திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 4-ஊனேறு (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
677பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 1
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல் கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
பதவுரை Show / Hide
ஆன் ஏறு ஏழ் வென்றான், Aan Eru Ezhu Vendran - நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு
அடிமை திறம் அல்லால், Adimai Thiram Allaal - கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி, Oon Eru Selvaththu Udal Piravi - நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை
யான் வேண்டேன், Yaan Vaendein - (விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்; (அன்றியும்,)
கூன் ஏறு சங்கம், Koon Eru Sangam - வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை
இடத்தான் தன், Idaththaan Than - இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய
வேங்கடத்து, Vengadaththu - திருவேங்கட மலையில்
கோனேரி வாழும், Konerii Vaalum - திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற
குருகு ஆய் பிறப்பேன், Kurugu Aay Pirappen - நாரை யாகவாவது பிறக்கக் கடவேன்.
அடிமைத் திறமாவது, Adimai Thiramavathu - திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப்
கோன் ஏரி, Kon Aeri - ஸ்வாமி புஷ்கரிணி.
ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன், Oon Aan Kon Enbavatril N - சாரியை,
குருகு என்ற சொல், Kurugu Endra Sol - அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர் வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும்.
678பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 2
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில் மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே
பதவுரை Show / Hide
ஆனாத செல்வத்து, Anadha Selvaththu - அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய
அரம்பையர்கள், Arambaiyargal - அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
தன் சூழ, Than Soozh - தன்னைச் சூழ்ந்து நிற்க
வான் ஆளும் செல்வமும, Vaan Aalum Selvamum - மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும்
மண் அரசும், Man Arasum - இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும்
யான் வேண்டேன், Yaan Vaendein - (வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன்
தேன் ஆர் பூ சோலை, Then Aar Poo Solai - தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய
திருவேங்கடம், Thiruveangadam - திருவேங்கட மலையிலிருக்கின்ற
சுனையில், Sunaiyil - சுனைகளிலே
மீன் ஆய் பிறக்கும், Meen Aayi Pirakkum - ஒரு மீனாகப் பிறக்கத் தக்க
விதி, Vithi - வாக்கியத்தை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
அரம்பையர்கள், Arambaiyargal - ரம்பை முதலியோர்.
தேன் ஆர், Then Aar - வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம்.
சுனை, Sunai - மலையில் நீரூற்றுள்ள குணம்.
679பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 3
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும் துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல் மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே
பதவுரை Show / Hide
பின்னிட்ட சடையானும், Pinnitta Sadayanum - திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும்
பிரமனும், Brahmanum - சதுர்முகனும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
துன்னிட்டு, Thunnittu - நெருக்கி
புகல் அரிய, Pugal Ariya - உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற
வைகுந்தம் நீள் வாசல், Vaikundham Neel Vaasal - பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே
மின் வட்டம் சுடர் ஆழி, Min Vattam Sudar Aazhi - மின்னலை வளைத்தாற்போல சோதி மயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தை யுடைய
வேங்கடம் கோன் தான், Vengadam Kon Thaan - திருவேங்கடமுடையான்
உமிழும், Umizhum - வாய்நீருமிழ்கின்ற
பொன் வட்டில், Pon Vattil - தங்க வட்டிலை
பிடித்து, Pidiththu - கையிலேந்திக் கொண்டு
உடனே புக பெறுவேன் ஆவேனே, Udaney Puga Peruven Aaveney - அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக் கடவேன்.
பின்னிட்ட, Pinnitta - பின்னிய; இடு – துணைவினை.
வட்டில், Vattil - இங்கே, படிக்கம்.
உடனே, Uthane - சீக்கிரமாக எனினுமாம்.
680பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 4
ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள் கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே
பதவுரை Show / Hide
ஒண் பவளம் வேலை உலவு, On Pavalham Vela Uluvu - ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற
தண் பாற்கடலுள், Than Pargadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே
கண் துயிலும், Kan Thuyilum - யோக நித்திரை செய்தருள்கின்ற
மாயோன், Maayon - ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய
கழல் இணைகள், Kazhal Inaihal - இரண்டு திருவடிகளை
காண்பதற்கு, Kaanpadartharku - ஸேவிக்கும் படியாக
பண் பகரும் வண்டு இனங்கள், Pan Pakarum Vandu Inangal - இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள்
பண் பாடும் வேங்கடத்து, Pan Paadum Vengadaththu - பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே
செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன், Senbagam Aay Nirkum Thiru Udayen Aaven - சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன்.
681பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 5
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல் தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
பதவுரை Show / Hide
கம்பம், Kambam - தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை, Madhama Yaanai - மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து, Kazhuthu Akathin Mael Irundhu - கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும், Inbu Amarum - நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும், Selvammum - ஐசுவர்யத்தையும்
இவ் அரசம், Iv Arasam - அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான் வேண்டேன், Yaan Vaendein - நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான், Emperumaan - எமது தலைவனும்
ஈசன், Eesan - (எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலை மேல், Ezhil Vengadham Malai Mael - அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும், Thambagam Aayi Nirkkum - புதராய் நிற்கும்படியான
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
கம்பம், Kambam - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை.
தம்பகமாய், Thambagamai - புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும்.
682பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 6
மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே
பதவுரை Show / Hide
மின் அனைய நுண் இடையார், Min Anaiya Nun Idaiyaar - மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய
உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம், Urupasiyum Menakaiyum Annavar Tham - ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின்
பாடலொடும் ஆடல் அவை, Paadalodum Aadal Avai - பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை
ஆதரியேன், Aadhariyen - யான் விரும்ப வில்லை
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டம்
தென்ன என பண் பாடும், Thenna Ena Pan Paadum - ” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற
வேங்கடத்துள், Vengadaththul - திருமலையிலே
அன்னனைய பொன் குவடு ஆம், Annanaiya Pon Kuvalu Aam - அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய
அரு தவத்தன் ஆவேன், Aru Thavaththan Aavein - அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன்.
683பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 7
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல் கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே
பதவுரை Show / Hide
பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும்
பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண் சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய
நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை, Nilai - நிலையை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
குறை முடிப்பான், Kurai Mudippaan - இது இரட்டுற மொழிதலாய்,
684பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 8
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும் முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
பதவுரை Show / Hide
பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையையுடைய சிவனும்
பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண்சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளையுடைய
நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை, Nilai - நிலையை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
685பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 9
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே! நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன
பதவுரை Show / Hide
செடி ஆய, Sedi Aay - செடி போல் அடர்ந்துள்ள
வல் வினைகள், Val Vinaigal - கொடிய கருமங்களை
தீர்க்கும், Theerkum - (ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற
திருமாலே, Thirumaale - ஸ்ரீய:பதியான பெருமானே!
நெடியானே, Nediyane - பெரியோனே!
வேங்கடவா, Vengadavaa - திருவேங்கட முடையானே!
நின் கோயிலின் வாசல், Nin Koyilin Vaasal - உனது ஸந்நிதியின் உள் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து, Adiyaarum Vaanavarum Arampaiyarum Kidandhu Iyankumpadi Aay Kidandhu - பாகவதர்களும் மற்றைத் தேவர்களும்
உன் பவளம் வாய் காண்பேன், Un Pavalam Vaai Kaanbaen - உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன்.
686பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 10
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன் அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
பதவுரை Show / Hide
உம்பரு உலகு, Umbaru Ulagu - மேலுலகங்களை யெல்லாம்
ஒரு குடை கீழ், Oru Kudai Keel - ஒரு கொற்றக் குடையின் நிழலிலே
ஆண்டு, Aandu - அரசாண்டு
உருப்பசி தன், Uruppasi Than - ஊர்வசியினுடைய
அம், Am - அழகிய
பொன் கலை அல் குல், Pon Kalai Al Kul - பீதாம்பர மணிந்த அல்குலை
பெற்றாலும், Petralum - அடையப் பெறினும்
ஆதரியேன், Aadhariyen - (அதனை) விரும்ப மாட்டேன்;
செம் பவளம் வாயான், Sem Pavalam Vayaan - சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான
எம்பெருமான், Emperumaan - எனது அப்பனுடைய
திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல், Thiruveengadam Ennum Pon Malai Mel - திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல்
ஏதேனும் ஆவேன், Edhenum Aaven - ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்
687பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 11
மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே
பதவுரை Show / Hide
கொல் நவிலும், Kol Navilum - (பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற
கூர் வேல், Koora Vel - கூர்மையான வேலாயுதத்தை யுடைய
குல சேகரன், Kula Seakaran - குல சேகராழ்வார்
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன், Manniya Than Saaral Vadaveengadathaan Than - நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய
பொன் இயலும் சே அடிகள், Pon Iyalaum Se Adigal - பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை
காண்பான், Kaanbaan - ஸேவிப்பதற்கு
புரிந்து, Purinthu - ஆசைப்பட்டு
இறைஞ்சி, Irainji - வணங்கி
சொன்ன, Sonna - அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ், Panniya Nool Tamil - ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை
வல்லார், Vallaar - கற்று வல்லவர்
பாங்கு ஆய பத்தர்கள், Paangu Aaya Paththarkal - அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்
அடிவரவு, Adivaravu - ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு.