| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 44 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 1 | மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!–1-3-1 | மாணிக்கம்,Maanikam - மாணிக்கத்தை கட்டி,Katti - (இரண்டருகும்) கட்டியும் இடை,Idai - நடுவில் வயிரம்,Vairam - வயிரத்தை கட்டி,Katti - கட்டியும் ஆணிப் பொன்னால்,Aanip ponnaal - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த,Seidha - செய்யப்பட்ட வண்ணம்,Vannam - அழகிய சிறு தொட்டில்,Siru thottil - சிறிய தொட்டிலை பிரமன்,Piraman - சதுர்முகனானவன் பேணி,Paeni - விரும்பி உனக்கு,Unakku - உனக்கு விடு தந்தான்,Vidu thandhaan - அனுப்பினான் மாணி குறளனே,Maani kuralane - ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! வையம்,Vaiyam - உலகங்களை அளந்தானே,Alandhaane - (த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! |
| 45 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 2 | உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்; உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!–1-3-2 | உடை ஆர்,Udai aar - திருவரைக்குச் சேரும்படியான கனம் மணியோடு,Kanam maniyodu - பொன் மணியையும் இடை,Idai - நடு நடுவே விரவி,Viravi - கலந்து கோத்த,Kotha - கோக்கப் பட்ட எழில்,Ezhil - அழகிய தெழ்கினோடும்,Thezhginodum - இடைச் சரிகையையும் ஒண் மாதளம்பூ,On maadhalampoo - அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும் விடைஏறு,Vidai yeru - ரிஷப வாஹகனாய் காபாலி,Kaabaali - கபால தாரியாய் ஈசன் விடுதந்தான்,Eesan viduthandhaan - ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-; உடையாய்,Udaiyaai - ஸ்வாமியான கண்ணனே! அழேல் அழேல்,Azael azael - அழாதேகொள், அழாதேகொள் தாலேலோ,Thaalelo - தாலேலோ உலகம் அளந்தானே! தாலேலோ!,Ulagam alandhaane! Thaalelo! - தாலேலோ |
| 46 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 3 | என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு, இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3 | எம்தம் பிரானார்,Emtham praanar - எமக்கு ஸ்வாமியாய் எழில்,Ezhil - அழகிய திருமார்வார்க்கு,Thirumaarvaarukku - திருமார்பை யுடையாய் சந்தம் அழகிய,Santham azhagiya - நிறத்தாலழகிய தாமரை தாளர்க்கு,Thaamarai thaalarkku - தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு இந்திரன் தானும்,Indhiran thaanum - தேவேந்த்ரனானவன் எழில் உடை,Ezhil udai - அழகை யுடைய கிண்கிணி,Kinkin - கிண் கிணியை தந்து,Thandhu - கொணர்ந்து ஸமர்ப்பித்து உவனாய் நின்றான்,Uvanaai ninraan - அதோயிரா நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ,Thaalelo! Thaamaraik kannane! Thaalelo - தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ |
| 47 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 4 | சங்கின் வலம் புரியும் சேவடிக் கிண் கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!–1-3-4 | சங்கில்,Sangil - சங்குகளில்(சிறந்த) வலம் புரியும்,Valam puriyum - வலம்புரிச் சங்கையும் சே அடி,Se adi - செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த) கிண்கிணியும்,Kinkin yum - சதங்கையையும் அம் கை,Am kai - அழகிய கைகளுக்கு உரிய சரி,Sari - முன் கை வளைகளையும் வளையும்,Valaiyum - தோள்வளைகளையும் நாணும்,Naanum - பொன்னரை நாணையும் அரை தொடரும்,Arai thodarum - அரைவடத்தையும் அம் கண்,Am kan - அழகியதாய் விசாலமான விசும்பில்,Visumbil - ஸ்வர்க்கத்திலுள்ள அமரர்கள்,Amarargal - தேவர்கள் போத்தந்தார்,Poththandhaar - அனுப்பினார்கள் செம் கண்,Sem kan - சிவந்த கண்களை யுடையையாய் கரு முகிலே,Karu mugile - கானமேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! தேவகி,Devaki - தேவகியின் வயிற்றிற்பிறந்த சிங்கமே,Singame - சிங்கக் குருகே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! |
| 48 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 5 | எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் கொடையான் வயிச்சி ரவணன் தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!–1-3-5 | எழில் ஆர்,Ezhil aar - அழகுமிக்கிருந்துள்ள திருமார்பிற்கு,Thirumaarpirku - வக்ஷஸ்ஸ்தலத்துக்கு இவை ஏற்கும் என்று,Ivai erkum endru - இவை பொருந்தும் என்று அழகிய,Azhagiya - அழகியவையான ஐம்படையும்,Aimbadayum - பஞ்சாயுதங்களையும் ஆரமும்,Aaramum - முத்து வடத்தையும் கொண்டு,Kondu - எடுத்துக்கொண்டு, வழுஇல்,Valuil - குற்றமற்ற கொடையான்,Kodaiyaan - ஔதார்யத்தையுடையனான வயிச்சிரவணன்,Vaichiravanan - குபேரானானவன் தொழுது,Thozhuthu - (இவற்றைத் திருவுள்ளம்பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக்கொண்டு உவனாய் நின்றான், தாலேலோ!,Uvanaai ninraan, Thaalelo! - உவனாய் நின்றான், தாலேலோ! தூ மணி,Thoo mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வண்ணனே,Vannane - வடிவையுடைய கண்ணனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! |
| 49 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 6 | ஓதக் கடலின் ஒளி முத்தி னாரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் மாதக்க வென்று வருணன் விடுதந்தான், சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!–1-3-6 | ஓதம்,Otham - அலையெறிப்பையுடைய கடலில்,Kadalil - ஸமுத்ரத்தில் (உண்டாய்) ஒளி,Oli - ஒளியை யுடைத்தாய் முத்தின்,Muththin - முத்துக்களால் கோக்கப்பட்ட ஆரமும்,Aaramum - ஹாரத்தையும் சாதி,Saadhi - நல்ல ஜாதியிலுண்டான பவளமும்,Pavalamum - பவழ வடத்தையும் சந்தம்,Santham - அழகு பொருந்திய சரி,Sari - முன் கை வளைகளையும் வளையும்,Valaiyum - தோல்வளைகளையும் மா தக்க என்று,Maa thakka endru - விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று வருணன் விடுதந்தான்,Varunan viduthandhaan - வருண தேவனானவன் விடுதந்தான் சோதி சுடர்,Sothi sudar - மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய முடியாய்,Mudiyaai - கிரீடத்தை யணிந்த கண்ணனே! தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . ! சுந்தரம் தோளனே,Sundharam tholane - அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே! தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . ! |
| 50 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 7 | கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள், கோனே! அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!–1-3-7 | தேன் ஆர்,ThenAar - தேன் நிறைந்துள்ள மலர்மேல்,Malarmel - (செந்தாமரை) மலரிலுறைகின்ற திருமங்கை,Thirumangai - பெரிய பிராட்டியார் கான் ஆர்,Kaan aar - காட்டிலுண்டான நறு துழாய்,Naru thuzhaai - பரிமளம் மிக்க துளசியாலே கை செய்த,Kai seidha - தொடுத்த கண்ணியும்,Kanniyum - மாலையையும் வான் ஆர்,Vaan aar - சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள செழு,Sezhu - செழுமை தங்கிய சோலை,Solai - சோலையாய்த் தழைத்த கற்பகத்தின்,Karpagaththin - கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த வாசிகையும்,Vaasikaiyum - திரு நெற்றி மாலையையும் போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள் கோனே,Kone - ஸர்வ ஸ்வாமியான கண்ணனே! அழேல் அழேல் தாலேலோ!,Azael azael Thaalelo! - அழேல் அழேல் தாலேலோ! குடந்தை,Kudanthai - திருக்குடந்தையிலே கிடந்தானே,Kidandhaane - கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே! தாலேலோ!,Thaalelo! - தாலேலோ! |
| 51 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 8 | கச்சொடு பொற் சுரிகை காம்பு கனவளை உச்சி மணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!–1-3-8 | கச்சொடு,Kachodu - கச்சுப் பட்டையையும் பொன்,Pon - பொன்னாற்செய்த சுரிகை,Surikai - உடை வாளையும் காம்பு,Kaambu - கரை கட்டிய சேலையையும் கனம்,Kanam - கநக மயமான வளை,Valai - தோள் வளைகளையும் மணி,Mani - ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய் உச்சி,Ucchi - உச்சியிலே சாத்தத் தக்கதான சுட்டி,Sutti - சுட்டியையும் ஒண் தாள்,On thaal - அழகிய காம்புகளை யுடைத்தாய் நிரை,Nirai - ஒழுங்கான பொற்பூ,Porpu - பொற்பூவையும் அச்சுதனுக்கு என்று,Achuthanukku endru - ‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று அவனியாள்,Avaniyaal - பூமிப்பிராட்டியானவள் போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள்; நஞ்சு,Nanju - விஷமேற்றின முலை,Mulai - பூதனையின் முலையின் பாலை உண்டாய்,Undaai - உண்ட கண்ணனே! தாலேலோ;,Thaalelo - தாலேலோ; நாராயணா! அழேல்! தாலேலோ,Narayana! Azael! Thaalelo - நாராயணா! அழேல்! தாலேலோ |
| 52 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 9 | மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் அய்யா அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!–1-3-9 | மெய்,Mey - திருமேனியிலே திமிரும்,Thimirum - பூசுகைக்குரிய நானம் பொடியோடு,Naanam podiyodu - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும் மஞ்சளும்,Manjalum - மஞ்சள்பொடியையும் செய்ய,Seyya - சிவந்ததாய் தட,Thada - விசாலமாயுள்ள கண்ணுக்கு,Kannukku - கண்களில் (சாத்த) அஞ்சனமும்,Anjanamum - மையையும், சிந்தூரமும்,Sindooramum - ஸிந்தூரத்தையும் (திரு நெற்றியில் சாத்துகைக்கு) வெய்ய கலை பாகி,Veyya kalai paagi - கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள் கொண்டு,Kondu - எடுத்துக்கொடு வந்து உவளாய் நின்றாள்,Uvalaai ninraal - அதோ இரா நின்றாள்; ஐயா,Ayaa - ஸ்வாமியான கண்ணனே! அழேழ் அழேழ் தாலேலோ;,Azael azael Thaalelo - அழேழ் அழேழ் தாலேலோ; அரங்கத்து,Arangaththu - ஸ்ரீரங்கத்திலே அணையானே,Anaiyaane - (திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே! தாலேலோ.,Thaalelo - தாலேலோ. |
| 53 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 10 | வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10 | வஞ்சனையால் வந்த,Vanchanaiyaal vanda - வஞ்சக வேஷத்தோடே வந்த பேய்ச்சி,Peychi - பூதனையினுடைய முலை உண்ட,Mulai unda - முலையை அமுது செய்தவனாய் அஞ்சனம் வண்ணனை,Anjanam vannanai - மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டி தாலாட்டிய,Thaalattiya - தாலாட்டின படிகளை செம் சொல் மறையவர்,Sem sol maraivar - செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்,Ser - நித்ய வாசம் பண்ணப் பெற்ற புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் (அருளிச் செய்த) சொல்,Sol - இப்பாசுரங்கள் எஞ்சாமை,Enjaamai - குறைவு படாமல் வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்க்கு இடர் இல்லை,Idar illai - துன்பம் ஒன்றுமில்லையாம். தான் ஏ,Thaan e - அசை |