Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கண்ணன் என்னும் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
627நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 1
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே
கண்ணன் என்னும், Kannan enum - ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம், Karu dheivam - கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி, Kaatchi - காட்சியிலே
பழகி கிடப்பேனே, Pazhagi kidapene - பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம் நின்று, Puram nindru - அசலாக இருந்து கொண்டு
புண்ணில் புளி பெய்தால் போல, Punnil puli peidhal pol - புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
அழகுபேசாதே, Azhagu pesadhe - பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில், Pennin varutham ariyaadha Perumaan araiyil - பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய
பீதக வண்ணம் ஆடை கொண்டு, Peedhaga vannam aadai kondu - பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
வாட்டம் தணிய, Vaatam thaniya - (என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்னை வீசீரே, Ennai veeseere - என்மேல் வீசுங்கள்
628நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 2
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்ந்தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே
பால் ஆலிலையில், Paal aalilaiyil - பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே
துயில் கொண்ட, Thuyil konda - கண் வளர்ந்தருளின
பரமன், Paraman - பெருமானுடைய
வலை, Valai - வலையிலே
பட்டிருந்தேனை, Patirundhenai - அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து
வேலால் துன்னம் பெய்தால் போல், Velaal thunnam peydhal pol - வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)
வேண்டிற்று எல்லாம் பேசாதே, Venditru elam pesadhe - உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து
ஆயன் ஆய், Aayan aay - இடைப் பிள்ளையாய்
கோலால், Kolaal - (இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு
நிரை மேய்த்து, Nirai meithu - பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய்
குடந்தை கிடந்த, Kudandhai kidandha - திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய்
குடம் ஆடி, Kudam aadi - குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய
நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு, Neelaar thanam thuzhaai kondu - பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து
நெறி மென், Neri men - நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள
என் குழல்மேல், En kuzhalmel - என் கூந்தலிலே
சூட்டீர், Chooteer - சூட்டுங்கள்
629நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 3
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
கஞ்சை, Kanjai - கம்ஸனை
காய்ந்த, Kaayndha - தொலைத்தவனாயும்
கரு வில்லி, Karu villi - பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய
கடைக்கண் என்னும், Kadaikkan enum - கடைக் கண்ணாகிற
சிறை கோலால், Sirai kolaal - சிறகையுடைய அம்பாலே
நெஞ்சு ஊடுருவ, Nenju ooduruva - நெஞ்சமுழுதும்
வேவுண்டு, Vevundu - வெந்து போம்படியாகப் பெற்று
நிலையும் தளர்ந்து, Nilaiyum thalarndhu - நிலைமை குலைந்து
நைவேனை, Naivenai - வருந்துகின்ற என்னை நோக்கி
அஞசேல் என்னானவன் ஒருவன், Anjel enaanavan oruvan - “பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான
அவன், Avan - அப்பெருமான்
மார்வு அணிந்த, Maarvu anindha - (தனது) திருமார்பில் சாத்தி யருளின
வன மாலை, Vana maalai - வன மாலையை
வஞ்சியாதே, Vanjiyaadhe - மோசம் பண்ணாமல்
தரும் ஆகில், Tharum aagil - கொடுத்தருள்வனாகில்
கொணர்ந்து, Konarndhu - (அம் மாலையைக்) கொண்டு வந்து
மார்வில், Maarvil - (என்னுடைய) மார்பிலே
புரட்டீர், purateer - (நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள்
630நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 4
ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே
ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப்பாடி முழுவதையும்
கவர்ந்து உண்ணும், Kavarnthu unnum - கொள்ளை கொண்டு அநுபவிக்கிற
கார் ஏறு, Kaar yeru - ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
உழக்க, Uzhakka - ஹிம்ஸிக்க
உழக்குண்டு, Uzhakkundu - (அதனால்) துன்பப்பட்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, Thalarndhum murindhum kidapenai - பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை
உலகத்து, Ulagathu - இவ் வுலகத்திலே
ஆற்றுவர், Aatruvar - தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர்
ஆரே, Aare - ஆருண்டு (யாருமில்லை)
ஆரா அமுதம் அனையான் தன், Aara amutham anaiyaan than - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத
அம்ருதம் போன்ற கண்ணபிரான் உடைய

அமுதம் வாயில், Amutham vaayil - அம்ருதம் சுரக்கிற திரு வாயிலே
ஊறிய, ooriya - ஊறிக் கிடக்கிற
நீர் தான், neer thaan - ரசத்தை யாவது
புலராமே கொணர்ந்து, Pularaame konarndhu - உலராமல் பசையோடு கொண்டு வந்து
பருக்கி, Parukki - அதை நான் பருகும்படி பண்ணி
இளைப்பை நீக்கீரே, ilaippai neekeere - எனது ஆயாசத்தை பரிஹரிக்கப் பாருங்கோள் (என்கிறாள்)
631நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 5
அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற
குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே
அழிலும் , Azhilum - அழுதாலும்
தொழிலும் , Thozhilum - தொழுதாலும்
உருக்காட்டான் , Urukatan - தன் வடிவைக் காட்டாதவனாயும்
அஞ்சேல் என்னானவன், Anjel Ennaanavan - உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள
ஒருவன் , Oruvan - ஒரு மஹாநுபாவன் (கண்ணன்)
புகுந்து , Pugundhu - இங்கே வந்து
என்னை தழுவி முழுசி , Ennai thazhuvi muzhusi - என்னை நெருக்கி யணைத்து
சுற்றி சுழன்று , Sutri suzhandru - முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து
போகான், Pogaan - போகாமலிருக்கான்
ஆல்!, aal! - இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம்
தழையின் பொழில் வாய் , Thazhayin pozhil vaai - பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே
நிரை பின்னே ,nirai pinne - பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
நெடு மால் , Nedu maal - வ்யாமுத்தனான கண்ண பிரான்
ஊதி வருகின்ற , Oodhi varuginra - ஊதிக் கொண்டு வரப் பெற்ற
குழலின் துளைவாய் , Kuzhalin thulaivai - புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற
நீர் கொண்டு , Neer kondu - நீரைக் கொணர்ந்து
முகத்து, Mukathu - என்னுடைய முகத்திலே
குளிர தடவீர், kulira tadaveer - குளிர்த்தியாகத் தடவுங்கள்
632நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 6
நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே
நடை ஒன்று இல்லா உலகத்து , Nadai ondru illa ulagathu - (ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும் , Nandhagopan magan ennum - ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்
கொடி ,Kodi - இரக்க மற்றவனாய்
கடிய , Kadiya - ஸ்வார்த்த பரனான
திருமாலால் , Thirumaalaal - ச்ரிய: பதியாலே (கண்ணனாலே)
நான் , Naan - அபலையான நான்
குளப்புக்கூறு கொளப்பட்டு , Kulapukkuru kolapattu - மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
புடை பெயரவும் கில்லேன் , Pudai peyaravum kilen - அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு)
போட்கன் , Potkan - சுணை கேடனான அக் கண்ண பிரான்
மிதித்த அடிப்பாட்டில் , Midhitha adipaatil - திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான
பொடி தான் , Podi thaan - ஸ்ரீபாத தூளியை யாவது
கொணர்ந்து , Konarndhu - கொண்டு வந்து
போகா உயிர் என் உடம்பை பூசீர்கள் , Poga uyir en udambai pooseergal - வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள்
633நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 7
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே
கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து , Karulan vetri kodiyaan than meedhu aadaa ulagathu - பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில் (எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)
பெற்ற தாய் , Petra thaai - அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)
வெற்ற வெறிதே , Vetra verithe - ஒருவர்க்கும் பயனின்றியே (பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?)
வேம்பு ஆகவே , Vembu aagave - வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே
வளர்த்தான் , Valarthaan - வளர்த்து வாரா நின்றான்
குற்றம் அற்ற , Kutram atra - (அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத
முலை தன்னை , Mulai thannai - (என்னுடைய) ஸ்தநங்களை
குமரன் , Kumaran - யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய
கோலம் பணைதோளோடு , Kolam panaitholodu - அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே
அற்ற குற்றம் அவை தீர , Atra kutram avai theera - (என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி
அணைய அமுக்கி கட்டீர் , Anaiya amuki kateer - அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள்
634நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 8
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே
உள்ளே உருகி நைவேனை, ulle Urugi Naivenai - உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி
உளளோ இலளோ என்னாத, Ullalo Ilalo Enadha - “இருக்கிறாளா? செத்தாளா?“ என்றும் கேளாதவனாய்
கொள்ளை கொள்ளி, Kollai Kolli - என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டவனாய்
குறும்பனை, Kurumbanai - (பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான
கோவர்த்தனனை, Govarthananai - கண்ணபிரானை
கண்டக்கால், Kandakkaal - (ஒருகால்) நான் காணப் பெற்றேனாகில்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத, Kollum Payan Ondru Illadha - (ஆட்டுக் கழுத்தல் முலை போலே) உபயோக மற்றதான
கொங்கை தன்னை, Kongai Thannai - (என்னுடைய இந்த) முலையை
கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு, Kizhangodum Alli Parithitu - வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி
அவன் மார்வில் எறிந்து, Avan Maarvil Erindhu - அந்த க்ருஷ்ணனுடைய மார்பிலே எறிந்து விட்டு
என் அழலை, En Azhalai - என் துக்கத்தை
தீர்வேன், theerven - போக்கிக் கொள்ளப் பெறுவேன்
635நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 9
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே
கொம்மை முலைகள், Kommai Mulaigal - (எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய
இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல், Idar Theera Govindharku Ora Kutravel - குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை
செம்மை உடைய திருமார்விலே, Semmai Udaiya Thirumaarvile - (அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே
சேர்த்தானேலும், Serthaanelum - (என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்
நன்று, Nandru - நல்லது
ஒரு நான்று, Oru Naandru - ஒரு நாள்
இம்மைப் பிறவி செய்யாதே இனி போய், Immai Piravi Seyaadhe Ini Poi - இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய்
செய்யும், Seiyum - செய்யக் கூடியதான
தவந்தான் ஏன்?, Thavandhaan Yen? - தபஸ்ஸு ஏதுக்கு?
முகம் நோக்கி, Mugam Nokki - என் முகத்தைப் பார்த்து
மெய்ம்மை சொல்லி, Meimmai Solli - மெய்யே சொல்லி
விடை தான் தருமேல், Vidai Thaan Tharumel - “நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில்
மிக நன்று, Miga Nandru - அது உத்தமோத்தமம்
636நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 10
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே
வில்லை துலைத்த, Villai Thulaitha - வில்லைத் தோற்கடித்த
புருவத்தாள், Puruvathaal - புருவங்களை யுடையளாய்
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை, Villi Puthuvai nagar Nambi Vittu Chithan Viyan Kodhai - ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள்
அல்லல் விளைத்த பெருமானை, Allal Vilaitha Perumaanai - (திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும்
ஆயர் பாடிக்கு அணி விளக்கை, Aayar Paadikku Ani Vilakkai - திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை
வேட்கை உற்று, Vetkai Utru - ஆசைப் பட்டு
மிக விரும்பும் சொல்லை, Miga Virumbum Sollai - மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை
துதிக்க வல்லார்கள், Thuthika Vallargal - புகழ்ந்து ஓத வல்லவர்கள்
துன்பம் கடலுள், Thunbam Kadalul - ஸம்ஸார ஸமுத்ரத்தில்
துவளார், Thuvalaar - துவண்டு நோவு படமாட்டார்கள்