| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3370 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 1 | ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1 | aazhi ezha,ஆழி எழ - திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும் sangum villum ezha,சங்கும் வில்லும் எழ - பாஞ்சஜந்யமும் சார்ங்கமும் தோன்றவும் thandum vaalum ezha,தண்டும் வாளும் எழ - கதையும் நந்தகமும் தோன்றவும் thisai vaazhi ezha,திசை வாழி எழ - திசைகள் தோறும் மங்களாசாஸன கோஷம் கிளம்புவும் andam mozhai ezha,அண்டம் மோழைஎழ - (உயரவளர்ந்தபடியாலே) அண்டகபாலம் பிளந்து ஆவரணஜலம் குமிழி கிளம்பும் படியாகவும் mudi paadham ezha,முடி பாதம் எழ - (வளர்ந்த விரைவாலே) திருமுடியும் திருவடியும் ஒக்கக்கிளம்பும் படியாகவும் oozhi ezha,ஊழி எழ - மாவலியால் துன்பப் பட்டகாலம் போய்) நல்லகாலம் வந்து தோற்றும்படியாகவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ulagam kondaa aaru eyy,உலகம் கொண்ட ஆறு ஏ - (திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!. |
| 3371 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 2 | ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2 | appan,அப்பன் - ஸர்வேச்வரன் saaru pada,சாறு பட - (தேவர்களுக்கு) மஹோத்ஸவமுண்டாம்படியாக amudham konda nanru,அமுதம் கொண்ட நான்று - (கடல் கடைந்து) அமுதங்கொண்ட காலத்திலே. aaru,ஆறு - கடலிலே சென்று சேர்வதற்காக வந்து கொண்டிருந்த) ஆறுகளானவை malaikku edhiruthu oadum oli,மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி - தங்கள் பிறப்பிடமான மலைகளையே நோக்கித் திரும்பியோடுகிறஓலியும். aravu ooru sulaay,அரவு ஊறு சுலாய் - வாஸீகியென்கிற பாம்பினுடம்பைச் சுற்றி malai theykkum oli,மலை தேய்க்கும் ஓலி - மந்தர மலையிலே தேய்க்கிற (ஓலியும் kadal maaru sulandru,கடல் மாறு சுழன்று - கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று alaikkindra oli,அழைக்கின்ற ஒலி - கோஷிக்கிற கோஷமும் உண்டாயின. |
| 3372 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 3 | நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3 | appan,அப்பன் - ஸர்வேச்வரன் oondri idandhu eittril kondan naal,ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் - (பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில் ezhu mannum,ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை naantril,நான்றில - நழுவாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu malai,ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்) naantril,நான்றில - சலியாதவையாகி thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu kadal,ஏழ் கடல் - ஸப்த ஸாகரங்களும் naanaril,நானறில - உடைந்தொழுகாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன. eyy,ஏ - ஆச்சரியம் |
| 3373 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 4 | நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4 | naal ezvum,நாள் எழவும் - காலவ்யவஸ்தைபேரும் படியாகவும் nilam neer ezvum,நிலம் நீர் எழவும் - நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும் vinnum koalum ezhu,விண்ணும் கோளும் எழ - ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும் eri kaalum ezhu,எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும் malai thaal ezvum,மலை தாள் எழவும் - மலைகள் அடிபெயர்ந்து போகவும் sudarthaanum ezhu,சுடர்தானும் எழ - நக்ஷ்த்திரம் முதலிய சுடர்ப்பொருள்கள் நிலை குலையவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ooli ezhu ulagam unda oon,ஊளி எழ உலகம் உண்ட ஊண் - ஆரவரமுண்டாம்படி உலகங்களை உண்டருளின உணவு என்ன ஆச்சரியம்! |
| 3374 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 5 | ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5 | appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான கண்ணபிரான் kaanudai bharatham kai arai pothu,காணுடை பாரதம் கை அறை போழ்து - ஆச்சரியமான பாரதயுத்தத்தை அணிவகுத்த போது, oon udai mallar thadarndha oli,ஊண் உடை மல்லர் ததர்ந்த ஒலி - வலியை யூட்டும் உணவுகளைக்கொண்ட பெருமிடுக்கரான மல்லர்கள் (த்வந்த்வயுத்தம் பண்ணி, நேரிந்து விழுகிற ஒசையும் mannar,மன்னர் - அரசர்களினுடைய aan udai senai,ஆண் உடை சேனை - வீர புருஷர்களை யுடைத்தான சேனைகளானவை nadungum oli vinnull,நடுங்கும் ஒலி விண்ணுள் - நடுங்குகிற சத்தமும் விண்ணுலகத்திலே aen udai devar,ஏண் உடை தேவர் - மதிப்பராக எண்ணப்பட்ட தேவர்கள் velippatta oli,வெளிப்பட்ட ஒலி - (யுத்த விநோதம் காண்கைக்காக) வெளிப் பட்ட ஓசையும் ஆயின |
| 3375 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 6 | போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6 | pozhndhu melindha,போழ்ந்து மெலிந்த - போதுபோனவாறே pun chekkaril,புன் செக்கரில் - செக்கர் வானமிடுகிற வளவிலே vaan thisai,வான் திசை - ஆகாசமும் திக்குக்களும் soolum ezundhu,சூழும் எழுந்து - சூழக்கிளம்பி udhiram punal aa,உதிரம் புனல் ஆ - ரத்த வெள்ளமாம்படி appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி aazh thuyar seydhu,ஆழ் துயர் செய்து - அளவிறந்த துன்பத்தை விளைந்து asurai kollum aaru,அசுரை கொல்லும் ஆறு - இரணியாசுரனைக் கொன்ற விதமானது malai keelthu pilandha singam otthadhu,மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது - ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது. aal,ஆல் - ஆச்சரியம். |
| 3376 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 7 | மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின் நூறு பிணம் மலை போற் புரளக் கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7 | appan,அப்பன் - ஸ்வாமியான ஸ்ரீராமபிரான் ilangai neeru pada setra ner,இலங்கை நீறு பட செற்ற நேர் - லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்) maruniraittu iraikkum sarangaL,மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள் - எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே inam nooru pinam,இனம் நூறு பிணம் - இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை malai pol purala,மலை போல் புரள - மலை மலையாகப் புரண்டு விழவும் kadal,கடல் - கடலானது udhiram punal aa aaru maṭuthu,உதிரம் புனல் ஆ ஆறு மடுத்து - ரக்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே எதிர்த்தோடும்படியாகவுமிருந்தது |
| 3377 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 8 | நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8 | appan,அப்பன் - ஸ்வாமியான கண்ண பிரான் ner sari vaanan,நேர் சரி வாணன் - முதுகுகாட்டியொடின பாணாஸுரனுடைய thinthol konda anru,திண்தோள் கொண்ட அன்று - திண்ணிய தோள்களைத்துணித்து வென்றி கொண்ட அக்காலத்திலே kozhi kodi kondaan,கோழி கொடி கொண்டான் - மயிலைக் கொடியாகக் கொண்ட ஸீப்ரமணியன் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர்நில்லாமல் சாய்ந்துபோனான்; pinnum,பின்னும் - அதற்குமேலே eriyum analon,எரியும் அனலோன் - ஜ்வலித்துக்கொண்டிருந்த அக்நியும் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர் நில்லாமல் சரிந்தான்; pinnum,பின்னும் - அதற்குமேலும் mukkan mooruthi,முக்கண் மூர்த்தி - முக்கண்ணனான சிவ பிரானும் ner sarindhaan kandeer,நேர் சரிந்தான் கண்டீர் - அப்படியே முதுகிட்டுப்போனான கிடீர். |
| 3378 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 9 | அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9 | appan,அப்பன் - ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம் anru,அன்று - அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்; man neer eri kaal vin,மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும் malai mudhal,மலை முதல் - மலைகள் முதலானவற்றையும் seydhadhum,செய்ததும் - படைத்ததும் anru,அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்; sudar irandu,சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும் piravum,பிறவும் - மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும் ulagam seydhadhum,உலகம் செய்ததும் - உலகங்களைப்படைத்ததும், seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் anru,அன்று - அந்த க்ஷணத்திலேயாம் pinnum,பின்னும் - அதுக்குமேலே mazhai,மழை - மேகங்களையும் uyir,உயிர் - மழையினால்பிழைக்கும் உயிர்களையும் thevum,தேவும் - மழைக்குக் கடவர்களான தேவர்களையும் matrum,மற்றும் - மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும் seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் |
| 3379 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 10 | மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10 | meynirai,மேய்நிரை - மேய்கிற பசுக்களானவை keel puga,கீழ் புக - கீழே யொதுங்கும்படியாகவும் maa purala,மா புரள - (கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும் sunaivaa nirai neer,சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது pilirisoriya,பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும் inam aanirai paadi ange oadungga,இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும் appan,அப்பன் - கண்ணபிரான் thee mazhai kaathu,தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க kunṟam eduthaan,குன்றம் எடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான் |
| 3380 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 11 | குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல் நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11 | kunram edutha piran,குன்றம் எடுத்த பிரான் - கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய adiyarodum,அடியாரொடும் - அடியார்களோடு கூட ondri nindra,ஒன்றி நின்ற - ஒருமைப்பட்டிராநின்ற sadagopan,சடகோபன் - நம்மாழ்வாருடைய urai seyal,உரை செயல் - அருளிச்செயலாய் or aayirathu nanri punaintha,ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த - ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான ivai pathum,இவை பத்தும் - இத்திருவாய்மொழி mevi karparkku,மேவி கற்பார்க்கு - தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு venri tharum,வென்றி தரும் - பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும் |