| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 381 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 1 | காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள் கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள். –4-6-1 | காசுக்கு,Kaasukku - ஒரு காசுக்காகவும் கறை உடை,Karai Udai - (தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய கூறைக்கும்,Kooraiykkum - வஸ்திரத்துக்காகவும் ஓர் கற்றைக்கும்,Or Katraikkum - ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான) ஆசையினால்,Aasaiyinaal - ஆசையாலே பேர்,Per - (க்ஷத்ர பிள்ளைகளுக்கு) இடுகிற ஆதர்காள்,Aadhargaal - அறிவு கெட்டவர்களே! நீங்கள்,Neengal - நீங்கள் கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும் நாயகன்,Naayagan - ஸர்வ சேஷியுமான நாரணன்,Naaranan - நாராணனுடைய பேர்,Per - திரு நாமங்களை இட்டு,Ettu - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு தேனித்து இருமின்,Theniththu Irumin - மகிழ்ச்சி கொண்டிருங்கள் தம் மன்னை,Tham Mannai - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் நரகம் புகார்,Narakam Pugaar - துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 382 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 2 | அங்கொரு கூறை அரைக்குடுப்ப தனாசையால் மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் செங்க ணெடு மால் சிரீதரா என்று அழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-2 | அங்கு,Angu - அந்த நீசரிடத்தில் ஒரு கூறை,Oru Koorai - ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று) அரைக்கு உடுப்பதன் ஆசையால்,Araikku Uduppadhan Aasaiyaal - அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால் மங்கிய,Mangiya - கெட்டுக் கிடக்கிற மானிட சாதி பேர் இடும்,Maanida Saadhi Per Idum - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற ஆதர்காள்,Aadhargaal - குருடர்களே! நங்கைகாள்,Nangaikaal - சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே! செம் கண் நெடு மால்,Sem Kan Nedu Maal - புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே! சிரீதரா,Sreedharaa - (நீங்கள் உங்கள் பிள்ளையை) ஸ்ரீதரனே! அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தீர்களாகில் நாரணன்,Naaranan - நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய தம்மன்னை,Thammannai - தாயானவள் நரகம் புகாள்,Narakam Pugaal - நரகம் புகார் |
| 383 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 3 | உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர் பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3 | எச்சம் பொழிந்தீர்காள்,Echcham Pozhindheergaal - ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே! உச்சியில்,Uchchiyil - உச்சியில் (தடவத் தக்க) எண்ணெயும்,Ennaiyum - எண்ணெயும் சுட்டியும்,Sutthiyum - (நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும் வளையும்,Valaiyum - (கையில் அணியத் தக்க) வளையையும் உகந்து,Ugandhu - விரும்பி என் செய்வான் ,En Seivaan - ஏதுக்காக பிறர்,Pirar - (எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய பேர்,Per - பெயர்களை இட்டீர்,Ettir - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்? பிச்சை புக்க ஆகிலும்,Pitchai Pukka Aagilum - பிச்சையெடுத்து ஜீவித்தாலும் எம்பிரான் திருநாமமே,Empiraan Thirunaamame - எம்பெருமானுடைய திரு நாமத்தையே நச்சுமின்,Nachchumin - விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்) நாரணன்,Naaranan - இத்யாதி பூர்வவத் |
| 384 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 4 | மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் நானுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-4-6-4 | மானிட சாதியில்,Maanida Saadhiyil - மநுஷ்ய ஜாதியில் தோன்றிற்று,Thonritru - உண்டான ஓர் மானிட சாதியை,Or Maanida Saadhiyai - ஒரு மநுஷ்ய ஜந்துவை மானிட சாதியின் பேர் இட்டாள்,Maanida Saadhiyin Per Ittaal - (கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால் மறுமைக்கு இல்லை,Marumaikku Illai - அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம், வான் உடை,Vaan Udai - பரம பதத்தை (விபூதியாக) உடைய மாதவா,Maadhavaa - ச்ரியபதியே கோவிந்தா,Govindhaa - கோவிந்தனே! என்று அழைத்தக் கால்,Endru Alaiththak Kaal - என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால், நானுடை நாராணன்,Naanudai Naaranan - எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 385 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 5 | மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால் நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-5 | மலம் உடை,Malam Udai - மலத்தை யுடையதும் ஊத்தையில்,Ooththaiyil - ஹேயமுமான சரீரத்தில் நின்றும் தோன்றிற்று ஓர்,Thonritru Or - தோன்றினதொரு மலம் ஊத்தையை,Malam Ooththaiyai - (தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை மலம் உடை,Malam Udai - (கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும் பேர்,Per - (ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய) பெயரை இட்டால்,Ettaal - இட்டு அழைத்தால் இல்லை,Ellai - ஒருவழியு மில்லையாம்: குலம் உடை,Kulam Udai - நற்குலத்திற் பிறந்த கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்,Govindhaa Govindhaa Endru Alaiththak Kaal - கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால். நலம் உடை,Nalam Udai - (தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய நாரணன்,Naaranan - எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 386 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 6 | நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6 | நாடும்,Naadum - குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும் அறிய,Ariya - (இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி, மானிடர் பேர் இட்டு,Maanidar Per Ittu - (ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு கூடி,Koodi - அவர்களோடு கூடி அழுங்கி,Azhungi - ஒளி மழுங்கி குழியில் வீழ்ந்து,Kuzhiyil Veezhndhu - (அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து வழுக்காதே,Vazhukkaadhe - தவறிப் போகாமல், சாடு,Saadu - ‘சகடாஸுரன் இற,Era - முறியும்படி பாய்ந்த,Paayndha - உதைத்தருளின தலைவா,Thalaivaa - பெரியோனே!’ (என்றும்) தாமோதரா என்று,Thaamodharaa Endru - ‘தாமோதரனே! என்றும் நாடுமின்,Naadumin - வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்; நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Naagam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 387 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 7 | மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7 | கண்ணில் பிறந்து,Kannil Pirandhu - கண்ணில் நின்று முண்டாய் மண் ஆகும்,Man Aagum - பின்பு மண்ணாய் விடுகிற மானிடர்,Maanidar - அல்ப மநுஷர்களுடைய பேர் இட்டு,Per Ittu - பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு அங்கு,Angu - ஆமுஷ்மிக பலத்தில் எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்,Ennam Ondru Inri Irukkum - ஒரு விசாரமற்றிருக்கிற ஏழை மணிசர்காள்,Ezhai Manisargaal - அறிவற்ற மனுஷ்யர்களை! கண்ணுக்கு,Kannukku - கண்ணால் காண்கைக்கு இனிய,Iniya - யோக்யனாயும் கரு முகில்,Karu Mugil - காள மேகம் போன்ற கண்ணன்,Kannan - நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய நாமமே,Naamame - திரு நாமத்தையே கண்ணுமின் நாரணன்,Kannumin Naaranan - விரும்பி யிடுங்கள் நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaan - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 388 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 8 | நம்பி பிம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால் நம்பும் பிம்பு மெல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம் பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-8 | நம்பி பிம்பி என்று,Nambi Pimbi Endru - நம்பி என்றும் பிம்பி என்றும் நாட்டு மானிடப் பேரிட்டால்,Naattu Maanidap Per Ittaal - க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை (உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால் நம்பும் பின்பும் எல்லாம்,Nambum Pinbum Ellaam - ‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம் நாலு நாளில்,Naalu Naalil - நாலு நாளைக்குள் அழுங்கிப்போம் ,Azhungippom - அழிந்துபோம்; செம் பெருந் தாமரை,Sem Perun Thaamarai - சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற கண்ணன்,Kannan - திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய பேர் இட்டு,Per Ittu - திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தால் நம்பிகாள்,Nambikaal - (அறிவினால்) குறைவற்றவர்களே! நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 389 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 9 | ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-9 | ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்,Ooththai Kuzhiyil Amudham Paayvadhu Pol - அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே உங்கள் மூத்திரப் பிள்ளையை,Ungal Mooththirapp Pillaiyai - உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு என் முகில் வண்ணன் பேர் இட்டு,En Mugil Vannan Per Ittu - எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான (எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி) கோத்து குழைத்து,Koththu Kuzhaiththu - (அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று) (அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து குணாலம் ஆடி,Kunaalam Aadi - (அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக) குணாலைக் கூத்தாடிக் கொண்டு திரிமின்,Thirimin - திரியுங்கள் நாத்தகு நாரணன்,Naaththaku Naaranan - (இப்படியாகில்) நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள். |
| 390 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 10 | சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர் பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10 | சீர்,Seer - கல்யாண குணங்களை அணி,Ani - ஆபரணமாக வுடையவனும் மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய திரு நாமமே,Thiru Naamame - திருநாமத்தையே இட,Ida - (தம் பிள்ளைகளுக்கு இடும்படி) தேற்றிய,Theatriya - உபதேசித்தருளினவரும் வீரம் அணி,Veeram Ani - (இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும் தொல் புகழ்,Thol Pugazh - சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரித்த,Viriththa - விரிவாக அருளிச் செய்தமையும் ஓர் அணி,Or Ani - (கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும் ஒண் தமிழ்,On Tamil - அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள ஒன்பதோடு ஒன்றும்,Onbadhodu Ondrum - இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர் பேர் அணி,Per Ani - பெரியதும் அழகியதுமான வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்தில் என்றும்,Endrum - எந்நாளும் பேரணி இருப்பர்,Perani Iruppar - (எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர். |