Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: ஒழிவில் (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2919திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 1
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1
தெழி குரல் அருவி, Thezhi kural aruvi - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருவேங்கடமலையில்
எழில் கொள், Ezhil kol - நிறம்பெற்ற
எந்தை தந்தை தந்தைக்கு, Endhai thandhai thandhaikku - எமது குலநாதனான பெருமானுக்கு,
நாம், Naam - அடியோம்
ஒழிவு இல், Ozhivu il - ஓய்வில்லாத
காலம் எல்லாம், Kaalam ellaam - காலம் முழுவதும்
உடன் ஆய், Udan aay - கூடவே யிருந்து
மன்னி, Manni - ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று
வழு இலா, Valu ila - குற்றமற்ற
அடிமை, Adimai - கைங்கரியங்களை
செய்ய வேண்டும், Seyya vendum - பண்ணக்கடவோம்.
2920திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 2
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
வானவர் கோனொடும், Vaanavar koanodum - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
சிந்து, Sindhu - தூவின
பூ, Poo - புஷ்பங்கள்
மகிழும், Magilum - செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில்
அந்தம் இல் புகழ், Antham il pugazh - முடிவில்லாத புகழையுடையவனும்
கார் எழில், Kaar ezil - நீலநிறத்தழகுடையனுமான
அண்ணல், Annal - எம்பெருமான்
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, Endhai thandhai thandhai thandhaikkum mundhai - எம்குலநாதன்
2921திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 3
அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3
அணிக்கொள், Anikkol - அழகுபொருந்திய
செம் தாமரை கண்ணன், Sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்
செம் கனிவாய், Sem kanivai - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும்
கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும்
தென் நிறை சுனை நீர், Then nirai sunai neer - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில்
எண் இல் தொல் புகழ், Enum il thol pugazh - எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும்
வானவர் ஈசன், Vaanavar Eesan - நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான்
அண்ணல், Annal - நமக்கு ஸ்வாமியும்
மாயன், Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன்
2922திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 4
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4
வானவர்க்கு, Vaanavarkku - நித்யஸூரிகளுக்கு
ஈசன், Eesan - தலைவன்
என்பன், Enban - என்று சொல்லுவேன்
என்றால், Endraal - இப்படிச் சொன்னால்
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண், Neesanen niraivu ondrum ilen en kan - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில்
பாசம் வைத்த, Paasam vaitha - ஆசாபாசத்தை வைத்தருளினின்ற
பரம் சுடர்சோதிக்கு, Param sudarsothikku - நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான
திருவேங்கடத்தானுக்கு, Thiruvengadathaanukku - திருவேங்கட முடையானுக்கு
அது தேசமோ, Athu dhesamo - நான் சொன்னது ஒரு பெருமையோ?
2923திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 5
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5
வேதியர் முழு வேதத்து அமுதத்தை , Vethiyar muzhu vedathu amudhathai - வைதிகர்களால் ஓதப்படுகிற ஸகல வேதங்களிலும் பரம போக்யனாக ப்ரதிபாதிக்கப்படுபவனும்
தீது இல் சீர் , Theethu il seer - தீது ஒன்றுமில்லாத திருக்குணங்களை யுடையனுமான
திருவேங்கடத்தானை , Thiruvengadathaannai - திருமலையப்பனைக் குறித்து
சோதி ஆகி , Sothi aagi - சோதிமயமான திருமேனியையுடையனாய்
ஆதி , Aadhi - ஸகலஜகத்காரணபூதனான (எல்லா உலகும் தொழும் உலகத்தவர்களெல்லாராலும் தொழப்படுபவனாய்)
மூர்த்தி , Moorthi - ஸர்வேச்வரன் (இவன்)
என்றால் , Endraal - என்று நான் சொன்னால் (அது)
அளவு ஆகுமோ , Alavu aagumo - ஒரு பெருமை யாகுமோ?
2924திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 6
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6
வேங்கடத்து , Vengadathu - திருமலையிலே
உறைவார்க்கு , Uraivaarkku - நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு
நம எனல் ஆம் கடமை அது , Nama enal aam kadamai adhu - நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை
சுமந்தார்கட்கு , Sumanthaarkku - வஹிக்கின்றவர்களுக்கு
கடங்கள் , Kadangal - அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும்
மேல்வினை , Melvinai - (ப்ரக்ருதிவாஸநையாலே) இனி விளையக்கூடிய பாவங்களம் (ஆகிய)
முற்றவும் , Mutravum - ஸகலபாபங்களும்
வேம் , Vem - வெந்துபோயினவென்னும் அழிந்து விடும்: (இப்படி பாவங்கள் தொலையலே)
தங்கட்கு நல்லனாவே , Thangatku nallanaave - தாங்கள் அடியவர்களான தாங்கள் ; தங்கள் ஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றையே (ஸகங்கரியங்களையே)
செய்வார் , Seivaar - செய்யப் பெறுவர்கள்.
2925திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 7
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7
மா , Maa - சிறந்த
மலர் , Malar - புஷ்பங்களையும்
நீர் , Neer - தீர்த்தத்தையும்
சுடர் , Sudar - தீபத்தையும்
தூபம் , Thoobam - தூபத்தையும்
சுமந்துகொண்டு , Sumandhukondu - ஏந்திக்கொண்டு
வானவர் , Vaanavar - தேவர்கள்
வானவர் கோ னொடும் , Vaanavar konodum - தங்கள் தலைவனோடுகூட
அமர்ந்து நமன்று , Amarndu namandru - அநந்யப்ரயோஜநராய் வணங்கி
எழும் , Ezhum - உஜ்ஜீவிக்குமிடமான
திருவேங்கடம் , Thiruvengadam - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே
நங்கட்கு , Nangatku - நமக்கு
சமன் கொள் வீடு , Saman kol veedu - பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை
தரும் , Tharum - அளிக்கும்.
2926திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 8
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.–3-3-8
குன்றம் ஏந்தி , Kundram endhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று
குளிர் மழை , Kulir mazhai - குளிர்ந்தபெருமழையை
காத்தவன் , Kaathavan - தடுத்தவனும்
அன்று , Andru - முன்பொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் , Nyaalam alandha piran - உலகங்களையளந்த பிரபுவுமாகிய
பரன் , Paran - எம்பெருமான்
சென்று சேர் , Sendru ser - வந்து சேர்ந்தவிடமான
திருவேங்கட மாமலை ஒன்றமே , Thiruvengata maamalai ondrame - திருமலையொன்றை மாத்திரமே
தொழ , Thozha - தொழப்பெறில்
நம் வினை , Nam vinai - நமது வினைகள் யாவும்
ஓயும் , Ooyum - தொலைந்திடும்.
2927திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 9
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9
திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற
ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன
பிறப்பு , Pirappu - பிறவியென்ன
இறப்பு , Irappu - மரணமென்ன
அடி , Adi - திருவடிகளை
வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும்
மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும்
வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு
பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை)
வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை
செய்வான் , Seyvaan - செய்தருள்வன்.
2928திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 10
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10
வைத்த, vaitha - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த
நாள், naal - ஆயுட்காலத்தினுடைய
வரை, varai - அளவான
எல்லை, ellai - எல்லையானது
குறுகி, kurugi - அணுகி
எய்த்து இளைப்பதன் முன்னம், eithu ilaipathan munnam - (அதனால் நீங்கள்) மிகவும் தளர்ச்சியடைவதற்கு முன்னே
சென்று, sendru - (திருமலையை நோக்கிச் சென்று)
பைத்த பாம்பு அணையான், paitha paambu anaiyaan - படமெடுத்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்ட பெருமானது
திருவேங்கடம், thiruvengadam - (அத்) திருமலையில்
மொய்த்த சோலை , Moitha solai - நெருங்கின சோலைகளும்
மொய் பூ தடம் , Moi poo Thadam - நெருங்கின புஷ்கரிணிகளுமுள்ள
தாழ்வர் , Thaazhvar - திருத்தாழ்வரையை
அடைமின் , Adaimin - அடையுங்கள்
2929திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 11
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை,
நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல்,
கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11
தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து
மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட
ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து
நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய
குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார்
சொல், sol - அருளிச்செய்த
கேழ் இல், kezh il - ஒப்பற்றதான
ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில்
இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை
வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள்
ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி
வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று
வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர்.
3633திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11
ஒழிவு இன்றி,Ozhivu indri - நிரந்தரமாக
திருமூழிக்களத்து உறையும்,Thirumoozhikkalathu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்கிற
ஒண் சுடரை,On sudarai - தேஜோமூர்த்தியான எம்பெருமானை
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல்,Ozhivu illa ani mazhalai kili mozhi yaal alatriya sol - மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து
வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த,Vazhu illaavan kurukoor sadagopan uraitha - அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க
அழிவு இல்லா ஆயிரம்,Azhivu illa aayiram - நித்யவேதமான இவ்வாயிரத்தினுள்
இப்பத்தும்,Ippaththum - இப்பதிகம்
நோய் அதுக்கும்,Noi athukkum - ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும்