| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3711 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (முதலிலே *வீடுமின் முற்றத்தில் “எண் பெருக்கந்நலத்தொண் பொருளீறில வண்புகழ் நாரணன்” என்று பஜனத்திற்கு ஆலம்பனமாகச் சொல்லப்பட்டதான மந்த்ரத்தை *எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே* என்று காட்டுகிறார்.) 1 | கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1 | கண்ணன் கழல் இணை,Kannan kazhal inai - அடியவர்க் கெளியனான பெருமானது திருவடியிணைகளை எண்ணும் திருநாமம்,Ennum thirunaamam - (நீங்கள்) சிந்திக்க வேண்டிய திருநாமம் நண்ணும் மனம் உடையீர்,Nannum manam udaiyeer - அடைய வேணுமென்கிற நெஞ்சையுடையவர்களே! நாரணம் ஏ திண்ணம்,Naaranam e thinnam - நாராயணமே; மற்றொன்றில்லை யென்பது திடம். |
| 3712 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (“எண்பெருக்கி லெண்ணுந் திருநாமத்தின் சப்தார்த்தங்களைச் சுருக்கி” என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணையின்படி கீழ்ப்பாட்டில் நாரணமென்று சம்பம் சுருக்கப்பட்டது. இப்பாட்டிலும் மேற்பாட்டிலுமாக அர்த்தம் சுருக்கப்படுகிறது.) 2 | நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2 | நாரணன் எம் மான்,Naaranan em maan - நாராயணனாய் எமக்கு ஸ்வாமியானவன் (அன்றியும்) பார் அணங்கு ஆளன்,Paar anangu aalan - பூமிப் பிராட்டிக்கு நாயகன் வாரணம் தொலைத்த,Vaaranam tholaitha - கம்ஸனது மதயானையை முடித்தருளின காரணன் தானே,Kaaranan thaane - ஜகத்காரணபூதனும் அவனே |
| 3713 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில்.) 3 | தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3 | தானே,Thaane - நாராயணனை தானே படைத்து இடந்து,Padaiththu idandhu - ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து உலகு எல்லாம்,Ulagu ellaam - ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்; தானே உண்டு உமிழ்ந்து,Thaane undu umizhndhu - ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து தானே,Thaane - அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே) தானே ஆள்வான்,Thaane aalvaan - தானே நிர்வஹிக்குமவன் |
| 3714 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அர்த்தத்தை யநுஸந்திக்கு மாசாரியர்கள் “அஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு அவஸ்தாஸு ஆவிஸ்ஸ்யர் மம ஸஹஜகைங்கரிய விதய” (அஷ்டச்லோக-3.) என்று கைங்கரிய ப்ரார்த்தனையைப் பொருளாகக்காட்டுகையாலே, இங்கு ஸம்ஸாரிகளை நோக்கிக் கைங்காரியத்தை வித்தருளுகிறார். ஆள்வான் என்று, கீழே சொன்ன ரஷகத்வத்தை அநுபாஷித்தபடி.) 4 | ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே–10-5-4 | ஆழிநீர்,Aazhineer - காரணபூதமான ஏகாரிண வத்தலே ஆள்வான்,Aalvaan - ஆளுமவனான அப்பெருமானுடைய கோள் வாய் அரவு அணையான,Kol vaai aravu anaiyaan - மிடுக்குப் பொருந்திய வாயை யுடையவனான ஆதிசேஷனைப் படுக்கை யாகவுடையனாய்க் கொண்டு தாள்வாய் மலர் இட்டு,Malar ittu - புஷ்பங்களை ஸமரிப்பித்து நாள் வாய் நாடீர்,Naadeer - ஆசரயியுங்கோள் திருவடிகளிலே நாடாறும். |
| 3715 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (ஸ்வரூபாநுரூபமான காரியத்தைச் செய்யவே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பெறலாமென்கிறார்தில்.) 5 | நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5 | நாள்தோறும்,Naalthorum - தினந்தோறும் அவன் நாமம்,Avan naamam - அப்பெருமானது திருநாமங்களை வாடா மலர்கொண்டு பாடீர் பாடுங்கள் (இங்ஙனே செய்தக்கால்),Vaadaa malarkondu paadeer paadungal (ingnae seidhakkaal) - செவ்வி மாறாத பூக்களைக் கொண்டு நாடீர் பணியுங்கள்; வீடே பெறலாம்,Naadeer paniyungal; veede peralaam - மோஷமே பெறலாகும் |
| 3716 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (கீழ்ப்பாட்டில் நாடீரென்றதற்கு இடம் காட்டுகிறாரிப்பாட்டில்.) 6 | மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6 | காயா மலர்வண்ணன்,Kaayaa malarvannnan - காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தையுடையனாய் திருமால்,Thirumaal - மாதவன் பேயார் முலை உண்ட வாயன் வேங்கடம் மேயான்,Peyaar mulai unda vaayan vengadam meyaan - பூதனையின் முலையைச் சுவைத்துண்டு அவளை முடித்தவனான திருவேங்கட மலையிலுள்ளான் |
| 3717 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (வாடாமலர்கொண்டு நாடோறும் நாடமுடியாமலும், வேங்கடம்மே யானை அடிபணிய முடியாமலுமிருப்பார்க்கும் ஒருவழியருளிச் செய்கிறாரிப்பாட்டில்.) 7 | மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே–10-5-7 | மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்,Maadhavan endrenru ootha vallireel - த்வயமென்கிற மந்த்ரரத்னத்தை அநுஸந்திக்க வல்லீர்களாகில் தீதொன்று மடையா,Theedonru madayaa - ஏதம் சாராவே மாதவன் என்று என்று ஓத வல்லீர் ஏல் தீது ஒன்றும் அடையா,Theethu ondrum adayaa - அதீத பாபங்களில் ஒன்றும் கிட்டாது ஏதம் சாரா,Aedham saaraa - மேலுள்ள பாவங்களும் வந்து கூடாது |
| 3718 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) ( “நாராயணத் திருநாமத்தையோ ஸ்ரீமத் பதத்தையோ அநுஸந்திக்க நாங்கள் அதிகாரிகளோ? மிகமிக நீசரான எங்களுக்கு அத்தனையதிகாரமுண்டோ?” என்று சங்கிப்பார்க்குச் சொல்லுகிறது இப்பாட்டு அதிகாரி நியதியில்லை; ஆரேனுமாகத் திருநாமத்தைச் சொல்லலாம். அப்படிச்சொல்லுவார் நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் என்கிறார்.) 8 | சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8 | ஏதங்கள் சாரா,Aedhangal saaraa - ஒரு பொல்லாங்கும் வந்து கிட்டாது; பேர் ஆர் ஓதுவார்,Per aar othuvar - திருநாமங்களை ஓதுமவர்கள் யாவ ரோ நீர் ஆர் முகில் வண்ணன்,Neer aar mukil vannnan - நீர் நிரம்பிய மேகம் போன்றவனான எம்பெருமானுடையர் ஆர் ஆ,Aar aa - அவர்கள் எது பிறப்பு ஏதியல்வாக நின்றவர்களாயினும் அமரர்ஏ,Amarar - நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் |
| 3719 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பாட்டில் “அமரத் தொழுவார்கட்கு” என்பது உயிரான சொல்; அமரத் தொழுகை யாவதென்னென்னில் ப்ரயோஜநாந்தர மொன்றையுங் கணிசியாமே தொழுகை.) 9 | அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9 | அமரர்க்கு,Amararkku - அரி யானை பிரமன் முதலானார்க்கும் அரியனாய் அமர தொழுவார் கட்கு,Amara thozhuvaar kadku - பலனென்றும் விரும்பாதே தொழுமவர்களுக்கு தமர்கட்கு எளியானை,Thamar kadku ezhiyanaai - அடியவர்க்கு எளியனாயுள்ள பெருமானை வினைகள் அமரா,Vinaihal amaraa - விரோதிகள் வந்து கிட்டாது. |
| 3720 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகத்தில், முதற்பாட்டில் திருமந்த்ரப்ரஸ்தாவம் செய்தருளினார் ; ஏழாம்பாட்டில் த்வயப்ரஸ்தாவம் செய்தருளினார். அதற்குமேலெல்லாம் பெரும்பாலும் சரமச்லோக ப்ரஸ்தாவமேயாயிருக்கிறது. *ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி* என்பதுதானே சரமச்லோகத்தின் ஸாரம். அது இப்பாட்டில் “வினை வல்லிருளென்னும் முனைகள் வெருவிப்போம்” என்று தலைக்கட்டப்படுகிறது.) 10 | வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10 | வினை,Vinai - கருமங்களென்ன வெருவிப்போம்,Veruvippom - தாமே அஞ்சி அகன்றொழியும் வல் இருள்,Val irul - கொடிய அஞ்ஞானமென்ன சுனை நம் மலர்இட்டு,Sunai nam malarittu - சுனைகளிலுண்டான நல்ல பூக்களையிட்டு என்னும் முனைகள்,Ennum munaigal - ஆகவிப்படி சொல்லப்படுகிற இத்திரங்கள் நெடியான் நினைமின்,Nedhiyaan ninaimin - ஸர்வேச்வரனைச் சிந்தியுங்கள் |
| 3721 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11 | நெடியன் அருள்,Nedhiyan arul - ஸர்வேச்வரனுடைய க்ருபையை, ஆயிரத்து இருபத்து,Aayirathu irupathu - ஆயிரத்தினுள் இப்பதிகமானது சூடும் படியான்,Soodum padhiyaan - அநுபவிக்கு மியல்வினரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் நொடி,Nodi - அருளிச் செய்ததான அடியார்க்கு,Adiyaarkku - பக்தர்களுக்கு அருள் பேறு,Arul paeru - ப்ரஸாத லாபமாயிருக்கும் |