Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஐயபுழுதி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
286ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
ஐய புழுதி உடம்ப ளைந்து இவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில் சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி யானோடு கை வைத்து இவள் வருமே–3-7-1
இவள்,Eval - இச் சிறு பெண்ணானவள்
ஐய புழுதியை,Ayya Puzhudhiyai - அழகிய புழுதியை
உடம்பு அளைந்து,Udambu Alaindhu - உடம்பிலே பூசிக் கொண்டு
பேச்சும் அலந்தலை ஆய்,Pechchum Alandhalai Aay - ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சை யுமுடையளாய்
செய்ய நூலின் சிறு ஆடை,Seyya Noolin Siru Aadai - சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை
செப்பன்,Seppan - செம்மையாக
உடுக்கவும் வல்லன் அல்லன்,Udukkavum Vallan Allan - [அரையில் தங்கும்படி] உடுக்கவும் மாட்டாதவளாயிரா நின்றாள்;
இவள்,Eval - இப்படியொரு பருவத்தை யுடையளான இவள்
சிறு தூதையோடு,Siru Thoodhaiyodu - (மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும்
முற்றிலும்,Mutrilum - சிறு சுளகையும்
கையினில்,Kaiyinil - கையில் நின்றும்
பிரிந்து இவள்,Pirindhu Ival - விட்டொழிகின்றிலள்;
இவள்,Eval - இப்படிக்கொத்த விளையாட்டை யுடைய இவள்
பை அரவு அணை பள்ளியானொடு,Pai Aravu Anai Palliyaanodu - சேஷ சாயியான எம்பெருமானுடனே
கை வைத்து வரும்,Kai Vaitthu Varum - கை கலந்து வாரா நின்றாள்.
287ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோ டிணங்கி
தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறு கின்றாளே–3-7-2
வாயில்,Vayil - (இம் மகளுடைய) வாயில்
பல்லும் எழுந்தில,Pallum Ezhundhila - பற்களும் முளைக்க வில்லை;
மயிரும் முடி கூடிற்றில,Mayirum Mudi Koodittrila - மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை.
இவள்,Eval - இப்படிப்பட்ட இவள்
இவண்,Evan - இந்தப் பருவத்தில்
சாய்வு இலாத,Saivu Ilaadha - தலை வணக்கமில்லாத
குறுந்தலை,Kurunthalai - தண்மையில் தலை நின்ற
சில பிள்ளைகளோடு,Sila Pillailaodu - சில பெண் பிள்ளைகளோடு
இணங்கி,Enangi - ஸஹ வாஸம் பண்ணி
தீ இணக்கு இணங்காடி வந்து,Thee Inakku Inangaadi Vandhu - (அதற்குப் பலனாக) பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து (இத்தனை போது எங்குப் போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்)
தன் அன்ன,Than Anna - தனக்கு ஒத்த வார்த்தைகளை
செம்மை சொல்லி,Semmai Solli - கபடமற்ற வார்த்தை போல் தோற்றும்படி சொல்லி இவள்;
மாயன் மா மணிவண்ணன் மேல்,Maayan Maa Manivannan Mel - அற்புதச் செய்கைகளையும் நீலமணி நிறத்தையுமுடையனான கண்ணபிரான்
மாலுறுகின்றாள்,Maal Urugindraal - மோஹப்படுகிறாள்.
288ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்க லுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லு மல்லது இழைக்க லுறாள்
கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை
சங்கை யாகி என் னுள்ளம் நாள் தொறும் தட்டுளுப்பாகின்றதே–3-7-3
பொங்கு,Pongu - (இவள்)நுண்ணியதாய்
வெள்,Vel - வெளுத்திரா நின்ற
மணல் கொண்டு,Manal Kondu - மணலாலே
முற்றத்து,Mutrathu - முற்றத்திலே
சிற்றில்,Sittril - கொட்டகத்தை
இழைக்கலுறிலும்,Izhaikkalurilum - நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது,sangu chakaram Thandu Vaal Villum Alladhu - சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களை யொழிய (மற்றொன்றையும்)
இழைக்கலுறாள்,Izhaikkalurall - இழைக்க நினைப்பதில்லை;
இன்னம்,Innam - (இவளுக்கோ வென்றால்) இன்றளவும்
கொங்கை,Kongai - முலைகளானவை
குவிந்து எழுந்தில,Kuvindhu Ezhundhila - முகம் திரண்டு கிளர்ந்தன வில்லை;
இவளை,Ivalai - இப்படி இளம் பருவத்தளான இவளை
கோவிந்தனோடு சங்கை ஆகி,Govindhanoodu Sangai Aagi - கண்ணபிரானோடு சம்பந்த முடையவளாகச் சங்கித்து
என் உள்ளம்,En Ullam - என் நெஞ்சமானது
நாள் தொறும்,Naal Thorum - ஸர்வ காலமும்
தட்டுளுப்பாகின்றது,Thattuluppaagindrathu - தடுமாறிச் செல்லா நின்றது.
289ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண் மகளை யெள்கி
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறியாத தென்னும் மூதுரையு மிலளே–3-7-4
ஏழை,Ezhaai - சாபல்யமுடையவளும்
பேதை,Paedhai - அறியாமை யுடையவளும்
ஓர் பாலகன்,Or Balagan - இளம் பருவத்தை யுடையளுமான
என் பெண் மகளை,En Pen Magalai - எனது பெண்பிள்ளையை
தோழிமார் பலர் வந்து,Thozhimaaar Palar Vandhu - பல தோழிகள் அணுகி வந்து
எள்கி,Elgi - (விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து
கொண்டு போய்,Kondu Poi - அழைத்துக் கொண்டு போய்
ஆழியான் என்னும்,Aazhiyan Ennum - ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான
ஆழம் மோழையில்,Aazham Mozhaiyil - ஒருவராலும் நிலைகொள்ள வொண்ணாத கீழாற்றில்
பாய்ச்சி,Paaychchi - உள்ளுறத் தள்ளி
அகப்படுத்தி,Agappaduthi - (அதிலே) அகப்படுத்தி
செய்த சூழ்ச்சியை,Seidha Soozhchiyai - (இவ்வாறு) செய்த கபடத் தொழில்களை
ஆர்க்கு உரைக்கேன்,Aarkku Uraikkaen - யாரிடம் முறையிடுவேன்?;
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்,Moozhai Uppu Ariyaadhadhu Ennum Moodhuraiyum Ival - (இம் மகளோ வென்றால்) “அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற பழ மொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள்.
290ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கள்
சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித்துழி தருகின்றாள்
கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவனோடு இவளை
பாடு காவலிடுமி னென்றென்று பார் தடுமாறினதே–3-7-5
நாடும்,Naadum - விசேஷ ஜ்ஞாநிகளும்
ஊரும்,Oorum - ஸாமான்ய ஜ்ஞாநிகளும்
அறிய,Ariya - அறியும்படியாக [பஹிரங்கமாக]
போய்,Poi - வீட்டை விட்டுப் புறம்பே போய்
நல்ல,Nalla - பசுமை மாறாத
துழாய் அலங்கில்,Thuzhaai Alangil - திருத் துழாய் மாலையை
சூடி,Soodi - (பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக் கொண்டு) தரித்துக் கொண்டு
நாரணன் போம் இடம் எல்லாம்,Naaranan Pom Idam Ellaam - எம்பெருமான் போகிற இடம் முழுவதும்
சோதித்து உழி தருகின்றாள்,Sodhiththu Uzhi Tharugindraal - தேடித் திரியா நின்றாள்;
கேடு வேண்டுகின்றார்,Kaedu Vaendugindraar - இக்குடிக்குக் கேடு விளைய வெணுமென்று கோருமவர்கள்
பலர் உளர்,Palar Ular - பல பேருண்டு;
இவளை,Evalai - (ஆகையால்) எம்பெருமானைத் தேடித் திரிகிற இவளை
கேசவனோடு,Kesavanodu - (அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.)
பாடு காவல் இடுமின்,Paadu Kaaval Idumin - அருகு காவலிடுங்கள்
என்று என்னை,Endru Ennai - என்று இதையே பல காலும் சொல்லிக் கொண்டு
பார்,Paar - பூமியிலுள்ள அநுகூல ஜநமானது
தடுமாறினது,Thadumaarinadhu - மனங்குழம்பிச் செல்லா நின்றது
291ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் பூவைப்பூ வண்ணா வென்னும்
பட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே–3-7-6
வட்டம் வார்,Vattam Vaar - சுருட்சியையும் நீட்சியையும் உடைய
குழல்,Kuzhal - கூந்தலையுடைய
மங்கைமீர்,Mangaimeer - மாதர்காள்!,
பட்டம் கட்டி,Pattam Katti - (இம் மகளுக்கு) (நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும்
பொன் தோடு,Pon Thodu - (காதுக்கு அணியான) பொன் தோட்டையும்
பாடகமும் சிலம்பும்,Paadagamum Silambum - (கழலணியான) பாடகத்தையும் சிலம்பையும்
பெய்து,Peithu - இட்டும்
இவள் இட்டம் ஆக,Eval Ettam Aaga - இவளுடைய இஷ்டாநுஸாரமாக
வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு,Valarthu Eduthtenukku Ennodu - (இவளை) வளர்த்தெடுத்த என்னோடு
இவள் இருக்கலுறாள்,Eval Erukkaluraal - இவள் இருக்க மாட்டேனென்கிறாள்;
பொட்ட,Potta - (பின்னை ஏன் செய்கின்றாளெனில்;) திடீரென்று
போய்,Poi - என்னைக் கைவிட்டுப் போய்
புறப்பட்டு நின்று,Purappattu Nindru - (எல்லாருங்காணத் தெருவிலே) புறப்பட்டு நின்று
பூவைப் பூ வண்ணா என்னும்,Poovaip Poo Vannaa Ennum - “காயாம்பூப்போன்ற மேனி நிறமுடைய கண்ணபிரானே!” என்று வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள்;
இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - (அவ்வளவில் அவன் அருகுவாரா தொழியில்) இவள் மோஹத்தை யடைகின்றாள்.
292ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறு கின்றாளே–3-7-7
வாசம் வார்,Vaasam Vaar - வாஸனையையும் நீட்சியையுமுடைய
குழல்,Kuzhal - கூந்தலையுடைய
மங்கைமீர்,Mangaimeer - பெண்காள்!
பேதையேன்,Pethaien - பேதைமையை யுடையளான என்னுடைய
பேதை,Pethai - பெண் பிள்ளையும்
பேசவும் தெரியாத பெண்மையின்,Pesavum Theriyatha Penmaiyin - (தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்) ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்க மாட்டாத ஸ்த்ரீத்வத்தை யுடையவளும்
கிஞ்சுகம் வாய் மொழியாள்,Kinchukam Vaaimozhiyal - கிளியினுடைய வாய்மொழி போன்ற இனிய வாய் மொழியை யுடையவளுமான
இவள்,Eval - இவள்,
நின்றார்கள் தம் எதிர்,Nindraargal Tham Ethir - மர்யாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே,
கூசம் இன்றி,Koosam Inri - கூச்சமில்லாமல்
கோல் கழிந்தான் மூழை ஆய்,Kol Kazhindhaan Moozhai Aay - கோலை விட்டு நீங்கின அகப்பை போல (என்னோடு உறவற்றவளாய்க் கொண்டு) கேசவனே! என்றும்
கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே! என்றும்
கேடு இலீ என்றும்,Kedu Ilee Endrum - அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி
இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - இவள் மோஹமடையா நின்றாள்;
ஏ,A - இரக்கம்
293ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும் தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே–3-7-8
இவள்,Eval - இப் பெண் பிள்ளையானவள்
காறை,Kaarai - பொற் காறையை
பூணும்,Poonum - (தன் கழுத்தில்) பூணா நின்றாள்;
கண்ணாடி காணும்,Kannadi Kaanum - (அக்காறையுங் கழுத்துமான அழகை) கண்ணாடிப் புறத்தில் காணா நின்றாள்;
தன் கையில்,Than Kaiyil - தன் கையிலிருக்கிற
வளை குலுங்கும்,Valai Kulungum - வளையல்களை குலுக்கா நின்றாள்;
கூறை,Koora - புடவையை
உடுக்கும்,Udukum - (ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளா நின்றாள்; (அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக் காணாமையாலே,)
அயர்க்கும்,Ayarkkum - தளர்ச்சி யடையா நின்றாள்;
தன் கொவ்வை செம் வாய் திருத்தும்,Than Kovvai Sem Vaai Thiruthum - (மறுபடியுந் தெளிந்து இதற்கு மேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி) கோவக் கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்கு படுத்தா நின்றாள்;
தேறித் தேறி நின்று,Theerith Theeri Nindru - மிகவுந் தெளிந்து நின்று
ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்,Aayiram Per Devan Thiram Pitharuthum - ஸஹஸ்ர நாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றா நின்றாள்;
மாறு இல்,Maaru El - (அதன் பிறகு) ஒப்பற்றவனும்
மா மணி வண்ணன் மேல்,Maa Mani Vannan Mel - நீலமணி போன்ற நிறத்தை யுடையனுமான(அக்) கண்ண பிரான் மேல்
மாலுறுகின்றாள்,Maalurugindraal - மோஹியா நின்றாள்
294ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப் படுத்தும்
செய்த் தலை யெழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே–3-7-9
கைத்தலத்து உள்ள மாடு அழிய,Kaithalathu Ulla Maadu Azhiy - கையிலுள்ள பணத்தைச் செலவழித்து
கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - (இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி
இவளை,Evalai - (நமக்கடங்காத) இவளை
வைத்து வைத்துக் கொண்டு,Vaithu Vaithukkondu - நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால்
என்ன வாணிபம்,Enna Vaanipam - என்ன பயனுண்டாம்;
நம்மை வடுப்படுத்தும்,Nammai Vadupaduthum - (பயனுண்டாகாதொழிவது மன்றி) நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்;
செய்தலை எழு நாற்று போல்,Seithalai Ezu Naatru Pol - (என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக் கேட்ட பந்துக்கள்) ”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக் குடையவன் தன் இஷ்டப்படி விநியோகம் கொள்வது போல,
அவள் செய்வன செய்து கொள்ள,Aval Seivana Seidhu Kolla - (இவளையும்) (ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (தடையற)ச் செய்து கொள்ளும்படி
மை தட முகில் வண்ணன் பக்கல்,Mai Thada Mugil Vannan Pakkal - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக் கண்ண பிரானிடத்தில்
வளர,Valara - (இவள்) வாழும்படி
விடுமின்கள்,Vidumingal - (இவளைக் கொண்டு போய்) விட்டு விடுங்கள் " (என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.)
295ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும் ஒன் றெண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப் படுத்திடுமின் இவளை உலகளந்தா னிடைக்கே–3-7-10
பெருபெருத்த,Peruperutha - (இவளுக்கு) மிகவும் விசேஷமான
கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - கல்யாண காரியங்களைச்செய்து
பேணி,Paeni - அன்பு பூண்டு
நம் இல்லத்துள்ளே,Nam Illathulle - நம் வீட்டுக்குள்ளேயே
இருந்துவான் எண்ணி நாம் இருக்க,Irundhuvaan Enni Naam Irukka - (இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க
இவளும்,Ivalum - இவளொ வென்றால்
ஒன்று எண்ணுகிறாள்,Ondru Ennugiraal - (நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள்.
மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன்,Maruthuvapadham Neenginaalennum Vaarthaipaduvathan Mun - (என்று தாயாகிய நான் சொல்ல இதைக் கேட்ட பந்துக்கள்) வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில்
அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன்.

இவளை,Ivalai - இவளை
உலகு அளந்தானிடைக்கே,Ulaku Alandhaanidaikke - உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்)
ஒருபடுத்திடுமின்,Orupaduthidumin - சேர்த்துவிடுங்கள் (என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்)
296ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11
ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாரா யணனுக்கு இவள்
மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை
கோல மார் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே-3-7-11
இவள்,Eval - இப்பெண்பிள்ளை யானவள்
ஞாலம் முற்றும் உண்டு,Gnaalam Mutrum Undu - எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி
ஆல் இலை துயில்,Aal Ilai Thuyil - ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின
நாராயணனுக்கு,Naarayananukku - எம்பெருமான் விஷயத்தில்
மால் அது ஆகி,Maal Athu Aagi - மோஹத்தை யுடையளாய்
மகிழ்ந்தனள் என்று,Magizhndhanal Endru - (அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்) மனமுகந்தாள்” என்று
தாய் உரை செய்ததனை,Thaai Urai Seidhaththai - தாய் சொல்லியதை
கோலம் ஆர்,Kolam Aar - அழகு நிறைந்த
பொழில் சூழ்,Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட
புதுவையர் கோன்,Puthuvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான
விட்டுச் சித்தன்,Vittuch Siththan - பெரியாழ்வார்
சொன்ன,Sonnna - அருளிச் செய்த
மாலை,Maalai - சொல் மாலையாகிய
பத்தும்,Paththum - இப்பத்துப் பாட்டையும்
வல்லவர்கட்கு,Vallavarkatku - ஓத வல்லவர்களுக்கு
வரு துயர் இல்லை,Varu Thuyar Illai - வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை.