திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1128 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும் விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் – பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது- அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் – ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
பல்லவன் வில்லவ னென்றுலகில் பல ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்
பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-1 | பதவுரை Show / Hideசொல்லுவன் சொல் பொருள் அவைதான் ஆய், Solluvan Sol Porul Avaithaan Aayi - ஸாமாந்ய சப்தங்களும் நித்யசப்தமான வேதமும் இவற்றின் பொருளுமாகிய இவை, தானேயாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய், Suvai Ooru Oli Naatramum Thotramum Aayi - ரஸம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் ரூபம் ஆகிய பஞ்ச விஷயங்களும் தானேயாய் நல்அரன் நாரணன் நான்முகனுக்கு, Nalaaran Naarayanan Naanmuganukku - சிவனுக்கு தன்மையாலும் தானான பிரமனுக்கு அந்தர்யாமியாயிருந்து அந்தர்யாமியாயிருந்து கொண்டும் கொண்டும்லோகாரியங்களை நடத்துமவனான எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடம் (ஏதுவென்றால்): தடம் சூழ்ந்து அழகாய் கச்சி, Thadam Soozhnthu Azhagai Katchi - தடாகங்கள் சூழப்பெற்று அழகு பொலிந்த காஞ்சீபுரியிலே, உலகில், Ulagil - இவ்வுலகத்திலே பல்லவன் வில்லவன் என்று பலர் ஆய் பலவேந்தர், Pallavan Villavan Endru Paler Aayi Palavendrar - பல்லவனென்றும் வில்லவனென்றும் பல பெயர்களாலே சொல்லக்கூடிய பல அரசர்களாலே வணங்கு கழல், Vanangu Kazhal - வணங்கப்பட்ட பாதத்தையுடையவனும் மல்லையர்கோன், Mallaiyarkon - மல்லாபுரியென்கிற திருக்கடல் மல்லையிலுள்ளார்க்குத் தலைவனுமான பல்லவன், Pallavan - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைகங்கரியம் செய்யப்பெற்ற பரமேச்சுர விண்ணகரம் அது, Paramechura Vinnakaram Adhu - பரமேச்வர விண்ணகரமென்கிற திவ்ய தேசமாம் |
| 1129 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு-இவன் சத்ரு வதம் பண்ணினதோடு வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்- தான் இல்லை யானாலும் தன்னுடைய வீர ஸ்ரீ நிற்கும்படி வாழ்ந்த பல்லவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-2 | பதவுரை Show / Hideகார்மன்னு நீள் விசும்பும், Karmannu Neel Vichumbum - மேகங்கள் பொருந்திய பெரிய ஆகாசமென்ன (- (ஆகிய இவையெல்லாம்) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.)) கடலும், Kadalum - ஸமுத்திரங்களென்ன சுடரும், Sudarum - சந்திரன் சூரியன் முதலிய சுடர்ப்பொருள்களென்ன நிலனும், Nilanum - பூமியென்ன மலையும், Malaiyum - குலபர்வதங்களென்ன தன் உந்தி தார்மன்னு, Than Undhi Tharmannu - தனது திருநாபிக் கமலத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரிகாக்ஷனுக்கு இடம், Idam - இருப்பிடமாவது தடம் மா மதிள் சூழ்ந்து, Thadam Maa Mathil Soozhndhu - தடாகங்களாலும் பெரிய மதிள்களாலும் சூழப்பட்டு அழகாக கச்சி, Azhagaga Kachchi - அழகான காஞ்சீபுரியிலே, முனையில், Munaivil - போர்க்களத்திலே தேர்மன்னு தென்னவனை, Thermannu Thennavanai - மஹாரதனான பாண்டிய ராஜனுடைய செரு வில் திறல் வாட்டிய, Seru Vil Thiral Vaattiya - சண்டை செய்யும் வில்லின் வலியைப் பங்கப்படுத்தின திண் சிலையோன், Thin Silaiyon - வலிய வில்லையுடையனாய் பார்மன்னு, Paarmannu - இப்புமியில் நெடுங்காலம் வாழ்ந்திருந்த பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற |
| 1130 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் – கட மா களி யானை வல்லான் -என்றும் ஆடல் மா வலவன் -என்றும் மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும் துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,
வரந்தரும் மாமணி வண்ணனிடம் மணிமா டங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள்,
பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-3 | பதவுரை Show / Hideமுனம் ஒருகால், Munaam Orukaal - முன்பொருகால் (- (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.)) மா உரு ஆய், Maa Uru Aay - விலக்ஷணமான வடிவுடையனாய் கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே உரம் தரு மெல் அணை, Uram Tharu Mel Anai - வலிமிக்க மிருதுவான சேஷசயனத்திலே பள்ளி கொண்டான், Palli Kondaaan - திருக்கண்வளர்ந்தவனும் வரம் தரும், Varam Tharum - வரதனென்று திருநாமமுடையவனும் மா மணிவண்ணன், Maa Manivannan - நீலமணிபோன்ற நிறத்தனுமான பெருமானுக்கு இடம், Idam - இடமாவது, மணி மாடங்கள் சூழ்ந்து, Mani Maatangal Soozhndu - ரத்நமயமான மாடங்களாலே சூழப்பட்டு அழகு பொலிந்த அழகாய கச்சி, Azhagaaya Katchi - கச்சிப்பதியிலே, முனநாள், Munanaal - முற்காலத்தில், மண்ணையில் நிரந்தவர், Mannaivil Niranthavar - மண்ணையென்னும் நகரத்திலுள்ள சத்ரு ராஜாக்களானவாகள் புண் நுகரி வேல் நெடு, Pun Nukhari Veel Nedu - மாம்ஸங்களைக் கவர்கின்ற வேலாயுதத்தின் கொடிய வாயிலே வாயில் உக, Vaayil Uga - பட்டு முடியும்படியாக செருவில், Seruvil - போர்க்களத்திலே பரந்தவன், Parandhavan - வியாபித்தவனான பல்லவர்கோன் பணிந்த, Pallavarkon Panintha - பல்லவராஜன் பணிவிடை செய்யப்பெற்ற |
| 1131 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி,
விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-4 | பதவுரை Show / Hideஅண்டமும், Andamum - அண்டங்களையும் (- (ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய உச்சி-.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) எண் திசையும், En Thisayum - எட்டுத்திசைகளையும் நிலனும், Nilanum - பூமியையும் அலை நீரொடு, Alai Neerodu - கடல்களையும் வான், Vaan - ஆகாசத்தையும் எரி, Eri - அக்நியையும் கால், Kaal - காற்றையும் முதலா, Muthala - இவை முதலான மற்றும் பல பொருள்களையும் உண்டவன், Undavan - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கின எந்தைபிரானது, Endhaipiraanathu - எம்பெருமானுக்கு இடம், Idam - இடமாவது, பண்டு ஒருகால், Pandhu Orukaal - முன்னொரு காலத்தில் செருவில், Seruvil - போர்க்களத்திலே விரைந்தார், Viraindhaar - சண்டை செய்ய விரைந்து வந்தவர்களான விண்டவர், Vintavar - பகைவர்கள் இண்டை, Intai - நெருங்கின (தங்களது) குழாமுடனே, Kuzhamudane - கூட்டங்களோடே இரிய, Iriya - சிதறியோடும்படி முனிந்து, Muninthu - சீறி வளைத்தான், Valaiththan - வில்லைவளைத்தவனான பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற |
| 1132 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது – பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ,முனநாள்
பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,
பாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-5 | பதவுரை Show / Hideமுன நாள், Muna Naal - முன்னொரு காலத்தில் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) தாம்பு உடை திண்கை வன் தாள், Thambu Udai Thin Kai Van Thaal - துளையையுடைய துதிக்கையையும் வலியுள்ள காலையுமுடைய களிற்றின், Kalittrin - கஜேந்திராழ்வானது துயர், Thuyar - துன்பத்தை தீர்த்து, Theerthu - போக்கினவனாயும், பும் புனல் பொய்கை, Pum Punal Poigai - அழகிய நீரையுடைய பொய்கையிலே அரவம், Aravam - காளிய நாகம் வெருவ, Veruva - அஞ்சும்படியாக புக்கான் அவனுக்கு, Pukkan Avanukku - பாய்ந்தவனாயுமிருக்கிற எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது, தேம் பொழில் குன்று எயில் தென்னவனை, Them Pozhil Kunru Eyl Thennavanai - தேன் நிறைந்த சோலைகளையும் மலைபோன்ற மதிள்களையுடைய பாண்டிய நாட்டின் அரசன் திசைப்ப, Thisaippa - அறிவு கலங்கும்படி அன்று, Andru - முன்பு செரு மேல், Seru Mel - போர்க்களத்திலே வியந்து சென்ற, Viyandhu Senra - விருப்பத்துடனே போய்ச் சேர்ந்தவனும் பாம்பு உடை, Paambu Udai - நாகத்தைக் கொடியாகவுடையவனுமான பல்லவர் கோன், Pallavar Kon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கிஞ்சித்கரிக்கப்பெற்ற |
| 1133 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் – பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் – பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள்,
புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,
பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-6 | பதவுரை Show / Hideமுனநாள், Munanaal - முன்னொரு காலத்திலே (- (பல்லவர் கோன்–:) (பணிந்த-:) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) திண் படை, Thin Padai - கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய கோள் அரியின் உரு ஆய், Kol Ariyin Uru Aai - வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி செருவில், Seruvil - போர்க்களத்தில் திறலோன் அகலம், Thiralon Akalam - மஹாபலசாலியான இரணியனது மார்வை புண் பட போழ்ந்த, Pun Pada Pozhntha - புண்படும்படி கிழித்தெறிந்த பிரானது, Piranathu - எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது, பொரு மாடங்கள் சூழ்ந்து, Poru Madangal Soozhndhu - ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்கள் நிறைந்திருப்பதனால் அழகாய, Azhagaya - அழகுபொலிந்திருக்கிற கச்சி, Kacchi - கச்சிப்பதியிலே, வெண் குடை நீழல், Ven Kudai Neezhal - வெண் கொற்றக்குடையின் நிழலில் (வீற்றிருந்துகொண்டு) செங்கோல் நடப்ப, Sengol Nadappa - தனது கட்டளை விலைச்செல்லும்;படி (அரசாண்டவனும்) விடம் வெல் கொடி, Vidam Vel Kodi - பாம்பாகிற வெற்றிக்கொடியையும் வேல் படை, Vel Padai - வேல் என்னு மாயுதத்தையும் முன் உயர்த்த, Mun Uyarndha - சேனைகளின்முன்னே உயர எடுத்தவனும் பண்பு உடை, Panbu Udai - நீதி தவறாதவனுமான |
| 1134 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய் முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,
பலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-7 | பதவுரை Show / Hideமுன நாள், Muna Naal - முன்னொருகால், (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி–.) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.)) இலகிய நீள் முடி, Ilakiyai Neel Mudi - விளங்காநின்ற நீண்ட கிரிடத்தையுடைய மாவலி தன், Mavali Than - மஹாபலியினது பெரு வேள்வியில், Peru Velviyil - பெரிய யாகத்திலே மாண் உரு ஆய், Maan Uru Aai - வாமந ரூபியாய் (சென்று) சலமொடு, Salamodu - கபடமான வகையாலே மா நிலம் கொண்டவனுக்கு, Maa Nilam Konda Vanukku - உலகத்தையெல்லாம் ஆக்ரமித்துக்கொண்ட பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது கன்னி மா மதிள் சூழ் கருவூர்வெருவ, Kanni Maa Mathil Soozh Karuvurveruva - அழிவில்லாத பெரிய மதிள்களாலே சூழப்பட்ட கருவூர்என்னும் நகரம் நிலைகலங்கவும் பல படை சாய, Bala Padai Saaya - சதுரங்க ஸேனை முடியும்படியாகவும், உலகு உடை மன்னவன் தென்னவனை வென்றான், Ulaku Udai Mannavan Thennavanai Vendraan - உலகங்களை அடிமையாகவுடைய அரசனாயிருந்த பாண்டியனை வென்ற பல்வவன் |
| 1135 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் – அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-8 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - முன்னொரு காலத்தில், (- (அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி–;) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) குடை திறல் மன்னவன் ஆய், Kudai Thiral Mannavan Aayi - வெண் கொற்றக்குடையையும் பெரு மிடுக்கையுமுடைய சக்ரவர்த்தி திருமகனாய் (அவதரித்து) குரங்கை, Kurangai - வாநர வீரர்களை படையா, Padaiya - ஸேனையாகக்கொண்டு மலையால், Malaiyaal - மலைகளினால் கடலை, Kadalai - தெற்கு ஸமுத்ரத்தை அடைத்தவன், Adaiththavan - அணைகட்டி யடைத்தவனான எந்தை பிரானது, Endai Piraanathu - எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது, நென் மெலியில், Nen Meliyil - நென்மெலி யென்னும் நகரத்தில் விடை திறல், Vidai Thiral - காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான வில்லவன், Villavan - வில்லவனென்கிற அரசன் வெருவ, Veruva - அஞ்சி நடுங்கும்படி செரு வேல், Seru Vel - யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை வலம் கை பிடித்த, Valam Kai Piditha - வலக்கையிலே பிடித்தவனும் படை திறல், Padai Thiral - ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான |
| 1136 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி . நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம் கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-9 | பதவுரை Show / Hideமுன்னே ஒருகால், Munnai Orukaal - முன்னொருகால் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே–.)) பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து, Piravaal Udai Nuthal Pinnai Thiraththu - சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான நெற்றியையுடையளான நப்பின்னைக்காக உருமின், Urumin - இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய் மறை உடை, Marai Udai - எதிர்த்து வருகையை யுடையவைகளான மால் விடை ஏழ், Maal Vidai Ezh - பெரிய ஏழு ரிஷபங்களை செருவில், Seruvil - போர்க்களத்தில் அடர்த்தாற்கு, Adarthaarku - வலியடக்கின பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது கறை உடை வாள், Karai Udai Vaal - ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும் மறம், Maram - த்வேஷமுடையவர்களுமான மன்னர், Mannar - எதிரரசர்க்ள கெட, Keda - முடிந்துபோம்படியக கடல்போல் முழங்கும் குரல், Kadalpol Muzhangum Kural - கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய கடுவாய்ப் பறை உடை, Kadavaip Parai Udai - கடுவாய்ப்பறையை உடையவனான |
| 1137 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார் என்கிறார் பத்தாம் பாசுரத்தில் ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும் அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று – அதாகிறது சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது – அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே) 10 | பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே. –2-9-10 | பதவுரை Show / Hideபார்மன்னு தொல் புகழ், Paarmannu Thol Pugazh - இப்பூமியிலே நிலைத்து நின்ற பெரும்புகழையுடைய பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியங்கள் செய்யப்பெற்ற பரமேச்சுரவிண்ணகரிமேல், Paramechuravinnagarimeel - பரமேச்சுரவிண்ணகர மென்னும் திருப்பதி விஷயமாக கார்மன்னு நீள்வயல், Kaarmannu Neelvayal - சினைகொண்ட பெரிய கழனிகளையுடைய மங்கையர்தம்தலைவன், Mangaiyarthamthalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - கலியன் குன்றாது, Kunraathu - இலக்கணக் குறையொன்றுமின்றி உரைத்த, Uraitha - அருளிச்செய்த சீர்மன்னு செம் தமிழ் மாலை, Seermannu Sem Tamil Maalai - அழகு பொருந்திய செந்தமிழினாகிய இப்பாமாலைகள் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் திரு மா மகள் தன் அருளால், Thiru Maa Magal Than Arulaal - பெரிய பிராட்டியாருடைய கிருபையினால் உலகில், Ulagil - இவ்வுலகத்திலே தேர்மன்னர் ஆய், Thermannar Aay - தேரை நடத்தவல்ல அரசர்களாகி ஒலி மா கடல் சூழ், Oli Maa Kadal Soozh - ஆரவாரிக்கின்ற பெரிய கடலாலே சூழப்பட்ட செழு நீர்உலகு, Sezhu Neerulagu - செழிப்பான நீர்மையையுடைய உலகையெல்லாம் ஆண்டு, Aandu - ஆண்டுகொண்டு திகழ்வர்கள், Thigalvargal - விளங்குவார்கள். |