திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1058 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச – இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-1 | பதவுரை Show / Hideகாசை ஆடை, Kaasai Aadai - காஷாய வஸ்த்ரத்தினால் மூடி, Moodi - உடம்பை மறைத்துக்கொண்டு ஓடி, Oodi - (பஞ்சவடிக்கு) ஓடிவந்து காதல் செய்தானவன், Kaadhal Seithaanavan - (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய ஊர், Oor - ஊராகிய இலங்கையானது நாசம் ஆக நம்ப வல்ல, Naasam Aaga Namba Valla - நாசமாகும்படி ஸங்கல்பித்த நம்பி, Nambi - பரிபூர்ண சக்தியையுடையவனும் நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும் வேயின் அன்னதோள் மடவார், Veiyin Annathol Madavaar - மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர் இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான, Ivan Vennai Undaan Endru Aesa Nindra Emperumaan - ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான் எவ்வுள் கிடந்தான், Evval Kidanthaan - திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான். |
| 1059 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-2 | பதவுரை Show / Hideதையலாள்மேல், Thaiyalalmael - அழகிற் சிறந்த பிராட்டி விஷயத்திலே (- (எவ்வுள் கிடந்தானே-.)) காதல்செய்த, Kaadhalseitha - காமம் கொண்ட தானவன், Thaanavan - ஆஸூரப்ருக்ருதியாய் வாள், Vaal - வாளாயுதத்தை யுடையவனான அரக்கன், Arakkan - இராவணனுடைய பொய் இலாத பொன் முடிகள், Poi Iladha Pon Mudigal - மெய்யான பொன்முடிகள் ஒன்பதோடு ஒன்றும், Onpathodu Ondrum - பத்தையும் அன்று அங்கு செய்த வெம்போர் தன்னில், Andru Angu Seitha Vembor Thannil - முன்பு ராமாவதாரத்திலே கடற்கரையில் செய்த கோரமான யுத்தத்திலே ஓர் செம் சரத்தால் உருள எய்த எந்தை எம் பெருமான், Oru Sem Sarathaal Urula Eytha Endhai Em Perumaan - ஒப்பற்ற சிவந்த பாணத்தினாலே உருட்டின எம் பெருமான் |
| 1060 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே – இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று- பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம் என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. –2-2-3 | பதவுரை Show / Hideமுன், Mun - ஸ்ரீராமாவதாரத்திலே (- (எவ்வுள் கிடந்தான்-.)) வானரத்தின் வாயில், Vaanaraththin Vaayil - சிறிய திருவடி மூலமாக ஓர் தூது மொழிந்து, Oru Thoodhu Mozhinthu - (பிராட்டிக்குத்) தூது சொல்லியனுப்பி (பிறகு) அரக்கன், Arakkan - இராவணனுடைய மன் ஊர்தன்னை, Man Oorthannai - சிறந்த லங்காபுரியை வாளியினால், Vaalaiyin Aal - ஓர் அம்பினாலே மாள முனிந்து, Maala Muninthu - மாண்டுபோகும்படி சீறிமுடித்து, பின், Pin - பின் பொருகாலத்தில் ஆதி மன்னர்க்கு, Aadhi Mannarkku - ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்கு ஓர் தூது ஆகி, Oru Thoodhu Aagi - விலக்ஷணனான தூதனாய், பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றானவனே, Peru Nilaththaar Innar Thoodhan En Nindraanavaney - பெரிய இப்பூமியிலுள்ளாரெல்லாரும் இவன் இன்னாருடைய தூதன் என்று சொல்ல அதனால் நிலைபெற்று நின்ற அப்பெருமான் |
| 1061 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று – சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று – என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. –2-2-4 | பதவுரை Show / Hideபந்து அணைந்த மெல் விரலாள் பாவைதன் காரணத்தால், Pandhu Anaindha Mel Viralal Paavaithan Kaaranaththal - பந்து பொருந்திய மெல்லிய விரல்களை யுடையளான நப்பின்னைப்பிராட்டி நிமித்தமாக (- (எவ்வுள் கிடந்தான்-.)) வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன், Vem Thiral Aeru Aezhum Vendhan - க்ரூரமான மிடுக்கையுடைய ஏழுரிஷபங்களையும் வென்று முடித்த அரசனும், விரி புகழ் சேர் நந்தன், Viri Pugazh Cher Nandhan - உலகமெங்கும் பரந்த புகழையுடையனான நந்தகோபனுக்கு மைந்தன் ஆக ஆகும் நம்பி, Maindhan Aaga Aagum Nambi - திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும் நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும் எந்தை தந்தை தம்பெருமான், Endai Thandai Thamberumaan - நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன் |
| 1062 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. –2-2-5 | பதவுரை Show / Hideபண்டு, Pandhu - முன்பொரு காலத்தில் பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு, Paalan Aagi Nyaalam Ezhum Undu - சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஆலந்தளிரின் மேலே சால நாளும், Saal Naalum - வெகு நாள் வரையில் பள்ளி கொள்ளும், Palli Kollum - சயனித்திருந்த தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரீகாக்ஷன், எண் இல் நீலம்;, En Il Neelam - எண்ணிறந்த நெய்தற் பூவிலே ஆர், Aar - படிந்த வண்டு, Vandu - வண்டுகள் உண்டு, Undu - (அப்பூக்களிலுள்ள தேனைப்)பருகி வாழும், Vaalum - வாழப்பெற்ற அம் தண், Am Than - அழகிய குளிர்ந்த நெய்தல் கழனி, Neithal Kazhani - நெய்தல் கழனிகளையும் ஏலம் நாறும், Elam Naarum - பரிமளம் கமழ்கின்ற பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளையுமுடைய எவ்வுள், Evvul - திருவெவ்வுளூரிலே கிடந்தான், Kidandhaan - சயனித்திருப்பவன். |
| 1063 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-6 | பதவுரை Show / Hideதொண்டர், Thondar - அடியவர்கள் (- (எவ்வுள் கிடந்தான்-.)) மிண்டி, Mindi - நெருக்கமாகத் திரண்டு நம்பி சோத்தம் என்று தொடர்ந்து அழைக்கும், Nambi Soththam Endru Thodarnthu Azaikkum - ‘ஸ்வாமீ! உனக்கு அஞ்சலி’ என்று சொல்லிப் பின் தொடர்ந்து துதிக்கப் பெற்ற ஆத்தன், Aathan - ஆப்தனான நம்பி, Nambi - ஸ்வாமியாய் செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனான நம்பி ஆகிலும், Nambi Aakilum - ஸ்வாமியுமாய் இருக்கச் செய்தேயும், முனிவர், Munivar - ஸநகர் முதலிய ரிஷிகள் தேவர்க்கு எல்லாம், Thevarkku Ellam - தேவர்களுக்குள் பெரிய மூத்த நம்பி முக்கண் நம்பி என்று தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான், Mootha Nambi Mukkan Nambi Endru Thozhuthu Aethum Nambi Emperumaan - ‘பிரமனே! சிவனே!. என்று சொல்லி வணங்கி ஏத்தும் படியாயுள்ள (ஸர்வாந்தர்யாமியான) பெருமான் |
| 1064 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-7 | பதவுரை Show / Hideதிங்கள் ஆகி, Thingal Aagi - சந்திரனுக்கு அந்தர்யாமியாயும் (- (எங்கள் அப்பன் எம்பெருமான்-;) (எவ்வுள் கிடந்தான்-.)) அப்பு வான் எரி கால் ஆகி, Appu Vaan Eri Kaal Aagi - ஜலம் ஆகாசம் தேஜஸ்வாயு முதலிய பூதங்களுக்கு சரீரியாயும் திசைமுகனார் தங்கள் அப்பன், Thisaimughanar Thangal Appan - பிரமனுக்குத் தந்தையாயும் சாமி அப்பன், Saami Appan - ஸாமவேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட ஸ்வாமியாயும் பாகத்து இருந்த, Paagathu Irundha - தனது திருமேனியின் ஒருபக்கத்திலே இருப்பவனாய் வண்டு உண்தொங்கல் அப்பு நீள் முடியான், Vandu Unthongal Appu Neel Mudiyan - வண்டுகள் மதுபானம் பண்ணப்பெற்ற கொன்றை மாலையையும் கங்கா ஜலத்தையும் நீண்ட சடையிலேயு டையனான சிவபிரான் சூழ் கழல் சூட நின்ற, Sool Kazhal Sooda Nindra - விசாலமான திருவடிகளைத் தன் தலைமீது அணிந்து கொள்ளும்படி யிருப்பவனாயுமுள்ள |
| 1065 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் – எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. –2-2-8 | பதவுரை Show / Hideமுனிவன், Munivan - உலகங்களைப் படைக்க ஸங்கல்பம் செய்தவனும் (- (எவ்வுள் கிடந்தான்-.)) மூர்த்தி மூவர் ஆகி, Moorthi Moovar Aagi - பிரமன் விஷ்ணு சிவன் என்று மூன்று மூர்த்தியாக நிற்பவனும் வேதம் விரித்து உரைத்த புனிதன், Vedham Virithu Uraitha Punithan - வேதப் பொருள்களை வெளியிட்ட வியக்தமாக பவித்திரனும் பூவை வண்ணன், Poovai Vannan - காயாம்பூப்போன்ற திரு நிறத்தை யுடையவனும் அண்ணல், Annal - ஸர்வ ஸ்வாமியும் புண்ணியன், Punniyan - வடிவுகொண்ட புண்ணியமானவனும் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் தனியன், Thaniyan - “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும் தான் சேயன் ஒருவனாகிலும், Thaan Cheyan Oruvanagilum - தான் ஒருவர்க்கும் எட்டாத வொருவனா யிருந்தாலும் தன் அடியார்க்கு இனியன், Than Adiyarkku Iniyan - தன்னுடைய அடியவர்களுக்குப் பரம போக்யனா யிருப்பவனும் எந்தை, Endhai - எமக்குத் தந்தையா யிருப்பவனுமான எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியானவன் |
| 1066 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் – அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்,
வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-9 | பதவுரை Show / Hideபந்து இருக்கும் மெல் விரலாள், Pandhu Irukkum Mel Viralal - பந்து தங்கிய மெல்லிய விரல்களை யுடையவளும் (- (எவ்வுள் கிடந்தான்-.)) பனி மலரான், Pani Malaraan - குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையவளுமான பாவை, Paavai - பிராட்டியானவள் வந்து இருக்கும் மார்வன், Vandu Irukkum Maarvan - வந்து தங்கி வாழ்கின்ற திரு மார்பை யுடையவனாய் நிலம் மேனி மணி வண்ணன், Nilam Meeni Mani Vannan - நீலமான நிறத்தையுடைய மணியின் வர்ணம் போன்ற வர்ணத்தை யுடையவனாய் அந்தரத்தில் வாழும் வானோர் நாயகன் ஆய் அமைந்த இந்திரற்கும் தம்பெருமான், Andharathil Vaalum Vaanor Naayagan Aay Amaindha Indirarkkum Thamberumaan - சுவர்க்கத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கு நாதனாக அமைந்த இந்திரனுக்கும ஸ்வாமியானவன் |
| 1067 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் – அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. –2-2-10 | பதவுரை Show / Hideதொண்டர், Thondar - பக்தர்கள் இண்டை கொண்டு, Indai Kondu - புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு ஏத்த, Aetha - துதிக்கும்படியாக எவ்வுள் கிடந்தானை, Evvul Kidandhaanai - திருவெவ்வுளூரிலே சயனித்தருள்பவனான பெருமான் விஷயமாக, வண்டு பாடும் பை புறவில் மங்கையர்கோன் கலியன், Vandu Paadum Pai Puravil Mangaiyarkon Kalyan - வண்டுகள் களித்துப் பாடா நின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியான ஆழ்வார் கொண்ட சீரால், Konda Seeraal - நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே தண் தமிழ் செய், Than Tamil Sei - அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த மாலை, Maalai - சொல்மாலையாகிய ஈர் ஐந்தும், Eer Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் அண்டம் ஆள்வது ஆணை, Andam Aalvathu Aanai - இந்த பிரஹ்மாண்டங்களையெல்லாம் செங்கோல் செலுத்தி ஆளப் பெறுவது திண்ணம்; அன்றேல், Andrel - இவ் வுலகங்களை ஆள்வதில் ஆசையற்றவர்களாகில் அமரர் உலகு ஆள்வர், Amarar Ulagu Aalvar - பரமபதந் தன்னையே ஆளப் பெறுவர்கள். அமருலகு, Amarulagu - அமரருவகு. |