திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 5-4 உந்திமேல் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1378பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் – அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும் இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து) 1
உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன் எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1
பதவுரை Show / Hide
சந்தினோடு மணியும் கொழிக்கும், Sandhinodu Maniyum Kozhikkum - சந்தனக்கட்டைகளையும் நவரத்னங்களையும் தள்ளிக்கொண்டு பெருகுகின்ற
புனல், Punal - தீர்த்தத்தை யுடைத்தான
காவிரி, Kaviri - திருக்காவிரி நதியாலும்
அந்தி போலும் நிறத்து ஆர் வயல், Andhi Polum Nirathu Ar Vayal - ஸந்தியாகாலம் போன்ற வர்ணத்தையுடைய கழினிகளினாலும்
சூழ், Sool - சூழப்பட்ட
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது;–
உந்தி மேல் நான் முகனைபடைத்தான், Undhi Mel Naan Muganaipadaiththan - (தனது) திருநாபியிலே பிரமனை ஸ்ருஷ்டித்தவனும்
உலகு உண்டவன், Ulaku Undavan - (பிரளயகாலத்தில்) லோகங்களை அமுது செய்தவனும்
எந்தை பெம்மான், Endhai Pemmaan - எம் குலத்துக்கு நாதனானவனும்
இமையோர்கள் தாதைக்கு, Imaiyorkal Thathaikku - நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு
இடம், Idam - வாஸஸ்தலம்
என்பர், Enbar - என்று சொல்லுவர்கள்
1379பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்) 2
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப் பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால் தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச் செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –5-4-2
பதவுரை Show / Hide
நல் தையலார் குழல் மாலையும், Nal Thaiyalar Kuzhal Maalayum - நல்ல ஸ்த்ரீகளினுடைய தலையிலணிந்த பூமாலைகளும்
மற்று அவர் தடமுலை செய்ய சாந்தும், Mattru Avar Thadamulai Seyya Santhum - இன்னமும் அந்த ஸ்த்ரீகளினுடைய முலைத்தடங்களில் (பூசப்பட்ட) சிவந்த சந்தனமும் (ஆகிய இவற்றோடு)
கலந்து இழி புனல் சூழ், Kalandhu Izhi Punal Soozh - சேர்ந்து கலங்கிப் பிரவஹிக்கின்ற (காவிரித்) தீர்த்தத்தினால் சூழப்பட்ட
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கம்,
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன், Vaiyam Undu Aal Ilai Maevum Maayan - (பிரளயத்தில்) பூமியை யெல்லாம் அமுது செய்து ஆலந்தளிரிலே பொருந்திக் கண்வளர்கின்ற ஆச்சர்ய சக்தியுக்தனும்,
மணி நீள் முடி, Mani Neel Mudi - மணிமயமான நீண்ட கிரீடமணிந்தவனும்
பை கொள் நாகத்து அணையான், Pai Kol Naagathu Anaiyaan - படங்கொண்ட திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனுமான பெருமான்
பயிலும் இடம் என்பர், Payilum Idam Enbar - நித்யவாஸம் பண்ணுகிற இடமென்று சொல்லுவர்
1380பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன் வர்த்திக்கிற தேசம்) 3
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால் வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3
பதவுரை Show / Hide
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி, Vandu Paadum Madhu Vaar Punal Vandu Izhi Kaviri - வண்டுகள் பாடப்பெற்ற தென் ஒழுகுகின்ற தீர்த்தமானது வந்து பிரவஹிக்கின்ற திருக்காவேரியினாலும் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
அண்டம் நாறும் பொழில், Andam Naarum Pozhil - ஆகாச மெங்கும் பரிமளிக்கின்ற சோலைகளாலும்
சூழ்ந்து அழகு ஆர், Sozhndhu Azhagu Ar - சூழப்பட்டு அழகு பொருந்தியதான
பண்டு, Pandhu - முன்பொருகால்
இ வையம் அளப்பான் சென்று –, I Vaiyam Alappaan Sendru - இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய்
மாவலி கையில், Maavali Kaiyil - மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை
ஆழி தடம் கை கொண்ட, Aazhi Thadam Kai Konda - திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட
குறளன், Kuralan - வாமநமூர்த்தியினது
1381பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்) 4
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால் துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4
பதவுரை Show / Hide
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும், Thulaikkai Yaanai Maruppum Akilum Konarnthu Man Ucchi Thilaikkum - துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற (- (தென் அரங்கம்) (இடம் எனபர்))
செல்வம் புனல் காவிரி சூழ், Selvam Punal Kaaviri Soozh - திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட
வெம் போர் விளைத்த விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட, Vem Por Vilaittha Viral Vaal Arakkan Nagar Paazhpada - கடுமையான யுத்தத்தை உண்டாக்கின பலிஷ்டனான வாட்படைவல்லனான இராவணனுடைய நகரமாகிய லங்கை பாழாகும்படியாக
வளைத்த வல்வில் தட கையவனுக்கு, Valaitha Valvil Thada Kaiyavanukku - வளைக்கப்பட்ட வலியவில்லைத் தடக்கையிலே உடையவனான பெருமானுக்கு
1382பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால் குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 5
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால் உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற் செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-5
பதவுரை Show / Hide
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும், Umbra Koonum Ulaku Ezhum Vandu Eendi Vanangum - தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர், Nal Sem Pon Aarum Mathil Soozhndhu Azhagu Aar - நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி கதாலன் வான் புக, Vambu Ulaam Koondhal Mandothari Kathaalan Vaan Puga - வாஸனை உலாவுகின்ற கூந்தலை யுடையளான மந்தோதரிக்குக் கணவனான இராவணன் வீர ஸ்வர்க்கமடையும்படியாக
அம்பு தன்னால் முனிந்த அழகன், Ambu Thannal Munintha Azhagan - பாணங்களினால் சீறிக்கொன்றொழித்த வீரச்ரியையுடையனான இராமபிரானது.
1383பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்) 6
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால் குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-6
பதவுரை Show / Hide
குலை எடுத்த கதலி பொழில் ஊடும் வந்து, Kulai Eduththa Kathali Pozhil Oodum Vandu - குலைகள் ஓங்கியிருக்கப் பெற்ற வாழைத்தோப்பு களினுள்ளே புகுந்து (- (அம்மரங்களை வேரோடே பறித்துக்கொண்டு) (தென் அரங்கம்;))
முன் உந்தி அலை எடுக்கும் புனல் காவிரி சூழ், Mun Undhi Alai Edukkum Punal Kaaviri Soozh - முன்னே தள்ளி அலைவீசியடியாநின்ற தீர்த்தத்தையுடைத்தான காவேரியினால் சூழப்பட்ட
கலை உடுத்த அகல் அல்குல் தாய் என, Kalai Uduththa Akal Alkul Thaai Enna - பட்டாடையணிந்த அகன்ற நிதம்பத்தையுடையளான தாயாகிய யசோதைபோல (வந்து)
முலை கொடுத்தாள் வன் பேய்மகள், Mulai Koduththaal Van Paeymakal - முலையுண்ணக் கொடுத்தவளான வலிய (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய
உயிர் உண்டவன் வாழ்இடம் என்பர், Uyir Undavan Vazh Idam Enbar - பிராணனை உறிஞ்சி உண்ட கண்ணபிரான் வாழும் திவ்யதேசம் என்று சொல்லுவர்
1384பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம்) 7
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால் மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7
பதவுரை Show / Hide
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும், Manju Cher Maaligai Needu Akil Pugaiyum - மேகமண்டலத்தை அளாவியிருக்கிற மாளிகைகளிலுண்டான அதிகமான அகிற்புகையும்
மா மறையோர் செம் சொல் வேள்வி புயையும் கமழும், Maa Maraiyore Sem Sol Velvi Puyaiyum Kamazhum - சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே நடத்துகிற யாகங்களிலுண்டான ஹோமதூமமும் (சேர்ந்து) பரிமளிக்கப்பெற்ற
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது, –
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் துஞ்ச, Kanjan Nenjum Kadu Mallarum Sakadhamum Thunja - கம்ஸனுடைய மனமும் கடிய மல்லர்களும் சகடாஸுரனும் தொலையும்படி
காலினால் வென்ற, Kaalinaal Vendra - திருவடியாலே வென்றொழித்த உஜ்வலமான திருவாழியையுடைய பெருமான் ரித்யவாஸம் பண்ணுமிடம் என்று சொல்லுவார்கள்
1385பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்) 8
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8
பதவுரை Show / Hide
வானும் மண்ணும் நிறைய புகுந்த ஈண்டி வணங்கும், Vaanum Mannum Niraiya Pugundha Eendi Vanangum - விண்ணுலகத்திலுள்ளாரும் மண்ணுலகத்திலுள்ளாரும் ஏராளமாக வந்து சேர்ந்து ஒன்றாகத்திரண்டு வணங்கப்பெற்றதும், (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
நல் தேனும் பாலும் கலந்தன்னவர், Nal Thenum Paalum Kalandannavar - மதுரமான தேனும் பாலும் ஒன்றாகச் சேர்ந்தாற்போலே ஏகரஸராயிருக்கிற பக்தர்கள்
சேர், Ser - சேர்ந்திருக்கப்பெற்றதுமான
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய், Eyanam Meen Aamaiyodu Ariyum Siru Kuralum Aay - வராஹமாகவும் மத்ஸ்ய கூர்மமாகவும் நரஸிம்ஹமாகவும் வாமநனாகவும் திருவவதரித்தவனாய்
தானும் ஆய, Thaanum Aay - ஸ்ரீராமபிரானாகவும் திருவவதரித்தவனான
தரணி தலைவன், Tharani Thalaivan - ஸர்வலோகேச்வரனுடைய
1386பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில்) 9
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம் மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால் வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே –5-4-9
பதவுரை Show / Hide
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து, Veyin Muthum Maniyum Konarnthu - மூங்கில்களில் நின்று முதிர்ந்த முத்துக்களையும் ரத்னங்களையும் தள்ளிகொண்டுவந்து (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
ஆர் புனல் காவிரி, Aar Punal Kaaviri - நிறைந்திருக்கிற தீர்த்தத்தையுடைய திருக்காவேரியாலும்
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து, Aay Pon Maa Mathil Soozhndhu - தகுதியான அழகிய பெரிய திருமதிற்களாலும் சூழப்பட்டு
அழகு ஆர், Azhagu Aar - அழகு பொருந்தியிருப்பதான
என்றும்சேயன், Endrumseyan - எந்நாளும் எட்டாமலிருப்பவன்
மிக பெரியன், Miga Periyan - மஹாபுருஷன்;
நுண் நேர்மையன், Nun Naermaiyan - ஸூக்ஷ்மமான பொருள்களிற் காட்டிலும் ஸூக்ஷ்மத்தன்மை வாய்ந்தவன்,
ஆய, Aay - என்றிப்படி சொல்லக்கூடியதான
இ மாயை, I Maayai - இவ்வாச்சரியத்தை
அரும் அறியா வகையான், Arum Ariya Vagaiyaan - ஒருவரும் அறியக் கூடாதபடியிருப்பவனான ஸர்வேச்வரனுடைய
1387பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம் கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம் சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும் பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம் ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள்) 10
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன் வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10
பதவுரை Show / Hide
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை, Alli Maathar Amarum Thirumaarvan Arangaththai - பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக,
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி, Kallin Mannu Mathil Mangaiyar Kon Kalikanri - கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற  மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார்
சொல் நல் இசை மாலைகள், Sol Nal Isai Maalaigal - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய
நாலிரண்டும் இரண்டும், Naalirandum Irandum - இப்பத்துப்பாட்டுக்களையும்
உடன் வல்லவர்தாம், Udan Vallarvartaam - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள்
உலகு ஆண்டு, Ulaku Aandu - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து
பின் வான் உலகு ஆள்வர், Pin Vaan Ulaku Aalvar - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர்.