திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 4-5 தூம்புடைப (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1288பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி) 1
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும் தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-1
பதவுரை Show / Hide
தும்புஉடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி, Thumbu Udai Panai Kai Vezham Thuyar Kedu Tharuli - துளையையுடைத்தாய் பனை போன்றதான துதிக்கையையுடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கியருளினவனாயும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்);)
முன்னு காம்பு உடை குன்றம் ஏந்தி, Munnu Kaambu Udai Kuntram Aendhi - வேரூன்றின மூங்கில்களை உடைத்தான கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப்பிடித்து
கடு மழை காத்த எந்தை, Kadu Mazhai Kaatha Endhai - கடிதான மழையைத் தடுத்தவனாயுமுள்ள எம்பெருமான்,
பூ புனல் பொன்னி, Poo Punal Ponni - அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது
முற்றும் புகுந்து, Mutrum Pugundhu - எங்கும் பாய்ந்து
பொன், Pon - பொற்குவியல்களை
வரண்ட, Varanda - கொண்டுவந்து தள்ளப்பெற்றதும்
எங்கும், Engum - கண்டவிடமெங்கும்
தேம் பொழில் கமழும், Them Pozhil Kamazhum - தேன்மிக்க சோலைகள் பரிமளம் வீசப்பெற்றதுமான
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
திருமணிக் கூடத்தான், Thirumanik Koodaththaan - திருமணிக்கூடமென்னும் திருப்பதியிலுள்ளான்.
1289பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி) 2
கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-2
பதவுரை Show / Hide
கவ்வை, Kavvai - ஆரவாரம்செய்பவளாய் (- (எவ்விடத்துள்ளானென்னில்;)? (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற கூர்மையான பற்களையுடையளாய்
வல் பேய், Val Pei - கல்நெஞ்சளான பூதனையினுடைய
கதிர் முலை, Kathir Mulai - (விஷத்தாலே) புகர் பெற்றிருக்கிற முலையை
சுவைத்து, Suvaiththu - உறிஞ்சி உண்டவனாயும்
இலங்கைவவ்விய, Ilankaiyavviya - லங்காபுரியைப் பற்றின
இடும்பை, Idumpai - (சாக்ஷஸப் பூண்டுகள் நெருங்கியிருத்தலாகிற) கேடானது
தீர, Theera - தொலையும்படியாக
கடுங் கணை, Kadung Kanai - கடுமையான அம்புகளை
துரந்த, Thurandha - (அவ்விலங்கையின் மீது) செலுத்தினவனாயுமுள்ள
எந்தை, Endhai - ஸ்வாமியானவன்
கொவ்வை வாய் மகளிர், Kovvai Vaai Makalir - கொவ்வைக்கனி போன்ற வாயையுடையரான பெண்கள்
கொங்கை, Kongai - (தங்கள்) கொங்கைத் தடத்தினின்று
குங்குமம், Kungumam - குங்குமச்சேறுகளை
கழுவி, Kazhuvi - கழுவ,
போந்த, Pondha - (அவற்றோடு கூடிப்) பெருகுகின்ற
தெய்வம் நீர், Deivam Neer - திவ்யமான தீர்த்தமானது
கமழும், Kamazhum - வாஸனை வீசப்பெற்ற
1290பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி- அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி) 3
மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள் சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத் தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-3
பதவுரை Show / Hide
மா தொழில் மடங்க செற்று, Maa Thozhil Madanga Settru - குதிரை வடிவுகொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய (பராக்ரமச்) செயல்களெல்லாம் அடங்கும்படி செய்து (அவ்வஸுரனை) கொன்றொழித்தவனாயும் (- (எங்குள்ளானென்னில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
மருது இற நடந்து, Maruthu Ira Nadandhu - மருதமரங்கள் இற்றுமுடிந்து விழும்படி தவழ்நடை கற்றவனாயும்
வல் தாள் சே தொழில் சிதைத்து, Val Thaal Se Thozhil Sithaithu - வலிய கால்களையுடைய (ஏழு) ரிஷபங்களினுடைய வியாபாரத்தை பங்கப்படுத்தி
பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியினுடைய
செவ்வி தோள், Sevvi Thol - அழகிய தோள்களோடே
புணர்ந்த, Punarndha - கலவி செய்தவனாயுமுள்ள
எந்தை, Endhai - எம்பெருமான்
நா தொழில் மறை வல்லார்கள், Naa Thozhil Marai Vallarhal - நாவுக்கு வியாபாரமான வேதங்களைக் கற்று வல்லவர்கள்
நயந்து அறம் பயந்த, Nayandhu Aram Payandha - ஆசையோடே தருமங்களை யனுஷ்டித்த
வண் கை தி தொழில் பயிலும், Van Kai Thi Thozhil Payilum - உதாரமான கைகளாலே அக்நி காரியங்களை இடை விடாது செய்யப்பெற்ற
1291பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்) 4
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப் பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-4
பதவுரை Show / Hide
தாங்க அரு சினத்து, Thanga Aru Sinatthu - (ஒருவராலும்) தாங்கமுடியாத கோபத்தையுடையதும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வன் தாள், Van Thaal - வலியுள்ள கால்களையுடையதும்
தட கை, Thad Kai - பெரிய துதிக்கையையுடையதுமான
மா, Maa - (குவலயாபீடமென்னும்) யானையினுடைய
மருப்பு வாங்கி, Maruppu Vaangi - தந்தத்தைப் பிடுங்கிப் போட்டவனாயும்
பூ குருந்து ஒசித்து, Poo Kurunthu Osiththu - பூத்த குருந்த மரத்தை முறித் தொழித்தவனாயும்
புள் வாய் பிளந்து, Pul Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனாயும்
எருது அடர்த்த, Eruthu Adarththa - ரிஷபங்களை வலியடக்கினவனாயுமுள்ள
எந்தை, Endhai - எம்பெருமான
மா கனி நுகர்ந்த மந்தி, Maa Kani Nukarntha Mandhi - மாம்பழங்களைப் புஜித்த குரங்கானது
வந்து, Vandhu - (அந்த மாமரத்தினின்றும் வாழை மரத்திலே) வந்து சேர்ந்து
வண்டு இரிய, Vandu Iriya - (அங்கிருந்த) வண்டுகள் சிதறியோடும்படியாக
தீம் வாழை கனி நுகரும், Theem Vaalai Kani Nukarum - இனிய வாழைப் பழங்களைப் புஜிக்கப்பெற்ற
1292பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி – ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்) 5
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5
பதவுரை Show / Hide
கருமகள், Karumagal - சண்டாள ஸ்த்ரிபோல் மிகவும் தண்ணியளாய் (- (எவ்விடத்திலுள்ளானெனில்,) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
இலங்கை யாட்டி, Ilankai Yaatti - லங்காபுரிக்கு அதிகாரம் செலுத்துமவளாய்
பிலம் கொள் வாய்த் திறந்து தன்மேல் வருமவள், Pillam Kol Vayth Thirandhu Thanmel Varumaval - குஹைபோன்ற வாயைத் திறந்துகொண்டு தன்மேல் வந்தவளான சூர்ப்பணகையினுடைய
செவியும் மூக்கும், Seviyum Mookkum - காதையும் மூக்கையும்
வாளினால் தடிந்த எந்தை, Vaalinaal Thadindha Endhai - வாட்படையனால் அறுத்தொழிந்த ஸ்வாமி
பெரு மகள், Peru Magal - பெருமைதாங்கிய ஸ்த்ரியாயும்
பேதை, Pethai - (அடியாருடைய குற்றங்களை அறியாதவளாயுமிருக்கிற
மங்கை, Mangai - பூமிப்பிராட்டியும்
திரு மகள், Thiru Magal - பெரிய பிராட்டியும்
தன்னொடும் பிரிவு இலாத, Thannodum Pirivu Iladha - தன்னைவிட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவர்களாய்
மருவும், Maruvum - பொருந்தியிருக்கப்பெற்ற
1293பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6
பதவுரை Show / Hide
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும், Kendaiyum Kurallum Pullum Kezhallum Ariyum Mavum - (ஆகிய இவ்வவதாரங்களை உடையனாய்) மத்ஸ்யமும் வாமநனும்ஹம்ஸ பக்ஷியும் வராஹமும் நரசிம்ஹமும் ஹயக்ரிவனும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
அண்டமும், Andamum - ப்ரஹ்மாண்டமும்
சுடரும், Sudarum - ஸூர்ய சந்திரர்களும்
அல்லா ஆற்றலும், Allaa Aatralum - மற்றுமுள்ள சிறந்த வஸ்துக்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கிற
எந்தை, Endhai - எம்பெருமான்
ஓண் திறல் தென்னன் ஓட, Oon Thiral Thenan Oda - மிக்கபலத்தை யுடையனான பாண்டியராஜன் தோற்று ஓடும்படியாகவும்
வட அரசு ஓட்டம் கண்ட, Vada Arasu Oottam Kanda - பாண்டியதேசத்துக்கு வடக்கிலுள்ள சோளதேசத்துக்கு அரசனானசோழனைத் தோற்று ஓடும்படியாகவும் பண்ணின.
திண் திறலாளர், Thin Thiralalar - மஹா பலசாலிகள் வாழ்கிற
1294பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்) 7
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-7
பதவுரை Show / Hide
குன்றமும், Kundramum - மலைகளும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வானும், Vaanum - ஆகாசமும்
மண்ணும், Mannum - பூமியும்
குளிர் புனல், Kulir Punal - குளிர்ச்சியே இயற்கையான நீரும்
திங்களோடு, Thingalodu - சந்திரனும்
நின்ற, Nindra - நிலைநின்ற
வெம் சுடரும், Vem Sudarum - ஸூர்யனும்
அல்லா நிலைகளும், Allaa Nilaihalum - மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும்
ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
மன்றமும், Manramum - பெரிய வீதிகளும்
வயலும், Vayalum - கழனிகளும்
காவும், Kaavum - தோட்டங்களும்
மாடமும், Maadum - மாட மாளிகைகளும் ஆகிய
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
தென்றல், Thendral - தென்றல் காற்றானது
மணம் கொண்டு, Manam Kondo - பரிமளத்தை வீசிக்கொண்டு
வந்து உலவும், Vandhu Ulavum - ஸஞ்சரிக்கப்பெற்ற
1295பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார்) 8
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச் செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-8
பதவுரை Show / Hide
சங்கையும், Sangaiyum - ஸந்தேஹமும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
துணிவும், Thunivum - நிச்சயமும்
பொய்யும், Poyyum - அஸத்யமும்
மெய்யும், Meiyyum - ஸத்யமும்
இத் தரணி ஓம்பும், Ith Tharani Oombum - இப்பூமண்டலத்தை ரக்ஷிக்கின்ற
பொங்கிய முகிலும், Pongiya Mukilum - பரம்பின மேகங்களும்
எல்லா பொருள்களும், Ella Porulkalum - மற்றுமுள்ள வஸ்துக்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய, Pangayam Ukutha Therhal Parugiya Vaalai Paaya - தாமரைப் பூவானது வெளிப்படுத்தின மகரந்தத்தை பானம்பண்ணின வாளை மீன்கள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து விளையாட
செம் கயல், Sem Kayal - சிவந்த கயல் மீன்கள்
உகளும், Ugalum - (அவற்றுக்கு அஞ்சித்) துள்ளுமிடமான
1296பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள் அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான் என்கிறார்) 9
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-9
பதவுரை Show / Hide
பாவமும், Paavamum - பாபமும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
அறமும், Aramum - புண்யமும்
வீடும், Veedum - மோக்ஷமும்
இன்பமும், Inbamum - ஸுகமும்
துன்பம் தானும், Thunbam Thaanum - துக்கமும்
கோவமும், Kovamum - கோபமும்
அருளும், Arulum - அநுக்ரஹமும்
அல்லா குணங்களும், Allaa Gunangalum - மற்றுமுள்ள ஸத்வம் முதலிய குணங்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கிற
எந்தை, Endhai - எம்பெருமான்
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என, Mooviril Engal Moorthi Ivan Ena - ‘ப்ரஹ்ம விஷ்ணு’ ருத்ரர்களாகிற மூன்று மூர்த்திகளுள் நாங்கள் ஆச்ரயிக்கத்தக்க மூர்த்தி இந்த விஷ்ணுவே’ என்று தெளிந்து
முனிவரோடு தேவர், Munivaroatu Thevar - மஹர்ஷிகளும் தேவதைகளும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்குமிடமான
1297பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர் சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம் அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்) 10
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார் பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும் வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10
பதவுரை Show / Hide
திங்கள் தோய் மாடம் நாங்கூர், Thingal Thoi Maadam Naangoor - சந்திர மண்டலத்திலே போய்ப் படிந்திருக்கிற மாடங்களையுடைய திருநாங்கூரிலுள்ள
திருமணிக் கூடத்தானை, Thirumanik Koodaththanai - திருமணிக்கூடமென்னுந் திருப்பதியிலெழுந்தருளியுள்ள எம்பெருமான் விஷயமாக,
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
வண் தார், Van Thaar - அழகிய மாலையை யணிந்தவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய், Vaai - திருவாய்மலர்ந்தருளிய
ஒலிகள், Oligal - இப்பாசுரங்களை
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்,
பொங்கு நீர் உலகம் ஆண்டு, Pongu Neer Ulagam Aandu - கடல் சூழ்ந்த இவ்வுலகை அரசாட்சி புரிந்து (அதன் பிறகு)
பொன் உலகு ஆண்டு, Pon Ulagu Aandu - ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து
பின்னும், Pinnum - அதற்குமேலும்
வெம் கதிர் பரிதி வட்டத்தூடு போய், Vem Kadhir Paridhi Vattathoodu Poi - வெவ்விய கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய மண்டலத்தின் வழியேசென்று
விளங்குவார், Vilanguvaar - (பரமபதத்தில்) வாழப்பெறுவர்.