Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பின்னைமணாளனை (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
162ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 1
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-1
அக்காக்காய்,Akkakkai - காக்கையே!
பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை,Manalanai - நாயகனும்
பேரில்,Peril - திருப் பேர்களிலே
கிடந்தானை,Kidandhanai - பள்ளி கொண்டிருப்பவனும்
முன்னை,Munnai - (பகவதநுபவத்தில்) முதல்வரான
அமரர்,Amarar - நித்ய ஸுரிகளுக்கு
முதல்,Mudhal - தலைவனும்
தனி வித்தினை,Thani viththinai - (அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்) ஒப்பற்ற காரணமாயிருப்பவனும்
என்னையும்,Ennaiyum - என்னையும்
எங்கள் குடி முழுது,Engal kudi muzhuvathu - எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும்
ஆட் கொண்ட,Aad kond - அடிமை கொண்ட
மன்னனை,Mannanai - தலைவனுமாகிய கண்ணனுக்கு
வந்து,Vandhu - (நீ) வந்து
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்,Akkakkai - காக்கையே!
மாதவன் தன்,Madhavan than - ஸ்ரீயபதியான இவனுக்கு
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
163ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 2
பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
இவன்,Ivan - இப் பிள்ளை
முன்னம்,Munnam - முன்பு
பேயின் முலை,Peyin mulai - பூதனையின் முலையை
உண்ட,Unda - (அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை,Pillai - பிள்ளை காண்
மாயம்,Maayam - (அன்றியும்) வஞ்சனை யுள்ள
சகடும்,Sagadum - சகடத்தையும்
மருதும்,Marudum - யமளார்ஜுகங்களையும்
இறுத்தவன்,Iruththavan - முறித்தவன்
காயா மலர் வண்ணன்,Kaaya malar vannnan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன்
கண்ணன்,Kannan - ‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன்
கரு குழல்,Karu kuzhal - கரு நிறமான கூந்தலை
வந்து,Vandhu - (நீ) வந்து
தூய்து ஆக குழல் வாராய்,Thooythu aaga kuzhal vaarai - நின்றாக வாருவாயாக.
தூ மணிவண்ணன்,Thoo ManiVannan - பழிப்பற்ற நீல மணி போன்ற நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய்
164ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 3
திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
திரை,Thirai - பின்னுதலை யுடைய
உறி மேல் வைத்த,Uri mel vaiththa - (பெரிய) உறி மேல் வைத்த
திண்ணம் கலத்து,Thinnam kalaththu - த்ருடமான பாத்ரத்திலுள்ள
வெண்ணெய்,Vennai - வெண்ணெயை
விழுங்கி,Vizhunki - உட் கொண்டு
விரைய,Viraiya - விரைவாக (ஓடி வந்து)
உறங்கிடும்,Urangidum - பொய் யுறக்க முறங்குகின்ற
அண்ணல்,Annal - ஸ்வாமியும்
அமரர்,Amarar - நி்த்ய ஸுரிகளுக்கு
பெருமானை,Perumanai - நிர்வாஹகனும்
ஆயர் தம் கண்ணனை,Aayar tham kannanai - இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை
வந்து குழல் வாராய்,Vandhu kuzhal vaarai - வந்து கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
கார் முகில்,Kaar mugil - காள மேகம் போன்ற
வண்ணன்,Vannan - நிறத்தை யுடையனான இவனுடைய
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
165ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 4
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4
அக் காக்காய்!-,Akkakkai - காக்கையே!
பள்ளத்தில்,Pallathil - நீர்த் தாழ்வுகளிலே
மேயும்,Meyyum - இரை யெடுத்துத் திரிகின்ற
பறவை,Paravai - (கொக்கு என்னும்) பஷியின்
உரு,Uru - ரூபத்தை
கொண்டு,Kondu - ஏறிட்டு்க்கொண்டு
வருவான்,Varuvaan - வருபவனாகிய
கள்ளம் அசுரனை,Kallam asuranai - வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை)
தான் கண்டு,Thaan kandu - தான் பார்த்து (அவனை)
இது புள் என்று,Ithu pul endru - இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து)
பொதுக்கோ,Pothukko - விரைவாக
வாய்,Vaai - (அவ் வஸுரனது) வாயை
தீ்ண்டிட்ட,Theenditta - கிழித்துப் போட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் ,Pillaiyai Vandhu kuzhal vaarai - அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய்
166ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 5
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை
பற்றி யெறிந்த பரமன் திரு முடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-5
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
நீ,Nee - நீ
உற்றன,Uttrana - (உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை
பேசி,Peshi - சொல்லிக் கொண்டு
ஓடி,Odi - அங்குமிங்கும் பறந்து
திரியாதே,Thiriyaadhe - திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து,Kanru inam meythu - கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து
ஒரு கன்றினை,Oru kanrinai - (அஸுரா விஷ்டமான) கன்றொன்றை
பற்றி,Patri - பிடித்து
கனிக்கு,Kanikku - (அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த,Erindha - (குணிலாக) வீசின
பரமன்,Paraman - பரம புருஷனுடைய
திருமுடி,Thirumudi - அழகிய தலை முடியை
அற்றைக்கும் வந்து,Attraiyum vandhu - அவ்வக்காலும் வந்து
குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக
ஆழியான் தன்,Azhiyan than - சக்ராயுதபாணியான இவனுடைய
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
167ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 6
கிழக்கில் குடி மன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்கு அணி யாகக் குழல் வாராய் அக் காக்காய் கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-6
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
கேடு இலாதார்,Kedu ilaadhaar - (வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான
கிழக்கில் குடி மன்னரை,Kizhakkil kudi mannarai - கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை
அழிப்பான்,Azhippaan - அழிக்கும் படி
நினைந்திட்டு,Ninaindittu - எண்ணி
அவ் வாழி அதனால்,Av vaazhi athanaal - அந்தச் சக்ராயுதத்தால்
விழிக்கும் அளவிலே,Vizhikkum alavile - கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள்
வேர் அறுத்தானை,Ver arutthaanai - ஸ மூலமாக அழித்தவனுடைய
குழற்கு,Kuzharku - கூந்தலுக்கு
அணி ஆக,Ani aaga - அழகு உண்டாம்படி குழல் வாராய்
கோவிந்தன்,Govindan - (இந்த) கோவிந்தனுடைய
தண் குழல்,Than kuzhal - குளிர்ந்த (சிறந்த) குழலை
வாராய்,Vaarai - வாருவாயாக.
168ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 7
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டொத் திருண்ட குழல் வாராய் அக் காக்காய் மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-7
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
பிண்டம் திரளையும்,Pindam thiralaiyum - (பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்
பேய்க்கு இட்ட,Peykku itta - பிசாசங்களுக்குப் போகட்ட
நீர் சோறும்,Neer sorum - நீரையுடைய சோற்றையும்
உண்டற்கு,Undarkku - உண்ணுதற்கு
வேண்டி,Vendi - விரும்பி
நீ ஓடி திரியாதே,Nee odi thiriyadhe - நீ பறந்தோடித் திரியவே வேண்டா
அண்டத்து,Andathu - மேலுலகத்திலுள்ள
அமரர்,Amarar - தேவர்களுக்கு
பெருமான்,Perumaan - தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய
அழகு அமர்,Azhagu amar - அழகு பொருந்திய
வண்டு ஒத்து இருண்ட,Vandu othu irunda - வண்டைப் போல் கருநிறமான
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
மாயவன் தன்,Maayavan than - ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
169ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 8
உந்தி யெழுந்த உருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-8
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
உந்தி,Undhi - (தனது) திருநாபியிலே
எழுந்த,Ezhntha - உண்டான
உருவம்,Uruvam - ஸுருபத்தையுடைய
மலர் தன்னில்,Malar thannil - தாமரைப் பூவிலே
சந்தம்,Sandham - சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய
சதுமுகன் தன்னை,Sathumugan thannai - நான்முகனை
படைத்தவன்,Padaithavan - ஸ்ருஷ்டித்த இவனுடைய
புளி அட்டி கொந்தம் குழலை,Puli atti kondham kuzhalai - புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை
தந்தத்தின் சீப்பால்,Thandathin seepal - தந்தத்தினாற் செய்த சீப்பாலே
குறந்து,Kurandhu - சிக்கு விடுத்து
குழல் வாராய்,Kuzhal vaarai - வாருவாயாக
அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-,Akkakkai - (இந்த) தாமோதரனுடைய குளிர்ந்த (சிறந்த) குழலை வாருவாயாக.
170ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 9
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து
பின்னே யிருந்து குழல் வாராய் அக் காக்காய்
பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-9
அக்காக்காய்!-,Akkakkai - காக்கையே!
முன்,Mun - வாமநாவதார காலத்தில்
மன்னன் தன்,Mannan than - அஸுரராஜனான மஹாபலியினுடைய
தேவிமார்,Devimaar - மனைவியர்கள்
கண்டு,Kandu - (தன்னுடைய) வடிவைக் கண்டு
மகிழ்வு எய்த,Magizhvu aiththa - மகிழ்ச்சி யடையும்படி
இ உலகினை முற்றும், E ulakini mutrum - (மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்) இந்த வுலகங்கள் முழுவதையும்
அளந்தவன்,Alandhavan - அளந்து கொண்ட இவனுடைய
பொன் முடியினை,Pon mudhiyinai - அழகிய தலையை
பூஅணை மேல் வைத்து,Pooanai meel vaiththu - புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து
பின்னே இருந்து,Pinne irundhu - (இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு
குழல் வாராய்,Kuzhal vaarai - அக்காக்காய்!-
பேர் ஆயிரத்தான்,Per aayiraththaan - ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு
குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக
171ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10
கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன்
வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10
அக் காக்காய்,Akkakkai - காக்கையே!
கண்டார்,Kandar - பார்த்தவர்கள்
பழியாமே,Pazhiyaamae - பழியாதபடி
கார் வண்ணன்,Kaar vannan - காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய
வண்டு ஆர் குழல்,Vandu aar kuzhal - வண்டை ஒத்த கரிய கூந்தலை
வார,Vaar - வாரும்படி
வா,Vaa - வருவாயாக
என்ற,Endru - என்று சொன்ன
ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டியின்
சொல்,Sol - சொல்லை (க்குறித்த)
விண் தோய்,Vin thoy - ஆகாசத்தை அளாவுகின்ற
மதிள்,Mathil - மதிளை யுடைய
வில்லிபுத்தூர்,Villipuththoor - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattam - பெரியாழ்வாருடைய
சொல்,Sol - அருளிச் செயல்களை
கொண்டாடி,Kondaadi - சிலாகித்து
பாட,Paada - பாடப் பெற்றால்
வினை தாம்,Vinai thaam - ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும்
குறுகா,Kurugaa - சேராவாம்.