| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 318 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 1 | நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து நினைக் கொணர்ந்தது அறிந்து அரசு களை கட்ட அருந்தவத்தோன் இடை விலங்க செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்–3-10-1 | நெறிந்த கருங்குழல்,Nerindha Karunguzhal - நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும் மடவாய்,Madavaai - மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ! நின் அடியேன்,Nin Adiyen - உமது அடியவனான என்னுடைய விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்): செறிந்த,Serindha - நெருங்கின மணி,Mani - ரத்நங்களை யுடைய முடி,Mudi - கிரீடத்தை அணிந்த சனகன்,Sanagan - ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின) சிலை,Silai - ருத்ர தநுஸ்ஸை இறுத்து,Iruththu - முறித்து நினை,Nina - உம்மை (பிராட்டியை) கொணர்ந்தது,Konarnthathu - மணம் புரிந்து கொண்டதை அறிந்து,Arindhu - தெரிந்து கொண்டு அரசு களை கட்ட,Arasu Kalai Katta - (துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த அருந் தவத்தோன்,Arun Thavaththon - அரிய தவத்தை யுடைய பரசுராமன் இடை விலங்க,Idai - நடு வழியில் தடுக்க செறிந்த சிலை கொடு,Nadu Vazhiyil Thadukka - (தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு தவத்தை,Thavaththai - (அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை சிதைத்ததும்,Sithaiththadhum - அழித்ததும் ஓர் அடையாளம்,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 319 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 2 | அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மட மானே எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோரிட வகையில் மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்–3-10-2 | அல்லி,Alli - அகவிதழ்களை யுடைய அம் பூ,Am Poo - அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட மலர்க் கோதாய்,Malark Kothai - பூமாலை போன்றவளே! அடி பணிந்தேன்,Adi Panindhen - (உமது) திருவடிகளில் வணங்கிய நான் விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபநமொன்றை சொல்லு கேன்,Sollu Kaen - (உம்மிடத்தில்) சொல்லுவேன்; துணை மலர் கண்,Thunai Malar Kan - ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும் மடம்,Madam - மடப்பத்தையு முடைய மானே,Maanae - மான் போன்றவளே! கேட்டருளாய்,Kaettarulai - (அதைத்) திருச் செவி சாத்த வேணும்; அம் எல்லி போது,Am Elli Podhu - அழகிய இராத்திரி வேளையில் இனிது இருத்தல்,Inidhu Iruththal - இனிமையான இருப்பாக இருந்தது,Irundhathu - இருந்ததான ஒர் இடம் வகையில்,Or Idam Vagaiyil - ஓரிடத்தில் மல்லிகை,Malligai - மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட மா மாலை கொண்டு,Maa Maalai Kondu - சிறந்த மாலையினால் ஆர்த்ததும்,Aarththadhum - (நீர் இராம பிரானைக்) கட்டியதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 320 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 3 | கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3 | கைகேசி,Kaikaesi - கைகேயியானவள் கலக்கிய மா மனத்தனன் ஆய்,Kalakkiya Maa Manaththanan Aay - (மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய் வரம் வேண்ட,Varam Venda - (தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க மலக்கிய,Malakkiya - (அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த மா மனத்தனன் ஆய்,Maa Manaththanan Aay - சிறந்த மனத்தை யுடையவனாய் மன்னவனும்,Mannavanum - தசரத சக்ரவர்த்தியும் மறாது,Maraadhu - மறுத்துச் சொல்ல முடியாமல் ஒழிய,Oliya - வெறுமனே கிடக்க, குலம் குமரா,Kulam Kumaraa - (அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,) “உயர் குலத்திற்பிறந்த குமாரனே) காடு உறைய,Kaadu Uraiya - காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி போ என்று,Poa Endru - போய் வா” என்று சொல்லி விடை கொடுப்ப,Vidai Koduppa - விடை கொடுத்தனுப்ப அங்கு,Angu - அக் காட்டிலே இலக்குமணன் தன்னொடும்,Ilakkuamanan Thannodum - லக்ஷ்மணனோடு கூட ஏகியது,Eagiyathu - (இராமபிரான்) சென்றடைந்ததும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 321 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 4 | வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓரடையாளம்–3-10-4 | வார் அணிந்த,Vaar Anindha - கச்சை அணிந்த முலை,Mulai - முலையையும் மடவாய்,Madavaai - மடப்பத்தையுமுடைய பிராட்டீ! வைதேவீ,Vaithevi - விதேஹ வம்சத்திற் பிறந்தவனே! விண்ணப்பம்,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்; தேர் அணிந்த,Ther Anindha - தேர்களாலே அலங்காரமான அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது பெருந்தேவீ,Perundhevi - பெருமைக்குத் தகுந்த தேவியே! கேட்டருளாய்,Kaettarulai - அவ் விண்ணப்பத்தைக் கேட்டருளவேணும்; கூர் அணிந்த,Koor Anindha - கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய குகனோடும்,Guganodum - குஹப் பெருமாளோடு கூட கங்கை தன்னில்,Gangai Thannil - கங்கை கரையிலே சீர் அணிந்த தோழமை,Seer Anindha Thozhamai - சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை கொண்டதும்,Kondadhum - பெற்றதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 322 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 5 | மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5 | மான் அமரும்,Maan Amarum - மானை யொத்த மென் நோக்கி,Men Nookki - மென்மையான கண்களை யுடையவளான பால் மொழியாய்,Paal Mozhiyaai - பால் போல் இனியபேச்சை யுடையவளே! விண்ணப்பம்;,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்; கான் அமரும்,Kaan Amarum - காட்டில் பொருந்திய கல் அதர் போய்,Kal Adhar Poi - கல் நிறைந்த வழியிலேயே காடு உறைந்த காலத்து,Kaadu Uraindha Kaalaththu - காட்டில் வஸித்த போது தேன் அமரும் பொழில்,Then Amarum Pozhil - வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய சாரல்,Saaral - தாழ்வரையோடு கூடிய சித்திர கூடத்து,Siththira Koodaththu - சித்திர கூட பர்வதத்தில் இருப்ப,Irup - நீங்கள் இருக்கையில் பரதன் நம்பி,Barathan Nambi - பரதாழ்வான் பணிந்ததும்,Panindhadum - வந்து வணங்கியதும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |
| 323 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 6 | சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்–3-10-6 | சித்திரக்கூடத்து ,Siththirak Koodaththu - சித்திரகூட பர்வதத்தில் இருப்ப,Irup - நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில் சிறு காக்கை,Siru Kaakkai - சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன் முலை தீண்ட,Mulai Theenda - (உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட அத்திரமே கொண்டு,Aththiramae Kondu - (அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்) ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து எறிய,Eriya - பிரயோகிக்க, அனைத்து உலகும்,Anaiththu Ulagum - (அக் காகம் அதற்குத் தப்புவதற்காக) உலகங்களிலெல்லாம் திரிந்து ஓடி,Thirindhu Oadi - திரிந்து ஓடிப் போய் வித்தகனே,Viththagane - (தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து) “ஆச்சரியமான குணங்களை யுடையவனே! இராமா,Raamaa - ஸ்ரீ ராமனே! ஓ,O - ஓ !! நின் அபயம்,Nin Abayam - (யான்) உன்னுடைய அடைக்கலம்” என்று அழைப்ப,Endru Azhaippa - என்று கூப்பிட அத்திரமே,Aththiramae - (உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே அதன் கண்ணை,Adhan Kannai - அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம் அறுத்ததும்,Aruththadhum - அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் |
| 324 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 7 | மின்னொத்த நுண்ணிடையாய் மெய் யடியேன் விண்ணப்பம் பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்–3-10-7 | மின் ஒத்த,Min Oththa - மின்னலைப் போன்ற நுண் இடையாய்,Nun Idaiyaai - மெல்லிய இடையை யுடையவளே! மெய் அடியேன்,Mei Adiyen - உண்மையான பக்தனாகிய எனது விண்ணப்பம்,Vinnappam - விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;) பொன் ஒத்த,Pon Oththa - பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய) மான் ஒன்று,Maan Ondru - (மாரீசனாகிய) ஒருமான் புகுந்து,Pugundhu - (பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து இனிது விளையாட,Inidhu Vilaiyaada - அழகாக விளையாடா நிற்க, நின் அன்பின் வழி நின்று,Nin Anbin Vazi Nindru - (அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்) உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று சிலை பிடித்து,Silai Pitiththu - வில்லை யெடுத்துக் கொண்டு எம்பிரான்,Empiraan - இராமபிரான் ஏக,Eaga - அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள, பின்னே,Pinnae - பிறகு அங்கு,Angu - அவ் விடத்தில் இலக்குமணன்,Ilakkuamanan - இளைய பெருமாளும் பிரிந்ததும்,Pirindhadhum - பிரிந்ததுவும் ஓர் அடையாளம் |
| 325 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 8 | மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத் தகு சீரயோத்தியர் கோன் அடையாள மிவை மொழிந்தான் இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-3-10-8 | மை தகு,Mai Thagu - மைபோல் விளங்குகிற மா மலர்,Maa Malar - சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய குழலாய்,Kuzhalaai - கூந்தலை யுடையவளே! வைதேவி,Vaithevi - வைதேஹியே! ஒத்த புகழ்,Oththa Pugazh - “பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய வானரர் கோன் உடனிருந்து,Vaanarar Kon Udanirundhu - (இராமபிரானோடு) கூட இருந்து நினை தேட,Ninaith Theda - உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க) அத் தகு சீர்,Ath Thagu Seer - (பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள் அடையாளம் இவை,Adaiyaalam Ivai - இவ் வடையாளங்களை மொழிந்தான்,Mozhindhaan - (என்னிடத்திற்) சொல்லி யருளினான்; அடையாளம்,Adaiyaalam - (ஆதலால்) (யான் சொன்ன) அடையாளங்கள் இத் தகையால்,Ith Thagaiyaal - இவ்வழியால் (வந்தன); (அன்றியும்) ஈது,Eedhu - இதுவானது அவன்,Avan - அவ்விராம பிரானுடைய கை மோதிரம்,Kai Modhiram - திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும். |
| 326 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 9 | திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9 | திக்கு,Thikku - திக்குகளிலே நிறை,Nirai - நிறைந்த புகழ் ஆனன்,Pugazh Aanan - கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய தீ வேள்வி,Thee Velvi - அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில் சென்ற,Sendra - (விஸ்வாமித்திரருடன்) போன மிக்க பெருசபை நடுவே,Mikka Perusabai Naduvae - மிகவும் பெரிய ஸபையின் நடுவில் வில்லிறுத்தான்,Villiruththaan - ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய மோதிரம்,Modhiram - மோதிரத்தை கண்டு,Kandu - பார்த்து மலர் குழலாள்,Malar Kuzhalaal - பூச்சூடிய கூந்தலை யுடையவளான சீதையும்,Seethaiyum - ஸுதாப் பிராட்டியும், அனுமான்,Anumaan - ‘வாராய் ஹனுமானே! அடையாளம் ?,Adaiyaalam - (நீ சொன்ன) அடையாளங்களெல்லாம் ஒக்கும்,Okkum - ஒத்திரா நின்றுள்ளவையே என்று,Endru - என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை) உச்சி மேல் வைத்துக் கொண்டு,Uchchi Mael Vaiththuk Kondu - தன் தலையின் மீது வைத்துக் கொண்டு உகந்தான்,Ugandhaan - மகிழ்ந்தான் |
| 327 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 10 | வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம் பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார் ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.–3-10-10 | வார் ஆரும்,Vaar Aarum - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய முலை,Mulai - முலையையும் மடலாள்,Madalaal - மடப்பத்தை யுமுடையவளான வைதேவிதனை,Vaithevidhanai - ஸீதா பிராட்டியை கண்டு,Kandu - பார்த்து சீர் ஆரும்,Seer Aarum - சக்தியை யுடையவனான திறல்,Thiral - சிறிய திருவடி தெரிந்து,Therindhu - (பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு. உரைந்து,Uraindhu - (பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன அடையாளம்,Adaiyaalam - அடையாளங்களை (க் கூறுவதான) பார் ஆளும் புகழ்,Paar Aazhum Pugazh - பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய் புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பட்டர்பிரான் பாடல்,Pattarpiraan Paadal - பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை வல்லார்,Vallaar - ஓத வல்லார்கள் ஏர் ஆரும் வைகுந்தத்து,Er Aarum Vaikunthaththu - வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில் இமையவரோடு,Imaiyavarodu - நித்ய ஸூரிகளோடு இருப்பார்,Irupaar - கோவையா யிருக்கப் பெறுவார்கள். |