Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: தாளதாமரை (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3667திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே; அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஸூகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார். இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார்.) 1
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1
தாள தாமைரை தடம்அணி,Thaala thaamarai tadam ani - தாளுரத்தையுடைய தாமரைகள் நிறைந்த தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட
வயல் திருமோகூர் நாளும் மேவி,Vayal thirumogoor naalum mevi - வயல்களாலே சூழப்பட்ட திருமோகூரிப்பதியை நித்திய வாஸஸ்தலமாகக் கொண்டு
நன்கு அமர்ந்து நின்று,Nangu amarnthu ninru - மிகவும் உகப்போட அங்குப் பொருந்தி நிற்குமவனாய்
கமலம் கண்,Kamalam kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய்
அசுரரை தகர்க்கும தோளும் நான்கு உடை,Asurarai thakarkkum tholum naangu udai - அசுரர்களை புடைக்க வல்ல நான்கு திருத்தோள்களையு முடையனாய்
கனி வாய்,Kani vaai - கனிந்த திருப்பவளத்தை யுடையனாய் ஸேவை ஸாதிக்கின்ற
சுரி குழல்,Suri kuzhal - சுருண்ட திருக்குழல் கற்றையை யுடையனாய்
காளமேகத்தை அன்றி,Kaalamegaththai anri - காளமேகப் பெருமாளைத் தவிர்த்து
மற்று ஒன்று கதி இலம்,Matru ondru gathi ilam - வேறொரு துணையுடையோ மல்லோம்
3668திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திருமோகூரெம்பெருமானுடைய திருவடிகளல்லது வேறுபுகலுடையோமல்லோம் எந்நாளும் என்கிறாரிப்பாட்டில்.) 2
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2
ஈன் தண் துழாயிள் அலங்கல் அம் கண்ணி,Een than thuzhaayil alangal am kanni - பரம யோக்யமான துழாய் மாலையை யுடையனாய்
ஆயிரம் பேர் உடையம்மாள்,Aayiram per udaiyammaal - ஆயிரந் திருநாமங்களையுடைய ஸ்வாமியாய்
அடி நிழல் தடம் அன்றி,Adi nizhal tadam anri - திருவடி நிழலாகிற பொய்கை தவிர
நலம் கொள் நால்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலம் கழலவன்,Nalam kol naalmurai vaanargal vaazh thirumogoor nalam kazhalavan - விலக்ஷணர்களான வைதிகர்கள் வாழுமிடமான திருமோகூர்லே திருவடிகள் பொருந்தியிருக்கப்பெற்றவனான எம்பெருமானுடைய
மற்று ஒன்று கதியை,Matru ondru kathiyai - வேறொரு கதியை
யாம் எம்மைக்கும் இலம்,Yaam emmaikkum ilam - யாம் ஒரு பிறப்யிலும் உடையோ மல்லோம்.
3669திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நம்முடைய எல்லாத் துயரங்களுங் கெடுமா திருமோகூரைச் சென்று கிட்டுவோ மென்கிறார்.) 3
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2
யாம்,Yaam - அடியோங்கள்
அன்றி ஒருபுகலிடம் இலம் என்று என்று அலற்றி,Andri orupugalidam ilam enru enru alatri - உன்னை யொழிய வேறொரு புகலிடமுடையோ மல்லோமென்று இதையே பலகால் சொல்லியலற்றி
நான்முகன் அரனோடு தேவர்கள் நின்று நாட,Naanmugan aranodu thevargal ninru naada - ப்ரஹ்மருத்ரர்களோடு தேவ ஜாதிகள் நிலை நின்று ஆச்ரயிச்சு
வென்று,Vendru - விரோதிகளைத் தொலைத்து
இம் மூவுலகு அளித்து உழல்வான்,Em moovulagu alitthu uzhalvaan - இம் மூவுலகங்களையும் ரக்ஷித்து இதுவே யாத்திரையாயிருககும் பெருமானுடைய
நாம் நமது இடர் கெட,Naam namadu idar keda - நாம் நம்முடைய இடர் தீரும்படி
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை
இனி நன்று நணுகும்,Eni nandru nanugum - இப்போது நன்றாகக கிட்டக் கடவோம்.
3670திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம்.) 4
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4
இடர் கெட போந்து எம்மை அளியாய் என்று,Edar keda pondhu emmai aliyaai enru - எம்மிடர் தீரும்படியாக எழுந்தருளி எம்மை ரக்ஷித்தருள வேணுமென்று பலகாலுஞ் சொல்லி
படர் கொள் பாம்பு அணை,Padar kol paambu anai - விர்வான சேஷ சயனத்திலே
பள்ளி கொள்வான்,Palli kolvaan - பள்ளி கொள்பவனான பெருமானுடைய
சுடர் கொள் சோதியை,Sudar kol sothiyai - தேஜ புஞ்ஜயமான திருமேனியை
ஏத்தி,Aethi - தோத்திரம் செய்து
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியிலே
இடர் அடி பரவுதும்,Edar adi paravudhum - நம்மிடர் கெடுமாறு அவன் திருவடிகளைத் துதிப்போம்;
தேவரும் முனிவரும் தொடர,Thevarum munivarm tudara - தேவர்களும் முனிவர்களும் அநுவர்த்தித்து ஆச்ரயிக்கைக்காக .
தொண்டீர் வம்மின்,Thondeer vamin - பகதர்களே! நீங்களும் வாருங்கள்
3671திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அவன் எழுந்து அருளி நின்று அருளின திரு மோகூரை ஆஸ்ரயித்து அனுபவிக்க வாருங்கோள் -என்கிறார்.) 5
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5
நம் சுடர் ஒளி,Nam sudar oli - நாம் அநபவித்தற்குரிய தேஜோமய திவ்யமங்கள விகரஹத்தையுடையனாய்
ஈன் கரும்பொடு,Een karumpodu - இனிய கரும்போடு கூட
பெரு செந்நெல் விளைய,Peru sennel vilaiya - பெரிய செந்நெற் பயிர்கள் விளையும்படியாக
ஒரு தனி முதல்வன்,Oru thani mudhalvan - உலகுககெல்லாம் அத்விதீய காரண பூதனாய்
கொண்ட,Konda - தான் பர்கரஹித்தருளின
கோயிலை,Koyilai - ஸன்னிதியை
வலம் செய்து,Valam seithu - பிரதக்ஷிணம் பண்ணி
அண்டம் உலகு அளந்தவன்,Andam ulagu alandhavan - அண்டங்களையுடைய மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான்
இங்கு கூத்து ஆடுதும்,Ingu koothu aadudhum - இங்கே கூத்தாடுவோம்;
அணி திருமோகூர்,Ani thirumogoor - அழகிய திருமோகூர்லே
எண் திசையும்,En thisaiyum - எட்டுத் திசைகளிலும்
தொண்டீர் வம்மின்,Thondeer vamin - தொண்டர்களே! நீங்களும் வாருங்கள்.
3672திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திரு மோகூரிலே நின்று அருளின -பரம ஆப்தனானவனுடைய திருவடிகள் அல்லது வேறு நமக்கு அரண் இல்லை என்கிறார்.) 6
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6
கூத்தன்,Koothan - அழகிய நடையையுடையனாய்
வாய்த்த தண்பணை வளம் வயல் சூழ் திருமோகூர் ஆத்தன்,Vaaytha thanpanai valam vayal soozh thirumogoor aathan - நெருங்கிக் குளிர்ந்த நீர் நிலங்களாலும் செழித்த வயல்களாலும் சூழப்பட்ட திருமோகூரில் எழுந்தருளியருப்பவனான ஆப்தனுடைய
கோவலன்,Kovalann - பசுக்களின் பின்னே சென்று அவற்றை ரக்ஷிக்குமவனாய்
குதற்று வல் அசுரர்கள் கூற்றம்,Kuthatru val asurargal kootram - பீடையைப் பண்ணும் கொடிய அசுரர்களுக்கு மருத்யுவாய்
தாமரை அடி அன்றி,Thamarai adi anri - பாதாரவிந்தங்களைத் தவிர்த்து
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவாக்கும் இன்பன்,Eththum nangatkumm amararkkum munivakkum inban - துதி செய்கின்ற நமக்கும் தேவர்களுக்கும் இருடிகளுக்கும் ஆனந்தகரனாய்
மறறு அரண் இலம்,Marru aran ilam - மற்றொரு ரக்ஷையுடையோ மல்லோம்.
3673திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ காரணம் ஆகையால் நம்முடைய ரக்ஷணம் தனக்கு அவர்ஜ்ஜ நீயமாம் படியான-உத்பாதகனானவனுடைய திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே-நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் அப்போதே கெடும் -என்கிறார்.) 7
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7
வான் பெரு பாழ் தனி முதலா,Vaan peru paazh thani mudhalaa - வலிதாய் அபர்ச் சிந்தமாய் போக மோஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூலப்ரக்ருத தொடக்கமாக
அதன் வழி,Athan vazhi - அந்த வழியாலே
தொல் முனி முதலா,Thol muni mudhalaa - பழைய முனிவனான ப்ரஜாபதி முதலாக
சுற்று நீர் படைத்து,Sutru neer padaiththu - ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து
முற்றும் தேவரோடு உலகு செய்வான்,Muttrum thevarodu ulagu seivaan - எல்லாத் தேவ ஜாதியோடுங் கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன் எழுந்தருளியிருக்கு இடமான
நாம சுற்றி வலம் செய்ய,Naam sutri valam seiyya - நாம் சுற்றி ப்ரதக்ஷிணம் பண்ண
நம் துயர் கடிது கெடும்,Nam thuyar kadithu kedum - நம் துக்கஙகள் விரைவில் தொலைந்து போம்
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை
மற்று அரண் இலம்,Matru aran ilam - (ஆன பின்பு இத்திருப்பதி தவிர) மற்றொரு ரக்ஷகமுடையோ மல்லோம்.
3674திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.) 8
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8
உயர் கொள் சோலை,Uyar kol solai - உன்னதமான சோலைகளையும்
தயதரதன் பெற்ற மரகதம் மணி தடத்தினை,Dayadharan petra maragatham mani tadathinai - தசரத சக்ரவர்த்தி பெற்ற மரகத மணித் தடாகம் போன்றவனான எம்பெருமானை,
ஒண் தடம் அணி,On tadam ani - அழகிய தடாகங்களையும்
ஒளி திருமோகூர்,Oli thirumogoor - அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே,
அடியவர்,Adiyavar - அடியீர்கள்!
ஆயிரம் பெயர்கள் உடைய,Ayiram peyargal udaiya - ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின் வந்து கிட்டித் தொழுங்கோள்;
வல் அரக்கர்,Val arakkar - புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக
துயர் கடிது கெடும்,Thuyar kadidu kedum - கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம் (அப்படித் தொழுதால்).
3675திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.) 9
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9
மணி தடத்து அடி,Mani tadathu adi - அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும்
அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன்,Asurarai endrum thunikum val arattan - அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான
மலர் கண்கள்,Malar kankal - தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும்
உறை,Urai - நித்தியவாம் பண்ணுமிடமான
பவளம் செவ்வாய்,Pavalam sevvai - பவளம் போன்ற சிவந்த அதரத்தையும்
பொழில் திருமோகூர் நம்முடைய நர் அரண்,Pozhil thirumogoor nammudaiya nar aran - சோலைவளம் மிக்க திருமோகூர்பதியாகிற நமக்கு நல்ல ரக்ஷகமான திவ்ய தேசம் அருகேயுள்ளது
அணிகொள் நால் தடம் தோள் தெய்வம்,Anikol nal tadam thol dheivam - அழகிய நான்கு திருத்தோள்களையும் உடைய தெய்வமாயிருப்பவனும்
நணித்து நாம் அடைந்தனம்,Nanithu naam adainthanam - இதனை நாம் பஜிக்கப் பெற்றோம்.
3676திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார்.) 10
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10
நமக்கு நாம் அடைந்த நல் அரன் எனறு ஸாதுக்களான தேவர்கள்,Namakku naam adaintha nal aran enru sadukal ana dhevargal - நல் அமரர் நமக்குப் புகலாக நாம் அடைந்த நல்ல ரக்ஷகமான தலம் இதுவென்று
எழுந்து அளிப்பான்,Ezhundhu alippaan - கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால்,Theemai seyyum val asurari anji sendru adainthaal - தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால்
காமரூபம் கொண்டு,Kamarupam kondu - திருவுள்ளமான வடிவைக் கொண்டு
திருமோகூர் நாமமே,Thirumogoor naamame - திருமோகூரிப்பதியின் பெயரையே
நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின் .,Namarkal navindru ennumin aeththumin - நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள்
3677திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்கவல்லார்க்கு சரீராவஸானத்தில் வழித்துணையில்லையே என்று க்லேசப்பட வேண்டாதபடி காளமேகம் வழித்துணையாமென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்.) 11
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11
நமர்காள் ஏத்துமின் என்று தான் குடம் ஆடு கூத்தனை,Namarkal aeththumin enru thaan kudam aadu kooththanai - எம்முடையவர்கள்! ஏத்துங்கேளென்று தானே சொல்லிக் குடக் கூத்தாடின பெருமாளைக் குறித்து
இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்து,Evai van thirumogoorukku eetha paththu - இப்பத்துப் பாசுரங்களும் திருமோகூர் விஷயமாக ஸமரிப்பித்தவை;
குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள்,Kurukoor sadagopan kutraevargal vaayththa ayiraththul - நம்மாழ்வாருடைய திருவாக்காலான கைங்கரியமாக வாய்த்த ஆயிரத்துக்குள்ளே.
இவை ஏத்த வல்லார்க்கு இடர்கெடும்,Evai aeththa vallarkku idarkedum - இவற்றைக் கொண்டு எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்குத் துன்பங்கள் தொலைந்துபோம்.