| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3249 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேர விட்டுக் கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காண நின்றே னென்கிறார்.) 1 | நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய் வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப் பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச் செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1 | நல்குரவும் செல்வும்,Nalguravum selvum - தாரித்ரியமும் ஐச்சரியமுமாய் நரகும் சுவர்க்கமும் ஆய்,Naragum suvargamum aai - நரகமும் ஸ்வர்க்கமுமாய் வெல் பகையும் நட்பும்,Vel pagaiyum natpum - எதிரியைவெல்லுகின்ற பகையும் (அதற்கு எதிர்த்தடையான்) ஸ்நேஹமுமாய் விடமும் அமுதமும் ஆய்,Vidamum amudamum aai - விஷமும் அமிருதமுமாய் (ஆக இப்படி) பல்வகையும் பரந்த பெருமான்,Palvakaiyum parandha perumaan - பலவகையாக விரிந்த விபூதியையுடையனாய் என்னை ஆள்வானை,Ennai aalvaanai - என்னை அடிமைகொண்ட ஸர்வேச்வரனை செல்வம் மல்கு குடி,Selvam malku kudi - செல்வம் நிரம்பிய ஸந்நிதியான திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரிலே கண்டேன்,Kanden - காணப்பெற்றேன். |
| 3250 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை! வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.) 2 | கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த் தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க் கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2 | கண்ட இன்பம் துன்பம்,Kanda inbam tunbam - உலகங்கண்ட ஸுகதுக்கங்களாயும் கலக்கங்களும் தேற்றமும் ஆய்,Kalakkangalum theRramum aai - கலக்கமும் தெளிவுமாய் தண்டமும் தண்மையும்,Thandamum thaNmaiyum - நிக்ரஹமும் அநுக்ரஹமுமாய் தழலும் நிழலும் ஆய்,Thazhalum nizhalum aai - வெப்பமும் தட்பமுமாய் கண்கொள்தற்கு அரிய பெருமான்,Kankoldharku ariya perumaan - ஒருவரால் பரிச்சேதித்து அறியமுடியாத விபூதி விஸ்தாரத்தை யுடையனாய் என்னை ஆள்வான்,Ennai aalvaan - என்னை அடிமைகொள்பவனான ஸர்வேச்வரனுடைய ஊர்,Oor - திவ்யதேசம் எதுவென்றால், தெண் திரை புனல் சூழ்,Then tirai punal soozh - தெளிந்து அலையெறிகின்ற தீர்த்தம் சூழ்ந்த திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரென்கிற நல் நகர்,Nal nagar - அழகிய நகரமாகும். |
| 3252 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் கீழ்ச் சொன்ன புகர் கொள் கீர்த்தியானது புண்ய பாப அநு பந்தி பதார்த்த விபூதிகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிர்ஹேதுக கிருபை என்கிறார்) 4 | புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய் எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4 | புண்ணியம்,punniyam - புண்ணியமும் பாவம்,paavam - பாபமுமாய் புணர்ச்சி,punarcci - சேர்க்கையும் பிரிவு என்று இவை ஆய்,pirivu enru ivai aai - பிரிவுமாய் எண்ணம் ஆய்,ennam aai - நினைவும் மறப்புஆய்,marappu aai - மறதியுமாய் உண்மை ஆய்,unmai aai - உண்மைப் பொருளும் இன்மைஆய்,inmai aai - பொருள் இல்லாமையுமாய் அல்லன் ஆய்,allan aai - பாப புண்யங்களை நியமிப்பவனாய் திண்ண,thinna - உறுதியான மாடங்கள் சூழ்,maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகர்,tiruvinnagar - திருவிண்ணகரை சேர்ந்த பிரான்,serndha piraan - சேர்ந்த ஸ்வாமியான கண்ணன்,kannan - கண்ணனின் இன் அருளே,in arule - இனிய அருளே கைதவமே,kaithavame - உய்வதற்கு வழி என்று கண்டு கொண்மின்கள்,kandu konminkal - கண்டு கொள்ளுங்கள் |
| 3253 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார்) 5 | கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய் மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச் செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5 | கைதவம் செம்மை,Kaithavam semmai - கோணலும் நேர்மையுமாய் கருமை வெளுமையும் ஆய்,Karumai veLmaiyum aai - கறுப்பும் வெளுப்புமாய் மெய் பொய்,Mey poi - மெய்யும் பொய்யுமாய் இளமை முதுமை,iLamai mudhumai - யௌவனமும் கிழத்தனமுமாய் புதுமை பழமையும் ஆய்,Puthumai pazhamaiyum aai - நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு செய்த திண் மதின் சூழ்,Seydha thiN madhin soozh - வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட திருவிண்ணகர்,TiruviNNagar - திருவிண்ணகரிலே சேர்ந்த பிரான்,Serndha piraan - வர்த்திக்கிற ஸர்வேச்வரன் பெய்த காவு கண்டீர்,Peydha kaavu kandeer - ஆக்கின சோலையன்றோ பெரும் தேவு உடை மூ உலகு,Perum dhevu udai mu ulagu - பிரமன் முதலான உத்க்ருஷ்ட தேவதைகளை யுடைத்தான மூவுலகமும். |
| 3254 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வ ரஜஸ் தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது) 6 | மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய் பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த் தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6 | மூ உலகங்களும் ஆய்,Moo ulagangalum aai - (ஆக்குவதற்கும் அழப்பதற்கும் நிலமான) மூன்று லோகங்களாயும் அல்லன் ஆய்,Allan aai - (அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய் உகப்பு ஆய் முனிவு ஆய,Ugappu aai munivu aai - ராகத்வேஷங்களாயும் பூவில் வாழ் மகள் ஆய்,Poovil vaazhmahal aai - ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும் தௌவை ஆய்,Thauvai aai - மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும் புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் இருந்துகொண்டு தேவர் மேவி தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Thevar mevi thozhum tiru vinnagar serndha piraan - தேவர்கள் விரும்பித்தொழுமிடமான திருவிண்ணகரில் உறையும் பெருமான் பாவியேன் மனத்தே,Paaviyaan manathe - பாவியான என்னுடைய மனத்திலே உறைகின்ற,Uraiginra - நித்யவாஸம்பண்ணுகின்ற பரம் சுடர்,Param sudar - பரஞ்சோதியாவன். |
| 3255 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்) 7 | பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7 | பரம் சுடர் உடம்பு ஆய்,Param sudar udambu aai - அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும் அழுக்கு பதித்த உடம்பு ஆய்,Azhukku pathitha udambu aai - ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும் கரந்தும் தோன்றியும் நின்றும்,Karandhum thondriyum nindrum - மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும் கைதவங்கள் செய்தும்,Kaithavangal seythum - வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ) விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்,ViNNor sirangalal vaNangum tiru viNNagar serndha piraan - தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய வரம் கொள் பாதம் அல்லால்,Varam koL paadham allaal - சிறப்புப் பொருந்திய திருவடிகள் தவிர யாவர்க்கும் வன் சரண் இல்லை,Yaavarkkum van saran illai - யார்க்கும் வலிதான புகலிடம் வேறில்லை. |
| 3256 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அநு கூல பிரதிகூல விஷயங்களான ஸ்வபாவங்களை யுடைய சர்வேஸ்வரனாய் – ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் எனக்கு அசாதாரணமான புகலிடம் என்கிறார்.) 8 | வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த் தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும் தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8 | சுரர்க்கு வன் சரண் ஆய்,Surarkku van saran aai - தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய் அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய்,Asurarkku vemkooRRamum aai - அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய் உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும்,Ulagam than saran nizhal keezh vaithumvaiyaadhum - உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு) தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Then dhisaiyukku saran tiru vinnagar serndha piraan - தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான் என்சரண்,En saran - எனக்கு சரண்யன் என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயன் என்னை ஆளுடை என் அப்பன்,Ennai aaludai en appan - என்னை அடிமைகொண்ட மஹோபகாரகன். |
| 3257 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்.) 9 | என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9 | எனக்கு என் அப்பன் ஆய் இகுள் ஆய் என்னை பெற்றவள் ஆய்,Enakku en appan aai igul aai ennai petRavaL aai - எனக்குத் தந்தையாயும் செவிலித்யாயும் பெற்றதாயாயும் பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனும் ஆய்,Pon appan maNi appan muthu appan en appanum aai - பொன் மணி முத்து இவற்றின் தன்மைபோன்ற தன்மையை யுடையனுயும்மஹோபகாரகனாயுமிருந்துகொண்டு மின்ன பொன் மதின் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த அப்பன்,Minna pon madhin soozh tiru viNNagar serndha appan - ஒளிவிடும்படி பொன்மயமான மதிளாலே சூழப்பட்ட திருவண்ணகரிலே தங்கும் ஸ்வாமி யானவன் தன் ஒப்பார் இல் அப்பன்,Than oppaar il appan - தன்னோடொத்தார் இல்லாத மஹான்! தன தான் நிழல் தந்தனன்,Thana thaan nizhal thanthanan - (எனக்குத்) தனது திருவடிநிழலைக் கொடுத்தருளினன். |
| 3258 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இப்படி பரஸ்பர விருத்த ஆகாரமான சகல சராசரங்களையும் விபூதியாகயுடைய சர்வேஸ்வரன் திருவடிகள் அல்லது வேறு ரக்ஷகமுடையோம் அல்லோம் -இத்தை நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசித்து முடிக்கிறார்.) 10 | நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10 | நிழல் வெய்யில்,Nizhal veyyil - நிழலாயும் வெய்யிலாயும் சிறுமை பெருமை,Sirumai perumai - அணுத்வமாயும் விபுத்வமாயும் குறுமை நெடுமையும் ஆய்,Kurumai netumaiyum aai - ஹ்ரஸ்வத்வமாயும் தீர்க்கத்வமாயும் சுழல்வன நிற்பன மற்றும் ஆய,Suzhalvan nirpanum aai - ஜங்கமங்களாயும் ஸ்தாவரங்களாயும் மற்றுமுள்ள பதார்த்தங்களாயும் அவை அல்லனும் ஆய்,Avai allanum aai - அவற்றினுடைய ஸ்வபாவத்தையுடையனல் லாதவனாயும் இருந்து கொண்டு மழலை வாய் வண்டு வாழ் திரு வண்ணகர் மன்னுபிரான்,Mazhalai vaay vandu vaazh tiru vannagar mannupiran - மழலைப்பேச்சை யுடையவண்டுகள் களித்துவர்த்திக்கிற திருவிண்ணகரிலே நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய கழல்கள் அன்றி,Kazhalkal andri - திருவடிகள்தவிர மற்று ஓர் களைகண் இலம்,Matru or kalaign ilam - வேறொரு ரக்ஷகவஸ்துவை யுடையோமல்லோம் காண்மின்கள்,Kanminkal - இதை ஸத்யமென்று கொள்ளுங்கள் |
| 3259 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (இத் திருவாய்மொழியை அதிகரிக்க வல்லவர்கள் நித்ய ஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11 | காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார் கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11 | உலகீர்,ulagir - உலகத்திலுள்வர்களே! கரண்மின்கள் என்று,karanminkal enru - இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று) கண் முகப்பே நிமிர்ந்த,kan mukappe nimirnda - கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த தான் இணையன் தன்னை,thaan inaiyan thannai - உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,kurukoor sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த ஆணை ஆயிரத்து,aanai aayirathu - பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும் திருவிண்ணகர் பத்தும் வல்லார்,tiruvinnagar paththum vallaar - திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள் விண்ணோர்க்கு,vinnorkku - நிர்யஸூரிகளுக்கு கோணை இன்றி ,konai indri - மிறுக்கு இல்லாமல் என்றும் குரவர்கள் ஆவர்,endrum kuravargal aavar - எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள். |