திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1538 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் – பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் – கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –- சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் – அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே) 1 | கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1 | பதவுரை Show / Hideகுடந்தை மேவி கிடந்த நம்பி, Kudandhai Mevi Kidandha Nambi - திருக்குடந்தையிலே பொருந்திப் பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்வாமியாயும் கேழல் ஆய் உலகை இடந்த நம்பி, Kezhal Aayi Ulagai Idantha Nambi - வராஹரூபியாகி பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த ஸ்வாமியாயும் எங்கள் நம்பி, Engal Nambi - எங்களுடைய குறைகளைத் தீர்க்க வல்லவனாயும் எறிஞர் அரண் அழிய, Erinjir Aran Azhiya - சத்துருக்களினுடைய கோட்டை அழியும்படியாக கடியார் இலங்கை கடந்த நம்பி, Kadiyaar Ilangai Kadandha Nambi - கடூரமானதன்மையுடைய அரக்கர் வாழும் இலங்கையை நாசஞ்செய்த ஸ்வாமியாயும் உலகை ஈர் அடியால் நடந்த நம்பி, Ulagai Eer Adiyaal Nadandha Nambi - லோகங்களை இரண்டடியாலே அளந்துகொண்ட ஸ்வாமியாயுமிருக்கிற ஸர்வேச்வரனுடைய நாமம், Naamam - திருநாமத்தை சொல்லில், Sollil - சொல்லப்பார்க்கில் நமோ நாராயணமே, Namo Narayaname - (அது) பெரிய திருமந்திர மாகும். |
| 1539 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான் லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம்) 2 | விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2 | பதவுரை Show / Hideமுனநாள், Munanhaal - முனபொருகால், (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.)) விடம் உடைய அரவம் தான், Vidam Udaya Aravam Thaan - விஷத்தையுடைத்தான காளியநாகமானது வெருவ, Veruva - அஞ்சும்படியாக முன், Mun - இடைப்பிள்ளைகளின் முன்னே தட தாமரை பொய்கை நீர் புக்கு, Tada Thamarai Poigai Neer Pukku - பெரிய தாமரைகளையுடைய (யமுனையின் ஒருமடுவின்) நீரில் புகுந்து செருவில், Seruvil - (அந்த நாகத்தோடு போர் செய்ததில் மிக்க, Mikka - மேன்மைபெற்ற தாளாளன், Thaalalan - திருவடிகளை யுடையவனும் கேழல் ஆகி, Kezhal Aagi - வராஹமூர்த்தியாகி வையம், Vaiyam - பூமியை இடந்தான், Idandhaan - குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும் ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டடியாலே உலகை, Ulagai - உலகங்களை நடந்தானுடைய, Nadandhaanudaiya - அளந்துகொண்டவனுமான எம்பெருமானுடைய |
| 1540 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும் களவு கண்டு அமுது செய்யப் புக்கால் அவள் கண்டு பிடித்து கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே- அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால் வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து) 3 | பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-3 | பதவுரை Show / Hideபூணாது அனலும், Poonaadhu Anhalum - கட்டுத்தறிக்குப் பிடிபடாமல் சீறிக்கொண்டிருப்பதும் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.)) தறுகண், Tharugann - வட்டமான கண்களையுடையதுமான வேழம், Vezham - (குவலயாபீடமென்னும்) யானையானது மறுக, Maruga - குடல்குழம்பும்படி பேணான், Penaan - அதை மதியாதவனாய் வளை மருப்பை, Valai Maruppai - (அதன்) வளைந்தகொம்புகளை வாங்கி, Vaangi - பறித்தெறிந்தவனும் அமுதம் கொண்ட பெருமான், Amudham Konda Perumaan - (கடலில் நின்றும்) அமுதத்தைக் கடைந்தெடுத்த பெருமை பொருந்தியவனும் திரு மார்வன், Thiru Marvan - பிராட்டியை மார்பிலுடைவனும் வண்டு பாண் ஆ முரலும் கூந்தல் ஆய்ச்சி, Vandu Paan Aa Murulum Koondhal Aaychi - வண்டுகளானவை இசையிலே பொருந்தும்படி ஒலிசெய்யப்பெற்ற மயிர்முடியையுடையளான இடைச்சியாகிய யசோதையினது தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிர் வெண்ணெய் முதலியவற்றை நாணாது உண்டான், Naanaadhu Undaan - (களவுசெய்து) உட்கொண்டவனுமான எம்பெருமானது |
| 1541 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி – முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் – நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே) 4 | கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-4 | பதவுரை Show / Hideகல் ஆர் மதிள் சூழ் கச்சிநகருள், Kal Aar Mathil Soozh Kachinagarul - கருங்கல்லால் கட்டப்பட்ட திருமதிள்களால் சூழப்பட்ட காஞ்சீபுரத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே -.)) நச்சி, Nachchi - வஸிக்கவிரும்பி எல்லா உலகும் வணங்க, Ella Ulagum Vananga - லோகமெல்லாம் வணங்குமாறு பாடகத்துள், Paadakaththul - திருப்பாடமென்னுந் திருப்பதியில் இருந்த, Irundha - வீற்றிருக்கின்ற அம்மான், Ammaan - ஸ்வாமியும், இலங்கை கோன், Ilankai Kon - லங்காதிபதியான ராவணனுடைய வல் ஆள் ஆகம், Val Aal Aagam - மிகவும் பலிஷ்டமான சரீரத்தை வில்லால் முனிந்த, Villal Munintha - வில்லாலே சீறியழித்த எந்தை, Endhai - ஸ்வாமியும் விபீடணற்கு நல்லானுடைய, Vipeedanarku Nallaanudaiya - விபீஷணாழ்வான் விஷயத்தில் நன்மை புரிந்தவனுமான எம்பிரானது |
| 1542 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது – இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து – இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே) 5 | குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்பொருகாலத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.)) குடை ஆம் வரையால், Kudai Aam Varaiyaal - குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால் நிரை, Nirai - பசுக்கூட்டங்களை காத்தபெருமான், Kaathaperumaan - (பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும் மருவாத விடை ஏழும் வென்றான், Maruvaadha Vidai Ezhum Vendraan - எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும் கோவல் நின்றான், Koval Nindraan - திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும் தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையிலிருந்தவர்களாய் அடையா, Adaiyaa - பணியாதவர்களான அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள் வீய, Veeya - அழியும்படி பொருது, Poruthu - போர்புரிந்து வெம் கூற்றம், Vem Koottram - கொடியமிருத்யுவானவன் மேவி, Mevi - (அஞ்சாமல்) பொருந்தியிருந்து நடை ஆ, Nadai Aa - இதுவே காரியமாக உண்ண கண்டான், Unna Kandan - (இலங்கையைப்) புஜீக்கும்படி செய்தவனுமான பெருமானுடைய |
| 1543 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் – இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் – நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள- ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை – உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது – அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே – இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும்) 6 | கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6 | பதவுரை Show / Hideகானம் எண்கும், Kaanam Enkum - காட்டுக்கரடிகளையும் குரங்கும், Kurangum - குரங்குகளையும் முசுவும், Musuvum - ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும் படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு அடல் அரக்கர், Adal Arakkar - கொடிய ராக்ஷருடைய மானம், Maanam - செருக்கு அழித்துநின்ற, Azhiththinira - அழியச்செய்த வென்றி அம்மான், Vendri Amman - ஜயசீலனான ஸ்வாமியுமான திருமால், Thirumaal - திருமாலினுடைய.- எனக்கு, Enakku - எனக்கு என்றும், Endrum - எப்போதும் தேனும் பாலும் அமுதும் ஆய, Thenum Paalum Amuthum Aaya - பரமபோக்யமாயிருக்கின்ற திருநாமம் நமோநாராயணம், Thirunamam Namonaarayanam - திருநாமமாகிய பெரிய திருமந்திரத்தை நானும் சொன்னேன், Naanum Sonnaen - நானும் உச்சரித்தேன்; நமரும் உரைமின், Namrum Uraimin - நம்மைச்சேர்ந்தவர்களும் சொல்லுங்கோள். |
| 1544 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே – பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை – நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல) 7 | நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7 | பதவுரை Show / Hideநின்றவரையும், Nindravaraiyum - ஸ்திரமாக நிற்கின்ற மலைகளும் (- (ஆகிய இவையெல்லாம்) (திருநாமம் நமோநாராயணம்-;) (நன்று சொன்னேன் காண்மின்.)) கிடந்த கடலும், Kidandha Kadalum - வற்றாதேயிருக்கின்ற ஸமுத்ரமும் திசையும், Thisaiyum - திக்குக்களும் இரு நிலனம், Iru Nilanam - பரந்த பூமியும் ஒன்றும் ஒழியா வண்ணம், Onrum Ozhiyavannam - சிறிதும் பாழாகாதபடி எண்ணி நின்ற, Enni Nindra - ஸங்கல்பத்தாலே ப்ரவாஹ நித்யமாக்கிக்கொண்டேவருகிற அம்மானார், Ammanar - ஸ்வாமியும் குன்று, Kundru - கோவர்த்தனமலையை குடை ஆ எடுத்த அடிகளுடைய, Kudai A Edutha Adigaludaiya - குடையாயவேந்தின ஸ்வாமியுமானவனுடைய தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே! |
| 1545 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை சிரமத்தாலே நோவு படாத படியாக ரஷித்தான் – தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையும் இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே) 8 | கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8 | பதவுரை Show / Hideகடு, Kadu - கடுமையான (- (நாமம் நமோநாராயணம்-.)) கால், Kaal - காற்றோடு கூடின மாரி, Maari - மேகமானது கல்லே பொழிய, Kalle Pozhiya - கற்களையே வர்ஷிக்கையில் எமக்கு அல்லே என்று, Emakku Alle Endru - ‘(இது) எங்களுக்குக் காளராத்ரியாகவே யிருக்கின்றது’ என்று படு்ங்கால், Padungkal - நெஞ்சிலேபட்டு ஆயர், Aayar - இடையர்கள் நீயே சரண் என்று அஞ்ச, Neeye Saran Endru Anja - (எமக்கு நீயே புகலாகவேணுமென்று சொல்லி அஞ்சியிருக்க அஞ்சாமுன், Anjamun - அந்த அச்சத்தினுடைய காரியம் பலிப்பதற்கு முன்னே நெடு கால் குன்றம் ஒன்று, Nedu Kaal Kuntram Ondru - சுற்று மலைகளையுடைத்தானவொரு கோவர்த்தனமலையை குடை ஏந்தி, Kudai Aendhi - குடையாகவெடுத்துப் பிடித்து நிரையை, Niraiyai - பசுக்கூட்டங்களை சிரமத்தால், Sirama Thaal - ஆயாஸத்தினால் நடுங்காவண்ணம், Nadungaavannam - நோவுபடாதபடி காத்தான், Kaathaan - ரக்ஷித்த பெருமானுடைய |
| 1546 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குறைவற்றாரோடு-குறை வற்றாராக பிரமித்து இருப்பரோடு-குறைவாளரோடு வாசி அற எல்லாருக்கும் ஒக்க நிர்வாஹகனாய் இருக்கை – நீங்கள் அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபம் தீரும்படி சொல்லப் பாரும் கோள்- ஸ்ரீ எண்ணாயிரத்து திரு வாய்க் குலத்து ஆழ்வான் -ஸ்ரீ நஞ்சீயரை பிரபத்தி யாகிறது புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கும்-பரிஹாரம் ஆகவற்றோ –-பிராமாதிகத்துக்கேயோ -என்ன அதன் உடைய ப்ரபாவ்வத்தைப் பார்த்தால் புத்தி பூர்வகத்துக்கும் பரிஹாரமாகவற்று ஜ்ஞானம் நடையாடும் இடத்தில் அனுதாபம் இன்றிக்கே இராது இறே-ஆகையால் இவன் பக்கல் ப்ராமாதிகம் அல்லாது கூடாது பூர்வாகத்தைப் போக்குகிற இது-புத்தி பூர்வத்துக்கு பரிஹாரம் ஆகாது என்ன ஒண்ணாதே அதில் புத்தி பூர்வம் ஒழிய இல்லாமையாலே –வினையைப் பண்ணுவதானாலும் சொல்ல வடுப்பது இது) 9 | பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9 | பதவுரை Show / Hideபொங்கு புணரி, Pongu Punari - மேன்மேலுங் கிளர்கின்ற அலைகளையுடைய கடல், Kadal - ஸமுத்ரத்தை சூழ் ஆடை, Sool Aadai - தனக்குச் சுற்றிக்கொள்ளும் வஸ்த்ரமாக வுடையளான நிலம் மா மகள், Nilam Maa Magal - பூமிப்பிராட்டியார்க்கும் மலர் மா மங்கை, Malar Maa Mangai - பெரிய பிராட்டியார்க்கும் பிரமன், Brahman - நான்முகனுக்கும் சிவன், Shivan - ருத்ரனுக்கும் இந்திரன், Indiran - இந்திரனுக்கும் |
| 1547 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை) 10 | வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10 | பதவுரை Show / Hideவாவி தடம் சூழ், Vaavi Thadam Sool - நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும் மணிமுத்தாறு, Manimuthaaru - மணிமுத்தாற்றை யுடையதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனை நாவின் பரவி, Naavin Paravi - நாவினால் துதித்தும் நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - நெஞ்சில் சிந்தித்தும் நம்பி நாமத்தை, Nambi Naamathai - அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக காவி தட கண் மடவார்கேள்வன், Kaavi Thada Kan Madavaarkelvan - கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maala - இச்சொல்மாலையை மேவி, Mevi - விரும்பி சொல்ல வல்லார் பாவம், Solla Vallar Paavam - சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள் நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் வீயும், Veeyum - அழிந்துபோதும். |