திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2022 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு – உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன – அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது – அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும் கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் – ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு – உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் – மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது- என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தையை நினைப்பது) 1 | மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ –11-8-1 | பதவுரை Show / Hideநாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ, Naatram Suvai Ooru Oli Agiya Nambi - கந்தம் ரஸம் ஸ்பர்சம் சப்தம் என்னும் புலன்கட்கு உரியனான எம்பெருமானே! (- (அதுயாதெனில்)) மாற்றம் உள ஆகிலும், Maatram Ula Aagilum - (நீ அடியேனை ஆட்கொண்டருளினாயில்லை என்று நான் உன் மேற் குறைகூறும் வார்த்தை கட்கெல்லாம் மாறாக (நீதானே ஆட்பட்டு உய்ந்தாயில்லை என்று என் மேற் குற்றமாக நீ) சொல்லத்தக்க வார்த்தைகள் பல உள்ளனவேயாகிலும் சொல்லுவேன், Solluvein - (அவைநிற்க) யான் ஒன்று கூறுவேன் மக்கள் தோற்றம் குழி இன்னம் தோற்றுவிப்பாய்கொல் என்று, Makkal Thotram Kuzhi Innam Thotruvippaaykol Endru - (உன்னைச்சரணமடையாத ஸாதாரண) மனிதர்கள் (கர்மவசத்தாற்) பிறக்குமிடமான கர்ப்பஸ்தாநத்திலே என்னை இன்னமும் பிறக்கும்படி செய்கிடுவையோ என்று கருதி ஆற்றங்கரை வாழ் மரம் போல், Aatrangkarai Vaal Maram Pol - ஆற்றில் கரையிலேயுள்ள மரம் போன்றவனாகி அஞ்சுகின்றேன், Anjuginren - (வரக்கடவதான அபாயத்தைக்குறித்து எப்பொழுதும்) பயப்படுகின்றேன். |
| 2023 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது – மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு – ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ – உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய்) 2 | சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா –11-8-2 | பதவுரை Show / Hideஆழி வலவா, Aazhi Valavaa - சக்கரப்படையைப் பிரயோகித்தலில் வல்லவனே! சீற்றம் உள ஆகிலும், Seetrum Ula Aagilum - நீ கோபிக்கும்படியான குற்றங்கள் (என்னிடம்) உள்ளனவானாலும் செப்புவன், Seppuvan - (உன்னையன்றி எனக்கு வேறுகதியில்லை யாகையால் உன்பக்கல் என் குறையைச் சொல்லிக்கொள்வேன் மக்கள் தோற்றம்குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி, Makkal Thotram Kuzhi Thotruvippaay Kol Endru Anji - மனிதர்கள் (கர்மாதீனமாகப்) பிறக்கும் பிறவியிலே என்னையும் புகுவிப்பையொ வென்று எண்ணி அச்சமுற்று காற்றத்து இடைபட்ட கலவர் மனம் போல், Kaatrathu Idaipatta Kalavar Manam Pol - பெருங்காற்றில் அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திலே யுள்ளாரது மனம்போல ஆற்ற, Aatra - மிகவும் துளங்கா நிற்பவன், Thulankaa Nirpavan - நடுங்கிநிற்பேன் |
| 2024 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே – இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும் இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன் சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே அநந்தரம் – மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் – இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி – இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது) 3 | தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா –11-8-3 | பதவுரை Show / Hideஎன் தாமரை கண்ணா, En Thaamarai Kannaa - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எனது தலைவனே! தூங்கு ஆர் பிறவிக்கள், Thoongu Aar Piravikkal - சஞ்சலம் மிக்க பிறப்புக்களிலே இன்னம் புகபெய்து, Innam Pugapeythu - (இதுவரைபட்டது போதாமல்) இன்னமும் புகும்படி போட்டு வாங்காய் என்று சிந்தித்து, Vaangai Endru Sindhithu - என்னை மீட்காதிருந்திடுவையோ? என்று கவலை கொண்டு நான் அதற்கு அஞ்சி, Naan Atharku Anji - நான் அப்பிறவித்துன்பத்திற்கு அச்சமுறுதலால் பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப்போல், Pambodu Oru Kooraivile Payinraappol - பாம்பினுடனே ஒருவீட்டிலே பழகி வசிப்பதுபோல தாங்காது உள்ளம் தள்ளும், Thaangadhu Ullam Thallum - (பல பொல்லாங்குகட்கு இடமான உடலோடுகூடி வாழ்தலைப்) பெறாமல் என்மனம் தடுமாறுகின்றது. |
| 2025 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி – பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ) 4 | உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4 | பதவுரை Show / Hideஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்து (உலக முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுகாக்கிற) தலைவனே! உரு ஆர் பிறவிக்கள், Uru Aar Piravikkal - வடிவமைந்த பிறப்புக்களிலே இன்னம் புக பெய்து, Innam Puga Peythu - இன்னமும் (என்னைப்) பிரவேசிப்பது திரிவாய் என்று சிந்தித்தி என்று, Thirivaai Endru Sindhiththi Endru - (கருமவசத்தால்) திரியக் கடவாய் என்று (என்னைக்குறித்து நீ) திருவுள்ளங்கொள்ளுகின்றனையோ? எனறு அற்கு அஞ்சி, Arku Anji - அப்பிறவிகளில் திரிதற்கு அஞ்சி. இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல், Iru Paadu Eri Kolliyin Ula Erumbe Pol - இரண்டு பக்கத்திலும் நெருப்புப்பற்றியெரிய அவற்றின் நடுவிலே அகப்பட்டுவருந்தும் எறும்புபோல, என் உள்ளம் உருகாநிற்கும், En Ullam Urugaanirkkum - என்மனம் (க்லேசத்தால்) நெகிழ்ந்து உருகிக்கொண்டேயிருக்கும். |
| 2026 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் – அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என்) 5 | கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா –11-8-5 | பதவுரை Show / Hideஊழி முதல்வா, Oozhi Muthalvaa - பிரளயகாலத்தில் அத்வி தீயனாயிருப்பவனே! கொள்ள குறையாக இடும்பை குழியில், Kolla Kuraiyaga Idumbai Kuzhiyil - அநுபவிக்க அநுபவிக்க்க் குறையாதபடியுள்ள துன்பங்களை விளைப்பதான கர்ப்பஸ்தானத்திலே தள்ளி புக பெய்தி கொல் என்று, Thalli Puga Peythi Kol Endru - நான் புகும்படி என்னைத்தள்ளிப் போகடுவையோ நீ என்று அதற்கு அஞ்சி, Adharku Anji - அப்பிறவித்துயர்க்கு அஞ்சி வெள்ளத்து இடை, Vellathu Idai - வெள்ளத்திலே பட்ட, Patta - அகப்பட்டுவருந்துகிற நரி இனம் போலே, Nari Inam Pole - நரிக்கூட்டம்போலே உள்ளம் துளங்கா நிற்பன், Ullam Thulangaa Nirpan - மனம் நடுங்கிநிற்பேன்யான் |
| 2027 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டில் அருளிச் செய்யும் போது இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் – நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் – அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் – அது பின்னை செய்யப் போமோ என்னில் வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் – தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும்) 6 | படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6 | பதவுரை Show / Hideபடை நின்ற, Padai Nindra - உழுபடையாகிய கலப்பையைக்கொண்டு உழும்போது அதில் அகப்பட்டு அழியாமல் தப்பியொதுங்கி நின்ற பைந்தாமரையோடு, Painthaamaraiyodu - பசுமையான தாமரைக் கொடிகளும் அணி நீலம், Ani Neelam - அழகிய நீலோற்பலக்கொடிகளும் மடை நின்று, Madai Nindru - (பின்பு களையாகப்பறித் தெறியப்பட்டு அங்ஙனம் எறியப்பட்ட இடமான) நீர்பாயும் மடையிலேகிடந்து அலரும், Alarum - மலரப்பெற்ற வயல், Vayal - கழனிகளை யுடைய ஆவி, Aavi - திருவாலியென்னுந் திருநகரியிலெழுந்தருளியிருக்கிற மணாளா, Manala - மணவாளானென்னுந் திருநாம்முடைய எம்பெருமானெ! இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே, Idaiyan Erindha Marame Othu Irame - (ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாம்படி) இடையர்கள் (விரைந்து கையிற்கத்தி கொண்டு கிளைகளை வெட்டிச் சாய்க்கப்பெற்ற மரங்கள் போல யான் ஒருபுறம் உலராதபடி. அடைய, Adaiya - நான் உன்னையடையும்படி எனக்கு, Enakku - எளியவனான அடியேனுக்கு உன்தன் அருள், Unthan Arul - உனது கருணையை அருளாய், Arulai - அருளாய் |
| 2028 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும் வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று – உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி – உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி – நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி – பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும் உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது) 7 | வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7 | பதவுரை Show / Hideதேம்பல், Thembal - தக்ஷமுனிவனது சாபத்தினாலுண்டான க்ஷயரோகத்தால்) உடல்தேய்ந்து மெலிந்து வருந்துதலையுடைய (- (அதுபோலவெ)) இள திங்கள், Ila Thingal - பருவம் நிரம்பாத சந்திரன சிறை விடுத்து, Sirai Viduthu - (அந்நோயாகிய) நிறைத்துன்பத்தினின்று விடுவித்து ஐவாய் பாம்பின் அணை பள்ளி கொண்டாய், Aivai Paambin Anai Palli Kondaai - ஐந்து தலையையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தில் அறிதுயில்கொண்டருள்பவனே! பரஞ்சோதை, Paranjothai - எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவனெ! வேம்பின் புழு, Vembin Puzhu - வேப்பமரத்திலுண்டான புழுவானது வேமுபு அன்றி உண்ணாது, Vemupu Andri Unnaadhu - அம்மரத்தின் இலை முதலியவற்றைச் சுவைபட உண்ணுமேயன்றி வேறொன்றை உண்ணாது அடியேன் நான், Adiyen Naan - உனக்கே அடிமைப்பட்டவனான நான் பின்னும், Pinnum - நீ வெறுத்தாலும் உன் சே அடி அன்றி நயவேன், Un Che Adi Andri Nayvaen - உனது சிவந்த திருவடிகளை யன்றி வேறொன்றை விரும்பென். |
| 2029 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் – பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது – ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று) 8 | அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8 | பதவுரை Show / Hideஅணி ஆர் பொழியல் சூழ், Ani Aar Pozhiyal Soozh - அழகுமிக்க சோலைகள் சூழப்பெற்ற அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கமென்னுந் திருநகரத்தில் எழுந்தருளியிருக்கின்ற அப்பா, Appa - தந்தையே! இனி, Ini - இனிமேல் நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உனது கருணையையே யன்றி மற்றொன்றை எனக்கு துணியேன், Enakku Thuniyen - எனக்கு (த்தஞ்சமாக) நினைத்திடேன் மணியே, Maniye - நீலமணி போன்றவடிவை யுடையவனெ! மணி மாணிக்கமே, Mani Manikkame - சிறந்த ரத்நமான மாணிக்கம் போல மேன்மை யுடையவனே! மதுசூதா, Madhusoodha - மதுவென்னும் அசுரனை யழிந்தவனெ! பரம் சோதி, Param Sothi - சிறந்த வொளியை யுடையவனே! எனக்கு உய்யும் வகை பணியாய், Enakku Uyyum Vagai Paniyai - யான் (பிறவித்துயர் தீர்ந்து பரமபதம் பெற்று) உஜ்ஜீவிக்குமாறு எனக்கு ஒரு நல்வார்த்தையருளிச் செய்யவேணும். |
| 2030 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பணியாய் என்றார் கீழ் பாட்டில் தத் அனுஜாநந்தம் உதார வீஷணை-என்றும் தூது செய் கண்கள் -என்ற படியும் மலர விழித்துக் கடாஷிக்க -க்ருதார்த்தராய் – சம்சார உத்தரணத்துக்கு சம்சயம் உண்டோ என்று கொண்டு உமக்குத் திரு உள்ளம் ஆனபடி என் மநோ ரதத்தை தலைக் கட்டி அருள பிரார்த்திக்கிறார் -என்று சங்கதி) 9 | நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே –11-8-9 | பதவுரை Show / Hideநந்தா நரகத்து, Nandha Narakathu - அழயாத்தொரு நரகமாகிற பிறவித்துயரத்திலே அழுந்தா வகை, Azhundha Vagai - மூழ்கிக்கிடக்க வேண்டாதபடி நாளும், Naalum - எப்பொழுதும் தொண்டர் ஆனவர்க்கு, Thondar Aanavarkku - உனது அடியவரானவர்களுக்கு இன் அருள் செய்வாய், In Arul Seivai - இனிமையான கருணையைச் செய்யுமியல்வுடையவனே! எந்தாய், Endhai - எமது தந்தையே! சந்தோகா, Santhokha - வேதங்களையெல்லாம் அறிந்தவனே! தலைவனெ, Thalaivaney - மேம்பட்டவனெ! தாமரை கண்ணா, Thamarai Kanna - செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களை யுடையவனே! அந்தோ, Andho - ஐயோ! அடியெற்கு, Adiyerkku - அடியேனுக்கு உன் அருள், Un Arul - உனது கிருபையை அருளாய், Arulai - செய்தருள் |
| 2031 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் – இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும் சொல்ல வல்லவர்களுக்கு – பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி – சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும்) 10 | குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே –11-8-10 | பதவுரை Show / Hideகுற்றம் எடுத்து, Kutram Eduthu - (கோவர்த்தன) மலையைக் குடையாகவெடுத்துப் பிடித்து (- (அது கொண்டு பெருமழையைத் தடுத்து)) ஆ நிரை, A Nirai - பசுக்கூட்டத்தை காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - பாதுகாத்தவனான எம்பெருமானைக்குறித்து மன்றில் புகழ், Manril Pugazh - சபைகளில் புகழப்படுவராய் மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொல், Sol - அருளிச்செய்த ஒன்று நின்ற ஒன்பதும், Onru Nindra Onpathum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர் தம் மேல், Vallavar Tham Mel - ஓதியுணர்ந்தவர்களின் மேல் வினை ஆயின, Vinai Aayina - கருமங்கள் என்றும், Endrum - எப்பொழுதும் சார கில்லா, Saar Killa - அணுகிப் பயன்விளைக்கமாட்டா |