திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-விண்ணீல மேலாப்பு (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
577நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 1
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே
பதவுரை Show / Hide
விண், Vin - ஆகாசம் முழுவதிலும்
நீலம் மேலாப்பு விரித்தால் போல், Neelam Melappu Virithaal pol - நீல நிறமான மேற் கட்டியை விரித்துக் கட்டினாற் போலிரா நின்ற
மேகங்காள்!, Megangkaal - மேகங்களே!
தெள் நீர் பாய், Thel Neer Paai - தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான
வேங்கடத்து, Vengadathu - திருவேங்கடமலையி லெழுந்தருளி யிரா நின்ற
என் திருமாலும், En Thirumaalum - திருமாலாகிய எம்பெருமானும்
போந்தானே, Pondhaane - (உங்களோடுகூட) எழுந்தருளினானோ?
முலை குவட்டில், Mulai Kuvatil - முலை நுனியிலே
கண் நீர்கள் துளி சோர, Kan Neergal Thuli sora - கண்ணீர் அரும்ப
சோர்வேனை, Sorvenai - வருந்துகிற என்னுடைய
பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது, Pen Neermai eedu Azhikku mithu - பெண்மையை உருவழிக்கிறவிது
தமக்கு, Thamakku - அவர் தமக்கு
ஓர் பெருமையே, Or Perumaiye - ஒரு பெருமையர யிரா நின்றதோ?
578நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 2
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச் சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே
பதவுரை Show / Hide
மா முத்தம் நிதி சொரியும், Maa Mutham Nidhi Soriyum - சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
வேங்கடத்து, Vengadathu - திருமலையிலெழுந்தருளியிரா நின்ற
உள் புகுந்து, Ull Pugundhu - உள்ளே புகுந்து
கதுவப்பட்டு, Kadhuvapattu - கவ்வ, அதனால் பாதைப்பட்டு
கங்குல், Kangul - இரவில்
இடை ஏமத்து, Idai emathu - நடு யாமத்திலே
சாமத்தின் நிறம் கொண்ட, Saamathin Niram Konda - நீலநிற முடையனான
தாளாளன், Thaalaalan - எம்பெருமானுடைய
வார்த்தை என்னே, Vaarthai Enne - ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ?
காமம் தீ, Kaamam Thee - காமாக்நியானது
ஓர் தென்றலுக்கு, Or Thendralukku - ஒரு தென்றற் காற்றுக்கு
நான் இலக்கு ஆய், Naan Ilakku Aay - நான் இலக்காகி
இங்கு இருப்பேன், Ingu Irupen - இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?)
579நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 3
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே
பதவுரை Show / Hide
அளியத்த மேகங்காள், Aliyatha Megankaal - அருள் புரியக் கடவ மேகங்களே!
ஒளி, Oli - தேஹத்தின் காந்தியும்
வண்ணம், Vannam - நிறமும்
வளை, Valai - வளைகளும்
சிந்தை, Sindhai - நெஞ்சும்
உறக்கத்தோடு, Urakkathodu - உறக்கமும் ஆகிய இவையெல்லாம்
எளிமையால், Elimaiyal - என்னுடைய தைந்யமே காரணமாக
என்னை இட்டு, Ennai Ittu - என்னை உபேக்ஷித்து விட்டு
ஈடு அழிய, Eedu Azhiya - என் சீர் குலையும்படி
போயின, Poyina - நீங்கப் போய் விட்டன
ஆல், Aal - அந்தோ!
குளிர் அருவி, Kulir Aruvi - குளிர்ந்த அருவிகளை யுடைய
வேங்கடத்து, Vengadathu - திருமலையி லெழுந்தருளி யிருக்கிற
என் கோவிந்தன், En Govindhan - எனது கண்ண பிரானுடைய
குணம், Gunam - திருக் கல்யாண குணங்களை
பாடி, Paadi - வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக)
ஆவி, Aavi - பிராணனை
காத்திருப்பேனே, Kaathiruppene - ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ?
580நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 4
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும் பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே
பதவுரை Show / Hide
ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள், Aagathu Min Ezhuginra Megankaal - சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே!
என் ஆகத்து, En Aagathu - என் மார்விலுண்டான
இள கொங்கை, Ila Kongai - இள முலைகளை
தாம் விரும்பி, Thaam Virumbi - அவ் வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு, Pon Aagam Pulkutharku - அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில்
நாள் தோறும், Naal Thorum - நித்யமும்
என் புரிவடைமை, En Purivadaimai - எனக்கு ஆசையிருக்கிறபடியை
வேங்கடத்துத் தன் ஆகம், Vengaduthu Than Aagam - திருமலையிலே தனது திருமேனியில்
திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு செப்புமினே, Thirumangai Thangiya Seer Maarvarkku cheppumine - பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள்
581நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 5
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர் காள் ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான் தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே
பதவுரை Show / Hide
வேங்கடத்து, Vengadathu - திருமலையிலே
தேன் கொண்ட மலர் சிதற, Then Konda Malar Sidhara - தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி
திரண்டு ஏறி பொழிலீர்காள், Thirandu Eri Pozhileerkaal - திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த, Vaan Kondhu Kilarndhu Ezhundha - ஆகாயத்தைக் கபளீகரித்துக் கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள
மா முகில்காள்!, Maa Mugilkaal! - காள மேகங்களை!
ஊன் கொண்டவள் உகிரால், Oon Kondaval Ukiraal - வலியள்ளவையாய் கூர்மை யுடையவையான நகங்களாலே
இரணியனை உடல் இடந்தான் தான், Iraniyanai Udal Idandhaan thaan - ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான்
கொண்ட, Konda - என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன
சரி வளைகள், Sari Valaigal - கை வளைகளை
தரும் ஆகில், Tharum aagil - திருப்பிக் கொடுப்பதாக விருந்தால்
சாற்றுமின், Saatrumin - எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள்
582நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 6
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள் உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே
பதவுரை Show / Hide
சலம் கொண்டு, Salam Kondu - ஸமுத்ர ஜலத்தை முகந்து கொண்டு
கிளர்ந்து எழுந்த, Kilarndhu Ezhundha - மேற் கிளம்பி விளங்குகின்ற
தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே!
மா வலியை, Maa Valiyai - மஹா பலியிடமிருந்து
நிலம் கொண்டான் வேங்கடத்து, Nilam Kondaan Vengadathu - பூமியை ஸ்வாதீநப் படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே
நிரந்து, Nirandhu - பரவி
ஏறி, Eri - உயர விருந்து
பொழிவீர் காள்!, Pozhiveer kaal! - பொழிகின்ற மேகங்களே!
உலங்கு உண்ட, Ulangu unda - பெருங்கொசுக்கள் புஜித்த
விளங்கனி போல் உள் மெலிய, Vilangani pol ul Meliya - விளாம்பழம் போல நான் உள் மெலியும் படி
புகுந்து, Pugundhu - என்னுள்ளே பிரவேசித்து
என்னை, Ennai - என்னுடைய
நலம் கொண்ட, Nalam Konda - நிறைவுகளை அபஹரித்த
நாரணற்கு, Naaranarku - நாராயணனுக்கு
என் நடலை நோய், En Nadalai noi - எனது கஷ்ட வ்யாதியை
செப்புமின், Seppumin - தெரிவியுங்கள்
583நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 7
சங்க மா கடல் கடைந்தான் த்ண் முகில்காள் வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே
பதவுரை Show / Hide
சங்கம், Sangam - சங்குகளை யுடைத்தாயும் பெருமை வாய்ந்தது
மா, Maa - பெருமை வாய்ந்ததாயுமான
கடல், Kadal - கடலை
கடைந்தான், Kadainthaan - கடைந்தருளின பெருமான் எழுந்தருளி யிருக்கிற
வேங்கடத்து, Vengadathu - திருமலையில் திரிகிற
விண்ணப்பம், Vinnapam - விஜ்ஞாபம் யாதெனில்
கொங்கை மேல், Kongai Mel - எனது முலைகளின் மேல் (பூசப் பட்டுள்ள)
குங்குமத்தின் குழம்பு, Kungumathin Kuzhambu - குங்குமக் குழம்பானது
அழிய, Azhiya - நன்றாக அவிந்து போம்படி
தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே!
செம் கண் மால், Sem kan maal - புண்டரீகாக்ஷனான அவ் வெம்பெருமானுடைய
சே அடி கீழ், Se Adi keezh - செவ்விய திருவடிகளின் கீழ்
அடி வீழ்ச்சி, Adi Veezhchi - அடியேனுடைய
ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும்
புகுந்து தங்கும் ஏல், Pugundhu Thangum Yel - அவன் வந்து ஸம்ஸ்லேஷிப்பானாகில் (அப்போது தான்)
என் ஆவி தங்கும், En Aavi Thangum - என் பிராணன் நிலை நிற்கும் என்பதாம்
உரையீரே, Uraiyire - (இவ் விண்ணப்பத்தை அப் பெருமானிடத்துச்) சொல்லுங்கள்
584நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 8
கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே
பதவுரை Show / Hide
கார் காலத்து, Kaar Kaalathu - வர்ஷ காலத்திலே
வேங்கடத்து எழுகின்ற, Vengadathu Ezhuginra - திருமலையிலே வந்து தோற்றா நின்ற
கார் முகில்காள், Kaar Mugilkaal - காள மேகங்களே!
போர் காலத்து, Por Kaalathu - யுத்த ஸமயத்திலே
எழுந்தருளி, Ezhundharuli - (போர் களத்தில்) எழுந்தருளி
பொருதவனார், Poruthavanar - போர் செய்து வெற்றி பெற்ற இராம பிரானுடைய
பேர், Per - திரு நாமங்களை
சொல்லி, Solli - ஸங்கீர்த்தநம் பண்ணி
நீர் காலத்து எருக்கில் அம் பழ இலை போல் வீழ்வேனை, Neer Kaalathu Erukkil Am Pazha Ilai Pol Veezhvenai - மழைகாலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று விழுவது போல் ஒசிந்து விழுகின்ற எனக்கு
வார் காலத்து ஒரு நாள், Vaar Kaalathu Oru Naal - நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாளாகிலும்
தம் வாசகம் தந்தருளாரே, Tham Vasagam Thandharulare - தம்முடைய ஒரு வார்த்தையை அருளா தொழிவரோ?
585நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 9
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே
பதவுரை Show / Hide
வேங்கடத்தை, Vengadathai - திருமலையை
பதி ஆக, Pathi aaga - இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள், Vazhveerkal - வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த, Madham Yaanai pol Ezhundhu - மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
பாம்பு அணையான், Paambu Anaiyaan - சேஷ சாயியான எம்பெருமானுடைய
வார்த்தை, Vaarthai - வார்த்தை யானது
என்னே, Enne - இப்படி பொய்யாய் விட்டதே
தான், Thaan - அவ் வெம்பெருமான் தான்
என்றும், Endrum - எப்போதைக்கும்
கதி ஆவான், Kathi Aavaan - (ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து
கருதாது, Karuthaadhu - அத் தன்மையை நினையாமல்
ஓர் பெண் கொடியை, Or Pen Kodiyai - ஒரு பெண் பிள்ளையை
வதை செய்தான், Vadhai Seidhaan - கொலை பண்ணினான்
என்னும் சொல், Ennum Sol - என்கிற சொல்லை
வையகத்தார், Vaiyagathaar - இப் பூமியிலுள்ளவர்கள்
மதியாரே, Mathiyaare - மதிக்க மாட்டார்களே
586நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 10
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய் மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே
பதவுரை Show / Hide
நல் நுதலாள், Nal Nudhalaal - விலக்ஷணமான முகத்தை யுடையளாய்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை, Pogathil Vazhuvadha Puthuvaiyar Kon Kodhai - பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
நாகத்தின் அணையான் வேங்கடக் கோனை, Naagathin Anaiyaan Vengada Konai - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையனான திருவேங்கட முடையானை
நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு
உரை செய், Urai Sei - அருளிச் செய்ததாய்
மேகத்தை விட்டு அதில் விண்ணப்பம், Megathai Vittu Adhil Vinnapam - மேகத்தை தூது விடுவதாக அமைந்த லிண்ணப்பமாகிய
தமிழ், Thamizh - இத் தமிழ்ப் பாசுரங்களை
ஆகத்து வைத்து, Aagathu Vaithu - ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு
உரைப்பாரவர், Uraipaaravar - ஓத வல்லவர்கள்
அடியார் ஆகுவர், Adiyaar Aaguvar - எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் பண்ணப் பெறுவர்கள்