திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-3 ஏத்துகின்றோம் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1868பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே – அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே – ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் – பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே) 1
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம் சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1
பதவுரை Show / Hide
இராமன், Iraman - இராமபிரானுடைய
திருநாமம், Thirunamam - திருநாமங்களை
நா தழும்ப, Na Thazhumba - நாக்குத் தடிக்கும்படி
எத்துகின்றோம், Eththukindrom - வாயாரச்சொல்லித் துதிக்கின்றோம்.
நம்பீ சுக்கிரீவா, Nambi Chukkrivaa - ஸுக்ரீவமஹாராஜரே!
சோத்தம், Soththam - இதோ அஞ்ஜலி
உம்மை தொழுகின்றோம், Ummalai Thozhugindrom - உம்மைத் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றோம்
உங்கள் வானரம், Ungal Vaanaram - நீங்களிட்ட வழக்காயிருக்கின்ற வானரவீரர்கள்
எம்மை கொல்லாமே, Emmai Kollame - எங்களைக் கொல்ல நினையாதபடி
வார்த்தை பேசீர், Vaarthai Pesir - ஒருவார்த்தையருளிச் செய்யவேணும்
கூத்தர் போல, Koothar Pola - கூத்தாடக்கற்றவர்கள் போல
குழமணிதூரம் ஆடுகின்றோம், Kuzhamanithuram Aadugindrom - உங்கள் வெற்றியும் எங்கள் தோல்வியுந்தோற்ற ஆடுகின்றோம்
1869பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை) 2
எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான் நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே –10-3-2
பதவுரை Show / Hide
இந்திரசித்து, Indirachithu - இந்த்ரஜித்தானவன் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே, Embirane Ennai Aalvaai Endru Endru Aratradhe - பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல்
அம்பின் வாய் பட்டு, Ambin Vaai Pattu - பாணங்களுக்கு இரையாகி
ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாமல்
அழிந்தான், Azhindhaan - மாண்டுபோனான்
நம்பி அனுமா!, Nambi Anumaa - சுக்கிரீவா! அங்கதனே! நளனே!
கும்பகரணன், Kumbakaranan - கும்பகர்ணனானவன்
பட்டுப் போனான், Pattup Ponaan - முடிந்துபோனான்
1870பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் – எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ – கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ) 3
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல் நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3
பதவுரை Show / Hide
ஞாலம் ஆளும், Njaalam Aalum - பூமியை யெல்லாம் ரக்ஷித்தருள்பவராய் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீராமபிரான்
எங்கள் இராவணற்கு, Engal Iraavanarku - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனுக்கு
காலன் ஆகி வந்த ஆ கண்டு, Kaalan Aagi Vantha Aa Kandu - ம்ருத்யுவாக வந்தபடியைப் பார்த்து
அஞ்சி, Anji - பயப்பட்டு,
கரு முகில் போல், Karum Mukhil Pola - ;காளமேகம் போன்ற
நீலன் வாழ்க, Neelan Vazhga - நீலன் வாழவேணும்,
சுடேணன் வாழ்க, Sudhenan Vazhga - ஸுஷேணன் வாழவேணும்
அங்கதன் வாழ்க, Angathan Vazhga - அங்கதன் வாழவேணும்
என்று, Endru - என்று ஒவ்வொருவர்க்கும் பல்லாண்டுபாடிக்கொண்டு
கோலம் ஆக, Kolam Aaga - அழகாக
1871பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம்) 4
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால் கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-4
பதவுரை Show / Hide
மணங்கள் நாறும் வார் குழலால் மாதர்கள், Manangal Naarum Vaar Kuzhalal Maatharhal - பரிமளம் மிக்க நீண்ட கூந்தளையுடையரான ஸ்த்ரீகள் விஷணத்திலே (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
ஆதரத்தை புணர்ந்த சிந்தை, Aadharaththai Punarndha Sindhai - ஆசையை ஒருபோதும் விடாத நெஞ்சையுடையனாய்
புன்மை யாளன், Punmai Yalan - மிகவும் நீசனான இராவணன்
பொன்ற, Pondra - முடியும்படியாகவும்
கணங்கள் உண்ண, Kangal Unna - பிசாசுகள் ஏறிப் புசிக்கும்படியாகவும்
வரி சிலையால், Vari Silaiyal - அழகிய வில்வழியாக
வாளி ஆண்ட, Vaali Aanda - அம்புகளைப் பிரயோகித்த
காவலனுக்கு, Kaavalanukku - ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய
இளையோன், Ilaiyoan - திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய
குணங்கள் பாடி, Gunangal Paadi - திருக்குணங்களைப் பாடிக்கொண்டு
1872பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்- நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே- எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம்) 5
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள் நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5
பதவுரை Show / Hide
எம்பெருமான் தமர்காள், Emperumaan Thamarkaal - ஸ்ரீராமபக்தர்களான வாநர வீரர்களே! (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்))
வென்றி தந்தோம், Vendri Thandhom - ஜயத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டோம்!
மானம் வேண்டாம், Maanam Vendaam - “நாங்களும் ஆண்பிள்ளைகள்” என்று கொண்டிருந்த அஹங்காரத்தைக் கைவிட்டிட்டோம்.
எங்கள் வாழ்நாள், Engal Vaazhnal - எங்களுடைய ஆயுளை
எமக்கு, Emakku - எங்களுக்கு
தானம் ஆக, Dhaanam Aaga - யாசகங் கொடுக்கும் விதமாக
இன்று தம்மின், Indru Thammin - இப்போது கொடுத்து விடுங்கள்,
நீர், Neer - நீங்கள்
எம்மை கொல்லாதே, Emmai Kollaadhe - எங்களைக் கொல்லாமல்
கண்கள் ஆர, Kangal Aara - கண் படைத்த பயன் பெறுமாறு
நின்று காணீர், Ninru Kaanir - நின்று காணுங்கோள்
குன்றுபோல, Kuntrupola - நாங்கள் மலைமலையாக நின்று
1873பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் – பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ – எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும்) 6
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-6
பதவுரை Show / Hide
உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான், (- (வானர முதலிகான்!) (குழமணிதூரம் ஆடுகின்றோம் காண்))
கல்லில், Kallil - மலைகளைக்கொண்டு
முந்நீர், Munnir - கடலை
மாற்றி வந்து, Maatri Vandu - (அணைகட்டித்) தகைந்து
இலங்கை, Ilankai - லங்கையிலுள்ள
காவல், Kaaval - அரண்களையும்
கடந்து, Kadandhu - அதிக்ரமித்து
எம்மை, Emmai - எங்களை
அமர் களத்து, Amar Kalathu - யுத்தபூமியிலே
அல்லல் செய்தான், Allal Seithaan - மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார்
வெம் கதிரோன் சிறுவர், Vem Kathiron Siruvar - ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே!
வெல்ல கில்லாது, Vella Killaadhu - (உங்களை) ஜயிக்க மாட்டாமல்
அஞ்சினோ, Anjino - பயப்படுகின்றோம்
கொல்ல வேண்டா, Kolla Venda - எங்களைக் கொல்லாதொழிய வேணும்
1874பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை – ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும்) 7
மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர் சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-7
பதவுரை Show / Hide
அரக்கர் உள்ளீர், Arakkar Ullir - ராக்ஷஸஜாதியிற் பிறந்திருக்கின்ற இலங்கையர்காள்!
வம்மின், Vammin - நீங்களும் எங்களோடே வந்து சேருங்கள்,
மாற்றம் ஆவது இத்தனையே, Maatram Aavathu Ithanaiye - (உங்கட்கு நாங்கள்) சொல்லும் வார்த்தை இவ்வளவே,
நும் மேல், Num Mel - உங்கள்மேல்
சீற்றம், Seetram - (ஸ்ரீராம ஸைந்யங்களுக்குண்டான) கோபம்
தீர வேண்டில், Theera Venda - தணிய வேண்டுமாகில்
சேவகம் பேசாதே, Sevagam Pesadhe - (நீங்கள் இனியும்) மிடுக்குச் சொற்களைப் பேசுதல் தவிர்ந்து
தொல் பிறப்பில் ஆற்றல் சான்ற அனுமானை, Thol Pirappil Aatral Sanra Anumaanai - அநாதிகாலமாக மிக்க வலிமையையுடையரான சிறிய திருவடிக்கு
வாழ்க என்று, Vazhga Endru - பல்லாண்டு பாடிக்கொண்டு
கூற்றம் அன்னார் காண, Kootram Annar Kaana - (நமக்கு) ம்ருத்யு போன்ற வானாலீரர்கள் காணும் படியாக
குழமணிதூரம் ஆடீர், Kuzhamanithooram Aadeer - குழமணிதூரக்கூத்தை ஆடுங்கோள்
1875பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்- ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி) 8
கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன் குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8
பதவுரை Show / Hide
கவளம் யானை, Kavalam Yaanai - கவளங்கொள்ளுமியல் பினவான யானைகளும்
பாய் புரவி, Paai Puravi - பாய்ந்து வருகிற குதிரைகளும்
தேரோடு, Therodu - தேர்களும் ஆகிய இவையெல்லாவற்றொடுங்கூட
அரக்கர் எல்லாம் துவள, Arakkar Ellam Thuvalla - ராக்ஷஸஜாதியடங்கலும் கஷ்டப்படும்படியாக
வென்ற, Vendra - ஜயித்த
வென்றியாளன் தன் தமர், Vendriyaalan Than Thamar - ஜயசீலரான பெருமாளுடைய கிங்கரர்களான வானரவீரர்கள்
கொல்லாமே, Kollaame - (நம்மை) கொல்லாதபடி,
தவளம் மாடம் நீடு, Thavalam Maadam Needu - வெண்மையான மாடமாளிகை களினால் நீண்டிருக்கிற
அயோத்தி, Ayodhya - அயோத்திமா நகர்க்கு
காவலன் தன், Kaavalan Than - அரசரான தசரதருடைய
சிறுவன், Siruvar - திருக்குமார்ராய்
குவளை வண்ணன், Kuvazhai Vannan - குவளை மலர்போன்ற நிறத்தையுடையரான இராமபிரான்
காண, Kaana - காணும்படியாக
குழமணிதூரம், Kuzhamanithooram - குழமணிதூரக்கூத்து
ஆடீர், Aadeer - ஆடுங்கோள்.
1876பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம்) 9
ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9
பதவுரை Show / Hide
ஏடு ஒத்த, Aedu Oththa - பனையோலே விரிந்தாற்போல் அகன்றதாயும் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
நீள், Neel - நீண்டதாயும்
இலை, Ilai - இலையையுடைத்தாயுமிருக்கிற
வேல், Vel - வேற்படையை
ஏந்தும், Aendhum - கையிற்கொண்ட
எங்கள் இராவணனார், Engal Iravananar - எங்கள் பிரபுவான இராவணன்
ஓடி போனார், Odi Poonar - முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார்
நாங்கள், Naangal - நாங்களோ
எய்த்தோம், Eyththom - இளைத்தோம்,
உய்வது ஓர் காரணத்தால், Uyvathu Oor Kaaranathaal - (இனி) உஜ்ஜீவிப்பதன் பொருட்டு
உங்கள் கோமான் ஆணை, Ungal Koman Aanai - உங்களுக்கு ஸ்வாமியான பெருமாளுடைய ஆஜ்ஞையை
சூடிப் போந்தோம், Soodip Ponthom - சிரஸாவஹிப்பவர்களாயிருக்கின்றோம்
தொடரேல் மின், Thodareel Min - (எங்களைக் கொல்வதற்குத்) தொடரவேண்டா,
கூடி கூடி, Koodi Koodi - திரள் திரளாகக் குழாங்கூடி
1877பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள் பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் – இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை – நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்) 10
வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர் குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக் கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10
பதவுரை Show / Hide
தொல், Thol - நெடுநாளாக
வென்றி சீர், Vendri Seer - வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையில்
வெம் சமத்து, Vem Samathu - வெவ்வியபோர்க்களத்திலே
அன்று, Anru - அப்போது
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
குன்றம் அன்னார், Kundram Annar - மலைபோன்றவர்களாக
ஆடி உய்ந்த குழமணி தூரத்தை, Aadi Uyndha Kuzhamani Thoorathai - குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து,
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை, Kandri Ney Neer Nindra Vel Kai - சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும், Maalaik Ondrum Ondrum Aindhum Moondrum - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
பாடி நின்று, Paadi Nindru - பாடிக்கொண்டு
ஆடுமின், Aadumin - (ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள்