திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 6-10 உலகம் உண்ட பெருவாயா (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3326திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((உலகமுண்டபெருவாயா) ஸகல ஜகத்தையும் ரக்ஷிக்குமியல்வை யுடைபையாய்க் கொண்டு திருமலையிலே நித்யஸந்நதி பண்ணியிருக்கிறவுன்னை நான் கிட்டியநுபவிக்கும் விரகு அருளிச் செய்ய வேணுமென்கிறார்.) 1
உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே! நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே! குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1
பதவுரை Show / Hide
ulagam unda peru vaaya,உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே!
ulappu il keerthi ammaane,உலப்பு இல் கீர்த்தி அம்மானே - முடிவில்லாத புகழுடைய பெருமானே
nilavum sudar soozi oli moorthi,நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி - அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
nediaay,நெடியாய் - மிகப்பெரியோனே!
adiyen aar uyire,அடியேன் ஆர் உயிரே - அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே!
ulagukku thilatham aay nindra,உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற
emperumane,எம்பெருமானே - அஸ்மத்ஸ்வாமியே!
kulam tol adiyen,குலம் தொல் அடியேன் - குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன்
una paadham,உன பாதம் - உனது திருவடிகளை
koodum aaru,கூடும் ஆறு - வந்து சேறும்படியை
kooraay,கூறாய் - அருளிச் செய்யவேணும்.
3327திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((கூறாய் நீறாய்) விரோதிகளையெல்லாம் கிழங்கெடுக்கவல்ல திவ்யாயுதத்தினால் ஒளி பெற்றிருக்கிற நீ எனது விரோதிகளையும் போக்கி, நான் உன் திருவடிகளைச் சேரும் படி க்ருபை பண்ண வேணுமென்கிறார்.) 2
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே! சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே! ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-
பதவுரை Show / Hide
kodu valla asurar kulam ellaam,கொடு வல்ல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம்
kooru aay,கூறு ஆய் - பலபல கண்டங்களாகி
neeru aay,நீறு ஆய் - சாம்பலாகி
nilan aagi,நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும்
seeraa,சீறா - பின்னையும் சீறி
eriyum,எறியும் - ஜ்வலியா நிற்கிற
thiru nemi valavaa,திரு நேமி வலவா - திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே!
theyvam komaane,தெய்வம் கோமானே - நித்ய ஸூரிநாதனே!
seeru aar sunai,சேறு ஆர் சுனை - சேறு நிரம்பிய கனைகளிலே
thaamarai,தாமரை - செந்தாமரை மலர்கள்
sem thee malarum,செம் தீ மலரும் - சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - அளவுபடாத அன்பையுடையேனான நான்
un adi ser vannam,உன் அடி சேர் வண்ணம் - உன் திருவடிகளைச் சேறும்படி
arulaay,அருளாய் - அருள்புரிய வேணும்.
3328திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((வண்ணமருள் கொள்) கீழ்ப்பாட்டில் “உன்னடிசேர் வண்ணமருளாய்“ என்ற ஆழ்வாரை நோக்கி) 3
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே! தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே! அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3
பதவுரை Show / Hide
vannam arul kol,வண்ணம் அருள் கொள் - அருளே வடிவெடுத்த வண்ணமாய்
ani paegam vannaa,அணி பேகம் வண்ணா - அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே!
maayam ammaane,மாயம் அம்மானே - ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே!
ennam pugundhu thithikkum amudhae,எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே!
imaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதிதேவனே!
thel nal aruvi,தெள் நல் அருவி - தெளிந்தழகிய அருவிகள்
mani pon muthu,மணி பொன் முத்து - மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும்
alaikkum,அலைக்கும் - கொழிக்குமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையிலே விளங்குபவனே!
annale,அண்ணலே - ஸ்வாமியே!
un adi so,உன் அடி சோ - உன் திருவடிகளில் வந்து சேரும்படி
adiyerkku,அடியேற்கு - அடியேன் விஷயத்திலே
aa aa ennaay,ஆ ஆ என்னாய் - ஐயோ வென்றிரங்கியருள வேணும்.
3329திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((ஆவா வென்னாது) பிரானே! உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ சாஸ்த்ரங்களில் காட்டிக்கொடுத்த ஸாதனங்களொன்றும் எனக்கு உபயோகப்படவில்லை,) 4
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா! தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே! பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4
பதவுரை Show / Hide
aa aa ennaadhu,ஆ ஆ என்னாது - இரக்கமில்லாமல்
ulagathai alaikkum asurar,உலகத்தை அலைக்கும் - உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான
asurar,அசுரர் - ஆஸுரப்ரக்ருதிகளினுடைய
vaazhnal mel,வாழ்நாள் மேல் - ஆயுளை முடிப்பதற்காக
thee vai vaali,தீ வாய் வாளி - நெருப்பை உமிழ்கிற அம்புகளை
mazhai pozhindha silaiyaa,மழை பொழிந்த சிலையா - மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே!
thiru maa magal kaelva,திரு மா மகள் கேள்வா - திருமகள் கொழுநனே!
theva,தேவா - தேவனே!
surargal munikanangal virumbum,சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் - தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான
thiru vengadathaaney,திரு வேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே!
poo aar kazhalgal,பூ ஆர் கழல்கள் - (உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை
aru vinaiyen,அரு வினையேன் - மஹாபாபியான நான்
porundhum aaru,பொருந்தும் ஆறு - கிட்டும்படி
punaraay,புணராய் - கற்பித்தருளவேணும்
3330திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((புணராநின்ற) ஆழ்வீர்! நீர் இங்ஙனே கிடந்து துடிப்பதேன்? எப்படியும் உம்முடைய விருப்பம் செய்வதாகவே நினைத்திருக்கிறோமென்று திருவேங்கடமுடையான் திருவுள்ளமாக, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளம்? ஒரு நாளிட்டு தரலாகாதோ வென்கிறார்.) 5
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ! புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ! திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே! திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5
பதவுரை Show / Hide
anru,அன்று - ராமாவதாரத்திலே
punaraa nindra maram ezh,புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை
eydha,எய்த - துளைபடுத்தின
oru vil valavaa o,ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே!
punar ey nindra maram irandin naduve,புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே - சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே
pon,போன் - தவழ்ந்து சென்ற
mudhalvaa o,முதல்வா ஓ - ஓ மூலபுருஷனே!
thinar aar megham ena,திணர் ஆர் மேகம் என - தின்மை மிக்க மேகங்களென்னும்படி
kaliru serum,களிறு சேரும் - யானைகள் சேருமிடமான
thiruvengadath thaane,திருவேங்கடத் தானே - திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே
thinar aar saangathu,திணர் ஆர் சார்ங்கத்து - திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய
una paadham,உன பாதம் - உனது திருவடிகளை
adiyen saervadhu ennaal,அடியேன் சேர்வது எந்நாள் - அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ?
3331திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((எந்நாளே நாம்.) கீழ்ப்பாட்டில் “உனபாதம் சேர்வதடியே னெந்நாளே“ என்றதற்கு உன் திருவடிகளே நான் சேரப்பெறும் நாள்கூட ஒன்று உண்டா? அது எது? என்று ஸந்தேஹித்துச் சொல்வதாகவும் பொருளாகக்கூடுமே,) 6
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய் மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே! மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6
பதவுரை Show / Hide
man alandha thaamaraigal inai,மண் அளந்த தாமரைகள் இணை - உலகமளந்த உபயபாதங்களை
naam kaanpadharku ennaal endru,நாம் காண்பதற்கு எந்நாள் என்று - நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று
imaiyor gal,இமையோர்கள் - நித்யஸூரிகள்
ennaalum nindru etti,எந்நாளும் நின்று ஏத்தி - நிரந்தரமாக நின்று துதித்து
eirainji,இறைஞ்சி - வணங்கி
enam enam aay,இனம் இனம் ஆய் - திரள் திரளாக
mei naa manathaal,மெய் நா மனத்தால் - த்ரிகரணங்களாலும்
vazhipaadu seyyum,வழிபாடு செய்யும் - ஆராதனை செய்யுமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே!
adiyen naan,அடியேன் நான் - அடியேனாகிய நான்
mei eydhi,மெய் எய்தி - (கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து
un adikkaL mevuvadhu,உன் அடிக்கள் மேவுவது - உன் திருவடிகளிலே பொருந்துவது
ennaal,எந்நாள் - என்றைக்கோ?
3332திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அடியேன் மேவி) பேறு தப்பாதென்று துணிந்திருத்தல் ஸ்வரூபமாயினும் அத்தலையில் போக்யதை நெஞ்சுக்கு விஷயமாக ஆக, தரித்திருக்க முடியாதபடி பதற வேண்டியிருக்குமே, அந்தப் பதற்றத்தை யருளிச் செய்கிறாரிப்பாட்டில்.) 7
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே! செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே! நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7
பதவுரை Show / Hide
adiyen mevi amarkindra amudhae,அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே!
emaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதி தேவனே!
adu pul kodi aa udaiyaane,அடு புள் கொடி ஆ உடையானே - (பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே!
kolam kanivai perumaane,கோலம் கனிவாய் பெருமானே - அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே!
chedi aar vinaigal theer marundhae,செடி ஆர் வினைகள் தீர் மருந்தே - செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!
un paadham kaana,உன பாதம் காண - உனது திருவடிகளைக் காண்கைக்கு
noolaadhu,நோலாது - நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே)
nodi aar pozhudhum,நொடி ஆர் பொழுதும் - ஒரு க்ஷண மாத்திரமும்
aatren,ஆற்றேன் - தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன்
3333திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((நோலாதாற்றேன்) ஸாதநாநுஷ்டானம் என் பக்கலில் ஒன்றுமில்லையென்று சொல்லிக்கொண்டே ஆசைப்பட்டு நாக்கு நீட்டினால் கிடைக்குமோ? என்று எம்பெருமான் திருவுள்ள மாகக்கொண்டு தங்களுடைய உபாய தாரித்ரியத்தைச் சொல்லிக் கொண்டன்றோ வந்து உன்னைக் காணப்பெறுகிறது என்கிறார்.) 8
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின் நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே! மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8
பதவுரை Show / Hide
nun unarvin,நுண் உணர்வின் - (ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான
neelaar kandathu ammaanum,நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும்
nirai naanmuganum,நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும்
indiranum,இந்திரனும் - தேவேந்திரனும்
un paadham kaana voodhu aatrennudru,உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு
sael ey kannar palar soozhu,சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து
virumbum,விரும்பும் - விரும்பிப்பணியுமிடமான
maal aay mayakki vandhaay poalae,மால் ஆய் மயக்கி வந்தாய் போலே - மயக்கிக்கொண்டு வந்தாப்போலே
adiyen pal varai,அடியேன் பால் வராய் - அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும்.
3334திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((வந்தாய்போலே) தம்முடைய விச்லேஷ வ்யஸநத்தைக் கனக்க அருளிச் செய்கிறார்.) 9
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே! செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே! சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே! அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9
பதவுரை Show / Hide
vandhai poalae vaaraadhai,வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே!
vaaraadhai pol varuvaane,வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே!
sen thamarai kan,செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும்
sem kani vaay,செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும்
naal thol,நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய
amudhae,அமுதே - பரமபோக்யனே!
enadhu uyire,எனது உயிரே - எனக்கு உயிரானவனே!
sindhaamanigal pagar,சிந்தாமணிகள் பகர் - சிறந்த ரத்னங்களின் ஒளியான
allai pagal sei,அல்லை பகல் செய் - இரவையும் பகலாக்குமிடமானது
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே!
antho,அந்தோ - ஐயோ!
una paadham,உன பாதம் - உனது திருவடிகளே
adiyen,அடியேன் - அடிமைச்சுவடறிந்த நான்
iraiyum akala killeen,இறையும் அகல கில்லேன் - ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன்
3335திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அகலகில்லேன்) கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யனான ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தையும் தம்முடைய ஆற்றாமையையும் சொன்னார், இப்பாட்டில், தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும் தெரிவித்துக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.) 10
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா! நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10
பதவுரை Show / Hide
alar mel mangai,அலர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார்
iraiyum akala killeen endru,இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு
urai maarpa,உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே!
nigar il pugazhai,நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே!
ulagam moonru udaiyaa,உலகம் மூன்று உடையாய் - சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே!
ennai aal,என்னை ஆள் - நீசனே என்னையுமடிமை கொள்பவனே!
vaane,வானே - பவனே!
amarar,அமரர் - தேவர்களும்
muni kanangal,முனி கணங்கள் - மஹர்ஷி ஸமூஹங்களும்
virumbum,விரும்பும் - விரும்பிவந்து பணியுமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே!
pugal ondru illa adiyen,புகல் ஒன்று இல்லா அடியேன் - அநந்யகதியான நான்
un adi keel,உன் அடி கீழ் - உனது திருவடி வாரத்திலே
amarndhu pugundhaen,அமர்ந்து புகுந்தேன் - மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன்
3336திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும் படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11
பதவுரை Show / Hide
adiyeeir,அடியீர் - அடியவர்களே!
adi keel amarndhu pugundhu vaazhmin endru endru,அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று - நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து,
arul kodukkum,அருள் கொடுக்கும் - க்ருபை பண்ணுகிறவனும்
padi kel ella perumaanai,படி கேழ் இல்லா பெருமானை - சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து
mudipaan sonna,முடிப்பான் சொன்ன - ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
aayirathu,ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளும்
thiruvengadathukku ivaipaththum,திருவேங்கடத்துக்கு இவைபத்தும் - திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை
pidithaar pidithaar,பிடித்தார்பிடித்தார் - ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள்
periya vaanul,பெரிய வானுள் - பாமாகாசமென்கிற பரமபதத்திலே
veettrindhu nilaavular,வீற்றிருந்து நிலாவுலர் - நிலை நின்று வீற்றிருப்பர்கள்.