Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 5-2 நெய்க்குடத்தை (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
443ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1
நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-1
நெய்க் குடத்தை,Neik Kudaththai - நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி,Patri - பற்றிக் கொண்டு
ஏறும்,Erum - (அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்,Erumbugal Pol - எறும்புகளைப் போல்
நிரந்து எங்கும்,Niranthu Engum - என்னுடைய உடம்பு முழுவதும் பரவி
கைக் கொண்டு,Kaik Kondu - (என்னை) வசப்படுத்தி
நிற்கின்ற ,Nirkkinra - (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற
நோய்காள்,Noigal - வியாதிகளே!
காலம்பெற,Kaalampera - விரைவாக
உய்ய,Uyya - (நீங்கள்) பிழைக்க வேண்டி
போமின்,Pomin - (என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள்
வேதம் பிரானார்,Vedham Piraanaar - (பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட,Paik Konda - பரம்பினை படங்களை யுடைய
பாம்பு அணையோடும்,Paambu Anaiyodum - திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட
வந்து புகுந்து ,Vandhu Pugundhu - எழுந்தருளி
மெய்,Mei - (எனது) சரீரத்தை
கொண்டு,Kondu - (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
கிடந்தார்,Kidandhaar - (என் சரீரத்தை கொண்டு (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி (என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
444ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2
சித்திர குத்த னெழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன்
பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-2
சித்திர குத்தன்,Siththira Kuththan - சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன்
தென் புலம் கோன்,Then Pulam Kon - தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி,Pori Oththri - மேலெழுத்தை இடுவித்து
எழுத்தால் வைத்த,Ezuththaal Vaiththa - (தான்) எழுதிவைத்த
இலச்சினை,Ilachchinai - குறிப்புச் சீட்டை
தூதுவர்,Thoodhuvar - யம கிங்கரர்கள்
மாற்றி,Maatri - கிழித்துப் போட்டு விட்டு
ஓடி ஒளிந்தார்,Odi Olindhaar - கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;
முத்து,Muththu - முத்துக்களை (க்கொண்டு வீசுகிற)
திரை,Thirai - அலைகளை யுடைய
கடல்,Kadal - கடலில்
சேர்ப்பன,Saerppana - கண் வளர்ந்தருளுமவனும்,
மூது அறிவு ஆளர்,Moothu Arivu Aalar - முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு
முதல்வன்,Mudhalvan - தலைவனும்,
பத்தர்க்கு,Paththarkku - அடியார்களுக்கு
அமுதன்,Amudhan - அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு
அடியேன்,Adiyaen - (யான்) தாஸனாயினேன்;
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
445ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 3
வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புலச் சேவை யதக்கி
கயிற்றும் அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-3
எயிற்றிடை,Eyittridai - (வராஹ ரூபியாய் திருவதரித்தபோது.) (தனது) கோரப் பல் மேல்
மண்,Man - பூமியை
கொண்ட,Kondra - தாங்கி யருள
எந்தை,Endhai - எம்பெருமான் (அடியேனுக்கு)
வயிற்றில் தொழுவை,Vayitril Thozhuvai - வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை
பிரித்து,Piriththu - கழித்தருளியும்
புலம்,Pulam - இந்திரியங்களால்
வல் சேவை,Val Saevai - கடுயைமான ரிஷபங்களை
அதக்கி,Athakki - (பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும்
கயிறும்,Kayirum - நரம்புகளும்
அக்கு,Akku - எலும்புகளுமேயா யிருக்கின்ற
ஆணி,Aani - சரீரத்தில் (ஆசையை)
கழித்து,Kaliththu - ஒழித்தருளியும்
பாசம்,Paasam - (யம தூதர்களுடைய) பாசங்களை
காலிடை கழற்றி,Kaalidai Kalittri - காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும்,
இரா பகல்,Iraa Pakal - இரவும் பகலும்
ஓதுவித்து,Othuviththu - நல்லறிவைப் போதித்து
பயிற்றி,Payittri - (கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும்
பணி செய்ய,Pani Seiyya - நித்திய கைங்கர்யம் பண்ணும்படி
என்னை கொண்டான்,Ennai Kondaan - அடியேனைக் கைக் கொண்டருளினான்;
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
446ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-4
மங்கிய,Mangiya - (ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை,Val Vinai - வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்,Noigal - வியாதிகளே
உமக்கும்,Umakkum - உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை,Or Val Vinai - ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)
கண்டீர்,Kandir - (இன்று) பாருஙக்ள்
இங்கு,Ingku - இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்,Pugenmin Pugen Min - வர வேண்டா, வர வேண்டா
எளிது அன்று ,Elidhu Andru - (இனி நீங்கள் என்னைக் கிட்டுகை) சுலபமான கரியமன்று;
புகேன்மின்,Pugenmin - ஆகையால் இனி இங்கு வர வேண்டா
சிங்கப் பிரானவன்,Singap Piraanavan - நரசிம்மாவதாரமெடுத்து உபசரித்தருளினவன
எம்மான் அவன்,Emmaaan Avan - (என் ஆத்துமா) எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சேரும்,Saerum - எழுந்தருளி யிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்,Thiru Kovil Kandir - திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத,Pangkap Padaadha - பரிபவப் படாமல்
உய்யபோமின்,Uyya Pomin - பிழைத்துப் போங்கள்.
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
447ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5
மாணிக் குறளுருவாய மாயனை என் மனத் துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-5
மாணி,Maani - பிரமசாரி வேஷத்தை யுடைய
குறள் உரு,Kural Uru - வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்,Maanikkap Pandaaram - மாணிக்க நிதி போல் இனியவனும்
மாயனை,Maayanai - ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி,Paeni - ஆசைப் பட்டு
கொணர்ந்து,Konarndhu - எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் மனத்துள்ளே,En Manaththullae - என் நெஞ்சினுள்ளே
புகுத,Pugudha - புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி,Piridhu Inri - வேற்றுமை யில்லாமல்
வைத்துக் கொண்டேன்,Vaiththuk Konden - அமைத்துக் கொண்டேன்.
வலி வல் குறும்பர்கள் உள்ளீர்,Vali Val Kurumpargal Ullir - மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்,Nadamin - (வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா,Paanikka Vaendaa - தாமதிக்க வேண்டியதில்லை,
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
448ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6
உற்ற வுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-6
உற்ற,Utrra - நெடு நாளாக இருக்கிற
உறு பிணி,Uru Pini - மிக்க வருத்தத்தைச் செய்கிற
நோய்காள்,Noigal - நோய்களே!
உமக்கு,Umakku - உங்களுக்கு
ஒன்று,Onru - ஒரு வார்த்தை
சொல்லுகேன்,Sollugenaen - சொல்லுகிறேன்:
கேண்மின்,Kaenmin - கேளுங்கள்;
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்,Pettrangal Maeykkum Piraanaar Paenum - (நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது) பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான
திருக் கோயில்,Thiruk Koyil - திருக் கோயிலாயிற்று;
கண்டீர்,Kandir - முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்;
ஆழ்,Aazh - (ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை காள்,Vinai Kaal - ஓ கொடுமைகளே!
இன்னம்,Innam - மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்,Attram Uraikkindren - அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு,Umakku - உங்களுக்கு
இங்கு,Ingku - இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை,Or Patru Illai - ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்,Nadamin - (இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
449ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7
கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந் துழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல் வினையாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-7
சிறு வரை,Siru Varai - சிறிய மலை போன்ற
கொங்கை என்னும்,Kongai Ennum - முலைகளாகிற
பொதும்பினில்,Podhumpinil - பொந்தில்
வழுக்கி வீழ்ந்து,Vazhukki Veezhndhu - வழுக்கி விழுந்து
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு,Angu Or Muzhaiyinil Pukkitttu - (நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து
அழுந்திக் கிடந்த,Azhundhik Kidandha - (அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து
உழல்வேனை,Uzhalvaenai - (திரியப் போகிற என்னுடைய)
வல் வினை ஆயின,Val Vinai Aayina - தீவினைகளா யிருப்பவைகளை
வங்கம் கடல் வண்ணன் அம்மாள்,Vangkam Kadal Vannan Ammaaal - கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்
மாற்றி,Maatri - போக்கி யருளி
பங்கப்படா வண்ணம்,Pangkap Padaa Vannam - பரிபவப் படாதபடி
செய்தான்,Seidhaan - செய்தருளினான்;
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
450ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8
ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என் னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-8
பீதக ஆடை பிரானர்,Peethaga Aadai Piraanargal - திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து,Brahmaguru Aagivandhu - ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்,Podhu Il - அறிவுக்கு இருப்பிடானதும்
அல்,Al - அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான
நெஞ்சம் கமலம்,Nenjcham Kamalam - ஹ்ருதய கமலத்தினுள்
புகுந்து,Pugundhu - பிரவேசித்து
என் னுள்ளே,En Nullae - எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்,Eaathangal Aayina Ellaam - தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம்.
இறங்க விடுவித்து,Iranga Viduviththu - நீக்கி
என்,En - என்னுடைய
சென்னித் திடரில்,Sennith Thidarul - தலையினிது
பாத விலச்சினை,Paadha Vilachchinai - ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்,Vaiththaar - ஏறி யருளப் பண்ணினான்
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.
451ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9
உறக லுறக லுறகல் ஒண் சுட ராழியே சங்கே
அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக் குறிக் கொண்மின்–5-2-9
ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸை யுடைய
ஆழியே,Aazhiye - திருவாழி யாழ்வானே!
எறி,Eri - (எம்பெருமானால்) வீசப் படுகின்ற
நாந்தக வாளே!,Naandhaka Vaaley - நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே!
அழகிய சார்ங்கமே,Azhagiya Saargngamae - அழகு பொருந்திய சார்ங்கமேசார்ங்கமென்கிற தநுஸ்ஸே!
தண்டே,Thandae - (கௌமோதகி என்கிற) கதையே!
இருந்த,Irundha - (எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற
எண்மர் உலோக பாலீர்காள்,Enmar Uloga Paaleerkaal - அஷ்ட திக்குப் பாலகர்களே!
இறவு படாமல்,Iravu Padaamal - தப்பிப் போகாமல்
சங்கே,Sangey - ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே!
அற,Ara - (ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி
உறகல் உறகல் உறகல்,Urakal Urakal Urakal - உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்;
பறவை அரையா,Paravai Araiya - பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே!
உறகல்,Urakal - உறங்காதிரு;
பள்ளி அறை,Palli Arai - (நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது) (எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை
குறிக் கொள்மின்,Kurik Kolmin - நோக்கிக் காத்திடுங்கள்.
452ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10
அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10
அரவத்து அமளியினோடும்,Aravaththu Amaliyinodum - திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்
அழகிய பால் கடலோடும்,Azhagiya Paal Kadalodum - அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட
அரவிந்தப் பாவையும் தானும்,Aravindhap Paavayum Thaanum - செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும்
வந்து,Vandhu - எழுந்து அருளி
அகம்படி,Agampadi - (எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து,Pugundhu - பிரவேசித்து,
பரவை,Paravai - (அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திசை,Pala Thisai - பல அலைகள்
மோத,Moedha - தளும்ப
பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பிரானை,Piranaai - உபகாரகனான எம்பெருமானை
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
பட்டினம் காவல் பொருட்டே,Pattinam Kaaval Poruttrae - ஆத்ம ரக்ஷண நிமித்தமாக
பரவுகின்றான்,Paravuginraan - போற்றுகின்றார்.