Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: வட்டு நடுவே (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
108ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 1
வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்–1-9-1
என் குட்டன்,En kutthan - என் பிள்ளை
வட்டு நடுவே,Vattu naduve - (இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே
வளர்கின்ற,Valarkindra - வளர்த்துக் கொண்டிருப்பதான
மாணிக்கம் மொட்டு,Manikkam mottu - இந்திர நீலமயமான அரும்பினுடைய
நுனையில்,Nunaiyil - நுனியில்
முளைக்கின்ற,Mulaikkindra - உண்டாகின்ற
முத்தே போல்,Mutthe pol - முத்தைப் போல
சொட்டு சொட்டு என்ன,Sottu sottu enna - சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி
துளிர்க்க துளிர்க்க,Thulirkkal thulirkkal - (அம்மாணிக்க மொட்டு) பல தரம் துளியா நிற்க
வந்து,Vandhu - ஓடி வந்து
என்னை,Ennai - என்னுடைய
புறம்,Puram - முதுகை
புல்குவான்,Pulkuvan - கட்டிக் கொள்வான்;
கோவிந்தன் என்னை புறம்புல்குவான்,Govindan ennai purampulkuvan - கோவிந்தன் என்னை புறம்புல்குவான்
109ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 2
கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர் கட்டி
தன் கணத் தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்-1-9-2
என் கண்ணன்,En kannan - என் கண்ணபிரான்
கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கையை
கட்டி,Katti - கட்டிக் கொண்டும்
கிறி,Kiri - சிறுப் பவள வடத்தை
கையினிலே,Kaiyinilae - கையிலே
கட்டி,Katti - கட்டிக் கொண்டும்
கங்கணம்,Kanganam - தோள் வளையை
இட்டு,Ittu - (தோள்களில்) சாத்திக் கொண்டும்
கழுத்தில்,Kazhuththil - திருக் கழுத்திலே
தொடர்,Thodhar - சங்கிலியை
கட்டி,Katti - அணிந்து கொண்டும்
தம் கணத்தாலே,Tham kanaththale - (இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட
சதிர் ஆ நடந்து வந்து,Sathir aa nadandhu vandhu - அழகாக நடந்து வந்து
என்னை புறம் புல்குவான்-;,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
110ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 3
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்களேறு என் புறம் புல்குவான்–1-9-3
கத்தக் கதித்து கிடந்த,Kattak kathiththu kidantha - மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த
பெருஞ்செல்வம்,Perunchelvan - மிகுந்த ஐச்வர்யத்தை
ஒத்து,Othu - (தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து
பொருந்திக் கொண்டு,Porundhik kondu - மனம் பொருந்தி யிருக்க
உண்ணாது,Unnaadhu - அநுபவியாமல்
மண்,Man - பூமியை
ஆள்வான்,Azhvaan - (தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான
கொத்து தலைவன்,Kothu thalaivan - (தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
குடி கெட,Kudi keda - (தன்) குடும்பத்தோடு பாழாம்படி
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
அத்தன்,Atthan - ஸ்வாமி
வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
111ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 4
நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-4
நாந்தகம்,Nanthagam - நந்தகம் என்னும் வாளை
ஏந்திய,Aendhiya - கையிலணிந்துள்ள
நம்பி,Nambi - பெரியோனே!
சரண்,Saran - (நீ எனக்கு) ரக்ஷகன்
என்று,Endru - என்று சொல்லி
தாழ்ந்த,Thaazhntha - (தன்னை) வணங்கிய
தனஞ்சயற்கு ஆகி,Thananjayarku aagi - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து
தரணியில்,Tharaniyil-ib bhoomiyile - இப் பூமியிலே
வேந்தர்கள்,Vendarhal - (எதிரிகளான) ராஜாக்கள்
உட்க,Utka - அஞ்சிக் கலங்கும்படி
விசயன்,Vichayan-anda Arjunanathu - அந்த அர்ஜுநனது
மணி திண் தேர்,Mani thin ther - அழகிய வலிய தேரை
ஊர்ந்தவன்,Oornthavan - (ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன்
என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு
கோன்,Kon - நிர்வாஹகனான இவன்
என்னை புறம் புல்குவான்,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான்
112ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 5
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண் பல செய்த கருந்தழைக் காவின் கீழ்
பண்பல பாடிப்பல்லாண் டிசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான்–1-9-5
பண்டு,Pandu - முன்னொரு காலத்திலே
வெண்கலம் பத்திரம்,Venkalam paththiram - வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி,Katti - (அரையிற்) கட்டிக் கொண்டு
விளையாடி,Vilaiyaadi - விளையாடி
பல கண் செய்த,Pala kan seitha - பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை,Karu thazhai - பெரிய குடையாகிற
காவின் கீழ்,Kaavin keezh - சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி,Pala pan paadi - (அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
பல்லாண்டு இசைப்ப,Pallandu isaippa - மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்,Pala man kondaan - பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
புறம் புல்குவான்,Puram pulkuvan - வாமனன் என்னை புறம் புல்குவான்
113ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 6
சத்திர மேந்தித் தனி யொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான்–1-9-6
உத்தர வேதியில் நின்ற,Uththara vethiyil ninra - உத்தர வேதியிலிருந்த
ஒருவனை,Oruvanai - (ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்,Saththiram - குடையை
ஏந்தி,Aendi - (கையில்) பிடித்துக் கொண்டு
தனி,Thani - ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்,Oru maani aayi - ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (போய்)
கத்திரியர்,Kaththiriyar - (அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள்
காண,Kaana - பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்,Kaana muṟṟum - உலகம் முழுவதையும்
கொண்ட,Konda - (நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்,Paththiram - விலக்ஷணமான
ஆகாரன்,Aakaaran - வடிவை யுடையனான இவன்
புறம் புல்குவான்-;,Puram pulkuvan - புறம் புல்குவான்-;
பார்,Paar - பூமியை
அளந்தான்,Alandhaan - (திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்
என் புறம் புல்குவான்-.,En puram pulkuvan - என் புறம் புல்குவான்-.
114ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 7
பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறார விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்–1-9-7
பொத்த உரலை,Potta uralai - (அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து)
கவிழ்த்து,Kavizhththu - தலை கவிழ்த்துப் போட்டு
அதன் மேல் ஏறி,Adhan mel aeri - அவ் வுரவின் மேலேறி
தடாவினில்,Thadavinil - மிடாக்களிலே உள்ள
தித்தித்த பாலும்,Thiththitha paalum - மதுரமான பாலையும்
வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும்
திரு வயிறு ஆர்,Thiru vayiru aar - வயிறு நிரம்ப
மெத்த விழுங்கிய,Meththa vizhunkiya - மிகுதியாக விழுங்கின
அத்தன்,Atthan - தலைவன்
வந்து என்னை புறம் புல்குவான்-;,Vandhu ennai puram pulkuvan - வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆழியான்,Aazhiyaan - (இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன்
என்னை புறம் புல்குவான்-.,Ennai puram pulkuvan - என்னை புறம் புல்குவான்-.
115ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 8
மூத்தவை காண முது மணற் குன்றேறி
கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்–1-9-8
மூத்தவை,Moothavai - வயசு சென்ற இடைச் சனங்கள்
காண,Kaana - காணும் படியாக
முது மணல் குன்று ஏறி,Mudhu manal kunru aeri - நெடுநாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின்
வாய்த்த,Vaayththa - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின
மறையோர்,Maraiyor - ப்ரஹ்ம ரிஷிகள்
வணங்க,Vananga - தன்னைக் கண்டு வணங்கவும்
இமையவர்,Imaiavar - தேவர்கள்
ஏத்த,Aetha - ஸ்தோத்ரஞ்செய்யவும்
குழலால் இசைபாடி,Kuzhalal isaipaadi - வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும்
உவந்து,Uvandu - ஸந்தோஷித்து
கூத்து ஆடி,Koothu aadi - கூத்தாடியும் நின்று
வந்து என்னை புறம்புல்குவான்-;,Vandhu ennai purampulkuvan - வந்து என்னை புறம்புல்குவான்-;
எம்பிரான் என்னை புறம்புல்குமான்-,Emperaan ennai purampulkumaan - வந்து என்னை புறம்புல்குவான்-;
116ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 9
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9
இந்திரன் காலினில்,Indhiran kaalinil - இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த
கற்பகம் காவு,Karphakam kaavu - கற்பகச் சோலையை
கருதிய,Karuthiya - (தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய
காதலிக்கு,Kaathalikkum - தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு
இப்பொழுது,Ippozhudhu - இப்பொழுதே
ஈவன்,Eevan - கொணர்ந்து தருவேன்
என்று,Endru - என்று சொல்லி
நிலா திகழ்,Nila thigazh - நிலா விளங்குகின்ற
முற்றத்துள்,Mutraththul - அவள் வீட்டு முற்றத்தில்
நிற்பன செய்து,Nirpan seyththu - இருப்பனவாகச் செய்து
உய்த்தவன் என்னை,Uythanavan ennai - தழைக்கும்படி செய்தவன்
என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-;
உம்பர் கோன்,Umbar kon - (அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன்
என்னை புறம்புல்குவான்-.,Ennai purampulkuvan - என்னை புறம்புல்குவான்-;
117ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (பெரியாழ்வார் தாம் அநுபவித்து ஸந்தோஷித்து உலகத்தார்க்கு உபகரித்த தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி நல்ல புத்திரர்களை அடைந்து ஆநந்திப்பர்கள்) 10
ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10
வேய்,Vey - மூங்கில் போன்ற
தடந்,Tadan - பெரிய
தோளி,Tholi - தோள்களை யுடையனான
ஆய்ச்சி,Aaychi - யசோதை யானவன்
ஆழிப் பிரான்,Aazhi piran - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்
அன்று,Andru - அக் காலத்திலே
புறம் புல்கிய,Puram pulgiya - புறம் புல்குவதைக் கூறிய
சொல்,Sol - சொல்லை
விட்டு சித்தன்,Vittu chiththan - பெரியாழ்வார்
மகிழ்ந்து,Magizhndhu - (தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து
ஈந்த,Eintha - (உலகத்தார்க்கு) உபகரித்த
தமிழ் இவை ஈர் ஐந்தும்,Tamil ivai eer aindhum - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள்
வாய்த்த,Vaaytha - (மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி
நல் மக்களை,Nal makkalai - நல்ல புத்திரர்களை
பெற்று,Petru - அடைந்து
மகிழ்வர்,Magizhvar - ஆநந்திப்பர்கள்.