திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-கோழியழைப்பதன் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
524நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 1
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய் ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே
பதவுரை Show / Hide
அரவு அணை மேல், Aravu anai mel - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய், Palli kondai - திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து, Kudainthu - (குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான், Neer aaduvan - நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம், Kozhi azhaippadhan munnam - கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம், Pondhom - (இவ்விடம்) வந்தோம், (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு, Poigaikku - குளத்திற்கு
வாரோம், Vaarom - நாங்கள் வருவதில்லை
செல்வன், Selvan - (ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன், Aazhiyan - சூரியன்
எழுந்தான், Ezhundhaan - உதித்தான்
ஆற்றவும் ஏழமை பட்டோம், Aatravum ezhamai pattom - (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம்
இனி, Ini - இனி மேல்
என்றும், Endrum - என்றைக்கும்
தோழியும் நானும் தொழுதோம், Thozhiyum naanum thozhudhom - தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்
துகிலை, Thugilai - (எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்
525நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 2
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
இங்கு, Ingu - இங்கே
புகுந்து இது என், Pugundhu idhu en - (நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன?
இப் பொய்கைக்கு, Ip poigaikku - இக் குளத்திற்கு
எவ்வாறு வந்தாய், Evvaaru vandhaai - எவ் வழியாலே வந்தாய்?
மது இன் துழாய் முடிமாலே, Madhu in thuzhaai mudimaale - தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே!
மாயனே, Maayane - ஆச்சரிய சக்தி யுடையவனே!
எங்கள் அமுதே, Engal amudhe - எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே!
விதி இன்மையால், Vidhi inmaiyal - விதி யில்லாமையாலே
அது மாட்டோம், Adhu maattom - ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம்
வித்தகப் பிள்ளாய், Vitthaka pillai - ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்!
விரையேல், Viraiyel - அவஸரப் பட வேண்டா
அரவில், Aravil - காளிய நாகத்தின் மேல்-
குதி கொண்டு, Kudhi kondu - குதித்துக் கொண்டு
நடித்தாய், Nadithaai - நர்த்தனஞ்செய்தவனே!
குருந்திடைக் கூறை, Kurundhidai koorai - (அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை
பணியாய், Paniyaai - கொடுத்தருள்
526நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 3
எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார் பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே
பதவுரை Show / Hide
வில்லால், Villaal - வில்லாலே
இலங்கை, Ilangai - லங்கையை
அழித்தாய், Azhithaai - நாசஞ் செய்தருளினவனே!
எல்லே, Elle - என்னே!
ஈது என்ன இளமை, Eethu enna ilamai - இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார், Em anaimaar - எங்களுடைய தாய்மார்கள்
காணில், Kaanil - கண்டால்
ஒட்டார், Ottaar - (மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்
ஈது, Eethu - (நீயொவென்றால்) கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று, Pollaangu endru - பொல்லாத காரியமென்று
கருதாய், Karuthaai - நினைக்கிறாயில்லை
பூ குருந்து, Poo kurundhu - புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி, Eri iruthi - ஏறி யிரா நின்றாய்
நீ வேண்டியது எல்லாம், Nee vendiyadhu ellaam - நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம், Tharuvom - கொடுக்கிறோம்
பல்லாரும், Pallaarum - (ஊரிலுள்ள) பலரும்
காணோமே, Kaanome - காணாதபடி
போவோம், Povom - போகிறோம்
பட்டை, Pattai - (எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்
527நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 4
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய் இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
இலங்கை அழித்த பிரானே!, Ilangai azhitha pirane! - இலங்கை அழித்த பிரானே!
பலர் குடைந்து ஆடும் சுனையில், Palar kudainthu aadum sunaiyil - பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள், Kanna neergal - கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா, Arakka nilla - அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற, Alamarugindra - ஆ தளும்புகிறபடியை
எங்கும், Engum - நாற் புறத்திலும்
பரக்க விழித்து, Parakka vizhithu - நன்றாக விழித்து
நோக்கி பாராய், Nokki paaraai - உற்று நோக்கு
ஒன்றும் இரக்கம் இலாதாய், Ondrum irakkam ilaadhaai - கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம், Kurangu arasu aavadhu arindhom - நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்
குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - (ஆன பின்பு) குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்
528நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 5
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
கரிய, Kariya - கறுத்த
கோலம், Kolam - திருமேனியை யுடைய
பிரானே, Pirane - கண்ண பிரானே!
கயலொடு, Kayalodu - கயல் மீன்களும்
வாளை, Vaalai - வாளை மீன்களும்
விரவி, Viravi - ஒன்றாய்க் கூடி
காலை, Kaalai - (எமது) கால்களை
கதுவிடுகின்ற, Kadhuviduginra - கடியா நின்றன
என் ஐமார்கள், En aimargal - (இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு) எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து, Velai pidithu - வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில், Ottil - உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு, Enna vilaiyaattu - (அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ, Nee - நீ
கோலம், Kolam - அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு, Sitraadai palavum kondu - சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு
ஏறி இராது, Eri iraadhu - (மரத்தின் மேல்) ஏறி யிராமல்
குருந்திடை, Kurundhidai - குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை, Koorai - (எங்கள்) சேலைகளை
பணியாய், Paniyaai - தந்தருள்
529நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 6
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம் குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே
பதவுரை Show / Hide
தடம், Thadam - விசாலமாயும்
அவிழ் தாமரை, Avizh thaamarai - மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை, Poigai - தடாகத்திலே
தாள்கள், Thaalgal - தாமரைத் தண்டுகளானவை
எம் காலை, Em kaalai - எங்கள் கால்களை
கதுவ, Kadhuva - கடிக்க
விடம் தேள் எறிந்தால் போல, Vidam thel erindhaal pol - விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே
ஆற்றவும், Aatravum - மிகவும்
வேதனை பட்டோம், Vedhanai pattom - வருத்தப் படா நின்றோம்
குடத்தை, Kudathai - குடங்களை
எடுத்து, Eduthu - தூக்கி
ஏற விட்டு, Era vittu - உயர வெறித்து
கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை ஆடுவதற்கு
வல்ல, Valla - ஸாமர்த்தியமுள்ள
எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து, Paditrai ellaam thavirndhu - (நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு
எங்கள் பட்டை பணித்தருளாய், Engal pattai pani tharulaayi - சேலைகளை கொடுத்தருள வேணும்.
530நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 7
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய் ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார் போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே
பதவுரை Show / Hide
ஊழி எல்லாம், Oozhi ellam - கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே, Unarvaane - (ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம், Neerile ninru ayarkinrom - ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்
நீதி அல்லாதன, Neethi allaadhana - அநீதியான செயல்களை
ஆல், Aal - ஐயோ! (இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே, Unakke - உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம், Aarvam udaiyom - நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்
அம்மனைமார், Ammanaimaar - எங்கள் தாய்மார்
காணில், Kaanil - நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய், Seithaai - செய்யா நின்றாய்
ஊர், Oor - (உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்) எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம், Agam - மாளிகைகளும்
சாலவும், Saalavum - மிகவும்
சேய்த்து, Seithu - தூரத்தி லிரா நின்றன
ஒட்டார், Ottaar - இசைய மாட்டார்கள்
எங்கள் பட்டை, Engal pattai - எங்களுடைய சேலைகளை
போர விடாய், Pora vidaai - தந்தருளாய்
பூ குருந்து, Poo kurundhu - பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே, Eri iraadhe - ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே
531நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 8
மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம் கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
தொல்லை இரா, Thollai iraa - பழைய ராத்ரிகளில்
தூ மலர் கண்கள் வளர, Thoo malar kangal valara - பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி
துயில்வானே,Thuyilvaane - பள்ளி கொள்பவனே!
மாமியார் மக்களே அல்லோம், Maamiyaar makkale allom - (இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்) உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்
மற்றும் எல்லோரும், Matrum ellorum - மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு, Ingu - இவ் விடத்தில்
போந்தார், Pondhaar - வந்திருக்கின்றார்கள்
இது, Idhu - நீ செய்கிற இத் தீம்பானது
சால, Saala - மிகவும்
சேமம் அன்று, Semam andru - தகுதியானதன்று
இது, Idhu - இவ் வார்த்தையை
நாம், Naam - நாங்கள்
சிக்கன, Sikana - திண்ணிதாக
சொன்னோம், sonnom - சொல்லுகின்றோம்
ஆயர், Aayar - இடையர்களுக்கு
கோமளக் கொழுந்தே, Komala kozhundhe - இளங்கொழுந்து போன்றவனே!
குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்.
532நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 9
கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் – வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்
பதவுரை Show / Hide
கஞ்சன், Kanjan - கம்ஸனானவன்
வலை வைத்த அன்று, Valai vaitha andru - உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில்
கார் இருள், Kaar irul - மிக்க இருளை யுடையத்தான
எல்லில், Ellil - இரவில்
பிழைத்து, Pizhaithu - பிழைத்து
நின்ற, Nindra - (அம்மணமாக) நிற்கின்ற
இக் கன்னிய ரோமை, Ik kanniya romai - இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய, Nenju thukkam seiya - மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய், Pondhaai - வந்து பிறந்தாய்
அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டியோ வென்றால்
அஞ்ச, Anja - நீ பயப்படும்படி
உரப்பாள், Urapaal - உன்னை அதட்ட மாட்டாள்
ஆணாட விட்டிட்டிருக்கும், Anaada vittitirukkum - தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்
வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுடைய
பேய்ச்சி, Peichchi - பூதனையினுடைய
பால், Paal - முலைப் பாலை
உண்ட, Unda - (அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட
மசுமை இலீ, Masumai ilee - லஜ்ஜை யில்லாதவனே!
கூறை தாராய், Koorai thaaraai - சேலைகளைத் தந்தருள்
533நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 10
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே
பதவுரை Show / Hide
எங்கள் நம்பி, Engal nambi - எமக்கு ஸ்வாமியாய்
கரிய, Kariya - கார் கலந்த மேனியனான
பிரான், Piran - கண்ண பிரான்
கன்னிய ரோடு, Kanniyarodu - ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை, Vilaiyatai - திவ்ய லீலைகளைக் குறித்து
பொன் இயல், Pon iyal - ஸ்வர்ண மயமான
மாடங்கள் சூழ்ந்த, Maadangal soozhnda - மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன், Puthuvaiyar kon - ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை, Pattan kodhai - பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்
இன் இசையால், In isaiaal - இனிய இசையாலே
சொன்ன, Sonna - அருளிச் செய்த
மாலை, Maalai - சொல் மாலையாகிய
ஈர் ஐந்தும், Eer aindhum - இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர் தாம், Vallavar thaam - கற்க வல்லவர்கள்
போய், Poi - (அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு, Vaigundham pukku - பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே)
மன்னிய, Manniya - நித்ய வாஸம் செய்தருளுகிற
மாதவனோடு, Madhavanodu - திருமாலோடு கூடி
இருப்பார், Irupaar - நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.