Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4-8 மாதவத்தோன் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
402ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 1
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே –4-8-1
மறி,Mari - அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய்,Kadalvaai Poi - கடலிற் புகுந்து
மாண்டானை,Maandaanai - முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரன்,Maadhavaththon Puththiran - மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா,Othuvitha Thakkanaiyaa - (ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக
உரு உருவே,Uru Uruve - (அப்புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக
கொடுத்தான்,Koduththaan - (கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய
ஊர்,Oor - திருப்பதியாவது;
தோதவத்தி,Thothavathi - பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும்
தூய் மறையோர்,Thooy Maraiyoor - நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
துறை,Thurai - காவேரித் துறைகளில்
படிய,Padiya - அவகாஹிக்க (அதனால்)
எங்கும்,Engum - அக் காவேரி முழுதும்
துளும்பி,Thulumbi - அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் கானங்கள் அலைய)
போதில்,Pothil - (அந்தப்) பூக்களில்
வைத்த,Vaiththa - இரா நின்றுள்ள
தேன்,Then - தேனானது
சொரியும்,Soriyum - பெருகப் பெற்ற
புனல்,Punal - நீரை யுடைய
அரங்கம் என்பது,Arangam Enbathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.
403ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 2
பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே–4-8-2
பிறப்பு அகத்தே,Pirappu Agaththe - ஸூதிகா க்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த,Maandu Ozhindha - இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்,Pillaigalai Naalvarayum - புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்,Irai Pozhuthil - ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து,Konarndhu - (ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து,Koduththu - மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த,Orupadutha - (இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்,Uraippan - சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்,Oor - தீருப்பதியாவது:
மறை,Marai - வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பொருந்தி,Porundhi - சிறந்த (மூன்று) அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்,Valarththu Irupavar - (அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
வரு,Varu - (தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை,Virundhai - அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்,Aliththirupavar - ஆதரித்துப்வோருமவர்களும்
சிறப்பு உடைய,Sirappu Udaiya - (இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான
மறையவர்,Maraiyavar - வைதிகர்கள்
வாழ்,Vaazh - வாழப்பெற்ற
திரு அரங்கம் என்பதுவே….,Thiru Arangam Enbathuve - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.
404ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 3
மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர்
திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3
மருமகன் தன்,Marumagan Than - மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை,Sandhathiyai - புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு,Uyir Meettu - மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்,Maiththunan Maar - மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு,Uru - சரீரமானது
மகத்து,Magaththu - (பாரதயத்தமாகிற) நரமேதத்திலே
வீழாமே,Veezhamae - விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்,Guru Mugam Aay - ஆசார்ய ரூபியாய் (ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்,Kaaththaan - ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய
ஊர்,Oor - திருப்பதியாவது:
செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்,Thiru Mugam Aay - (பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை,Karu Kuvalai - நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்,Thiru Niram Aay - திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று,Poru Mugam Aay Nindru - (ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்,Alarum - நீர்வளத்தையுடைய
புனல்,Punal - நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது
405ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 4
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4
கூன்,Koon - கூனைவுடைய
தொழுத்தை,Thozhuththai - வேலைக்காரியாகிய மந்தரை யானவள்
சிதகு,Sithagu - (ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப,Uraippa - சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்,Kodiaval - மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்,Vaai - வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு,Kadiya Sollai Kaettu - கடினமான சொல்லைக் கேட்டு
ஈன்று எடுத்து தாயாரையும்,Eenru Eduththu Thaayaraiyum - (தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்,Iraachchiyamum - ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய,Aangu Ozhia - கைவிட்டு
தொழத்தை,Thozhaththai - அடிமைப் பெண்
தாயார்,Thaayaar - பூஜையிற்பன்மை
கண்டகர்,Kandhagar - முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி,Kaan Thoduththa Neri Pogi - காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை,Kandhagarai - (முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்,Kalaindhaan - நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்,Then Thoduththa Malar - தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை,Solai - சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது.,Thiru Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.
406ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 5
பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர்
குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5
குரவு,Kuravu - குரவ மரங்களானவை
அரும்ப,Arumba - அரும்பு விடா நிற்க
கோங்கு,Kongu - கோங்கு மரங்களானவை
அலரா,Alaraa - அலரா நிற்க.
குயில்,Kuyil - குயில்களானவை
கூவும்,Koovum - (களித்துக்) கூவும்படியான
குளிர் பொழில் சூழ்,Kulir Pozhil Soozh - குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது,Thiru Arangam Enpathu - திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு வரங்களவை ,Peru Varangalavai - பெருமை பொருந்திய வரங்களை
பற்றி,Patri - பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை,Eraavananai - இராவணனுடைய
உரு,Uru - உடலானது
மங்க,Mangga - சிந்நபிந்நமாம்படி
பொருது அழித்து,Porudhu Azhiththu - போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை,E Ulaginai - இந்த லோகத்தை
கண் பெறுத்தான்,Kan Peruththaan - காத்தருளினவனும்
என்,En - எனக்குத் தலைவனும்
திருமால்,Thirumaal - ச்ரிய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்,Saarvu Idam - சேருமிடாகிய
ஊர்,Oor - திருப்பதியாம்
407ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 6
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6
கீழலகில்,Keezhlagil - பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை
கிழக்க இருந்து,Kizhakka Irundhu - அடக்கிடந்து
கிளராமே,Kilaramae - கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து,Aazhi Viduththu - திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய,Avarudaiya - அவ் வசுரர்களுடைய
கரு,Karu - கர்ப்பந்தமாக
அழித்த,Azhiththa - அழித்தருளினதாலும்
அழிப்பன்,Azhippan - சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது:
யாழ்,Yaazh - (வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை,In Osai - இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு,Thaamazhai Madaloodu - (மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி,Urinji - உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி,Thavala Vannapp Podi - (அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து,Aninthu - உடம்படங்கலும் அணிந்து கொண்டு
ஆளம் வைக்கும்,Aalam Vaikkum - (அந்தக் களிப்பிலே) தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்,Arangam - திருவரங்கம்
408ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 7
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே–4-8-7
கொழுப்பு உடைய,Kozhuppu Udaiya - கொழுப்பை யுடையதும்
செழு,Sezhu - செழுமை தங்கியதுமான
குருதி,Kurudhi - ரத்தமானது
கொழித்து,Kozhiththu - ஊற்று மாறாமல் கிளர்ந்து
இழிந்து,Izhindhu - நிலத்தில் பரவி
குமிழ்ந்து,Kumizhndhu - குமிழி கிளம்பி
பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற
அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை
பிணம் படுத்த,Pinam Paduththa - பிணமாக்கி யருளின
பெருமான்,Perumaan - எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதியானது:
தழுப்பு அரிய,Thazhuppu Ariya - (ஒருவரிருவரால்) தழுவ முடியாத
சந்தனங்கள்,Santhanangal - சந்தந மரங்களை
தடவரைவாய்,Thadavarai Vaai - பெரியமலைகளினின்று
ஈர்த்துக் கொண்டு,Eerththuk Kondu - (வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து
தெழிப்பு உடைய,Thezhippu Udaiya - (இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி) இரைச்சலை யுடைய
காவிரி,Kaaviri - திருக்காவேரி நதியானது
அடி தொழும்,Adi Thozhum - (எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற
சீர்,Seer - சீர்மையைப் பெற்ற
அரங்கம்,Arangam - திருவரங்க நகராம்.
409ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 8
வல் லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லை யில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே–4-8-8
வல் எயிறு கேழலும் ஆய்,Val Eyiru Kezhllum Aay - வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும்,
வாள் எயிறு சீயமும் ஆய்,Vaal Eyiru Seeyamum Aay - ஒளியையுடைய பற்களையுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும்
எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்,Ellai Illaa Dharaniyaiyum Avuṇanaiyum Idandhaan - ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதியாவது
இரு சிறை வண்டு,Eru Sirai Vandu - பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம் போது,Elliyam Podhu - அந்திப் பொழுதிலே
எம்பெருமான் குணம் பாடி,Emperumaan Gunam Paadi - பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு
மல்லிகை வெண் சங்கு ஊதும்,Malligai Ven Sangu Uudhum - மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும்
மதில்,Mathil - திருமதிள்களை யுடையதுமான
அரங்கம் என்பது,Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.
410ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 9
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலை யணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே–4-8-9
குன்று ஆடு,Kundru Aadu - மலையினுச்சியிற் சார்ந்த
கொழு முகில் போல்,Kozhu Mugil Pol - நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்,Kuvalaigal Pol - கரு நெய்தல் பூப்போலவும்
குரை,Kurai - ஒலி செய்யா நின்ற
கடல்போல்,Kadal Pol - கடல்போலவும்
நின்று ஆடு,Nindru Aadu - (களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள
மயில் கணம் போல்,Mayil Kanam Pol - மயில்களின் திரள்போலவும் (இரா நின்ற)
நிறம் உடைய,Niram Udaiya - வடிவழகை யுடையவனான
நெடுமால்,Nedumaal - எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது
தென்றல்,Thendral - தென்றல் காற்றானது
குன்று,Kundru - (மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு,Pozhiloodu - சோலைகளினிடையிலே
அழைத்து,Azaiththu - அழைத்து
கொடி இடையார்,Kodi Idaiyaar - (அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு) கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய
முலை,Mulai - (கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி,Anavi - வியாபித்து
மன்றூடு,Mandru Oodu - (அந்தப் பரிமளத்துடனே) நாற்சந்திகளினூடே
உலாம்,Ulaam - உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது
411ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 10
பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை
செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10
பருவரங்கள் அளை பற்றி,Paruvarangal Alai Patri - பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை,Padai Aaliththu Ezhundhaanai - யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை
செரு,Seru - யுத்தத்திலே
அரங்க,Aranga - ஒழியும்படி
பொருது,Porudhu - போர் செய்து
அழித்த,Azhiththa - ஒழித்தருளின
திருவாளன்,Thiruvaalan - (வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்,Thiruppathi Mel - (திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக
விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார்
விரித்தன,Viriththana - அருளிச் செய்த
திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு,Thiru Arangam Tamil Maalai Kondu - (பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை,Iruvar Angam Meriththaanai - (மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத் (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
ஏத்தவல்லார்,Eaththavallaar - துதிக்க வல்லவர்களுக்கு
அடியோம்,Adiyom - அடிமை செய்யக்கடவோம்.