திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1952 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் – ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று – இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது) 1 | குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகால் குன்றம் ஒன்று, Kuntram Onru - (கோவர்த்தனமென்கிற) ஒருமலையை எடுத்து, Eduthu - (குடையாக) உயரவெடுத்து ஏந்தி, Aendi - (ஏழுநாள் ஓய்வின்றிப்) பிடித்துக் கொண்டிருந்து மா மழை, Maa Mazhai - (இந்திரன் பெய்வித்த) பெரு மழையில் நின்றும் காத்த, Kaatha - (அடியார்க்ளைக்) காப்பாற்றி யருளின அம்மான், Ammaan - ஸ்வாமியும் அரக்கரை, Arakkarai - ராக்ஷஸாக்ளை வென்ற, Vendru - கொன்றொழித்த வில்லியார், Villiyaar - வில்லையுடையருமான பெருமாளுடைய வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமத்தினாலோ தென்றல் வந்து தீ வீசும், Thendral Vandu Thee Veesum - தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது! என் செய்கேன், En Seigken - (இதற்கு) என்ன பண்ணுவேன்! |
| 1953 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் – புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் – இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும்) 2 | காரும் வார்பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈரவாடை தான் ஈரும் என்னையே –11-1-2 | பதவுரை Show / Hideசாரும், Saarum - வர்ஷிக்கின்ற மாமுகில், Maamugil - காளமேகத்தினுடைய ஒளியினூடு வந்து, Oliyinuudu Vandu - துளியினுள்ளேயிருக்கிற குளிர் சியை ஊட்டிக்கொண்டுவந்து ஈரம்வாடை, Eeramvaadai - (அதனால்) குளிர்ச்சிமிக்கக வாடைக்காற்றானது என்னை ஈரும், Ennai Eerum - என்னை ஹிம்ளிக்கின்றது காரும்வார் பனி கடலும் அன்னவன், Kaarumvaar Pani Kadhalum Annavan - நாளமேகத்தையும், பரந்து குளிர்ந்தகடலையு மொத்திருக்கின்ற எம்பெருமானுடைய தாரும், Thaarum - திருத்துழாய்மாலையையும் மார்வமும், Marvamum - திருமார்பையும் கண்ட, Kanda - காணவேணுமென்று ஆசைப் பட்டதற்கான தண்டமோ, Thandamo - சிக்ஷையோ? |
| 1954 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் – இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது) 3 | சங்கும் மாமையும் தளரும் மேனி மேல்
திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்
கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே –11-1-3 | பதவுரை Show / Hideசங்கும், Sangum - கைவளைகளும் மாமையும், Maamaiyum - நிறமும் தளரும், Thalarum - சோர்ந்திருக்கப்பெற்ற மேனிமேல், Menimeel - (எனது) உடம்பின்மேலே திங்கள், Thingal - சந்திரனுடைய வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்களானவை சீறும், Seerum - சீறுகின்றன பொங்கு வெண்திரை புணாரிணனார், Pongu Ventrirai Punarinar - கிளர்கின்ற வெளுத்த அலைகளையுடைய கடல் போன்ற நிறவண முடையரான பெருமாளுடைய கொங்கு அலர்ந்ததர், Kongu Alarnthathar - பரிமளம் விரிகின்ற திருத்தழாய்மாலையானது என்னை கூவும், Ennai Koovum - என்னோடே போர் செய்ய அறைகூவாநின்றது என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவென்!-. |
| 1955 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ) 4 | அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கோர் தாயிருவாகி வந்தவள்
கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே –11-1-4 | பதவுரை Show / Hideதிங்கள், Thingal - சந்திரனுடைய வெம் கதிர், Vem Kathir - கொடிய கிரணங்கள் சீறுகின்றது, Seerugindrathu - சீறுவதானது- சென்று, Sendru - (மதுரையில் நின்றும்) போய் அங்கு ஓர் ஆய் குலத்திலே வளர்ந்து, Angu Oor Aai Kulaththile Valarnthu - அந்த விலக்ஷணமான இடைக்குலத்துள் வளர்ந்து கொண்டிருக்கையில், அங்கு ஓர் தாய் உருஆகி, Angu Oor Thaai Uruaagi - அங்குத் தாயாகிய யசோதைப்பிராட்டியின் வடிவு பூண்டு வந்தவளான பூதனையினுடைய கொங்கை நஞ்சு உண்ட, Kongai Nanju Unda - முலையில் தடவியிருந்த விஷத்தை கோயின்மை கொலோ, Koyinmai Koloo - பராக்ரமமடியாகவோ? |
| 1956 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது – மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது – ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும்) 5 | அங்கோர் ளரியாய் அவுணனைப்
பங்கமா விரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ
பொங்கு மா கடல் புலம்புகின்றதே –11-1-5 | பதவுரை Show / Hideஅங்கு, Angu - ப்ரஹிலாதாழ்வான் எங்குமுளன்கண்ணன் என்று சொன்ன வப்பொழுதே ஆள் அரிஆய், Aal Ariyai - நரஸிம்ஹ மூர்த்தியாக தரித்து அவுணனை, Avunai - (இரணியமென்னும்) அசுரணை பங்கம் ஆ, Pangam Aa - மானபங்காக்கி இரு கூறு செய்தவன், Iru Kooru Seithavan - இருதுண்டமாகக் கிழித்த பெருமான் மங்குல்மாமதி, Mangulmaamathi - ஆகாசத்திலே விளங்குகின்றசிறந்த சந்திரனை வாங்கவே கொலோ, Vaangave Kolo - (தன்னிடத்தில் நின்றும்)அபஹாரித்ததனாலேயோ பொங்குமா கடல், Pongumaa Kadal - திரைக்கிளப்பத்தையுடைய கருங்கடலானது புலம்புகினறது, Pulampuginrathu - கோஷிக்கின்றது! |
| 1957 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் – நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ) 6 | சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே –11-1-6 | பதவுரை Show / Hideசென்று, Sendru - எதிரிகளிருக்குமிடத்தேறச் சென்று (- (என்னை அடரும் என்னை வருத்துகின்றது!)) வார்சிலை, Vaarcilai - பெரியவில்லை வளைத்து, Valaiththu - (நானேற்றி) வளையச் செய்து இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை வென்ற, Vendru - அழித்த வில்லியார், Villiyaar - வில்வல்லவரான பெருமானுடைய வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமமடியாகவோ முன்றில் பெண்ணை மேல், Munril Pennai Mael - வாசலிலுள்ள பனைமரத்தின் மேலே முளரி கூட்டகத்து, Mulari Koottakathu - தாமரைப் பூவாலே இயற்றப்பட்ட கூட்டிலே கிடக்கிற அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய குரல், Kural - தொனியானது |
| 1958 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் – ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர – சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது) 7 | பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ
வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து
ஆவியே இலக்காக எய்வதே –11-1-7 | பதவுரை Show / Hideஐங்கணை வில்லி, Aingadai Villi - மன்மதனானவன் வீவு இல், Veivu Il - இறைப்பொழுதும் ஓய்வில்லாமல் அம்பு கோத்து, Ambu Koththu - பாணங்களைத் தொடுத்து ஆவியே இலக்கு ஆக எய்வது, Aaviye Ilakku Aaga Eyvathu - என் உயிரையே லஷயமாகக் கொண்டு பிரயோகிப்பதானது பூவை வண் ணனார், Poovai Vannanaar - காயம்பூவண்ணரான பெருமாள் புள்ளின் மேல் வர, Pullin Mel Vara - பெரிய திருவடியின் மீது எழுந்தருள நான்மேவி நின்று, Nanmevi Nindru - நான் விரும்பி நின்று கொண்டு கண்ட தண்டமோ, Kanda Thandamo - கண்டதற்கான தண்டனையோ |
| 1959 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே – அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ) 8 | மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம்
மாலினந்துழாய் வந்து என்னுள் புகக்
கோல வாடையும் கொண்டு வந்ததோர்
ஆலி வந்தது ஆல் அரிது காவலே –11-1-8 | பதவுரை Show / Hideஎன் நெஞசகம், En Nenjasagam - எனது நெஞ்சானது மால்இனம், Maalinam - (அப்பெருமான் பக்கலுண்டான) வியாமோஹத்திற்குத் தகுதியாக துழாய் வரும், Thuzhai Varum - அலைந்துகொண்டு வாரா நின்றது மாலின், Maalin - (அந்த) எம்பெருமானுடைய அம் துழாய், Am Thuzhai - அழகிய திருத்துழாய் மாலையானது என்னுள் வந்து புகளுதல், Ennul Vandu Pugaluthal - என்னுடைய நினைவுக்குவர வந்தது ஓர் ஆலி, Vandhadhu Oru Aali - (ஏற்கெனவே தனியே) வந்துபார்த்துப்போனவொரு சிறு துளியானது கோலம், Kolam - அழகிய வாடையும், Vaadaiyum - வாடைக்காற்றையும் கொண்டு வந்தது, Kondhu Vandhadhu - துணைகூட்டிக்கொண்டு வந்துவிட்டது. ஆல், Aal - அந்தோ! (இனி) காவல், Kaaval - (உயிரைக்) காப்பாற்றிக் கொள் அரிது, Aridhu - முடியாதகாரியம் |
| 1960 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் – அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்) 9 | கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9 | பதவுரை Show / Hideமிக்க சீர் தொண்டர், Mikka Seer Thondar - அநந்யப்ரயோஜநரான ஸ்ரீ வைஷ்ணவாக்ள் இட்ட, Itta - ஸமர்ப்பித்த பூ துளவின், Poo Thulavin - திருத்துழாய் மலரின் வாசம், Vaasam - பரிமளத்தை வண்டு, Vandu - வண்டானது கெண்டை, Kendai - கெண்டை மீன்போன்று அழகிய ஒண் கணும், On Kanum - (எனது) கண்களும் துயிலும், Thuyilum - உறக்கங்கொள்ளும் என்நிறம், Enniram - எனது மேனி நிறமும் கோண்டு வந்து, Kondhu Vandu - முகந்துகொண்டுவந்து பண்டு பண்டு போல் ஓக்கும், Pandhu Pandhu Pol Okkum - முன்னைய வண்ணமாகும் ஊதும் ஆகில், Oodhum Aakil - (என்னருகில்) ஊதுமானால் |
| 1961 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம்) 10 | அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகால் பாரதத்து, Bharathaththu - பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக ஐவர் தூதன் ஆய், Aivar Thoodhan Aay - பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய் சென்று, Sendru - எழுந்தருளின மாயனை, Maayanai - ஆச்சரிய சக்தியுத்தனும் செம் கண் மாலினை, Sem Kan Malinai - செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக மன்றில் ஆர் புகழ், Manril Aar Pugazh - நூறத்திகள் தோறும் நிறைந்த மங்கை, Mangai - திருமங்கை நாட்டையுடையவரும் வாள், Vaal - வாட்படை கொண்டவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்(அருளிச்செய்த) சொல், Sol - இந்த ஸ்ரீ ஸூக்திகளை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவாக்ளுக்கு அல்லல் இல்லை, Allal Illai - ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது. |