திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 6-4 கண்ணும் சுழன்று (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1478பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது – அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன் சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம் ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார்) 1
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன் விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1
பதவுரை Show / Hide
பீளையோடு, Peelayodu - பிளிச்சையோடு கூட (- (திரஸ்கரித்துச்) சொல்வதற்கு முன்,-)
கண்ணம் சுழன்று, Kannam Suzhandru - கண்கள் சுழலமிட்டு
ஈளை வந்து, Eilai Vandu - கோழைமேலிட்டு
ஏங்கினால், Aenginaal - தளர்ச்சியடைந்தால், (அப்போது)
பண் இன் மொழியார், Pan In Mozhiyaar - இசைப்பாட்டுபோல் இனிமையான வாய் மொழியை யுடையமாதர் (நம்மை நோக்கி)
பைய நடமின் என்னாத முன், Paiya Nadamin Ennaadha Mun - ‘மெல்ல நடந்து செல்லுங்கள்’ என்று
விண்ணும், Vinnum - ஆகாசமும்
மலையும், Malaiyum - பர்வதங்களும்
வேதமும், Vedhamum - வேதங்களும்
வேள்வியும், Velviyum - யாகங்களும்
ஆயினான், Aayinaan - தானேயாயிருக்கு மெம்பெருமான்
நண்ணும், Nannum - விரும்பியுடையுமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்;
எழு, Ezhu - எழுந்திரு
1479பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம்) 2
கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர் இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன் திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-2
பதவுரை Show / Hide
கொங்கு உண் குழலார், Kongu Un Kuzhalar - மணம் பொருந்திய கூந்தலை யுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு))
கூடி இருந்து, Koodi Irundhu - கூடு்டமாகத் திரண்டிருந்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி
நீர் இருமி இங்கு எம்பால் வந்தது என், Neer Irumi Ingu Empaal Vandhadhu En - ‘நீங்கள் இருமிக்கொண்டு இவ்விடத்தில் எங்களிடத்தில் வந்தது எதுக்காக?‘
என்று இகழாத முன், Endru Ikazhatha Mun - என்று திரஸ்கரிப்பதற்கு முன்னே,-
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன், Thingal Eri Kaal Sem Sudar Aayavan - சந்திரனும் அக்நியும் காற்றும் ஸூரியனும் ஆகிய இப்பொருள்களாயிருக்கும் எம்பெருமானுடையதும்
தேசு உடை, Desu Udai - தேஜஸ்ஸையுடையதும்
நாங்கள், Naangal - நமக்குப் புகலிடமானதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1480பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 3
கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன் செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர் நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-3
பதவுரை Show / Hide
கொங்கு ஆர் குழலார், Kongu Aar Kuzhalar - (தலைப் பூக்களில் நின்றும் பெருகின) தேன்நிறைந்த கூந்தலையுடைய மாதர் (- (நாம் தொழுதும் நெஞ்சமே! எழு-.))
கூடி இருந்து, Koodi Irundhu - திரளாக இருந்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி
ஐயா, Aiyya - ‘கிழவனாரே!
இனி, Ini - இப்படி நீர் கிழத்தன மடைந்த பின்பு
எம்மை, Emmai - எங்களையும்
எம் கோலம், Em Kolam - எங்களுடைய அலங்காரத்தையும்
என் காண்பது, En Kaanbadhu - எதுக்காகப் பார்ப்பது?’
என்னாத முன், Ennaadha Mun - என்று திரஸ்தரிப்பதற்கு முன்னே,
செங்கோல் வலவன் தான், Sengol Valavan Thaan - அரசாட்சி புரிந்த சோழராஜன்
பணிந்து, Panindhu - ஆக்ரமித்து
ஏத்தி, Aethi - துதித்து
திகழும் ஊர், Thigazhum Oor - விளங்கப் பெற்ற திவ்யதேசமாய்
நம் கோன், Nam Kon - எம்பெருமானுடையதான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1481பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம்) 4
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன் செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4
பதவுரை Show / Hide
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற, Kombum Aravamum Valliyeum Vendra - வஞ்சிக் கொடியையும் ஸர்ப்பத்தையும் இளங்கொடியையும் தோற்கடித்த (- (நாம் தொழுதும், நெஞ்சமே ! எழு-.))
நுண் ஏர் இடை, Nun Aer Idai - நுட்பமாய் அழகிதான இடையையுடையரும்
வம்பு உண் குழலார், Vambu Un Kuzhalar - பரிமளம் மிக்க கூந்தலை யுடையருமான பெண்கள்
வாசல் அடைந்து, Vaasal Adaindhu - வாசற்கதவைப் போட்டுவிட்டு
இகழாத முன், Ikazhaadha Mun - அவமானப்படுத்துவதற்கு முன்னே-,
கமுகு இனம், Kamuku Inam - பாக்குமரங்களின் திரள்கள்
செம்பொன், Sembon - செவ்விய பொன் போலே
கனியும், Kaniyum - பழுத்திருக்கப்பெற்ற
செழு சோலை, Sezhu Solai - வளம்மிக்க சோலைகளாலே
சூழ், Sool - சூழப்பட்டதும்
நம்பன், Namban - விச்வஸிக்கத்தகுந்த எம்பெருமானுடையதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1482பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம்) 5
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன் மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-5
பதவுரை Show / Hide
விலங்கும், Vilangum - மானையும் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.))
கயலும், Kayalum - மீனையும்
வேலும், Velum - வேற்படையும்
ஒண் காவியும், On Kaaviyum - அழகிய செங்கழுநீர்ப்பூவையும்
வென்ற, Vendru - தோற்கடித்த
கண், Kan - கண்களை யுடையரும்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள், Salam Konda Sollaar Thangal - கபடமுள்ள சொற்களை யுடையருமான பெண்கள்
சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி
இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே,-
மலங்கும் வராலும் வாளையும், Malangum Varalum Vaalaiyum - பலவகைப்பட்ட மீன்கள்
பாய், Paai - துள்ளி விளையாடுகின்ற
வயல், Vayal - கழனிகளாலே
சூழ்தரு, Sooltharu - சூழப்பட்டதும்
நலம் கொள், Nalam Kol - நன்மைமிக்கதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1483பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் – பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம்) 6
மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன் தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான் நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6
பதவுரை Show / Hide
மின் நேர், Min Ner - மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.-))
மாற்றி இருந்து, Maatri Irundhu - தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு
நீர், Nir - (கிழவரான) நீங்கள்
இருமி, Irumi - இருமிக்கொண்டு
எம்பால் வந்தது என் என்று, Embaal Vandhadhu En Endru - ‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று
இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே
தொல் நீர் இலங்கை, Thol Neer Ilangai - கடல்சூழ்ந்த லங்காபுரி
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
விலங்கு, Vilangu - (அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு
எரி ஊட்டீனான், Eri Oottinaan - தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய்
நல் நீர், Nal Neer - நல்ல தீர்த்தங்களையுடைத்தான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1484பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம்) 7
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம் சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர் நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7
பதவுரை Show / Hide
வில் ஏர் நுதலார், Vil Aer Nuthalaar - வில்போன்று அழகிய நெற்றியையுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.))
வேட்கையை மாற்றி, Vedkaitai Maatri - (முன்பு வைத்திருந்த) ஆசையைத் தவிர்த்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி
இவன் பொல்லான், Ivan Pollaan - ‘இந்தக் கிழவன் பொல்லாதவன்’
திரைந்தான், Thiraindhaan - சதை சுருங்கினான்
என்னும், Ennum - என்று (இகழ்ந்து) சொல்லும்படியான
புறன் உரை, Puran Urai - இழிவான வார்த்தைகள
கேட்பதன் முன், Kaetpathan Mun - கேட்கநேருவதற்கு முன்னே,-
சொல் ஆர், Sol Aar - பதங்கள் நிரம்பிய
நான்கு மறை, Naanthu Marai - நான்கு வேதங்களையும்
ஓதி, Othi - அதிகரித்து
உலகில், Ulagil - இவ்வுலகில்
நிலாயவர், Nilayavar - (அவ்வேதங்களை) ஸ்தாபிக்கு மவர்களாய்
நல்லார், Nallaar - நல்லொழுக்கமுடையரான வைதிகர்வாழ்கிற
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1485பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் – ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம்) 8
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக் கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8
பதவுரை Show / Hide
வாள் ஒண், Vaal On - வாள்போன்ற
கண் நல்லார், Kan Nallaar - கண்களையுடைய பெண்கள்
தாங்கள், Thangal - இப்போது இகழும் தாங்களே
மதனன், Madhanan - இவன் மன்மதன்
என்றார், Endraar - என்று சொன்ன
தம்மை, Thammai - ஆண்களைப் பார்த்து
ஈளையோடு, Eelaiyodu - கோழையோடு
ஏங்கு கிழவன், Aengu Kizhavan - ஏங்கும் கிழவன்
கேண்மின்கள், Keenmingal - எங்கே வந்தான் என்று கேளுங்கள்
என்னாத முன், Ennaadha Mun - என்று சொல்வதற்கு முன்
வேள்வும், Velvum - யாகங்களும்
விழவும் வீதியில், Vizhavum Veedhiyil - விழாக்களும் வீதியில்
என்றும் அறாத, Endrum Aradha - என்றும் தினமும்
ஊர் நாளும், Oor Naalum - நிகழும் ஊரான
நறையூர், Naraiyoor - நறையூரை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்
எழு நெஞ்சமே!, Ezhu Nenjamai - எழுந்திரு மனமே
1486பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 9
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன் பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம் நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9
பதவுரை Show / Hide
கனி சேர்ந்து, Kani Serndhu - கோவைப்பழத்தோடொத்து (- (தளர்ந்து இளையாத முன்-;) (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,-))
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
நல் வாயவர், Nal Vaayavar - அழகிய அதரத்தையுடையரான பெண்கள்
காதன்மை விட்டிட, Kaadhanmai Vittida - (வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக
உடலம், Udalam - சரீரமானது
குனி சேர்ந்து, Kuni Serndhu - கூன்வளைந்து
கோவில், Kovil - தடியோடுகூடி
விசும்பில், Visumbil - ஆகாசத்தில்
பால், Paal - பால் போன்று
பனி சேர், Pani Ser - குளிர்ச்சி பொருந்தியவனான
மதி, Madhi - சந்திரனுடைய
கோள், Kol - துன்பத்தை
விடுத்தான், Viduththaan - போக்கின பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாய்
நனி சேர், Nani Ser - பெருமை பொருந்தியதான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1487பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள் என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் – என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே) 10
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன் நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10
பதவுரை Show / Hide
பிறை சேர் நுதலார், Pirai Ser Nudhalaar - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள்
நம்மை, Nammai - நம் விஷயத்தில்
பேணுதல் இலாத முன், Penuthal Iladha Mun - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே,
நெஞ்சமே, Nenjamai - ‘ஓ மனமே!
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற, Nirai Ser Pozhil Soozh Naraiyoor Thozha Enra - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’  என்று உபதேசித்தவரும்.
கறை ஆர் நெடு வேல், Karai Aar Nedu Vel - ரத்தக்கரை நிரம்பிய நீண்ட வேற்படையை யுடையவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய
சொல், Sol - இந்த ஸ்ரீஸூக்திகளை
மறவாது உரைப்பவர், Maravathu Uraippavar - மறவாமல் ஓதுமவர்கள்
வானவர்க்கு, Vaanavarkku - நித்ய ஸூரிகளுக்கும்
இன் அரசு ஆவர், In Arasu Aavar - மேற்பட்டவர்களாவர்.