திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-கார்க்கோடல் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
597நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 1
கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான் ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ
பதவுரை Show / Hide
கார் கோடல் பூங்காள், Kaar Kodal Poonkaal - கறுத்த காந்தள் பூக்களே!
உம்மை, Ummai - உங்களை
போர் கோலம் செய்து, Por kolam seithu - யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து
எம் மேல், Em Mel - என் மேலே
போர விடுத்தவன், Pora Viduthavan - அனுப்பினவானான
கார் கடல் வண்ணன், Kaar Kadal Vannan - கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான்
எங்குற்றான், Engutraan - எங்கே யிருக்கிறான்?
நாம், Naam - (உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான்
இனி, Ini - இனி மேல்
ஆர்க்கு, Aarkku - யாரிடத்தில் போய்
பூசல் இடுவதோ, Poosal Idhuvatho - முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்)
அணி, Ani - அழகிய
துழாய் தார்க்கு, Thuzhaai thaarku - திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு
ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!, Odum Nenjam thannai padaikka vallen Andho! - ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ!
598நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 2
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே
பதவுரை Show / Hide
மேல் தோன்றி பூக்காள், Mel thondri pookaal - உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி, Mel Ulagankalin meedhu poi mel thondrum jothi - மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச் சோதி‘ என்கிற பரம பதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர், Vedham Mudhalvar - வேத ப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம் கையின் மேல் தோன்றும், Valam kaiyin mel thondrum - வலத் திருக் கையிலே விளங்கா நின்ற
ஆழியின் வெம் சுடர் போல், Aazhiyin vem sudar pol - திருவாழி யாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸு போல
சுடாது, Sudaathu - தஹியாமல்
எம்மை, Emmai - என்னை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து, Maatrolai pattavar kootathu - இந்த பிரக்ருதி மண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில்
வைத்துக் கொள்கிற்றீரே, Vaithu kolkitreere - கொண்டு சேர்க்கவல்லீர்களோ?
599நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 3
கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே
பதவுரை Show / Hide
கோவை மானாட்டி, Kovai Maanatti - அம்மா! கோவைக் கொடியே!
நீ, Nee - நீ
உன், Un - உன்னுடைய
கொழுங்கனி கொண்டு, Kozhunkani Kondu - அழகிய பழங்களாலே
எம்மை, Emmai - என்னுடைய
ஆவி, Aavi - உயிரை
தொலைவியேல், Tholaiviyel - போக்கலாகாது
வாய் அழகர் தம்மை, Vaai Azhagar Thammai - அழகிய வாய் படைத்த பெருமான் விஷயத்திலே
அஞ்சுதும், Anjuthum - பயப்படா நின்றேன்!
பாவியேன், Paaviyen - பாவியானா நான்
தோன்றி, thondri - பிறந்த பின்பு
நாணிலியேனுக்கு, Naaniliyenukku - லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே
பாம்பு அணையார்க்கும், Paambu Anaiyaarkum - சேஷ சாயியான பெருமாளுக்கும்
தம் பாம்பு போல், Tham Paambu Pol - தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப் போல
நாவும் இரண்டு உள ஆயிற்று, Naavum Irandu Ula Aaitru - இரண்டு நாக்குகள் உண்டாயின
600நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 4
முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே
பதவுரை Show / Hide
முல்லைப் பிராட்டி!, Mullai Piratti - அம்மா! முல்லைக் கொடியே!
ஆழி நங்காய்!, Aazhi Nangaai - கம்பீரமான இயல்வை யுடையாய்!
நீ, Ne - நீ
உன் முறுவல்கள் கொண்டு, Un muruvalgal kondu - (எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே
எம்மை, Emmai - என் விஷயத்திலே
அல்லல் விளைவியேல், Allal vilaiviyel - வருத்தத்தை உண்டாக்க வேண்டா
உன் அடைக்கலம், Un adaikalam - (இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன்
கொல்லை அரக்கியை, Kollai arakkiyai - வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை
மூக்கு அரிந்திட்ட, Mooku arindhitta - மூக்கறுத்துத் துரத்தின
குமரனார், Kumaranaar - சக்ரவர்த்தி திருமகனாருடைய
சொல்லும், Sollum - வார்த்தையே
பொய் ஆனால், Poi aanal - பொய்யாய் விட்டால்
நான் பிறந்தமையும் பொய் அன்று, Naan pirandhamaiyum poi andru - நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ
601நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 5
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே
பதவுரை Show / Hide
பாடும், Paadum - பாடுகின்ற
குயில்காள்!, Kuyilkaal - குயில்களே!
ஈடு, Eedu - (கர்ண கடோரமான) இக் கூசல்
என்ன பாடல்?, Enna paadal? - என்ன பாட்டு
நல் வேங்கடம் நாடர், Nal Vengadam Naadar - விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான்
நமக்கு, Namakku - என் விஷயத்திலே
ஒரு வாழ்வு தந்தால், Oru vaazhvu thandhaal - ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது)
வந்து பாடுமின், Vandhu paadumin - (நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள்
ஆடும், Aadum - (ஆநந்தத்தாலே) ஆடுகின்ற
கருளன், Karulan - பெரிய திருவடியை
கொடி உடையார், Kodi udaiyaar - த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான்
அருள் செய்து, Arul seidhu - க்ருபை பண்ணி
வந்து கூடுவர் ஆயிடில், Vandhu kooduvar aayidil - (இங்கே) வந்து சேர்வனாகில்
கூவி, Koovi - (அப்போது உங்களை) வரவழைத்து
நும் பாட்டுக்கள், Num paatukal - உங்களது பாட்டுக்களை
கேட்டுமே, Ketume - கேட்போம்
602நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 6
கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன் பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே
பதவுரை Show / Hide
கணம், Kanam - கூட்டமாயிருக்கிற
மா மயில்காள்!, Maa Mayilkaal - சிறந்த மயில்களே!
கண்ணபிரான், Kannapiraan - கண்ணபிரானுடைய
திருக்கோலம் போன்று, Thirukkolam pondru - அழகிய வடிவு போன்ற வடிவை யுடையீராய்க் கொண்டு
அணி மா நடம் பயின்று, Ani Maa Nadam Payindru - அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி
ஆடுகின்றீர்க்கு, Aadukindreerku - ஆடுகின்ற உங்களுடைய
ஆடி, Aadi - திருவடிகளிலே
வீழ்கின்றேன், veezhkindren - ஸேவிக்கின்றேன் (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்)
பணம் ஆடு அரவு அணை, Panam aadu aravu anai - படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பல்பல காலமும், Palpala kaalamum - காலமுள்ளதனையும்
பள்ளி கொள், Palli kol - பள்ளி கொண்டருளா நின்ற
மணவாளர், Manavaalar - அழகிய மணவாளப் பெருமாள்
நம்மை வைத்த பரிசு, Nammai vaitha parisu - எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம்
இது காண்மின், Ithu kaanmin - இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று
603நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 7
நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே
பதவுரை Show / Hide
நடம் ஆடி, Nadam aadi - கூத்தாடிக் கொண்டு
தோகை விரிக்கின்ற, Thokai virikkinra - தோகைகளை விரிக்கிற
மா மயில்காள், Maa Mayilkaal - சிறந்த மயில்களே!
உம்மை, Ummai - உங்களுடைய
நடம் ஆட்டம் காண, Nadam aatam kaana - கூத்தைப் பார்ப்பதற்கு
பாவியேன் நான், Paaviyen naan - பாவியேன நான்
ஓர் முதல் இலேன், Or mudhal ilen - கண்ணை யுடையேனல்லேன்
குடம் ஆடு கூத்தன், Kudam aadu koothan - குடக்கூத்தாடினவனான
கோவிந்தன், Govindhan - கோபாலக்ருஷ்ணன்
கோமிறை செய்து, Komirai seidhu - கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி
எம்மை, Emmai - என்னை
உடை மாடு கொண்டான், Udai maadu kondan - ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான்
இனி, Ini - இப்படி யிருக்க
ஒன்று, Ondru - (என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம்
உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு
போதுமே, Podhume - தகுமோ?
604நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 8
மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே
பதவுரை Show / Hide
மழையே மழையே!, Mazhaiye mazhaiye! - ஓ மேகமே!
புறம், Puram - மேற் புறத்திலே
ஊற்றும், ootrum - என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கி யழிப்பவராய்
நல் வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் தம்மை, Nal Vengadathul ninra azhaga piranar thammai - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகிய பெருமாளை
மண் பூசி, Man poosi - மண்ணைப் பூசி விட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல், Ullaai ninra mezhugu utrinaal pol - உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுமா போலே
என் நெஞ்சந்து அகப்பட தழுவ நின்று, En nenjandhu agappada thazhuva ninru - என் நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி
என்னை, ennai - என்னை
ததைத்துக் கொண்டு, thadhaithu kondu - அவரோடே நெருக்கி வைத்து (பிறகு)
ஊற்றவும் வல்லையே, ootravum vallaiye - வர்ஷிக்க வல்லையோ?
605நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 9
கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே
பதவுரை Show / Hide
கடலே கடலே!, Kadale kadale! - ஓ கடலே!
உன்னை, Unnai - (தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை
கடைந்து, Kadainthu - (மலையை யிட்டுக்) கடைந்து
கலக்குறுத்து, Kalakkuruthu - கலக்கி
உடலுள் புகுந்து நின்று, Udalul pugundhu ninru - உனது சரீரத்திலே புகுந்திருந்து
ஊறல் அறுத்தவற்கு, Ooral aruthavarku - ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே)
என்னையும் உடலுள் புகுந்து நின்று, Ennaiyum udalul pugundhu ninru - என் உடலிலும் புகுந்திருந்து
ஊறல் அறுக்கின்ற, Ooral arukkinra - என் உயிரை அறுக்குமவரான
மாயற்கு, Maayarku - எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி)
என் நடலைகள் எல்லாம், En nadalaikal ellam - என் துக்கங்களை யெல்லாம்
நாக அணைக்கே, Naaga anaike - அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில்
சென்று, Sendru - நீ போய்
உரைத்தியே, Uraithiye - சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை)
606நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 10
நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
பதவுரை Show / Hide
என் நல்ல தோழி!, En nalla thozhi - எனது உயிர்த் தோழியே
நாக அணைமிசை, Naaga anaimisai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற
நம் பரர், Nam parar - நம் பெருமாள்
சிறு மானிடவர், Siru maanidavar - க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்)
என் செய்வது, En seivadhu - என்ன செய்யலாம்?
வில்லி புதுவை விட்டுசித்தர், Villi pudhuvai vittuchithar - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார்
செல்வர், Selvar - பெருஞ்செல்வம் படைத்தவர்
பெரியர், Periyar - எல்லாரினும் மேற்பட்டவர்
நாம், Naam - நாமோ வென்றால்
தங்கள் தேவரை, Thangal dhevarai - தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை
வல்ல பரிசு, Valla parisu - தம்மால் கூடின வகைகளாலே
வருவிப்பரேல், Varuviparel - அழைப்பராகில்
அது காண்டும், Athu kaandum - அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம்