Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மெச்சூது (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
118ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 1
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1
மெச்ச,Mecha - (அனைவரும்) கொண்டாடும்படி
ஊது,Oodu - ஊதுகின்ற
சங்கம்,Sangam - பாஞ்சஜந்யத்தை
மிடத்தான்,Midathaan - இடக்கையில் ஏந்தியுள்ளவனும்
நல்வேய்,Nalvey - நல்ல வேய்ங்குழலை
ஊதி,Oodi - ஊதுபவனும்
பொய் சூதில்,Poi soodhil - க்ருத்ரிமமான சூதிலே
தோற்ற,Thotra - (தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய்
பொறை உடை,Porai udai - பொறுமைசாலிகளான
மன்னர்க்கு,Mannarkku - பாண்டவர்கட்கு
ஆய்,Aay - (தான் எல்லாவகைத்) துணையுமாயிருந்து
பத்து ஊர்,Pathu oor - (துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்) ஊரையும்
பெறாது,Peraadhu - அடைய முடியாமல்
அன்று,Andru - அக் காலத்திலே
பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை
கை செய்த,Kai seitha - அணி வகுத்துச் செய்து
அ தூதன்,A thoodhan - அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
அப்பூச்சி காட்டுகின்றான்,Appoochi kaattuginraan - அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்;
அம்மனே,Ammaney - அம்மா!
அப்பூச்சி காட்டுகின்றான்-.,Appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.
119ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 2
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-2
மலை புரை,Malai purai - மலையை ஒத்த
தோள்,Thol - தோள்களை யுடைய
மன்னவர்,Mannavar - அரசர்களான
மாரதரும்,Maaratharum - மஹா ரதரும்
மற்றும் பலரும்,Matrum palarum - மற்றும் பலவகை அரசர்களும்
குலைய,Kulaiya - அழியவும்
நூற்றுவரும்,Noorruvarum - (துர்யோதநாதிகள்) நூறு பேரும்
பட்டு,Pattu - மரணமடைந்து
அழிய,Azhiya - உருவமழிந்து போகவும்
பார்த்தன்,Paarthan - அர்ஜுனனுடைய
சிலை,Silai - (காண்டீவமென்னும்) வில்
வளைய,Valaiya - வளையவும்
திண் தேர் மேல்,Thin ther mel - (அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல்
முன் நின்ற,Mun ninra - (ஸாரதியாய்) முன்புறத்தில் நின்ற
செம் கண்,Sem kan - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய்
அல வலை,Ala valai - (அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.
120ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 3
காயும் நீர் புக்குக் கடம்பேறி காளியன்
தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-3
காயும்,Kaayum - (காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்,Neer - மடுவின் ஜலத்திலே
புக்கு,Pukku - புகுந்து (கலக்கி) (அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
கடம்பு ஏறி,Kadambu eri - (அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்,Kaaliyan - அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்,Theeya panathil - கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க,Silambu aarka - (தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து,Paayndhu - குதித்து
ஆடி,Aadi - கூத்தாடி
வேயின் குழல் ஊதி,Veyin kuzhal oodi - (இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ) மூங்கினாலானாகிய குழலை ஊதி
வித்தகன் ஆய் நின்ற,Vithagan aay ninra - (இப்படி) விஸ்மயரீயனாயிருந்த
ஆயன்,Aayan - கண்ணபிரான்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.
121ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 4
இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப்
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-4-
இருட்டில்,Iruttil - இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த,Pirandha - (மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்,Poi - (அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை,Ezhai - அவிவேகிகளான
வல்,Val - (தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்,Aayar - இடையர்களின்
மருட்டை,Maruttai - (கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற) மருள் வார்த்தைகளை

தவிர்ப்பித்து,Thavirppithu - போக்கினவனாயும்
வல் கஞ்சன்,Val kanjan - கொடிய கம்ஸன்
மாள,Maala - மாண்டு போம்படி
புரட்டி,Puratti - (அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அ நாள்,A naal - (நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்,Engal - எங்களுடைய
பூ பட்டு,Poo pattu - அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட,Konda - வாரிக் கொண்டு போன
அரட்டன்,Arattan - தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-.
122ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 5
சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-5-
சேபூண்ட,Seboonda - எருதுகள் கட்டுதற்கு உரிய
சாடு,Sadu - சகடம்
சிதறி,Sithari - (அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை) உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு,Neikku - நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி,Thirudi - களவு செய்து
ஆப்பூண்டு,Aboonda - (உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு (அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)
நந்தன் மனைவி,Nandan manaivi - நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடை தாம்பால்,Kadai thambal - (தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளித் துடிக்க,Thullith thudikka - துடிக்க துடிக்க
சோப்பூண்டு,Soboonda - அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு
அன்று,Andru - (அதனோடு நல்லாமல்) அக்காலத்தில்
ஆப்பூண்டாள்,Aboondal - (எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்
அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான்
123ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 6
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு
சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-6
செப்பு,Seppu - ஸ்வர்ண கலசங்கள் போன்ற
இள மெல் முலை,Ila mel mulai - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய
தேவகி நங்கைக்கு,Devaki nangaiyku - தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)
சொப்பட தோன்றி,Soppada thondri - நன்றாகப் பிறந்து
தொறுப்பாடியோம்,Thoruppadiyom - ஆய்ப்பாடியிலுள்ளவர்களா கிய நாங்கள்
வைத்த,Vaitha - சேமித்து வைத்த
துப்பமும்,Thuppamum - நெய்யையும்
பாலும்,Palum - பாலையும்
தயிரும்,Thairum - தயிரையும்
விழுங்கிய,Vizhungiya - உட்கொண்ட
அப்பன்,Appan - ஸ்வாமி (உபகாரகன்)
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான்
124ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 7
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-7
தத்து கொண்டாள் கொல் ஓ,Thathu kondal kol o - (இந்தப் பிள்ளையை யசோதை) தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ!
தானே பெற்றாள் கொலோ,Thane petral kolo - (அல்லது) ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
சித்தம் அனையாள்,Sitham anaiyal - (கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
அசோதை,Asothai - யசோதையினுடைய
இளஞ்சிங்கம்,Ilanchingam - சிங்கக்குட்டி போன்றவனும்
கொத்து ஆர் கருங்குழல்,Kothu ar karunkuzhal - பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
கோபாலர் கோன் அரி,Gopalar kon ari - இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
அத்தன்,Athan - ஸ்வாமியான இவன்
125ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 8
கொங்கை வன் கூனி சொற் கொண்டு
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8
கொங்கை,Kongai - (முதுகில்) முலையெழும்பினாற் போன்ற
வல்,Val - பலிஷ்டமான
கூனி,Kooni - கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்,Sol - சொல்லை
கொண்டு,Kondu - அங்கீகரித்து
எங்கும்,Engum - எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்,Kuvalayam thungam - இப் பூமியில் (இருப்பவற்றுள்)
கரியும்,Kariyum - யானைகளையும்
பரியும்,Pariyum - (அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்,Iraachiyamum - ராஜ்யத்தையும்
பரதற்கு,Paratharku - பரதாழ்வானுக்கு
அருளி,Aruli - கொடுத்துவிடல்
வல் கான் அடை,Val kan adai - கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்,Am kannan - அழகிய கண்ணையுடையனான இவன்
அப்பூச்சி காட்டுகின்றான்,Appuchi kaatigindran - அப்பூச்சி காட்டுகின்றான்
126ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 9
பதக முதலை வாய்ப் பட்ட களிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-9
பதகம்,Padagam - பாதிக்குந் தன்மையை யுடைய
முதலை,Mudhalai - முதலையின்
வாய்,Vai - வாயிலே
பட்ட,Patta - அகப்பட்ட
களிறு,Kaliru - ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி,Kathari - (தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி,Kai kooppi - கையைக் குவித்துக் கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன,En kanna kanna enna - என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
அங்கு,Angu - அப்போதே
உதவ,Udhava - (அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து,Pul oorndhu - பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறு துயர்,Uru thuyar - (அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த,Theertha - போக்கின
அதகன்,Athagan - (ஆச்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன்
வந்து,Vandhu - அப்பூச்சி காட்டுகின்றான்-.
127ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 10
வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10
வல்லாள்,Vallal - பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை,Ilangai - லங்கையானது
மலங்க,Malanga - பாழாம்படி
சரம் துரந்த,Saram thuranda - அம்பைச் செலுத்திய
வில் ஆளனை,Vil alanai - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்,Vittu sithan - பெரியாழ்வார்
விரித்த,Viritha - பரக்க கூறிய
சொல் ஆர்ந்த,Sol arndha - சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்,Appuchi paadal ivai pathum - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்,Vallar - கற்க வல்லவர்
போய்,Poi - (அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்,Vaikundam - ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்,Manni iruppar - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.