga endrida - ‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க
ஈற்றுத்தாய்,Eetru thaai - பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள்
பின் தொடர்ந்து,Pin thodarnthu - (தன்னைப்) பின் தொடர்ந்து வந்து
எம்பிரான்,Empiraan - “என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”)
என்று அழ,Endru azha - என்று கதறி அழ
கூற்று தாய் சொல்ல,Kootru thaai solla - யமனைப்போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு
கொடிய வனம் போன,Kodiya vanam pona - கொடிய காட்டுக்கு எழுந்தருளின
சீற்றம் இலாதானை,Seetram ilaathaanai - சீற்றமற்ற இராம பிரானை
பாடிப் பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற

சீதை மணாளனை,Seethai manaalanai - ஸீதைக்கு வல்லபனானவனை
பாடிப் பற, Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
311ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 5
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந் தநல் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற–3-9-5
பஞ்சவர்,Panchavar - பஞ்ச பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்,Thoodhan Aay - (துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
பாரதம்,Bharatham - (அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்) பாரத யுத்தத்தை
கை செய்து,Kai Seithu - அணி வகுத்துச் செய்து,
கஞ்சு உமிழ்,Kanju Umizh - விஷத்தைக் கக்குகின்ற
நாகம் கிடந்த,Kaagam Kidandha - காளியன் கிடந்த
நல் பொய்கை புக்கு,Nal Poigai Pukku - கொடிய மடுவிலே புகுந்து
அஞ்ச பணத்தின் மேல் ,Anja Ak Kaaliyan Anjumbadi - (அக் காளியன்) அஞ்சும்படி (அவனது) படத்திலே
பாய்ந்திட்டு,Paayndhittu - குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க
அருள் செய்த,Arul Seitha - அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட
அஞ்சனவண்ணனை பாடிப்பற;,Anjanavannanai Paadippara - அஞ்சனவண்ணனை பாடிப்பற;
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.,Asothaithan Singaththaip Paadippara - அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.
312ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 6
முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு உன்
அடியேற் கருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடி நிலை யீந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற–3-9-6
முடி ஒன்றி,Mudi Ondri - திருமுடி சூடி
மூ உலகங்களும்,Moo Ulagangalum - பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும்
ஆண்டு,Aandu - பரி பாலித்துக் கொண்டு
உன் அடியேற்கு அருள் என்று,Un Adiyerku Arul Endru - தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும் என்று வேண்டிக் கொண்டு
அவன் பின் தொடர்ந்த,Avan Pin Thodarndha - பெருமான் பின்னே தொடர்ந்து வந்த
படி இல் குணத்து பரதன் நம்பிக்கு,Padi Il Gunathu Barathan Nambikku - ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு
அன்று,Andru - அக் காலத்திலே
அடி நிலை,Adi Nilai - ஸ்ரீபாதுகைகளை
ஈந்தானை,Einthaanaai - அளித்தருளின இராமபிரானை
பாடிப் பற,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற

அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியையிலுள்ளவர்களுக்கு
கோமானை,Komaanaai - அரசனானவனை, பாடிப்பற
313ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 7
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந் திட்டு அவன்
நீள் முடி யைந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற தூமணி வண்ணனைப் பாடிப் பற–3-9-7
காளியன் பொய்கை,Kaaliyan Poigai - காளியன் கிடந்த பொய்கையானது
கலங்க,Kalanga - கலங்கும்படி
பாய்ந்திட்டு,Paayndhittu - (அதில்) குதித்து
அவன்,Avan - அக் காளியனுடைய
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து,Neel Mudi Aindhilum Nindru Nadam Seithu - ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி,
மீள,Meela - அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு.
அவனுக்கு,Avanukku - அக் காளியனுக்கு
அருள் செய்து,Arul Seithu - (ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின்
வித்தகன்,Viththagan - லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய
தோள் வலி,Thol Vali - புஜ பலத்தையும்
வீரம்,Veeram - வீரப் பாட்டையும் பாடிப் பற;
தூ மணி,Thoo Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையவனை பாடிப் பற
314ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 8
தார்க்கு இளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவி யொடு மூக்கு அவ
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற–3-9-8
தார்க்கு,Tharkku - மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு
இளந்,Ilann - (தகுந்திராத) இனம் பருவத்தை யுடையவனான
தம்பிக்கு,Thambikku - பரதாழ்வானுக்கு
அரசு ஈந்து,Arasu Eindhu - (அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து,
நூற்றவள்,Noorrthaval - (இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய
சொல் கொண்டு,Sol Kondu - சொல்லை ஏற்றுக் கொண்டு
தண்டகம்,Thandhagam - தண்ட காரண்யத்துக்கு
போகி,Poagi - எழுந்தருளி (அவ்விடத்தில்)
நுடங்கு இடை,Nutangu Idai - துவண்ட இடையை உடையனான
சூர்ப்பண சாவை,Soorppana Saavai - சூர்ப்பணகையினுடைய
செவியொடு மூக்கு,Seviyodu Mookku - காதையும் மூக்கையும்
அவன் ஆர்க்க அரித்தானை,Avan Aarkka Ariththaanai - அவன் கதறும்படி அறுத்த இராம பிரானை
பாடிப் பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற,Ayoththikku Arasanai Paadip Para - அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
315ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 9
மாயச் சகட முதைத்து மருதிறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்க ளேற்றினைப் பாடிப் பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற–3-9-9
மாயம்,Maayam - க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான
சகடம்,Sakadam - சகடத்தை
உதைத்து,Uthaiththu - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும்
மருது,Marudhu - இரட்டை மருத மரங்களை
இறுத்து,Iruththu - இற்று விழும்படி பண்ணியும், (பின்பு)
ஆயர்களோடு,Aayargalodu - இடையர்களோடு கூட
போய்,Poi - (காடேறப்) போய்
ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை
காத்து,Kaaththu - ரக்ஷித்தும்
அணி,Ani - அழகிய
வேயின் குழல்,Veyin Kuzhal - வேய்ங்குழலை
ஊதி,Oothi - ஊதியும்
வித்தகன் ஆய் நின்ற ,Viththagan Aay Nindra - விஸ்மயநீயனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினை,Aayargal Etrhinai - இடையர்க்குத் தலைவனான கண்ணபிரானை பாடிப்பற
ஆநிரை மேய்த்தானை பாடிப் பற,Aanirai Meyththaanai Paadip Para - ஆநிரை மேய்த்தானை பாடிப் பற
316ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 10
காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆரா வமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற–3-9-10
கார் ஆர் கடலை,Kaar Aar Kadalai - கருமை பொருந்திய கடலை
அடைத்திட்டு,Adaiththittu - (மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி)
இலங்கை,Ilangai - (அர்த்த ஸேது வழியாக) லங்கையிலிருந்து
புக்கு,Pukku - (அவ்விடத்தில்)
ஒராதான்,Oraathaan - (தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய
பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்,Pon Mudi Onpathodu Onraiyum - அழகிய தலைகள் பத்தையும்
நேரா,Naeraa - அறுத்துப் போகட்டு
அவன் தம்பிக்கே,Avan Thambikke - அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே
நீள் அரசு ஈந்த,Neel Arasu Eindha - நெடுங்காலம் நடக்கும்படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின்
ஆரா அமுதனை,Aaraa Amudhanai - எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராமபிரானை
பாடிப்பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற
317ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 11
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி யிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்ல லில்லையே–3-9-11
நந்தன மதலையை,Nandhana Madhalaiyai - நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும்
காகுத்தனை,Kaaguththanai - இராம பிரானையும்
நவின்று,Navindru - (ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி
உந்தி பறந்து,Undhi Parandhu - உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின
ஒளி இழையார்கள்,Oli Izaiyaargal - அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய
சொல்,Sol - சொல்லி
செம்தமிழ்,Semthamizh - அழகிய தமிழ் பாஷையாலே
தென் புதுமை விட்டு சித்தன் சொல்,Then Puthumai Vittu Siththan Sol - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த
ஐந்தினோடு ஐந்தும்,Aindhinodu Aindhum - க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை
வல்லார்க்கு அல்லல் இல்லை,Vallarkku Allal Illai - துன்பமொன்று மில்லையாம்.