Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: தன் முகத்து (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
54ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 1
தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப் போ–1-4-1
இள,Ila - இளமை தங்கிய
மா மதீ,Maa madhi - அழகிய சந்திரனே!
தன் முகத்து,Than mugaththu - தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி,Sutti - சுட்டியானது
தூங்க தூங்க,Thoonga thoonga - பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்,Pon mugam - அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி,Kin kini - சதங்கைகளானவை
ஆர்ப்ப,Aarppa - கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்,Thavazhnthu poy - (முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி,Puzhuthi - தெருப்புழுதி மண்ணை
அளைகின்றான்,Alaikindraan - அளையா நிற்பவனும்
என் மகன்,En magan - எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்,Govindhan - கண்ண பிரானுடைய
கூத்தினை,Kooththinai - சேஷ்டைகளை
நின் முகம்,Nin mugam - உன் முகத்தில்
கண் உள ஆகில்,Kan ulla aagil - கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ,Nee ingae nokki po - நீ இங்கே பார்த்துப் போ.
55ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 2
என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2
மா மதீ !,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது,Or in amudhu - விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்,Empiraan - எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்,En siruk kuttan - என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்,Than siru kaigalal - தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி,Kaattik kaatti - பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்,Azaikkindran - அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு,Anjanam vannanodu - மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட,Aadal aada - விளையாட
உறுதியேல்,Urudhiyael - கருதினாயாகில்
மஞ்சில்,Manjil - மேகத்திலே
மறையாது,Maraiyaadhu - சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா,Magizhndhu odi va - உகந்து ஓடி வா.
56ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 3
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3
அம்புலி,Ambuli - சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி,Oli - ஒளி பொருந்திய
வட்டம்,Vattam - மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து,Sutrum soozhndhu - நாற்புறமும் சுழன்று
எங்கும்,Engum - எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து,Sothi parandhu - ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்,Eththanai seyyilum - இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்,En magan - என் மகனான கண்ண பிரானுடைய
முகம்,Mugam - திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்,Ner ovvaai - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்,Viththagan - ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலையிலே
வாணன்,Vaanan - நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான்
உன்னை விளிக்கின்ற,Unnai vilikkindra - உன்னை அழைக்கிற
கை தலம்,Kai thalam - திருக் கைத் தலத்தில்
நோவாமே,Novaame - நோவு மிகாத படி
கடிது ஓடி வா,Kadidhu odi va - சீக்கிரமாய் ஓடிவா.
57ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 4
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4
சந்திரா,Chandira - சந்திரனே!
சக்கரம்,Chakaram - திருவாழி ஆழ்வானை
கையன்,Kaiyan - திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்,Okkalai mel - (என்) இடுப்பின்மேல்
இருந்து,Irundhu - இருந்துகொண்டு
தட கண்ணால்,Thada kannaal - விசாலமான கண்களாலே
மலர் விழித்து,Malar vizhiththu - மலரப் பார்த்து
உன்னையே,Unnaiye - உன்னையே
சுட்டிகாட்டும்,Suttikattum - குக்ஷ்த்துக் காட்டுகின்றான்;
தக்கது,Thakkadhu - (உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்,Aridhiyel - அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத,Makkal peraadha - பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்,Maladan allaiyel - மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே,Salam seyyadhe - கபடம் பண்ணாமல்
வா கண்டாய்,Vaa kandai - வந்து நில்கிடாய்.
58ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 5
அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
புழையில வாகாதே நின் செவி புகர் மாமதீ!–1-4-5
புகர்,Pugar - தேஜஸ்வியாய்
மா,Maa - பெருமை பொருந்தியிரா நின்ற
மதீ,Madhi - சந்திரனே!
அழகிய வாயில்,Azhagiya vaayil - அழகிய திருப் பவளத்திலே
ஊறல்,Uural - ஊறுகின்ற ஜலமாகிய
அமுதம்,Amudham - அம்ருதத்தோடே கூடி
தெளிவுறா,Thelivuraa - உருத் தெரியாததாய்
மழலை முற்றாத,Mazhalai mutraadha - மழலைத் தனத்துக்குள்ள முற்றுதலுமில்லா திருக்கிற
இளஞ் சொல்லால்,Ilanj sollaal - இளம்பேச்சாலே
உன்னை கூவுகின்றான்;,Unnai koovugindran - உன்னை கூவுகின்றான்;
குழகன்,Kuzhagan - எல்லோரோடும் கலந்திருப்பவனாய்
சிரீதரன்,Sreedharan - ச்ரிய: பதியான இக் கண்ண பிரான்
கூவக் கூவ,Koova koova - (இப்படி) பலகாலுமழையா நிற்கச் செய்தோம்
நீ போதியேல்,Nee podhiyel - நீ போவாயேயானால்
நின் செவி,Nin sevi - உன் காதுளானவை
புழை இல,Puzhai ila - துளை யில்லாதவையாக
ஆகாதே,Aagaadhe - ஆகாதோ?(ஆகவே ஆகும்)
59ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 6
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6
விண் தனில்,Vin thanil - ஆகாசத்திலே
மன்னிய,Manniya - பொருந்திய
மா மதீ!,Maa madhi - பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு,Thandodu - ‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்,Chakaram - திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்,Eendum - ஏந்தியிரா நின்றுள்ள
தட,Thada - விசாலமான
கையன்,kaiyan - கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி,Kann thuyil kollak karudhi - திருக்கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்,Kottaavi kolkindraan - கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்,Urangavidil - (இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட,Unda - அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்,Mulaippaal - ஸ்தந்யமானது
அறா,Araa - ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா,Virainthu odiva - விரைந்து ஓடிவா
60ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 7
பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள்
ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7
மா மதீ!,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
பாலகன் என்று,Baalagan endru - ‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்,Paripavam seiyael - திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்,Pandu orunaal - முன்பொரு காலத்திலே
ஆலின் இலை,Aalin ilai - ஆலந்தளிரிலே
வளர்ந்த,Valarntha - கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்,Sirukkanavan - அந்த சிறுப்பிள்ளையானவன்
இவன்,Ivan - இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்,Vegulum ael - (இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து,Mael ezha painthu - (உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்,Pidiththu kollum - (உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை,Maalai - இம் மஹா புருஷனை
மதியாதே,Madhiyadhae - அவமதியாமல்
மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odiva - மகிழ்ந்து ஓடிவா
61ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 8
சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8
நிறை மதி,Nirai madhi - பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை,En ila singaththai - எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை
சிறியன் என்று,Siriyan endru - (உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல்,Izhalael - அவமதியாதே;
சிறுமையில்,Sirumaiyil - (இவனுடைய) பால்யத்தில் நிடந்த
வார்த்தையை,Vaarthaiyai - செய்கையை
மாவலி இடை சென்று கேள்,Maavali idai sendru kel - மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்;
சிறுமை பிழை கொள்ளில்,Sirumai pizhai kollil - (இப்படி யுள்ளவன் விஷயத்தில்) சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில்
நீயும்,Neeyum - (அப்போது) நீயும்;
உன் தேவைக்கு,Un thevaikku - (அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு
உரியை,Uriyai - தகுந்தவனாவாய் ; (அதெல்லாமப்படி நிற்க;)
நெடு மால்,Nedu maal - ஸர்வ ஸ்மாத் பரனான இவன்
விரைந்து உன்னை கூவுகின்றான்,Virainthu unnai koovuginraan - (‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. )
62ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 9
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை யெறியும் ஐயுற வில்லை காண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா–1-4-9
மா மதீ!;,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
தாழியில்,Thaazhil - தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
தட,Thad - பெரிதான
கைஆர,Kaiaara - கை நிறைய (அள்ளி)
விழுங்கிய,Vizhungiya - அமுது செய்த
பேழை வயிறு,Paezhai vayiru - பெரு வயிற்றை யுடையவனான
எம்பிரான்,Empiraan - என் கண்ணபிரான்
உன்னை கூவுகின்றான்;,Unnai koovuginraan - (இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுக்கைக்காக)
ஆழி கொண்டு,Aazhi kondu - திருவாழியாலே
உன்னை எறியும்,Unnai eriyum - உன்னை வெட்டி விடுவேன்;
ஐயுறவு இல்லை,Aiyuravu illai - ஸம்சயமேயில்லை;
வாழ உறுதியேல்,Vaazha urudiyael - (இதில் நின்றுந்தப்பி) வாழக்கருதினாயாகில்
மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odivaa - மகிழ்ந்து ஓடிவா
63ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 10
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10
மை,Mai - மையணிந்த
தட,Thad - விசாலமாயிராநின்ற
கண்ணி,Kanni - கண்களை யுடையளான
அசோதை,Asothai - யசோதையானளவள்
தன் மகனுக்கு,Than maganukku - தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி,Oththana solli - நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த,Uraitha - (சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்,Ivai maatram - இப் பாசுரத்தை
ஒளி,Oli - ஒளி பொருந்திய
புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்,Viththagan - (மங்களாசாஸநி) ஸமர்த்தரான
விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வாராலே
விரித்த,Viriththa - விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்,Tamil - த்ராவிட பாஷாரூபமான
இவை,Ivai - இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்,Eththanaiyum - ஏதேனுமொருபடியாக
சொல்ல வல்லவர்க்கு,Solla vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை,Idar illai - துன்பமொன்றுமில்லை.