திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1848 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய் தானே பிராப்யன் ஆனவனை திரு நீர் மலையிலே கண்டோம் இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் – என்கிறார்) 1 | ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1 | பதவுரை Show / Hideஒரு நல் சுற்றம், Oru Nal Suttam - அத்விதீய விலக்ஷண பந்துவாய் எனக்கு உயிர், Enakku Uyir - எனக்கு ஆத்மாவாய் ஒண் பொருள், On Porul - சிறந்த பெருளாயிருப்பவனாய் வருநல் தொல் கதி ஆகிய, Varunal Thol Kathi Aagiya - மேல்வரப் போகிற நல்லப்ராய்ய பூமியும் தானேயா யிருப்பவனான மைந்தனை, Mainthanai - நித்ய்யுவாலான பெருமானை நெருநெல், Nerunel - நேற்று கண்டது, Kandathu - ஸேவித்தது நீர்மலை, Neermalai - திருநீர்மலையிலே இன்று, Indru - இன்றைக்கோ வென்னில், கரு நெல் சூழ், Karunel Soozh - கருவடைந்த பயிர்களால் சூழப்பட்ட கண்ணமங்கையுள், Kannamangaiyul - திருக்கண மங்கையிலே போய் காண்டும், Poi Kaandum - சென்று ஸேவிப்போம் |
| 1849 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் – இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார்) 2 | பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே –10-1-2 | பதவுரை Show / Hideபொன்னை, Ponnai - பொன்போல விரும்பத்தகுந்தவனும் மா மணியை, Maa Maniyai - நீலமணிபோன்றவனும் அணி ஆர்ந்தது ஓர் மின்னை, Ani Aarnthathu Oru Minnai - அழகுமிக்கதொரு மின்னற் கொடிபோன்று உஜ்ஜவல ஸ்வரூபியானவனும் என்னை ஆளுடை ஈசனை, Ennai Aaludai Eesanai - என்னை அடிமைகொண்ட ஸ்வாமியுமான எம்பிரான் தன்னை, Embiran Thannai - ஸர்வேச்வரனை யாம், Yaam - அடியோம் (நெருநல்), Nerunel - நேற்று வேங்கடத்து உச்சியில், Vengadathu Uchiil - திருவேங்கடமலையின் சிகரத்தில் கண்டு, Kandu - ஸேவித்து, (இன்று), Indru - இன்றைக்கு தண்காவிலே சென்று காண்டும், Thankavilai Sendru Kaandum - திருத்தண்காவிலே போய் ஸேவிப்போம். |
| 1850 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம் என்கிறார்) 3 | வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே –10-1-3 | பதவுரை Show / Hideவேலை, Velai - (பிரளயக்) கடலிலே ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரிலே பள்ளி விரும்பிய, Palli Virumbiya - திருக்கண் துயில்வதை உகந்தருளினவனும் பாலை, Paalai - பால்போன்றவனும் ஆர் அமுதத்தினை, Aar Amudaththinai - அருமையான அமிருதம் போன்றவனும் பைந்துழாய், Painthuzhai - பசுமைதங்கிய திருத்துழாயை யுடையவனும் ஞாலம் உன்னியை, Njaalam Unniyai - உலகத்தவர்களெல்லாராலும் தியானிக்கப்படுபவனுமான மாலை, Maalaik - ஸர்வேச்வரனை ஆலியில் கண்டு மகிழ்ந்து, Aaliil Kandu Makizhndhu - திருவாலியில் ஸேவித்து ஆநந்தித்து நாங்கூரிலே போய் காண்டும், Naangoorile Poi Kaandum - திருநாங்கூரிலே சென்று ஸேவிப்போம். |
| 1851 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை ஸ்ரீ திருப் பேரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் என்கிறார்) 4 | துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே –10-1-4 | பதவுரை Show / Hideதுளக்கம் இல் சுடரை, Thulakkam Il Sudarai - ஒன்றாலும் அழிதலில்லாத ஒளியையுடையவனும் அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அஸுரனுடைய உடல், Udal - உடம்பை பிளக்கும், Pilakkum - பிளந்தொழித்த மைந்தனை, Mainthanai - மிடுக்கையுடையவனும் அளப்பு இல் ஆர் அமுதை, Alappu Il Aar Amudhai - அளவிடுதலில்லாத போக்யதையை யுடைத்தான அமிருதம் போன்றவனும் அமரர்க்கு அருள் விளக்கினை, Amararukku Arul Vilakkinai - நித்யஸூரிகளுக்கு அருள் செய்கின்ற விளக்குப் போன்றவனுமான பெருமானை பேரில், Peril - திருப்பேர் நகரில் வணங்கிப்போய், Vanangippoy - ஸேவித்து வெள்ளறை, Vellarai - திருவெள்ளறையிலே சென்று காண்டும், Sendru Kaandum - சென்று தொழுவோம் |
| 1852 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை ஸ்ரீ திரு நறையூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம் என்கிறார்) 5 | சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே –10-1-5 | பதவுரை Show / Hideசுடலையில், Sudalaiyil - சுடுகாட்டில் சுடுநீறன், Suduneeran - சுட்டசாம்பலைப் பூசுமவனான ருத்ரனுக்கு அமர்ந்தது, Amarnthathu - நேர்ந்ததான ஓர் நடலை, Oru Nattalai - ஒரு கஷ்டத்தை தீர்த்தவனை, Theerthavanai - போக்கியருளினவனும் என் உடலை உள் புகுந்து, En Udalai Ula Pugundhu - எனது சரீரத்தினுள்ளே புகுந்து உள்ளம், Ullam - நெஞ்சே உருக்கி உண், Urukki Un - உருக்கி உண்கின்ற விடலையை, Vidalaiyai - யுவாவுமான ஸர்வேச்வரனை நறையூர் கண்டு, Naraiyur Kandu - திருநறையூரிலே ஸேவித்து மெய்யத்துள்ளே சென்று காண்டும், Meyyaththulle Sendru Kaandum - திருமெய்யத்திலே சென்று ஸேவிப்போம் |
| 1853 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம் இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார்) 6 | வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6 | பதவுரை Show / Hideவானையார், Vaanaiyaar - வானுலகத்திலுள்ளார்க்கு அமுதம் தக்க, Amudham Thakka - அமுதமெடுத்தளித்த வள்ளலை, Vallalai - உதாரனும், தேனை, Thenai - தேன்போல இனியவனும் ஆனை, Aanaik - (குவலயாபீடமென்கிற) யானையை வாட்டி அருளும், Vaatti Arulum - கொன்றொழித்தவனும் அமரர்தம் கோனை, Amarartham Konai - நித்யஸூரிகளுக்கு நியாமகனுமான எம்பெருமானை யாம், Yaam - அடியோம் நீள் வயல் சேறையில், Neel Vayal Seraiyil - நீண்டவயல்களை யுடைத்தான திருச்சேறையில் கண்டுபோய், Kandupoy - ஸேவித்து குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே சென்று காண்டும், Sendru Kaandum - போய்ஸேவிப்போம். |
| 1854 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணனாய் அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெக்காவில் காணக் கடவோம்) 7 | கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே –10-1-7 | பதவுரை Show / Hideகூந்தலார் மகிழ் கோவலன் ஆய், Koondhalar Magizh Kovalain Aay - சிறந்த கூந்தலையுடையரான ஸ்த்ரீகள் உகக்கும்படியான கோபாலகிருஷ்ணனாய்த் திருவவதரித்து (- (கண்டு மகிழ்ந்து போய்)) வெண்ணெய், Vennai - வெண்ணெயை மாந்த, Mantha - அமுதுசெய்யாநிற்க அழுந்தையில், Azhundhaiyil - தேரழுந்தூரிலே பாந்தள் பாழியில், Panthal Pazhiyil - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே பள்ளி, Palli - திருக்கண்வளர்தலை விரும்பிய, Virumbiya - விரும்பிக் கைக்கொண்ட வேந்தனை, Vendhanai - ஸர்வேச்வரனை வெஃகாவுள், Vekavul - திருவெஃகாவில் சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம் |
| 1855 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார்) 8 | பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8 | பதவுரை Show / Hideபத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு ஆத்மாவாக வுள்ளவனும் பால் மதியை, Paal Mathiyai - களங்கமற்ற சந்திரனைப் போல அழகியவனும் அணி தொத்தை, Ani Thothai - ஆபரணமாலை போன்றவனும் முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனும் மணியை, Maniyai - நீலமணிபோன்றவனும் மணி மாணிக்கம், Mani Manikkam - சிறந்த மாணிக்கம் போன்றவனும் வித்தினை, Viththinai - ஜகத்காரண பூகனுமான எம்பெருமானை மாலிருஞ்சோலை, Maliruncholai - திருமாலிருஞ்சோலையில் போய் தொழுது, Poi Thozhudhu - சென்று பணிந்து விண்ணகர், Vinnagar - திருவிண்ணகரிலே சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம் |
| 1856 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய் ஸ்ரீ திரு நாவாயிலே காணக் கடவோம் என்கிறார்) 9 | கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே –10-1-9 | பதவுரை Show / Hideகம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கத்தக்கதாய் மா, Maa - பெரிய வடிவுடைத்தான களிறு, Kaliru - (குவலயாபீடமென்னும்) யானை அஞ்சி, Anji - பயப்பட்டு கலங்க, Kalanga - கலங்கி முடியுமாறு ஓர் கொம்பு கொண்ட, Oru Kombu Konda - அதன் கொம்பை முறித்தெறிந்தவனும் குரை கழல், Kurai Kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலை யுடையவனும் கூத்தனை, Koothanai - விசித்திரமான நடையுடையவனும் நம்பனை, Nambanai - (அன்பர்) விச்வஸிக்கத் தகுந்தவனுமான பெருமானை கொம்புஉலாம் பொழில், Kombulalam Pozhil - கிளைகள் விளங்குகின்ற சோலைகள் யுடைத்தான கோட்டியூர், Kottiyur - திருக்கோட்டியூரிலே போய் கண்டு, Poi Kandu - சென்று ஸேவித்து நாவாயுள் சென்று காண்டு, Navayul Sendru Kandu - திருநாவாயில் போய் ஸேவிப்போம் |
| 1857 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள்) 10 | பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10 | பதவுரை Show / Hideபெற்றம் ஆளியை, Petram Aalaiya - பசுக்களை ஆளப்பிறந்தவனும் பேரில், Peril - திருப்பேர் நகரில் மணளனை, Manalanai - மணவாளப்பிள்ளையாக ;ஸேவை ஸாதிப்பவனுமான பெருமான் விஷயமாக, நூல் கற்ற கலிகன்றி உரைசெய்த, Nool Katra Kalikanri Uraichaidha - நூல்களைப் பயின்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சொல் திறம் இவை, Sol Thiram Ivai - இந்த சப்தராசியை சொல்லிய தொண்டர் கட்கு, Solliya Thondar Kadku - ஓதுகின்ற பாகவதர்களுக்கு அற்றம் இல்லை, Attram Illai - (கைங்கரியத்திற்கு) இடையூறு (ஒருநாளும்) இல்லையாம். அவர்க்கு அண்டம் ஆட்சி, Avarkku Andam Aatchi - அவர்களுக்குப் பரமபதம் ஆளவுரியதாம். |