| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 64 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 1 | உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே –1-5-1 | உய்ய,Uyya - (ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக உலகு,Ulagu - லோகங்களை படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து உண்ட,Unda - (பின்பு ப்ரளயம் வந்தபோது அவற்றை) உள்ளே வைத்து ரக்ஷித்த மணி வயிறா,Mani vayiraa - அழகிய வயிற்றை யுடையவளே பல ஊழி ஊழி தொறு,Pala oozhi oozhi thoru - பல கல்பங்கள் தோறும் ஆலின் இலை அதன் மேல்,Aalin ilai athan mel - ஆலிலையின் மேல் பைய,Paiya - மெள்ள உயோகு துயில் கொண்ட,Uyogu thuyil konda - யோகநித்திரை செய்தருளின பரம் பரனே,Param parane - பர ஸ்மாத் பரனானவனே! பங்கயம்,Pangayam - தாமரை மலர் போன்று நீள்,Neel - நீண்டிருக்கின்ற நயனம்,Nayanam - திருக் கண்களையும் அஞ்சனம்,Anjanam - மை போன்ற மேனியனே ஐய,Meniyaane aiya - திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே! செய்யவள்,Seyyaval - செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான நின் அகலம்,Nin akalam - உன் திரு மார்வானது சேமம் என கருதி,Semam ena karuthi - (இந்நிர்த்தனத்தால் அசையாமல்) ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு செல்வு பொலி,Selvu poli - ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான மகரம்,Makaram - திரு மகரக் குழைகளோடு கூடின காது,Kaadhu - திருக் காதுகளானவை திகழ்ந்து இலக,Thigazhnthu ilaga - மிகவும் விளங்கும்படி எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 65 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 2 | கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய். மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே. ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-2 | கோன்,Kon - வலிமையை யுடைய அரியின்,Ariyin - (நா) சிங்கத்தின் உருவம் கொண்டு,Uruvam kondu - வேஷங்கொண்டு அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய உடலம்,Udalam - சரீரத்தில் குருதி,Kuruthi - ரத்தமானது குழம்பி எழ,Kuzhambi ezha - குழம்பிக் கிளரும்படியாகவும் அவன்,Avan - அவ்வஸுரனானவன் மீள,Meela - மறுபடியும் மகனை,Maganai - தன் மகனான ப்ரஹ்லாதனை மெய்ம்மை கொள கருதி,Meimmai kola karuthi - ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி கூர் உகிரால்,Koor ugiraal - கூர்மையான நகங்களாலே குடைவாய்,Kudaivai - (அவ்வசுரனுடலைக்) கிழித்தருளினவனே! மேலை,Melai - மேன்மை பொருந்திய அமரர் பதி,Amarar pathi - தேவேந்திரன் மிக்கு வெகுண்டு வா,Mikku vekundu vaa - மிகவும் கோபித்துவா (அதனால்) காளம்,Kaalam - கறுத்த நில்,Nil - சிறந்த மேகம் அவை,Megam avai - மேகங்களானவை கல்லொடு,Kallodu - கல்லோடு கூடின கார் பொழிய,Kaar poliya - வர்ஷத்தைச் சொரிய கருதி,Karuthi - (‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து வரை,Varai - (அந்த) கோவர்த்தநகிரியை குடையா,Kudaiyaa - குடையாகக்கொண்டு காலிகள்,Kaaligal - பசுக்களை காப்பவனே,Kaappavane - ரக்ஷித்தருளினவனே! ஆன,Aana - (இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 66 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 3 | நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே. நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால் தம்மனையானவனே. தரணிதலமுழுதும் தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும் விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும் விரவியவேலைதனுள்வென்றுவருமவனே. அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.1-5-3 | ம்முடை,Mmudai - எங்களுக்கு நாயகனே,Naayakane - நாதனானவனே! நால் மறையின்,Naal maraiyin - நாலு வேதங்களுடைய பொருளே,Porule - பொருளாயிருப்பவனே! நாபியுள்,Naabiyul - திருநாபியில் முளைத்திராநின்ற நல் கமலம்,Nal kamalam - நல்ல தாமரைமலரிற் பிறந்த நான்முகனுக்கு,Naanmukhanukku - பிரமனுக்கு ஒருகால்,Orukaal - அவன் வேதத்தைப் பறிகொடுத்துத் திகைத்த காலத்தில் தம்மனை ஆனவனே,Thammanai aanavane - தாய் போலே பரிந்து அருளினவனே! தரணி தலம் முழுதும்,Tharani thalam muzuthum - பூமி யடங்கலும் தாரகையின் உலகும்,Thaarakaiyin ulakum - நக்ஷத்ர லோக மடங்கலும் தடவி,Thadavi - திருவடிகளால் ஸ்பர்சித்து அதன் புறமும்,Athan puramum - அதற்குப் புறம்பாயுள்ள தேசமும் விம்ம,Vimm - பூர்ணமாம்படி வளர்ந்தவனே,Valarnthavane - த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே! வேழமும்,Vezhamum - குவலயாபீடமென்ற யானையும் ஏழ் விடையும்,Ezh vidaiyum - ஏழு ரிஷபங்களும் விரவிய,Viraviya - (உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த வேலைதனுள்,Velaithanul - ஸமயத்திலே வென்று,Vendru - (அவற்றை) ஜயித்து வருமவனே,Varumavane - வந்தவனே! அம்ம,Amma - ஸ்வாமியானவனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 67 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 4 | வானவர்தாம்மகிழவன்சகடமுருள வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே. கானகவல்விளவின்காயுதிரக்கருதிக் கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே. தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன் என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும் ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-4 | வானவர் தாம்,Vaanavar thaam - தேவர்கள் மகிழ,Magizha - மகிழும்படியாகவும் வல் சகடம்,Val sakadam - வலியுள்ள சகடாஸுரன் உருள,Urula - உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும் வஞ்சம்,Vancham - வஞ்சனையை உடையளான பேயின்,Peyin - பூதனையினுடைய முலை,Mulai - முலை மேல் தடவிக் கிடந்த நஞ்சு,Nanj - விஷத்தை அமுது உண்டவனே,Amudhu undavane - அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே! கானகம்,Kaanagam - காட்டிலுள்ளதான வல்,Val - வலிமை பொருந்திய விளவின்,Vilavin - விளாமரத்தினுடைய காய்,Kaai - காய்களானவை உதிர,Udhira - உதிரும்படி கருதி,Karuthi - திருவுள்ளத்திற் கொண்டு கன்று அது கொண்டு,Kanru adhu kondu - கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு எறியும்,Eriyum - (விளவின் மேல்) எறிந்தவனாய் கரு நிறம்,Karu niram - கறுத்த நிறத்தை யுடையனாய் என் கன்றே,En kanrae - என்னுடைய கன்றானவனே! தேனுகனும்,Thenukanum - தேனுகாஸுரனும் முரனும்,Muranum - முராஸுரனும் திண் திறல்,Thin thiral - திண்ணிய வலிவை யுடையனாய் வெம்,Vem - கொடுமை யுடையனான நரகன்,Naragan - நரகாஸுரனும் என்பவர் தாம்,Enbavar thaam - என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும் மடிய,Madiya - மாளும்படியாக செரு,Seru - யுத்தத்திலே அதிர,Athira - மிடுக்கை உடையயனாய்க் கொண்டு செல்லும்,Sellum - எழுந்தருளுமவனான ஆனை,Aanai - ஆனை போன்ற கண்ணனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 68 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 5 | மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய். முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுக–1-5-5 | வார் குழல்,Vaar kuzhal - நீண்ட மயிர்முடியை யுடையராய் நல் மடவார்,Nal madavaar - நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே வைத்தன,Vaiththana - சேமித்து வைக்கப்பட்டவையாய் மத்து,Mathu - மத்தாலே அளவும்,Alavum - அளாவிக் கடைகைக்கு உரிய தயிரும்,Thayirum - தயிரையும் நெய்,Ney - நெய்யையும் களவால்,Kalavaal - திருட்டு வழியாலே வாரி,Vaari - கைகளால் அள்ளி விழுங்கி,Vizhungi - வயிறார உண்டு உன்னிய,Unniya - உன்னை நலிய வேணும் என்னும் நினைவையுடையராய் ஒருங்கு,Orungu - ஒருபடிப்பட ஒத்த,Otha - மனம் ஒத்தவர்களாய் இணை மருதம்,Inai marutham - இரட்டை மருதமரமாய்க் கொண்டு வந்தவரை,Vanthavarai - வந்துநின்ற அஸுரர்களை ஊரு கரத்தினொடும்,Ooru karathinodum - துடைகளாலும் கைகளாலும் உந்திய,Unthiya - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின வெம்திறவோய்,Vem thiravoi - வெவ்விய வலிவை யுடையவனே! அத்த,Atha - அப்பனே! முத்து,Muthu - திருமுத்துக்கள் தோன்றும்படி இன்,In - இனிதான இள முறுவல்,Ila muruval - மந்தஹாஸமானது முற்ற,Mutra - பூர்ணமாக வருவதன் முன்,Varuvathan mun - வெளிவருவதற்கு முன்னே முன்னம் முகத்து,Munnam mugaththu - முன் முகத்திலே அணி ஆர்,Ani aar - அழகு மிகப் பெற்று மொய்,Moi - நெருங்கி யிரா நின்ற குழல்கள்,Kuzhalgal - திருக் குழல்களானவை அலைய,Alaiya - தாழ்ந்து அசையும்படி எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 69 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 6 | காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா. கானகமாமடுவில்காளியனுச்சியிலே தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா. துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே. ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய். ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.–1-5-6 | காய மலர்,Kaaya malar - காயாம் பூப் போன்ற நிறவா,Niravaa - நிறத்தை யுடையவனே! கரு முகில் போல்,Karu mugil pol - காள மேகம் போன்ற உருவா,Uruvaa - ரூபத்தை யுடையவனே கானகம்,Kaanagam - காட்டில் மா மடுவில்,Maa maduvil - பெரிய மடுவினுள்ளே கிடந்த காளியன்,Kaaliyan - காளிய நாகத்தினுடைய உச்சியிலே,Uchiyile - தலையின் மீது தூய,Thooya - மனோஹரமான நடம்,Nadam - நர்த்தநத்தை பயிலும்,Pailum - செய்தருளின சுந்தர,Sundara - அழகையுடையவனே! என் சிறுவா,En siruvaa - எனக்குப் பிள்ளை யானவனே! துங்கம்,Thungam - உன்னதமாய் மதம்,Madham - மதத்தை யுடைத்தான கரியின்,Kariyin - குவலயாபீடமென்னும் யானையினது கொம்பு,Kombu - தந்தங்களை பறித்தவனே,Pariththavane - முறித்தருளினவனே! ஆயம் அறிந்து,Aayam arindhu - (மல்ல யுத்தம்) செய்யும் வகையறிந்து பொருவான்,Poruvaan - யுத்தம் செய்வதற்காக எதிர் வந்த,Ethir vantha - எதிர்த்து வந்த மல்லை,Mallai - மல்லர்களை அந்தரம் இன்றி,Antharam indri - (உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி அழித்து,Azhiththu - த்வம்ஸம்செய்து ஆடிய,Aadiya - (இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த தான் இணையாய்,Thaan inaiyaai - திருவடிகளை யுடையவனே! ஆய,Aaya - ஆயனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 70 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 7 | துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய நப்பினைதன்திறமாநல்விடையேழவிய நல்லதிறலுடையநாதனும்ஆனவனே. தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என் அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. –1-5-7 | துப்பு உடை,Thuppu udai - நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான ஆயர்கள் தம்,Aayargal tham - இடையர்களுடைய சொல்,Sol - வார்த்தையை வழுவாது,Vazhuvaadhu - தப்பாமல் ஒரு கால்,Oru kaal - ஒரு காலத்திலே தூய,Thooya - அழகியதாய் கரு,Karu - கறுத்திரா நின்றுள்ள குழல்,Kuzhal - கூந்தலையுடையளாய் நல் தோகை,Nal thogai - நல்ல தோகையையுடைய மயில் அனைய,Mayil anaiya - மயில்போன்ற சாயலை யுடையளான நப்பின்னை தன் திறமா,Nappinnai than thiramaa - நப்பின்னைப் பிராட்டிக்காக நல்,Nal - (கொடுமையில்) நன்றான விடைஏழ்,Vidai ezh - ரிஷபங்களேழும் அவிய,Aviya - முடியும்படியாக நல்ல திறல் உடைய,Nalla thiral udaiya - நன்றான மிடுக்கை யுடையனாய் நாதன் ஆனவனே,Naadhan aanavane - அவ்விடையர்களுக்கு ஸ்வாமியானவனே! தன்,Than - தன்னுடைய மிகு சோதி,Migu sothi - நிரவதிக தேஜோரூபமான் பரமபதத்திலே புக,Puga - செல்லும்படியாக தனியே,Thaniye - தனியே ஒரு,Oru - ஒப்பற்ற தேர்,Ther - தேரை கடலி,Kadali - கடத்தி தப்பின,Thappina - கை தப்பிப்போன பிள்ளைகளை,Pillaihalai - வைதிகன் பிள்ளைகளை தாயொடு கூட்டிய,Thaaiodu kootiya - தாயோடு கூட்டின என் அப்ப,En appa-en appane - என் அப்பனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 71 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 8 | உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-8 | மன்னு,Mannu - (ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ குறுங்குடியாய்,Kurungudiyai - திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே! வெள்ளறையாய்,Vellaraiyai - திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே! மதிள் சூழ்,Mathil soozh - மதிலாலே சூழப்பட்ட சோலை மலைக்கு,Solai malaikku - திருமாலிருஞ்சோலை மலைக்கு அரசே,Arase - அதிபதியானவனே! கண்ணபுரத்து,Kannapuraththu - திருக் கண்ண புரத்திலே நிற்கிற அமுதே,Amudhe - அம்ருதம் போன்றவனே! என் அவலம்,En avalam - என் துன்பங்களை களைவாய்,Kalaivai - நீக்குபவனே! உன்னை,Unnai - (மகோ உதாரனான ) உன்னை ஒக்கலையில்,Okkalaiyil - இடுப்பிலே கொண்டு,Kondu - எடுத்துக் கொண்டு தம் இல்,Tham il - தங்கள் அகங்களிலே மருவி,Maruvi - சேர்ந்து உன்னொடு,Unnodu - உன்னோடு தங்கள்,Thangal - தங்களுடைய கருத்து ஆயின செய்து,Karuthu aayina seythu - நினைவுக்குத் தக்கபடி பரிமாறி வரும்,Varum - மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற கன்னியரும்,Kanniyarum - இளம்பெண்களும் மகிழ,Magizha - (இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும்படியாகவும் கண்டவர்,Kandavar - (மற்றும்) பார்த்தவர்களுடைய கண்,Kan - கண்களானவை குளிர,Kulira - குளிரும்படியாகவும் கற்றவர்,Katravar - (கவி சொல்லக்) கற்றவர்கள் தெற்றி வர,Thetri vara - பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படியாகவும் பெற்ற,Petra - உன்னை மகனாகப் பெற்ற எனக்கு,Enakku - என் விஷயத்திலே அருளி,Aruli - கிருபை செய்து செங்கீரை ஆடுக-;,Sengkirei aaduga - செங்கீரை ஆடுக-; ஏழ் உலகும்,Ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும் உடையாய்,Udaiyai - ஸ்வாமியானவளே! ஆடுக ஆடுக-.,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |
| 72 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 9 | பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே –1-5-9 | மறை,Marai - வேதத்தினுடைய ஏலும்,Ealum - தகுதியான பொருளே,Porule - அர்த்தமானவனே! பாலொடு,Paalodu - பாலோடே கூட நெய்,Ney - நெய்யும் தயிர்,Thayir - தயிரும் ஒண் சாந்தொடு,Onn saanthodu - அழகிய சந்தநமும் செண்பகமும்,Senbagamum - செண்பகம் முதலிய மலர்களும் பங்கயம்,Pangayam - தாமரைப் பூவும் நல்ல,Nalla - உத்தமமான கருப்பூரமும்,Karuppooramum - பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை நாறி வர,Naari vara - கலந்து பரிமளிக்க கோலம்,Kolam - அழகிய நறு பவளம்,Naru pavalam - நற் பவளம் போல் செம்,Sem - அழகியதாய் துவர்,Thuvar - சிவந்திருக்கிற வாயின் இடை,Vaayin idai - திருவதரத்தினுள்ளே கோமளம்,Komalam - இளையதான வெள்ளி முளை போல்,Velli mulai pol - வெள்ளி முளை போலே சில பல்,Sila pal - சில திரு முத்துக்கள் இலக,Ilaga - விளங்க நீலம் நிறத்து,Neelam nirathu - நீல நிறத்தை யுடைத்தாய் அழகு ஆர்,Azhagu aar - அழகு நிறைந்திரா நின்ற ஐம்படையின் நடுவே,Aimbadaiyin naduve - பஞ்சாயுதத்தின் நடுவே நின்,Nin - உன்னுடைய கனி,Kani - கொவ்வைக் கனி போன்ற வாய்,Vaai - அதரத்தில் ஊறுகின்ற அமுதம்,Amudham - அம்ருத ஜலமானது இற்று முறிந்து விழ,Itru murinthu vizha - இற்றிற்று விழ ஆடுக-.,Aaduga - ஆடுக-. |
| 73 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 10 | செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில் தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும் மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-10 | எங்கள் குடிக்கு,Engal kudikku - எங்கள் வம்சத்துக்கு அரசே,Arase - ராஜாவானவனே! செம் கமலம்,Sem kamalam - செந்தாமரைப் பூப் போன்ற கழலில்,Kalazhil - திருவடிகளில் சிறு இதழ் போல்,Siru idhazh pol - (அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற விரலில்,Viralil - திரு விரல்களில் சேர் திகழ்,Ser thigal - சேர்ந்து விளங்கா நின்ற ஆழிகளும்,Aazhilgalum - திருவாழி மோதிரங்களும் கிண் கிணியும்,Kin kiniyum - சதங்கைகளும் அரையில் தங்கிய,Araiyil thangiya - அரையில் சாத்தி யிருந்த பொன் வடமும்,Pon vadamum - பொன் அரை நாணும் (பொன்) தாள,Pon thaal - பொன்னால் செய்த காம்பையுடைய நல்,Nal - நல்லதான மாதுளையின் பூவொடு,Mathulaiyin poovodu - மாதுளம் பூக் கோவையும் பொன் மணியும்,Pon maniyum - (நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும் மோதிரமும்,Mothiramum - திருக்கை மோதிரங்களும் சிறியும்,Siriyum - (மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும் மங்கலம்,Mangalam - மங்களாவஹமான ஐம்படையும்,Aimpadaiyum - பஞ்சாயுதமும் தோள் வளையும்,Thol valaiyum - திருத் தோள் வளைகளும் குழையும்,Kuzhaiyum - காதணிகளும் மகரமும்,Magaramum - மகர குண்டலங்களும் வாளிகளும்,Vaaligalum - (திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும் சுட்டியும்,Suttiyum - திரு நெற்றிச் சுட்டியும் ஒத்து,Othu - அமைந்து இலக,Ilaga - விளங்கும்படி ஆடுக. ஆடுக.,Aaduga aaduga - ஆடுக. . . ஆடுக. |
| 74 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 11 | அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே. என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. –1-5-11 | அன்னமும்,annamum - ஹம்ஸ ரூபியாயும் மீன் உருவும்,meen uruvum - மத்ஸ்ய ரூபியாயும் ஆள் அரியும்,aal ariyum - நர ஸிம்ஹ ரூபியாயும் குறளும்,kuRalum - வாமந ரூபியாயும் ஆமையும்,aamaiyum - கூர்ம ரூபியாயும் ஆனவனே,aanavane - அவதரித்தவனே! ஆயர்கள்,aayargal - இடையர்களுக்கு நாயகனே,naayakane - தலைவனானவனே! என் அவலம்,en avalam - என் துன்பத்தை களைவாய்,kaLaiyaai - நீக்கினவனே! செங்கீரை ஆடுக,senkeerai aaduga - செங்கீரை ஆட வேணும் ஏழ் உலகும்,ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும் உடையாய்,udaiyaai - ஸ்வாமி யானவனே! ஆடுக ஆடுக என்று,aaduga aaduga enRu - பலகாலுமாடவேணும் என்று அன்னம் நடை,annam nadai - ஹம்ஸ கதியை யுடையனாய் மடவாள்,maDavaal - நற்குணமுடையளான அசோதை,asodhai - யசோதைப் பிராட்டியாலே உகந்த,ugandha - உகந்த சொல்லப் பட்ட பரிசு,parisu - ப்ரகாரத்தை ஆன,aana - பொருந்திய புகழ்,pugazh - புகழை யுடையரான புதுவை பட்டன்,puduvai paTTan - பெரியாழ்வார் உரைத்த,uraittha - அருளிச் செய்த இன் இசை,in isai - இனிய இசையை யுடைய தமிழ் மாலைகள்,thamizh maalaigal - தமிழ்த் தொடைகளான இ பத்து,i paththu - இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,vallaar - ஓத வல்லவர்கள் உலகில்,ulakil - இந்த லோகத்தில் எண் திசையும்,eN thisaikum - எட்டுத் திசைகளிலும் (பரந்த) புகழ்,pugazh - கீர்த்தியையும் மிகு இன்பமது,migu inbamathu - மிக்க இன்பத்தையும் எய்துவர்,eydhuththavar - பெறுவார்கள். |