திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-10 திருத்தாய் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1942பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை – என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் – ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை – ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள்) 1
திருத்தாய் செம்போத்தே திரு மா மகள் தன் கணவன் மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத் திருத்தாய் செம்போத்தே –10-10-1
பதவுரை Show / Hide
செம்போத்தே, Semboththae - ஓசெம்போத்துப் பட்சியே! (- (செம்போத்தே! திருத்தாய்))
திருமாமாள் தன் கணவன், Thirumaamal Than Kanavan - பெரியபிராட்டியார்க்கு கொழுநனாய்
மருதர், Maruthar - மணம் மிக்க மாலையை யணிந்துள்ளவனாய்
தொல் புகழ், Thol Pugazh - நித்யஸித்தமான கீர்த்தியை யுடையவனான
மாதவனை, Madhavanai - எம்பெருமானை
வர திருத்தாய், Vara Thiruththai - இங்கே வருமாறு நீதிருந்த வேணும்;
1943பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை – ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய்) 2
கரையாய் காக்கைப் பிள்ளாய் கருமா முகில் போல் நிறத்தன் உரையார் தொல் புகழ் உத்தமனை வரக் கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2
பதவுரை Show / Hide
காக்கைப் பிள்ளாய், Kaakkai Pillai - காக்கைக்குட்டியே! (- (காக்கைப் பிள்ளாய்! கரையாய்))
கரு மா முகில் போல் நிறத்தன், Karumaa Mukil Pol Niraththan - காளமேகநிறத்தனாய்
உரை ஆர்தொல் புகழ், Urai Aarthol Pugazh - சொற்களில்  நிரம்பிய நித்ய கீர்த்தியையுடையனான
உத்தமனை, Uthamanai - புரஷோத்தமனை
வர கரையாய், Vara Karaiyaai - வருமாறு கூப்பிடவேணும்
1944பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு – வரக் கூவாய் பூங்குயிலே) 3
கூவாய் பூங்குயிலே குளிர்மாரி தடுத்துகந்த மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே –10-10-3
பதவுரை Show / Hide
பூகுயிலே, Pookuyile - அழகிய குயிலே! (- (பூங் குயிலே! கூவாய்-.))
குளிர்மாரி, Kulirmaari - (இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை
தடுத்து, Thaduthu - (கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து
உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்தவனும்
மா   வாய்கீண்ட, Maa Vaaykeenda - நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும்
மணி வண்ணனை, Mani Vannana - நீலமணி நிறத்தனுமான எம            பெருமானை
வரகூவாய், Varakoovai - வருமாறு கூவவேணும்
1945பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் – ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று – தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை – பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி) 4
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி உலகளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –10-10-4
பதவுரை Show / Hide
பல்லக்குட்டி, Pallakkutti - ஓ பல்லிக்குட்டி! (- (பல்லிக்குட்டி கொட்டாய்-.))
குடம் ஆடி, Kudam Aadi - குடக் கூத்தாடினவனும்
மட்டு ஆர்பூ குழல், Mattu Aarboo Kuzhal - தேன் பொருந்தி ணிந்த திருக்குழற்கற்றை யையுடையவனும்
மாதவனை, Madhavanai - திருமகள் கொழுநனுமான எம் பெருமானை
வா, Vaa - இங்கே வருமாறு
கொட்டாய், Kottai - ஒலிசெய்
1946பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் – வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை – சொல்லாய் பைங்கிளியே) 5
சொல்லாய் பைங்கிளியே சுடராழி வலனுயர்த்த மல்லார் தோள் வட வேங்கடவனை வரச் சொல்லாய் பைங்கிளியே –10-10-5
பதவுரை Show / Hide
பைங்கிளியே, Paingiliye - பசுமைதங்கிய கிளியே! (- (பைங்கிளியே! சொல்லாய்-.))
சுடர்ஆழி, Sudarazhi - ஒளிமிக்க திருவாழிப் படையை
வலன், Valan - வலத்திருக்கையிலே
உயர்த்த, Uyarttha - உயரத் தாங்கியிருந்துள்ளவனும்
மல் ஆர்தோள், Mal Aarthol - மிடுக்குடைய திருத்தோள் களையுடையவனும்
வடங்கடவனை, Vadangadavani - வடதிருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமானபெருமானை
வரசொல்லாய், Varasollai - இங்குவரச்சொல்லவேணும்
1947பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து- கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் – என் செய்கேன் -என்கிறாள்) 6
கோழி கூவென்னுமால் தோழி நான் என் செய்கேன் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் –10-10-6
பதவுரை Show / Hide
தோழி, Thozhi - வாராய் தோழீ (- (மறுபடியும்) (எம்பெருமான் பிரிந்துபோய்விடப் போகிறானே))
கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கத்துகிறது
ஆழிவண்ணனா வரும் பொழுது ஆயிற்று, Azhivannana Varum Pozhuthu Aayitru - கடல் வண்ணனான எம்பெரு மான் இங்குவந்து சேருகிற வேளையாயிற்று
ஆல், Aal - ஸந்தோஷம்
கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கூப்பிடப்போகிறதே!
நான் என்செய் கேன், Naan Ensei Ken - நான் என்னபண்ணுவேன்
ஆல், Aal - கஷ்டம்!.
1948பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா – அவன் வடிவு தானே இறே ப்ரேரகம் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே) 7
காமற்கு என் கடவேன் கரு மா முகில் வண்ணற்கு அல்லால் பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக் காமற்கு என் கடவேன் –10-10-7
பதவுரை Show / Hide
கருமாமுகில் வண்ணற்கு அல் லால், Karumamugil Vannarku Al Laal - கருத்துப் பெருத்த மேகம் போன்ற திருநிறத்தையுடையரான பெருமாளுக்குக் கடமைப் பட்டிருப்ப தல்லாமல் (- (காமற்கு என் கடவேன்?-.))
மேல், Mel - அதற்குமேலே
பூ, Poo - புஷ்பங்களாகிற
ஐகணை, Aikanai - பஞ்சபாணங்களை
கோத்து, Kothu - (கருப்புவில்லிலே) தொடுத்து
புகுந்து, Pugundhu - உள்ளேபுகுந்து
எய்ய, Eyy - பிரயோகித்து ஹிம்ஸிக்கும் படியாக
காமற்கு, Kaamarakku - (என்வயிற்றிறி பிறந்தபிள்ளையான) மன்மதனுக்கு
என் கடவேன், En Kadaven - கடமைப்பட்டவனோ நான்?
1949பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப – தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் – இங்கே போதுங்கொலோ) 8
இங்கே போதுங்கொலோ இனவேல் நெடுங்கண் களிப்பக் கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால் இங்கே போதுங்கொலோ –10-10-8
பதவுரை Show / Hide
கொங்கு ஆர், Kongu Ar - தேன்நிறைந்த (- (இங்கே போதும் சொலோ!-))
சோலை, Solai - சோலைகளையுடைய
குடந்தை, Kudanthai - திருக்குடைந்தையிலே
கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருளாநின்ற
மால், Maal - எம்பெருமான்,
இளம் வேல் நெடு கண் களிப்ப, Ilam Vel Nedu Kann Kalippa - ஓன்றுக்கொன்று ஒப்பாய்வேல் போன்ற நீண்ட (எனது) கண்களானவை கண்டு களிக்கும்படியாக
இங்கே, Inge - இவ்விடத்தே
போதும்கொலோ, Podhumkolo - எழுந்தருளக் கூடுமோ?
1950பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய – ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம்) 9
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் –10-10-9
பதவுரை Show / Hide
அன்னே, Anne - அம்மே!
ஆழியொடும், Azhiyodum - திருவாழியாழ்வானையும்
பொன்ஆர் சார்ங்கம், Ponaar Sargangam - அழகுபொருந்திய சார்ங்க வில்லையும்
உடைய, Udaiya - (திருக்கையிலே) உடைய வரான
அடிகளை, Adigalai - ஸ்வாமியை
இன்னார்என்று, Innaarendru - இன்னாரென்று தொரிந்து கொள்ளமாட்டுகின்றியேன்
அறியேன், Ariyen - இன்னார்என்று அறியேன்-.
1951பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே) 10
தொண்டீர் பாடுமினோ சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள் தொண்டீர் பாடுமினோ –10-10-10
பதவுரை Show / Hide
தொண்டீர்  அன்னே!, Thondir Anne - பாகவதர்களே (- (தொண்டீர்! பாடுமின்-.))
சுரும்பு ஆர்            பொழில், Surumbu Ar Pozhil - வண்டுகள் நிறையப்படிந்த சோலைகளையுடைய
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்குத் தலைவரும்
ஒண் தர்வேல், On Tharveel - அழகிய மாலையையும் வேற்     படையையுமுடையவருமான்
கலியன், Kalyan - ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலைகள், Maalaihal - இச்சொல்மாலையை
பாடுமின், Paadumin - பாடுங்கள்