திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1728 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன்) 1 | கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –8-9-1 | பதவுரை Show / Hideமானம் கை மதம் யானை, Maanam Kai Matham Yaanai - நீண்ட துதிக்கையையுடையதும் மதங்கொள்ளுமியல்வுடையதுமான கஜேந்திரனுடைய இடர், Idar - துயரத்தை தீர்த்த, Theertha - போக்கியருளின கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும் மை, Mai - மைபோன்ற நிறத்தையுடைய மானம் மணியை, Maanam Maniyai - பெருவிலைபெறும் நீல ரத்னம் போன்றவனும் அணி கொள் மரதகத்தை, Ani Kol Marathakaththai - அழகு பொருந்திய மரதகப் பச்சை போன்றவனும் எம்மானை, Emmaanai - எமக்கு ஸ்வாமியும் எம்பிரானை, Embiraanai - எமக்கு மஹோபகாரம் செய்தருள்பவனும் ஈசனை, Eesanai - ஸர்வேச்வரனும் எம் மனத்துள் அம்மானை, Em Manaththul Ammmaanai - என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை அடியேன் அடைந்து, Adiyean Adaindhu - அடியேன் ஆச்ரயித்து உய்ந்து போனேன், Uyinthu Ponaen - உஜ்ஜீவித்துப் போனேன் |
| 1729 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை – ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன்) 2 | தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2 | பதவுரை Show / Hideதரு, Tharu - கல்பவிருக்ஷம் போன்றவனும் (- (அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேன்-,)) மானம், Maanam - பெரிய மழை முகிலை, Mazhai Mukilai - காளமேகம் போன்றவனும், பிரியாது, Priyaadhu - ஒரு காலும் விட்டுநீங்காமல் தன் அடைந்தார், Than Adaindhaar - தன்னை வந்து பணிந்தவர்கட்கு வரும், Varum - நேர்கின்ற மானம், Maanam - அவமானத்தை தவிர்க்கும், Thavirkum - போக்குகின்றவனும் மணியை, Maniyai - நீல மணிபோன்றவனும் அணி உருவின், Ani Uruvin - அழகிய வடிவத்தையுடைய திருமாலை, Thirumaalai - லக்ஷ்மீநாதனும் அம்மானை, Ammaanai - ஸர்வசேஷியா யிருப்பவனும் அமுதத்தை, Amudhatthai - அமிருதம் போன்றவனும் கடல் கிடந்த பெருமானை, Kadal Kidandha Perumai - திருபாற்கடலில் திருகண்வளர்ந்தருளும் பெருமானுமான ஸ்ரீசௌரிப் பெருமானை |
| 1730 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார்) 3 | விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக) ஏழ்விடை, Ezhuvidai - ஏழு ரிஷபங்களை வெகுண்டு, Vegundu - சீறிக்கொண்டு அடர்த்து, Adarthu - வலியடக்கினவனும், விலங்கல், Vilangal - த்ரிகூடபர்வதத்தில் உற, Ura - சென்று சேரும்படியாக படையால், Padaiyal - (வாநர) ஸேனைகளைக்கொண்டு ஆழி, Aazhi - ஸமுத்ரத்தை தட்ட, Thatta - அடைத்தவனும், பரமன், Paraman - எல்லாரினுஞ் சிறந்தவனும் பரம் சோதி, Param Sothi - சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும் மடை ஆர், Madai Aar - மடைகளெங்கும் நிரம்பிய நீலம், Neelam - நீலோற்பல மலர்கள் மல்கும், Malkum - வியாபித்திருக்கப் பெற்ற வயல், Vayal - கழனிகளாலே சூழ், Sool - சூழப்பட்ட கண்ணபுரம் ஒன்று, Kannapuram Ondru - திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை உடையானுக்கு, Udaiyanukku - (இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு அடியேன், Adiyen - சேஷபூதனான நான் ஒருவர்க்கு, Oruvarkku - வேறுசிலர்க்கு உரியேனோ, Uriyenoo - உரிமைப்படுவேனோ? |
| 1731 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே – இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை – அடைந்து உய்ந்து போனேனே) 4 | மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே –8-9-4 | பதவுரை Show / Hideமிக்கானை, Mikkaanai - சிறந்தவனும் (- (அடைந்து உய்ந்து போனேன்-.)) மறை ஆய் விரிந்த விளக்கை, Marai Aayi Virindha Vilakkai - வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும் என்னுள் புக்கானை, Ennul Pukkaanaai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும் புகழ் சேர், Pugazh Ser - கீர்த்தி வாய்ந்தவனும் பொலிகின்ற பொன்மலையை, Polikindra Ponmalaiya - ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தக்கானை, Thakkaanai - தகவுடையவனும் கடிகை தட குன்றின் மிசை இருந்த, Kadikai Thada Kunrin Misai Irundha - கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற அக்காரக் கனியை, Akkaarak Kaniyai - அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை |
| 1732 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன – நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து – இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் – நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ) 5 | வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5 | பதவுரை Show / Hideஎந்தாள், Endhaal - எம்பெருமானே! என் மனத்தே, En Manathae - என் நெஞ்சினுள்ளே நீ வந்தாய், Nee Vandhaai - நீ வந்து புகுந்தாய்; வந்து புகுந்து பின்னை, Vandhu Pugundhu Pinnai - அங்ஙனம் வந்து சேர்ந்த பின்பு போய் அறியாய், Poi Ariyaai - திரும்பிப்போவதை அடியோடு மறந்திட்டாய்; இதுவே, Idhuvae - இந்தப் பேறுதானே அமையாதோ, Amaiyaa Tho - போராதோ? கொந்து ஆர், Kondhu Aar - கொத்துக்கள் நிரம்பிய பை பொழில், Pai Pozhil - பரந்த சோலைகளினால் சூழ், Sool - சூழப்பட்ட குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே கிடந்து, Kidandhu - சாய்ந்தருளி உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த மைந்தா, Maindha - ஸுந்தரனே!, உன்னை, Unnai - உன்னை என்றும், Endrum - என்றைக்கும் மறவாமை பெற்றேன், Maravaamai Pettraen - மறவாமலிக்கப் பெற்றேன். |
| 1733 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சைப் பார்த்து அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி அவன் நம்மை உபகரித்து நின்றான் நீ தப்பச் செய்யா நின்றாய் – என்கிறார்) 6 | எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6 | பதவுரை Show / Hideஎஞ்சா, Enjaa - ஒருகாலும் குறைதலில்லாத வெம் நரகத்து, Vem Narakathu - கொடிய நரகத்திலே அழுந்தி, Azhundhi - ஆழங்காற்பட்டு நடுங்குகின்றேற்று அடியேனை, Nadungikindretru Adiyanai - நடுங்குகின்ற என்னை அஞ்சேல் என்று, Anjeyl Endru - ‘பயப்படாதே’ என்று தேற்றி ஆட்கொள்ள வல்லானை, Aadkolla Vallaanaik - அடிமைகொள்ள வல்லவனும் மஞ்சு ஆர் மாளிகை சூழ், Manju Aar Maaligai Soozh - மேகமண்டலத்தளவும் ஓங்கின திருமாளிகைகளால் சூழப்பட்டு வயல், Vayal - வயல்களையுடைத்தான ஆலி, Aali - திருவாலியில் எழுந்தருளியிருக்கிற மைந்தனை, Maindhanai - ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிப்பெருமானை நெஞ்சே, Nenjey - மனமே! நீ, Nee - நீ இறைப்பொழுதும், Iraippoludhum - க்ஷணகாலமும் நினையாது இருத்தி கண்டாய், Ninaiyadhu Irudhi Kandaai - நினையாமலேயிருக்கிறாயே. |
| 1734 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன – இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என் புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில் இது வன்றோ புறம்பு உள்ளார் படி) 7 | பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே –8-9-7 | பதவுரை Show / Hideபெற்றார், Petraar - என்னைப் பெற்ற தாய்தந்தையர் (- (என் ஏழை நெஞ்சே!- ;)) பெற்று ஒழிந்தார், Petru Ozhindhaar - பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்; பின்னும், Pinnum - பின்பு அடியேனுக்கு, Adiyanukku - அடியேனுக்கு உற்றான் ஆய் நின்று, Utran Aayi Nindru - ஸகலவித பந்துவுமாயிருந்து கொண்டு வளர்த்து, Valarthu - என்னை வளரச்செய்து என் உயிர் ஆகி நின்றானை, En Uyir Aagi Nindraanai - (அவ்வளவோடும் விடாமல்) எனக்கு உயிராயிருந்து கொண்டு மேலும் நன்மைகளைச் செய்பவனும் முற்றா மா மதி, Mutraa Maa Mathi - பருவம் நிரம்பாத சந்திரனுடைய கோள், Kol - க்ஷயரோகத்தை விடுத்தானை, Viduthaanai - போக்கினவனுமான எம்மானை, Emmaanai - எம்பெருமானை எத்தால், Eththal - எக்காரணம்பற்றி யான் மறக்கேன், Yaan Marakken - நான் மறக்க வல்லேன்? இது சொல், Idhu Sol - இவ்விஷயத்திற்கு விடைகூறு. |
| 1735 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு உற்றானாய் நின்றவன் பண்ணின உபகாரம் தான் என் என்ன ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி தந்தவன் அன்றோ -என்கிறார் அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில்) 8 | கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே –8-9-8 | பதவுரை Show / Hideகற்றார், Kattrar - விவேகிகள் பற்று அறுக்கும், Patru Arukkum - ‘இதன் ஸம்பந்தமே நமக்கு வேண்டா’ என்று வெறுத்து ஒழிக்கும்படியான பிறவி பெருகடலே, Piravi Perugadale - ஸம்ஸாரமாகிற பெரிய கடலையே பற்றா, Pattra - போக்யமாகப் பற்றி அடியேன் வந்து பிறந்தேன், Adiyen Vandu Pirandhen - (இந்நிலத்திலே) அடியேன் வந்து (பலபிறப்பும்) பிறவாநின்றேன் பிறந்த பின்னை, Pirandha Pinnai - இப்படி பிறந்து வருமடைவிலே, வற்றா நீர் வயல் சூழ், Vatra Nee Vayal Soozh - ஒருகாலும் வற்றாத நீர்வளமுடைய கழனிகளாலே சூழப்பட்ட வயலாலி, Vayalali - ‘வயலாலி’ என்றேபெயர் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கிற அம்மானை, Ammaanai - எம்பெருமானை பெற்றேன், Petren - ப்ராப்தனானேன், பெற்றதுவும், Pettrathuvum - அவனைப்பெற்றவாறே பிறவாமை பெற்றேன், Piravamai Petren - மறுபிறப்பில்லாமை பெற்றேன் |
| 1736 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் – இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே) 9 | கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ –8-9-9 | பதவுரை Show / Hideகண் ஆர், Kan Aar - கண் பொருந்தும்படியான (ஸுந்தரமான) கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்திலும் கடிகை, Kadikai - திருக்கடிகாசலத்திலும் தண் ஆர், Than Aar - குளிர்ச்சி பொருந்திய தாமரை சூழ், Thamarai Soozh - தாமரைகளாலே சூழப்பட்ட தலைச்சங்கம் மேல் திசையுள், Thalaichangam Mel Thisaiyul - தலைச்சங்கமென்னும் பதியில் மேலைப்பக்கத்திலும் விண்ணோர், Vinnor - நித்யஸூரிகளுக்கு நாள் மதியை, Naal Madiyai - நாள்தோறும் சந்திரன்போலே அநுபவிக்கவுரியனாய் விரிகின்ற வெம் சுடரை, Virikindra Vem Sudarai - உதயகாலத்தில் விரியும் ஸூரியன்போலே ப்ரதாபம் மிக்கவனான எம்பெருமானை இங்கு, Ingu - இந்நிலத்திலே கண் ஆர கண்டுகொண்டு, Kan Aara Kandukondu - கண்கள் த்ருப்திபெறுமளவும் காணப்பெற்று களிக்கின்றது, Kalikkindrathu - ஆநந்திப்பது என்று கொல், Endru Kol - என்றைக்கோ?. |
| 1737 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – அன்றிக்கே – சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல்) 10 | செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –8-9-10 | பதவுரை Show / Hideகரு, Karhu - கர்ப்பத்தில் நீர், Neer - நீர்கொண்ட முகில், Mugil - மேகம் போன்ற வண்ணன், Vannan - திருநிறத்தையுடையரான கண்ணபுரத்தானை, Kannapuraththaanai - சௌரிப்பெருமாள் விஷயமாக,- செரு நீர வேல் வலவன், Seru Neera Vel Valavan - யுத்தம் செய்வதையே இயல்வாக வுடைய வேற்படையைப் பிரயோகிக்கவல்லவரும் மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த) இரு நீர், Iru Neer - மிக்க நீர்மையையுடைய இன் தமிழ், In Tamil - இனிய தமிழினாலாகிய இன் இசை, In Isai - இனிய இசையையுடைய இவை மாலைகள் கொண்டு, Ivai Malaigal Kondo - இச்சொல் மாலைகளைக் கொண்டு தொண்டீர், Thondheer - தொண்டர்களே! வரு நீர் வையம் உய்ய, Varu Neera Vaiyam Uyy - கடல் சூழ்ந்த உலகம் உஜ்ஜீவிக்கும்படி பாடி, Paadi - வாயாரப்பாடி ஆடுமின், Aadumin - மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கூத்தாடுங்கள் |