திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1-8 ஓடும்புள்ளேறி (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2752திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( நித்ய விபூதியிலுள்ளாரோடு செவ்வைக் குணமுடையனாய்ப் பரிமாறும் வகை இப்பாட்டிற் சொல்லப்படுகிறது.) 1
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1
பதவுரை Show / Hide
Needu Nindra Avai - நித்ய ஸூரிகளா யிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு
Soodum - கூடிப் பரிமாறுகிற
Ammaan - ஸ்வாமி
Pul yeri - பெரிய திருவடி மேற் கொண்டு
Odum - (விரைந்து) ஓடுவன்;
Than Thuzhaay - குளிர்ந்த திருத் துழாய் மாலையை
Soodum - சாத்திக் கொள்வன்.
2753திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( கீழ்ப்பாட்டிற் கூறியபடி ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறகை மாத்திரமே யல்லாமல் அங்கு நின்றம் இந் நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் பரிமாறும்படியும் எம்பெருமானுக்குள்ளதென்று இப்பாட்டிற் சொல்லுகிறது. 2
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2
பதவுரை Show / Hide
Ammaan Aay - ஸ்வாமியாய் இருந்து
Vem - உக்கிரமான
Maa - குதிரையின் வடிவாக வந்த கேசி யென்னுமசுரனை
Vaai Keenda - வாய் கிழித்தவனும்
Sem Maa - சிவந்து பெரிய திருக்கண்களை யுடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன்
Pinnum - பின்னையும்
Em Maanpum Aanaan - எல்லா அவதார ஸௌந்தரியமு முடையனாயினான்.
2754திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இரட்டைப் பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தை கட்கும் முலை கொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமா போலே நித்ய ஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொத்த முகந் தருதற்காகத் திருவேங்கடமலையிலே நின்றருளும் நீர்மையை அருளிச் செய்கிறார்) 3
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3
பதவுரை Show / Hide
Mannor - மண்ணுலகத்தார்க்கும்
Vinorukku - விண்ணுலகத்தார்க்கும்
Endrum - எப்போதும்
Kan Aavaan - கண்ணாயிருப்பன், (யாவனென்னில்)
Than Aar - குளிர்ச்சி நிறைந்த
Vengadam - திருவேங்கடமென்கிற பெயரையுடைய
Vinor Verrpan - நித்ய ஸுரிகட்கிடமான திருமலையை யுடையவன்.
2755திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (அவனுடைய ருஜுத்வகுணத்தை இடைவிடாது பேசி யனுபவிக்கப்பெற்றமை தமக்கு நேர்ந்தபடியை யருளிச்செய்கிறார்) 4
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4
பதவுரை Show / Hide
Onru Verpai - (கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை
Eduthu Orkam Indriye - இளைப்பிலாமல்
Nirukum - நின்றருளின
Ammaan - எம்பெருமானுடைய
Seer - திருக் குணத்தை
Vaigal - நாள் தோறும்
Karpan - பேசக் கடவேன்.
2756திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நான் எம்பெருமானது திருக்குணத்தையே விரும்புவதுபோல அவனும் என்னுடைய சரீரத்தையே விரும்பாநின்றானென்கிறார். திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருக்கிறதோ அவ்வளவு போக்யாமயிருந்தது என்னுடைய சரீரமவனுக்கு என்றவாறு) 5
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5
பதவுரை Show / Hide
Vaigalum - எப்போதும்
Vennai - வெண்ணெயை
Kai Kalanthu - கை உள்ளளவும் நீட்டி
Undaan - (வாரி யெடுத்து) அமுது செய்தவன்
Poyinal Vaadhu - மெய்யாகவே
En Mei - எனது மேனியிலே
Kalanthaan - ஒன்று படக் கூடினான்
2757திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னைத் தனக்கே அடிமைப் படுத்திக் கொண்டானென்கிறார்.) 6
கலந்து என்னாவி நலம் கொள் நாதன் — புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6
பதவுரை Show / Hide
Kalandhu - ஒரு நீராகக் கலந்து
En Aavi - எனது ஆத்மாவினுடைய
Nalam - அடிமைத் தனமாகிய நன்மையை
Kolnaadan - தனக்காக்கிக் கொண்ட ஸ்வாமி யானவன்
Pulan Kol Maan Aay - (கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோ ஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தை யுடையவனாய்
Nilam Kondaan - (மூவடி) நிலத்தை பிக்ஷை யேற்றுக் கொண்டான்.
2758திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நப்பின்னைப் பிராட்டியோடு ஸம்ச்லேஷிப்பதற்காக அதற்கிடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே என்னோடு கலவிசெய்ய விரும்பி என்னுடைய பாபம் முதலிய பிரதிபந்தமங்களைப் போக்கியருளினானென்பது கருத்து) 7
கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம் தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7
பதவுரை Show / Hide
Ezhvidai - ஏழு விருதுகளையும்
Kondaan - (நப்பின்னைக்காக) வலி யடக்கினவனும்
Ezh Vaiyam - ஏழுலகங்களையும்
Undaan - (பிரளங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்தவனுமான எம்பெருமான்
Than Thaamam - குளிர்ந்த பரமபதத்திற்கொப்பாக என்னைத் திருவுள்ளம்பற்றி
En Endhaan Aanaan - நான் எண்ணின எண்ணத்திற்குப் பிரதியாகத்தான் சில எண்ணங்கள் கொண்டான்.
2759திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னை யகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை யென்கிறார்) 8
ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8
பதவுரை Show / Hide
Aan Aayan Aanaan - பசுமேற்கும் இடையனானான்
Meenodu Enamum Thaan Aanaan - மத்ஸ்யாவதாரமும் வராஹாவதாரமும் முதலான அவதாரங்களைத் தானே செய்தான்.
Ennil - என்னுமிடத்து
Thaan Aaya - தானெடுத்த அவதாரங்கள்
Sange - சங்கமென்னும் கணக்கை யுடையனவே. (அபாரமென்றபடி)
2760திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவனென்கிறார்) 9
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9
பதவுரை Show / Hide
Engum - எவ்விடத்தும்
Thaanaaya - (அவதார முகத்தால்) தானே வியாபித்த
Nangal Naadhan - எம்பெருமான்
Am Kaiyil - அழகிய திருக் கைகளில்
Sangu Chakkaram - திருவாழி திருச் சங்குகளை
Kondaan - தரித்துள்ளான்.
2761திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக எண்ணிறந்த திருவவதாரங்களைப் பண்ணியருளின இவருடைய ஆச்ரித வாத்ஸல்யத்தைப் பேசவேண்டில், நானோ பேசுவது? கடலோதங்ளர்த்தாப்போலே கிளர்ந்துள்ள வேதங்களே யன்றோ பேசவேண்டுமென்கிறார்.) 10
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரானே –1-8-10
பதவுரை Show / Hide
Naadhan - ஸகல லோக நாதனும்
Gnalam Kolpaadan - உலகத்தை யெல்லாம் அளந்து கொண்ட திருவடிகளை யுடையனுமான
Em Ammaan - எம்பெருமான்
Otham Polkilar - கடல் போல முழங்குகின்ற
Vedam - வேதங்களால் அறியத் தக்க
Neeran - நீர்மையை யுடையான்.
2762திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இந்தத் திருவாய்மொழி மற்ற திருவாய்மொழிகளினும் ஆராய்ந்து சொல்லப்பட்டதென்கிறார்) 11
நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11
பதவுரை Show / Hide
Neerpurai Vannan - நீரை யொத்த நிறத்தை யுடைவனான ஸர்வேச்வரனுடைய
Seer - ருஜுத்வமென்னுங் குணத்தைக் குறித்து
Sadagopan - நம்மாழ்வார்
Neerthal - நேர்ந்து அருளிச் செய்த
Ivai - இப் பத்துப் பாட்டும்
Aayirathu - ஆயிரத்தினுள்
Orthal - ஆராய்ந்து அறியத் தக்கன.