திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-2 அஞ்சன வண்ணனை (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
234பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 1
அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின் என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1
பதவுரை Show / Hide
அஞ்சனம் வண்ணனை,Anjanam Vannanai - மை போன்ற நிறத்தை யுடையனும்
ஆயர் கோலம்,Aayar Kolam - இடைக் கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை,Kozhuthinai - (அவ் விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை,Pillaiyai - (எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்,Manaigal Thorum - (தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும்
திரியாமே,Thiriyame - (இஷ்டப்படி) திரிய வொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (காலையில் குள்ளக் குளிர) நீராட்டி,
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
காய்ந்த,Kaayndha - சீறி யுதைத்த
கழல்,Kazhal - வீரக் கழலை அணிந்துள்ள
அடி,Adi - திருவடிகள்
நோவ,Nova - நோம் படியாக
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று)
என் செய போக்கினேன்,En Seiya Pokkinean - ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.
235பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 2
பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2
பதவுரை Show / Hide
பாடியில்,Paadiyil - திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி,Patru Manjal Poosi - பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று,
சிற்றில் சிதைத்து,Sitril Sithaithu - (அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்,Engum - எல்லா விடங்களிலும்
தீமை செய்து,Theemai Seidhu - தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு,Paavai Maarodu - அவ் விடைப் பெண்களோடே
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்,
கன்று,Kanru - கன்றுகளினுடைய
தூளி உடை,Thooli Udai - தூள்களை யுடைத்தாய்
வேடர்,Vedar - (அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான
கான் இடை,Kaan Idai - காட்டிலே
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும் படியாக)
என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனை
எற்றுக்கு போக்கினேன்,Etrukku Pokkinean - ஏதுக்காக அனுப்பினேன்!
236பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 3
நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின் என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3
பதவுரை Show / Hide
என்,En - என் மகனான
மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை,
நல்,Nal - லோகோத்தரமான
மணி,Mani - நவ மணிகள் பதித்த
மேகலை,Megalai - மேகலையை (அணிந்துள்ள)
நங்கைமாரொடு,Nangaimaarodhu - யுவதிகளோடு கூட
நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும்
பொன் மணி மேனி,Pon Mani Meni - அழகிய நீல மணி போன்ற திருமேனியானது
புழுதி ஆடி,Puzhuthi Aadi - புழுதி படைக்கப் பெற்று(விளையாடி)
திரியாமே,Thiriyame - திரிய வொண்ணாதபடி
கான்,Kaan - காட்டிலே
கல்,Kal - (இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்) மலையிலே
மணி நின்று அதிர்,Mani Nindru Athir - மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான)
அதர் இடை,Athar Idai - வழியிலே
கன்றின் பின்,Kanrin Pin - (வருந்தும்படியாக) கன்றுகளின் பின்னே
போக்கினேன்,Pokkinean - போகவிட்டேனே!
எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.
237பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 4
வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின் எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4
பதவுரை Show / Hide
கண்ணுக்கு இனியானை,Kannukku Iniyanai - கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்
எண்ணற்கு அரியானை,Ennarkku Ariyanai - (இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை
இப் பாடி எங்கும்,Ep Paadi Engum - இத் திருவாய்ப்பாடி முழுவதும்
பல செய்து,Pala Seidhu - பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்)
வண்ணம் கரு குழல்,Vannam Karu Kuzhal - அழகிய கறுத்த கூந்தலை யுடையரான
மாதர்,Maadhar - பெண் பிள்ளைகள்
வந்து,Vandhu - (தாயாகிய என்னிடம் ஓடி) வந்து
அலர் தூற்றிடப் பண்ணி,Alar Thoottidap Panni - பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும்படி)
போக்கினேன்,Pokkinean - அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.
238பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 5
அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5
பதவுரை Show / Hide
தெய்வம்,Deivam - தேவர்களுக்கு
தலைவனை,Thalaivanai - நிர்வாஹகனான கண்ணனை
அ அ இடம் புக்கு,A A Idam Pukku - (மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து
அ ஆயர் பெண்டிர்க்கு,A Aayar Pendirkku - (அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு
அணுக்கன் ஆய்,Anukkan Aai - அந்தரங்கனாய்
கொவ்வை கனி,Kovvai Kani - (அவர்களுக்கு) கோவைப் பழம் போன்ற
வாய்,Vaai - (தன்) அதரத்தை
கொடுத்து,Koduthu - (போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு
கூழைமை செய்யாமே,Koolaimai Seiyyaame - கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல்
எவ்வும்,Evvum - துன்பத்தை விளைக்குமதான
சிலை உடை,Silai Udai - வில்லை(க்கையிலே) உடைய
வேடர்,Vedar - வேடர்களுக்கு(இருப்பிடமான)
கான் இடை,Kaan Idai - காட்டிலே
கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.
239பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 6
மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின் இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6
பதவுரை Show / Hide
என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனாகிய கண்ண பிரானை
வெண்ணெய்,Vennei - வெண்ணெயை
மிடறு,Midaru - கழுத்திலே
மெழுமெழுத்து ஓட,Mezhumezhuthu Oda - (உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு
போய்,Poi - (பிறரகங்களுக்குப்) போய்
பல படிறு,Pala Padiru - பல கள்ள வேலைகளை
செய்து,Seidhu - செய்து கொண்டு
இ பாடி எங்கும்,E Paadi Engum - இவ் விடைச்சேரி முழுதும்
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்
பல கடிறு திரி,Pala Kadiru Thiri - பல காட்டானைகள் திரியப் பெற்ற
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே
இடற,Idara - தட்டித் திறியும்படியாக
கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.
240பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 7
வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7
பதவுரை Show / Hide
புள்ளின் தலைவனை,Pullin Thalaivanai - பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை
வள்ளி,Valli - கொடி போன்று
துடங்கு,Thudangu - துவளா நின்றுள்ள
இடை,Edai - இடையை யுடைய
மாதர்,Maadhar - இடைப் பெண்கள்
வந்து,Vandhu - (தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி)
அலர் தூற்றிட,Alar Thoottida - பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே
துள்ளி,Thulli - (அதை ஒரு பொருளாக மதியாமல்) (நிலத்தில் நில்லாமல்) துள்ளி
தோழரோடு,Thozharodu - (தன்) தோழர்களோடு கூட
விளையாடி,Vilayaadi - விளையாடிக் கொண்டு
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்
கள்ளி,Kalli - (மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட
உணங்கு,Unangu - (பால் வற்றி) உலரும் படியாய்
வெம்,Vem - மிக்க வெப்பத்தை யுடைய
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே
241பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 8
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8
பதவுரை Show / Hide
என் இள சிங்கத்தை,En Ila Singathai - எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை
பன்னிரு திங்கள்,Panniru Thingal - பன்னிரண்டு மாஸ காலம்
வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்,Vayitril Konda A Paanginal - (என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப
யான்,Yaan - (தாயாகிய) நான்
என்,En - என்னுடைய
இள,Ela - குழைந்திரா நின்றுள்ள
கொங்கை,Kongai - முலையிலுண்டான
அமுதம்,Amudham - பாலை
ஊட்டி,Ootti - (அவனுக்கு) உண்ணக் கொடுத்து
எடுத்து,Eduthu - வளர்த்து
புலரியே,Pulariye - (இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை) (இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி)
பொன் அடி நோவ,Pon Adi Nova - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக
கானில்,Kaanil - காட்டிலே
கன்றின் பின் போக்கினேன்;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.
242பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 9
குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9
பதவுரை Show / Hide
என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனான
தாமோதரனை,Thaamodharanai - கண்ணபிரானை,
குடையும்,Kudaiyum - குடையையும்
செருப்பும்,Seruppum - செருப்பையும்
கொடாதே,Kodaadhe - (அவனுக்குக்) கொடாமல்
கொடியேன் நான் ,Kodiyen Naan - கொடியவளாகிய நான்
உடையும்,Udaikum - (ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய்
கடியன,Kadiyana - கூரியனவாய்க் கொண்டு
ஊன்று,Oonru - (காலிலே) உறுத்துவனவாய்
வெம்,Vem - (இப்படி) அதி தீக்ஷ்ணமான
பரற்கள் உடை,Parargal Udai - பருக்காங் கல்லை யுடைய
கடிய வெம்,Kadiya Vem - அத்யுஷ்ணமான
கான் இடை,Kaan Idai - காட்டிலே
கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்,Kaal Adi Novu Kanrin Pin Pokkinen - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.
243பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 10
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10
பதவுரை Show / Hide
என்றும்,Endrum - எப்போதும்
எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு
இனியானை,Eniyanai - இனிமையைத் தருமவனாய்
என்,En - என்னுடைய
மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை
கன்றின் பின் போக்கினேன் என்று,Kanrin Pin Pokkinen Endru - கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை,Asothai - யசோதைப் பிராட்டி
கழறிய,Kalariya - (மனம் நொந்து) சொன்னவற்றவை
சொல்,Sol - அருளிச் செய்த
பொன்,Pon - பொன் மயமாய்
திகழ்,Thigal - விளங்கா நின்றுள்ள
மாடம்,Maadam - மாடங்களை யுடைய
புதுவையர்,Puthuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattan - பெரியாழ்வாருடைய
இன்,En - போக்யமான
தமிழ் மாலைகள்,Tamil Maalaigal - தமிழ்ச் சொல் மாலைகளை
வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை,Edar Ellai - (ஒரு காலும்) துன்பமில்லையாம்.