திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 677 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 1 | ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே | பதவுரை Show / Hideஆன் ஏறு ஏழ் வென்றான், Aan Eru Ezhu Vendran - நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு அடிமை திறம் அல்லால், Adimai Thiram Allaal - கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல் ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி, Oon Eru Selvaththu Udal Piravi - நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை யான் வேண்டேன், Yaan Vaendein - (விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்; (அன்றியும்,) கூன் ஏறு சங்கம், Koon Eru Sangam - வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை இடத்தான் தன், Idaththaan Than - இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய வேங்கடத்து, Vengadaththu - திருவேங்கட மலையில் கோனேரி வாழும், Konerii Vaalum - திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற குருகு ஆய் பிறப்பேன், Kurugu Aay Pirappen - நாரை யாகவாவது பிறக்கக் கடவேன். அடிமைத் திறமாவது, Adimai Thiramavathu - திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப் கோன் ஏரி, Kon Aeri - ஸ்வாமி புஷ்கரிணி. ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன், Oon Aan Kon Enbavatril N - சாரியை, குருகு என்ற சொல், Kurugu Endra Sol - அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர் வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும். |
| 678 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 2 | ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே | பதவுரை Show / Hideஆனாத செல்வத்து, Anadha Selvaththu - அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய அரம்பையர்கள், Arambaiyargal - அப்ஸரஸ் ஸ்த்ரீகள் தன் சூழ, Than Soozh - தன்னைச் சூழ்ந்து நிற்க வான் ஆளும் செல்வமும, Vaan Aalum Selvamum - மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும் மண் அரசும், Man Arasum - இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும் யான் வேண்டேன், Yaan Vaendein - (வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன் தேன் ஆர் பூ சோலை, Then Aar Poo Solai - தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய திருவேங்கடம், Thiruveangadam - திருவேங்கட மலையிலிருக்கின்ற சுனையில், Sunaiyil - சுனைகளிலே மீன் ஆய் பிறக்கும், Meen Aayi Pirakkum - ஒரு மீனாகப் பிறக்கத் தக்க விதி, Vithi - வாக்கியத்தை உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். அரம்பையர்கள், Arambaiyargal - ரம்பை முதலியோர். தேன் ஆர், Then Aar - வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம். சுனை, Sunai - மலையில் நீரூற்றுள்ள குணம். |
| 679 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 3 | பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே | பதவுரை Show / Hideபின்னிட்ட சடையானும், Pinnitta Sadayanum - திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும் பிரமனும், Brahmanum - சதுர்முகனும் இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் துன்னிட்டு, Thunnittu - நெருக்கி புகல் அரிய, Pugal Ariya - உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற வைகுந்தம் நீள் வாசல், Vaikundham Neel Vaasal - பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே மின் வட்டம் சுடர் ஆழி, Min Vattam Sudar Aazhi - மின்னலை வளைத்தாற்போல சோதி மயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தை யுடைய வேங்கடம் கோன் தான், Vengadam Kon Thaan - திருவேங்கடமுடையான் உமிழும், Umizhum - வாய்நீருமிழ்கின்ற பொன் வட்டில், Pon Vattil - தங்க வட்டிலை பிடித்து, Pidiththu - கையிலேந்திக் கொண்டு உடனே புக பெறுவேன் ஆவேனே, Udaney Puga Peruven Aaveney - அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக் கடவேன். பின்னிட்ட, Pinnitta - பின்னிய; இடு – துணைவினை. வட்டில், Vattil - இங்கே, படிக்கம். உடனே, Uthane - சீக்கிரமாக எனினுமாம். |
| 680 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 4 | ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே | பதவுரை Show / Hideஒண் பவளம் வேலை உலவு, On Pavalham Vela Uluvu - ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற தண் பாற்கடலுள், Than Pargadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே கண் துயிலும், Kan Thuyilum - யோக நித்திரை செய்தருள்கின்ற மாயோன், Maayon - ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய கழல் இணைகள், Kazhal Inaihal - இரண்டு திருவடிகளை காண்பதற்கு, Kaanpadartharku - ஸேவிக்கும் படியாக பண் பகரும் வண்டு இனங்கள், Pan Pakarum Vandu Inangal - இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள் பண் பாடும் வேங்கடத்து, Pan Paadum Vengadaththu - பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன், Senbagam Aay Nirkum Thiru Udayen Aaven - சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன். |
| 681 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 5 | கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே | பதவுரை Show / Hideகம்பம், Kambam - தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற மதம் யானை, Madhama Yaanai - மதங்கொண்ட யானையினது கழுத்து அகத்தின் மேல் இருந்து, Kazhuthu Akathin Mael Irundhu - கழுத்தின் மீது வீற்றிருந்து இன்பு அமரும், Inbu Amarum - நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான செல்வமும், Selvammum - ஐசுவர்யத்தையும் இவ் அரசம், Iv Arasam - அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும் யான் வேண்டேன், Yaan Vaendein - நான் விரும்ப மாட்டேன்: எம்பெருமான், Emperumaan - எமது தலைவனும் ஈசன், Eesan - (எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய எழில் வேங்கடம் மலை மேல், Ezhil Vengadham Malai Mael - அழகிய திருமலையிலே தம்பகம் ஆய் நிற்கும், Thambagam Aayi Nirkkum - புதராய் நிற்கும்படியான உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். கம்பம், Kambam - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை. தம்பகமாய், Thambagamai - புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும். |
| 682 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 6 | மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே | பதவுரை Show / Hideமின் அனைய நுண் இடையார், Min Anaiya Nun Idaiyaar - மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம், Urupasiyum Menakaiyum Annavar Tham - ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின் பாடலொடும் ஆடல் அவை, Paadalodum Aadal Avai - பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை ஆதரியேன், Aadhariyen - யான் விரும்ப வில்லை வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டம் தென்ன என பண் பாடும், Thenna Ena Pan Paadum - ” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற வேங்கடத்துள், Vengadaththul - திருமலையிலே அன்னனைய பொன் குவடு ஆம், Annanaiya Pon Kuvalu Aam - அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய அரு தவத்தன் ஆவேன், Aru Thavaththan Aavein - அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன். |
| 683 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 7 | வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே | பதவுரை Show / Hideபிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும் பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும் இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும் மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய வெறி ஆர் தண் சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற நிலை, Nilai - நிலையை உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். குறை முடிப்பான், Kurai Mudippaan - இது இரட்டுற மொழிதலாய், |
| 684 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 8 | பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே | பதவுரை Show / Hideபிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையையுடைய சிவனும் பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும் இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும் மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய வெறி ஆர் தண்சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளையுடைய நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற நிலை, Nilai - நிலையை உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். |
| 685 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 9 | செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன | பதவுரை Show / Hideசெடி ஆய, Sedi Aay - செடி போல் அடர்ந்துள்ள வல் வினைகள், Val Vinaigal - கொடிய கருமங்களை தீர்க்கும், Theerkum - (ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற திருமாலே, Thirumaale - ஸ்ரீய:பதியான பெருமானே! நெடியானே, Nediyane - பெரியோனே! வேங்கடவா, Vengadavaa - திருவேங்கட முடையானே! நின் கோயிலின் வாசல், Nin Koyilin Vaasal - உனது ஸந்நிதியின் உள் வாசலிலே அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து, Adiyaarum Vaanavarum Arampaiyarum Kidandhu Iyankumpadi Aay Kidandhu - பாகவதர்களும் மற்றைத் தேவர்களும் உன் பவளம் வாய் காண்பேன், Un Pavalam Vaai Kaanbaen - உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன். |
| 686 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 10 | உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே | பதவுரை Show / Hideஉம்பரு உலகு, Umbaru Ulagu - மேலுலகங்களை யெல்லாம் ஒரு குடை கீழ், Oru Kudai Keel - ஒரு கொற்றக் குடையின் நிழலிலே ஆண்டு, Aandu - அரசாண்டு உருப்பசி தன், Uruppasi Than - ஊர்வசியினுடைய அம், Am - அழகிய பொன் கலை அல் குல், Pon Kalai Al Kul - பீதாம்பர மணிந்த அல்குலை பெற்றாலும், Petralum - அடையப் பெறினும் ஆதரியேன், Aadhariyen - (அதனை) விரும்ப மாட்டேன்; செம் பவளம் வாயான், Sem Pavalam Vayaan - சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான எம்பெருமான், Emperumaan - எனது அப்பனுடைய திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல், Thiruveengadam Ennum Pon Malai Mel - திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல் ஏதேனும் ஆவேன், Edhenum Aaven - ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன் |
| 687 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 11 | மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே | பதவுரை Show / Hideகொல் நவிலும், Kol Navilum - (பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற கூர் வேல், Koora Vel - கூர்மையான வேலாயுதத்தை யுடைய குல சேகரன், Kula Seakaran - குல சேகராழ்வார் மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன், Manniya Than Saaral Vadaveengadathaan Than - நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய பொன் இயலும் சே அடிகள், Pon Iyalaum Se Adigal - பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை காண்பான், Kaanbaan - ஸேவிப்பதற்கு புரிந்து, Purinthu - ஆசைப்பட்டு இறைஞ்சி, Irainji - வணங்கி சொன்ன, Sonna - அருளிச் செய்த பன்னிய நூல் தமிழ், Panniya Nool Tamil - ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை வல்லார், Vallaar - கற்று வல்லவர் பாங்கு ஆய பத்தர்கள், Paangu Aaya Paththarkal - அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர் அடிவரவு, Adivaravu - ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு. |